இந்தியா பன்முகத் தன்மை கொண்ட நாடு. வேற்றுமையில் ஒற்றுமையே நமது பலம்.. நீங்கள் விரும்பினாலோ விரும்பாவிட்டாலோ இந்தியாவில் பல்லினங்கள் உண்டு, பல மொழிகள் உண்டு , பல பழக்கவழக்கங்கள் உண்டு , இவற்றை ஏற்றுக்கொண்டு , சகிப்புத்தன்மையோடு எல்லோரும் ஓரினமாய் வாழ்வதே இந்தியா வாழ்வாங்கு வாழ்வதற்கான வழிமுறை. அதைவிடுத்து , ஒற்றையாட்சியை நிறுவுவோம் என்று சொல்லிக்கொண்டிருந்தால் இந்தியா எனும் நாடு இருக்குமா என்பதே கேள்விக்குறி!!!
குறிப்பாக , வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் " நீட்" தேர்வு... எனக்கென்று என்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசும் , என்னால், என் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களெல்லாரும் சேர்ந்து நீட் எமக்கு வேண்டாம் என்று தீர்மானம் செய்கிற போது அதை வலிந்து எம் மேல் திணிக்க இந்திய நடுவண் அரசுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்ற கேள்வியெழுப்புவதில் தவறென்ன இருக்கிறது?
பல பத்து சின்னஞ்சிறு நாடுகளாய் ஐரோப்பியாவில் பரவிக்கிடப்பதற்கு பாரிய காரணமென்ன? மொழி மற்றும் இனங்களால் அவர்கள் பிளவுபட்டிருக்கிறார்கள்... அதனால் தான் இந்தியாவின் பன்முகத் தன்மைக்கேற்ப மொழிவாரி மாநிலங்களை அமைத்தார்கள் இந்தியாவை நிர்மாணித்தவர்கள்..ஆனால் , இன்று நிகழ்வதென்ன? என்னதான் இந்தியை திணிக்கவில்லை என்று ஒப்புக்கு சப்பாணியாக பொன்னார் சொல்லிக்கொண்டிருந்தாலும் கூட தமிழை பரப்ப இந்நடுவண் அரசு எவ்வளவு செலவு செய்திருக்கிறது , இந்திக்காக எவ்வளவு செலவு செய்திருக்கிறது என்று பார்த்தால் போதும் எது பொய் எது உணமையென்று விளங்கிடும்.
இந்தியா இன்று "இந்தியாவின் ஒற்றுமையென்பது , பல்லினங்கள் சேர்ந்து வாழும் ஒரே நாடு என்பதுவும் அதன் இன்றைய நிலையும் வேற்றுமைகளின் மீதே கட்டப்பட்டிருக்கிறது" என்ற அடிப்படையை புரிந்துகொள்ளாதவர்களிடம் சிக்கியிருப்பது என்பது வருந்தத்தக்கது, உள்ளபடியே இந்தியாவின் ஒற்றுமைக்கு விடப்பட்டிருக்கும் சவால்.
இந்தியா மிகப்பெரிய இராணுவத்தைக்கொண்டிருக்கலாம்.. ஆனால் சோவியத்தை விடவா?
இந்தியா மிகப்பெரிய உளவுப்பிரிவுகளைக் கொண்டிருக்கலாம்... ஆனால் கேஜிபியை விடவா?
இந்தியா 56 இன்ச் மார்பு விரிவுள்ள பிரதமரைக்கொண்டிருக்கலாம்...ஆனால் இன்றைய கொள்கைகள் நீளுமானால், இன்னமும் அசுரப்பெரும்பான்மையை சங்கப்பரிவாரங்கள் பெருமானால் அது பேராபத்தே!!!
இந்தியாவின் மீது பற்றுக்கொண்டவர்களும் , இந்தியாவின் ஒற்றுமையை விரும்புபவர்களும் விழித்துக்கொண்டு இந்த வலதுசாரி பிரிவினையாளர்களை மக்களிடம் அம்பலப்படுத்துவதே இன்றைய மிக முக்கிய பணியாகும்..
குறிப்பாக , வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் " நீட்" தேர்வு... எனக்கென்று என்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசும் , என்னால், என் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களெல்லாரும் சேர்ந்து நீட் எமக்கு வேண்டாம் என்று தீர்மானம் செய்கிற போது அதை வலிந்து எம் மேல் திணிக்க இந்திய நடுவண் அரசுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்ற கேள்வியெழுப்புவதில் தவறென்ன இருக்கிறது?
பல பத்து சின்னஞ்சிறு நாடுகளாய் ஐரோப்பியாவில் பரவிக்கிடப்பதற்கு பாரிய காரணமென்ன? மொழி மற்றும் இனங்களால் அவர்கள் பிளவுபட்டிருக்கிறார்கள்... அதனால் தான் இந்தியாவின் பன்முகத் தன்மைக்கேற்ப மொழிவாரி மாநிலங்களை அமைத்தார்கள் இந்தியாவை நிர்மாணித்தவர்கள்..ஆனால் , இன்று நிகழ்வதென்ன? என்னதான் இந்தியை திணிக்கவில்லை என்று ஒப்புக்கு சப்பாணியாக பொன்னார் சொல்லிக்கொண்டிருந்தாலும் கூட தமிழை பரப்ப இந்நடுவண் அரசு எவ்வளவு செலவு செய்திருக்கிறது , இந்திக்காக எவ்வளவு செலவு செய்திருக்கிறது என்று பார்த்தால் போதும் எது பொய் எது உணமையென்று விளங்கிடும்.
இந்தியா இன்று "இந்தியாவின் ஒற்றுமையென்பது , பல்லினங்கள் சேர்ந்து வாழும் ஒரே நாடு என்பதுவும் அதன் இன்றைய நிலையும் வேற்றுமைகளின் மீதே கட்டப்பட்டிருக்கிறது" என்ற அடிப்படையை புரிந்துகொள்ளாதவர்களிடம் சிக்கியிருப்பது என்பது வருந்தத்தக்கது, உள்ளபடியே இந்தியாவின் ஒற்றுமைக்கு விடப்பட்டிருக்கும் சவால்.
இந்தியா மிகப்பெரிய இராணுவத்தைக்கொண்டிருக்கலாம்.. ஆனால் சோவியத்தை விடவா?
இந்தியா மிகப்பெரிய உளவுப்பிரிவுகளைக் கொண்டிருக்கலாம்... ஆனால் கேஜிபியை விடவா?
இந்தியா 56 இன்ச் மார்பு விரிவுள்ள பிரதமரைக்கொண்டிருக்கலாம்...ஆனால் இன்றைய கொள்கைகள் நீளுமானால், இன்னமும் அசுரப்பெரும்பான்மையை சங்கப்பரிவாரங்கள் பெருமானால் அது பேராபத்தே!!!
இந்தியாவின் மீது பற்றுக்கொண்டவர்களும் , இந்தியாவின் ஒற்றுமையை விரும்புபவர்களும் விழித்துக்கொண்டு இந்த வலதுசாரி பிரிவினையாளர்களை மக்களிடம் அம்பலப்படுத்துவதே இன்றைய மிக முக்கிய பணியாகும்..
Comments
2xbet Casino Bonuses — 1xbet login In essence, a review of one 포항 출장마사지 of the 제천 출장안마 best 2xbet casino sites is 강원도 출장안마 a 공주 출장샵 safe way to find the best welcome bonus.