Skip to main content

Posts

Showing posts from 2010

அரசியல் கிச்சு கிச்சு....!!!

தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. வருங்காலத்தில் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைய அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு கடும் சவால்களை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும். நீங்கள் சரியாக பாடுபட்டால் உங்களில் ஒருவர் (இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள்) தமிழக முதலமைச்சராக வாய்ப்பு இருக்கிறது.  ராகுல் காந்தி சரியாத்தான் சொல்லி இருக்காரு...எப்படிக்கஷ்டப்பட்டாலும் இன்னும் இருவது முப்பது வருஷத்துக்கு காங்கிரஸ் ஆட்சி தமிழ்நாட்டுல அமைய வாய்ப்புக்கிடைக்காது...அதனால , முதியோர் காங்கிரஸ் காரங்க யாரும் முதல்வர் ஆக முடியாதே....இளைஞர் காங்கிரஸ் காரங்க தான் ஆக வாய்ப்புண்டு.......ராகுலின் தொலைநோக்குப் பார்வை புல்லரிக்க வைக்கிறது!! பொதுஜனம் சென்னை: இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அந்நாட்டு அரசு போதிய உதவிகளை செய்யாதது கவலையளிப்பதாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கூறினார். சபாஷ்...இதைவிடக் காமெடி இதுகாறும் நடந்ததொன்றும் கிடையாது...பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் கலை காங்கிரசுகாரர்களுக்குப் புதிதா என்ன? இறுதி யுத்தம் நடைப

நாங்கள் பொய் சொல்லவில்லை...வன்னி மருத்துவர்கள்..விக்கிலீக்ஸ் அம்பலம்

வன்னியில் நடந்த இழப்புக்களை புலிகளின்  அழுத்ததினாலேயே மிகைப்படுத்திச் சொன்னோம் என்று முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் பல்டி அடித்த வன்னி மருத்துவர்கள்  , தாங்கள் அப்படிச் சொன்னது  அரசாங்கத்தின் அழுத்தத்தினாலேயே என்று அமெரிக்க தூதகரத்திடம் சொன்னதாக அமெரிக்க தூதரக அதிகாரி திரு. ஜேம்ஸ் ஆர்.  மூரே அனுப்பிய கேபிளை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தி இருக்கிறது.....அதன் முழு வடிவம் வருமாறு....!! Monday, 24 August 2009, 13:34 S E C R E T COLOMBO 000830 SIPDIS DEPARTMENT FOR SCA/INSB EO 12958 DECL: 08/23/2019 TAGS PGOV, PREL, PREF, PHUM, EAID, MOPS, CE SUBJECT: DOCTORS FROM NO-FIRE ZONE RELEASED ON BAIL REF: COLOMBO 695 Classified By: CHARGE D’AFFAIRES JAMES R. MOORE. REASONS: 1.4 (B, D) ¶ 1. (S) Four government doctors, held by the police Criminal Investigation  Division (CID) since the end of the war in May for allegedly filing false  reports on civilian casualties in the No-Fire Zone during the last several  months of the war, were released on bail today. XXXXXXXXXXXX ¶ 2. (S) The doctors XXXXXXXXXX

பூட்டிய இரும்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது!

சீமான்களின் சபையினிலேயே , கடிதம் எழுதி எழுதிக் களைத்துப்போனதோர் கிழட்டுச் சிங்கம்.....முன்னாலுக்கும் முன்னால் அவர் கொண்ட தமிழ்ப்பற்று.....இன்னாளில் அது தமது மக்கட்பற்றாய் மாறிப்போனதொரு சோகம். ஏதோவொரு புண்ணியத்தில், எவரோ செய்த வரலாற்றுத் தவறால் , கொள்கை , தொலைநோக்கு , மக்கட்பற்று இவை பற்றிய சிந்தையேதுமின்றி அரசியலில் விபத்தாய் விளைந்த கொடநாட்டு ஈழத்தாய்....தேர்தலுக்குத் தேர்தல் மட்டுமே தமிழர் பற்றியும் , தமிழர் அரசியல் பற்றியும் எழுதி வைத்துப் பேசும் செல்வி யவர்.........இன்னமும் அவர் சேலை பிடித்துத்திரியும் வீணர் கூட்டம்.! கூட்டணிக்கேற்றப்படி கொள்கையை மாற்றிக்கொள்ளும் மருத்துவப் படையாச்சி.........வீரமிகு வன்னியகுலத்திலே வந்துதித்த சந்தர்ப்பவாதச் சாக்கடை....சமரசமற்ற கொள்கை அரசியலை சந்தர்ப்பவாதச் சாக்கடைக்குள் தள்ளிய பெருமைக்குரிய மருத்துவர் தமிழ்க்குடிதாங்காத தமிழ்க்குடிதாங்கி! யாரை எதற்காக எதிர்த்து அரசியல் செய்யவேண்டுமே அவர்களோடே தம் தேவைக்குதந்த படி கூட்டு வைத்துக்கொண்டு ஈழத்திற்க்காய் எந்நேரமும் பாடுபடும் திரு.வைகோ அவர்கள்....அவரும் சிறை சென்றார்.

தமிழகத்தின் தலையில் இடிவிழ...!

இதை சாபமாகச் சொல்லவில்லை. தமிழகத்துக்கு நேரிட்ட சாபக்கேட்டைச் சுட்டவே சொல்கிறேன்.  உலகம் முழுமையும்  இன்றைக்குப் பேசப்படுகிற ஒருவிடயமாக விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்திய ரகசியங்கள் இருக்கின்றன. உலகளாவிய முறையில் ஊருக்கு ஒன்றெனவும் , உள்ளுக்கு வேறெனவும் அமெரிக்கா ஆடிய தகிடுதத்தங்களைப் போட்டுக்கொடுத்து புண்ணியம் தேடிக்கொண்டிருக்கிறார் அஸ்ஸாங்கே. அத்தகைய விக்கிலீக்ஸ் கூட சிறிலங்காவில் நிகழ்ந்த பாரிய மனிதப்படுகொலை பற்றி விரிவான கட்டுரை ( அது எழுதிய இரு கட்டுரைகளில் ஒன்று சிறிலங்கா பற்றியது , பிரிதொன்று விஸா, மாஸ்டர்கார்டு பற்றியது . ) பிரித்தானியத் தொலைக்காட்சி நிறுவனமான சேனல் - 4 , இதுகாறும் வெளீவந்த போர்க்குற்ற காணொலிகளை ஆராய்ந்து சர்வ நிச்சயமாக போர்க்குற்ற விசாரணையொன்று இலங்கையில் தேவை என்று தொடர்ந்து வலியுறுத்துகிறது..........  அதன் ஆய்வுகள் கீழ்க்கண்ட இணைப்புக்களில்..... இணைப்பு - 1 , இணைப்பு - 2 , இணைப்பு - 3   அமெரிக்காவிலிருந்து வெளிவரும் வாஷிங்டன் டைம்ஸ் , நியுயார்க் போஸ்ட் என்ற பற்பல செய்தி இதழ்கள் , போர்க்குற்ற சந்தேக நபரொருவர் , டிப்ளமேட்டிக் இம்யூனிட்டி முலம் ஐக்கிய ந

சீமானுக்குப் பொருந்தாத ஐபிசி 124ஏ பிரிவு.

புகழ்பெற்ற எழுத்தாளரும் , மனித உரிமை ஆர்வலருமான திருமதி.அருந்ததி ராய் அவர்கள் "காஷ்மீர்" எப்போதுமே இந்தியாவின் ஒரு பகுதியான இருந்ததில்லை என்று புதுதில்லி ஆய்வரங்கம் ஒன்றில் சொன்னதும் , ஹிலானி அவர்கள் "சுதந்திரமே தீர்வு" என்று சொன்னதும் பஜ்ரங்தள் கோஷ்டிகளாலும், வட இந்திய செய்திச்சேனல் மாபியாக்களாலும் பெரும் பிரச்சினை ஆக்கப்பட்டது தெரிந்தமையே. பிரிவினையைத்தூண்டியதாக திருமதி.ராய் மீது வழக்குத்தொடரப்படும் , அவர் கைது செய்யப்படுவார் என்றும் பரபரப்பாக பேசப்பட்ட சூழலில் மாண்புமிகு ( நெசமாவா?) உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அது ஐ.பி.சி 124 ஏ பிரிவின் படி குற்றமல்ல என்கிறார். அது குறித்தான செய்தி பின்வருமாறு. அருந்ததி ராய் பேசியதில் தவறில்லை-நடவடிக்கையும் இல்லை-ப.சிதம்பரம் டெல்லி: காஷ்மீர் தொடர்பாக எழுத்தாளர் அருந்ததி ராய் பேசியதில் சட்டப்படி எந்தத் தவறும் இல்லை என்பதால் அவர் மீது டெல்லி காவல்துறை நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களை அவர் சந்தித்தபோது அருந்ததி ராய் குறித்து கேட

இந்தியாவும் சீனாவும் - ஒரு ஒப்பீடு..!

நிறைய பத்திரிக்கைகளும் , பொருளாதார வல்லுநர்களும் அடிக்கடி இப்படிச் சொல்வதுண்டு. இந்த நூற்றாண்டு இந்தியா மற்றும் சீனாவின் நூற்றாண்டு என்று. வருங்காலத்தில் இந்தியாவும் , சீனாவுமே உலக வல்லரசுகளாகப் போகின்றன என்று. நிலைமை என்ன? இந்தியாவிற்கோ , சீனாவிற்கோ அதற்கான தகுதிகள் இருக்கின்றனவா என்று பார்ப்பதற்கான முதல் படி இந்தியாவும் சீனாவும் ஒப்பீட்டளவில் எப்படி இருக்கின்றன என்பதேயாகும். ஆய்வுகளை அரசியல், பொருளாதார , இராணுவ , இராஜதந்திர , அண்டை நாடுகளுடனேயான உறவுகளினூடாக அணுகலாம். பொருளாதார ஒப்பீட்டில் இந்தியாவும் , சீனாவும் எப்படி இருக்கின்றன என்பதை இப்பதிவில் பார்ப்போம். மற்றைய இராணுவ , இராஜதந்திர உறவுகளை பிரிதொரு சமயம் பார்க்கலாம். உலகின் பெரும்பான்மையான மக்களைக் கொண்ட இருநாடுகளும் உலகப்பொருளாதாரத்தில் பெருமளவு பங்கு வகிக்கின்றமை தவிர்க்க இயலாததே.  இந்தியாவின் தோராய ஜி.டி.பி ( GROSS DOMESTIC PRODUCT) மதிப்பு ( ஜிடிபி என்பது ஒட்டுமொத்த நாட்டின் உற்பத்தி மதிப்பு) 3.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். ( எத்துணை சைபர் டிரில்லியனுக்கு என்ற ஆய்வை கொஞ்சம் அப்புறமா பாக்கலாம் சார். ) , அதே சமயம்

தொழில்.

காணக் கிடைக்காத தேசம் ஒன்று போய் , இங்கே காணக்கிடைக்காத பொருளையொன்றை வாங்கி , உள்ளூரில் விற்றுக்காசு பார்க்க உத்தேசித்திருந்தான் கவி. காணக்கிடைக்காத தேசமெது.?  அங்கே உள்ளூரில் போனியாகும் உயர்தர பொருளெது? அப்பொருளை அங்கே சென்று வாங்கி வர ஆகும் செலவையும் , அதன் மீது வைத்துவிற்கும் குறைந்தபட்ச லாபத்தையும் மீறி அந்தப்பொருள் விலை போகுமா? போனால் லாபம் உண்டு. விலைபோகாவிட்டால் வாங்கிய விலைக்கேனும் விற்று நஷ்டமில்லாமல் தப்பித்துக்கொள்ளலாம். அட அடக்கவிலைக்கேனும் யாரும் வாங்கிட மறுத்தால் என்ன செய்ய? நஷ்டம் தான்.   அதில் குறைந்தபட்ச நஷ்டத்தை நாம் எப்படி சமாளிப்பது? இருக்கிற பணத்துக்கெல்லாம் பொருளை வாங்கி விட்டால் நஷ்டம் ஏற்படும்போது “புவ்வா”விற்கு என்ன செய்வது? குழம்பிப் போனான் கவி. சரி , தெரிந்த நண்பர்களிடம் கேட்கலாமென்று முடிவு செய்தான். ஒருத்தன் சொன்னான். “ மாப்ளே , இன்னிக்கு லெவல்ல தனியா தொழில் தொடங்கி ஆறே மாசத்துல அம்பானி ஆனவன் ஆயிரக்கணக்கில…..தெம்பா செய்டா” இன்னொருத்தன் சொன்னான்…. ” டேய் ..இன்னிக்கெல்லாம் , வேலைக்கு போய் சோத்துக்கு ரெடி பண்ணிக்கிட்டு பார்ட்-டைமா ஏதாச்சும் கடை க

மாரியாத்தா நோம்பி , பகுதி 1

முந்தாநேத்து , எங்கூருக்கு போன்ல பேசீட்டிருக்கும் போது வாற வைகாசி மாசம் , நோம்பி சாட்டுவாங்க போலிருக்குடான்னு எங்கம்மா சொல்லுச்சிங்களா? உடனே தான் காவகத்துக்கு வந்திச்சி , நாம எப்பவோ ஒருக்கா "மாரியாத்தா" நோம்பி பத்தி எழுத ஆரம்பிச்சி பாதீலேயே நிறுத்திப்போட்டது.. அதை இப்ப தொடரலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்...தா.....................................................மததிற்கு ( ஆமாம் , மொத பதுதிய எழுதுன நாள் அக்டோபர் 2008)  மன்னித்தருள்க. இப்பதிவு முன்பே எழுதிய பதிவின் மீளாக்கமே , தொடர்ச்சியினை வரும் நாட்களில் படித்து மகிழ்க / திட்டுக / வசவுக/ ரசிக்க இன்னபல..இன்னபல. நன்றி  ( மீள்பதிவிற்கான காரணம் , தற்பொழுது வலைப்பூ முகவரி மாற்றப்பட்டுள்ளது.)  மாரியாத்தா சாமி , அலங்காரத்தோட!- புகைப்படம் நன்றி : இளவஞ்சி! எங்கூரு மாரியாத்தா கோயிலு ஊருக்குத் தெக்கால எங்கூட்டுக்கு பொறகால  இருக்குதுங்க. நடுவால மாரியாத்தா கோயிலு , கெழவறம் ப்ளேக்கி மாரியாத்தா கோயிலு , மேவறம் மாகாளியாத்தா கோயிலு….மாரியாத்தா கோயுலுக்கும் மாகாளியாத்தா கோயுலுக்கும் நடுவால வீரமாச்சியாத்தா கோயுலு….. வருசமொருக்கா வைகாசி

வளவு.

  அது தேர்தல் நேரம்.. சட்டசபைத்தேர்தலோ , நாடாளுமன்றத் தேர்தலோ அல்ல. உள்ளூராட்சித் தேர்தல். பொதுவாக , சட்டசபை,நாடாளுமன்றத் தேர்தலைவிட பரபரப்பானது உள்ளூராட்சித் தேர்தல்.  காரணம் , அச்சமயத்தில் தான் எப்போதுமே தேர்தலில் ஜெயிக்கும் நட்ராஜுக்கவுண்டரும் , தோத்துப்போகும் இன்னபலரும் உள்ளூர் அரசியல் தலைமைகளாக ஜொலிக்கும் சொற்ப காலம்.  டீக்கடைகள் கட்சிக்கலரற்ற வேட்டிகளுடன் திரியும் தொண்டர்களால் நிரம்பித்திளைக்கும்.... உருளைக்கிழங்கு போண்டாவொன்றையும் , ஒரு லைட் டீ ஒன்றையுமே அடித்துக்கொண்டு , இரவு நேர குவாட்டர் கோட்டாவுக்காக காத்திருக்கும் நட்ராஜுக் கவுண்டரின் தொண்டரடிப் பொடிகள் அடிக்கும் லோலாயும் , தப்புக்கொட்டலும் , மைக்கில் அதிரடியான பொங்கு தமிழ் வசனங்களைப் பொழிவதிலும் ஊருக்குள் திருவிழாவோ என்ற வண்ணம் ஜே.ஜே. என்று தான் காத்திருக்கும்.. எங்கள் "வளவு"ம் கூட அப்படித்தான்.......குடிசைகளாலும் , ஊரோரம் ஓடும் சாக்கடையை வீடாகக்கொண்ட ஈ , கொசு முதலான பறப்பனவைகளையும் , எங்களையும் ஒருங்கே கொண்ட எங்கள் "வளவு" என்று பெருமை கொள்ளலாம். என்ன ஒரே வித்தியாசம்..... கொசுக்களுக்கும் , ஈக்களு

என்னைப் பாதித்த சென்னை.

"செ ன்னை" என்று சொன்னாலே என் மனதிற்குள் இனம் புரியாத ஒரு கலக்கம் எப்போதுமே இருப்பதுண்டு.ஏன்??? அதற்கான முதற்காரணம் , ரயில்வே ஸ்டேஷனில் இருந்து துவங்கி விடுகிறது. பொதுவாகவே , நான் கொஞ்சம் மென்மையானவன்...மென்மையானவன் என்று சொல்வதை விட கூச்ச  சுபாவத்துக்காரன் என்றும் வைத்துக்கொள்ளலாம். பொது இடத்தில் அதிர்ந்து கூட பேசுவதில் விருப்பமற்றவன்.  அப்படிப்பட்ட நான் , சென்னையின் கூலிகள் அதட்டும் அதட்டலுக்கு கொஞ்சம் அதிர்ந்துதான் போவேன்......எனது சென்னை அனுபவங்கள் சில உங்கள் பார்வைக்கு....  *** சி ல வருடங்களுக்கு முன் , சென்னைக்கு வந்திருந்தேன். எனது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்திற்கு சற்றேறக்குறைய 8 மணி நேர இடைவெளி இருந்தது.... என்ன செய்வதென யோசித்து பின்பு "க்ளோக்" ரூமில் ( பொருட்கள் பாதுகாக்கும் அறை) எனது சூட்கேஸினை வைத்துப்பூட்டினேன்.. எனக்கு நன்றாக நினைவிருந்தது அப்போது அதற்கான பணத்தைக் கொடுத்ததும் , அவர் சில்லறையை திருப்பிக்கொடுத்ததும்.....  பின்பு வெளியே போய்விட்டு , விமானநிலையத்திற்கு டாக்ஸி எடுத்துக்கொண்டு பொருட்களை எடுக்க வந்தேன்....எடுத்துக்கொடுத்து விட்டு ( அதே

காவ்யா

ரயிலில் காற்று வருவதும் போவதுமாய் இருந்தது…கண்ணாடியை மேலும் , கீழுமாய் தூக்கிவிட்டுக்கொண்டிருந்த என்னை ஒரு தினுசாய்ப் பார்த்தார் அந்தப் பெரிசு…என்ன நினைத்தாரோ எதிர் சீட்டில் போய் உட்கார்ந்து கொண்டார். வாழ்க்கைத் துணை சரியில்லாத போது , இது போன்று அவ்வப்போது கிடைக்கும் வெளியூர் பயணங்களும் , இரயில் பயணங்களுமே நம்மை ஆசுவாசப்படுத்திக்கொள்ள உதவும்.    எந்நேரமும் , அந்தக் காலத்து “வால்வு” ரேடியோ போலக் கதறிக்கொண்டிருக்கும் மனைவி அமைவதெல்லாம் , இறைவன் கொடுத்த சாபம் என்பதை உணர்ந்தவன் நான்…நீங்கள் எப்படி? நினைவுகள் எங்கேயோ இருந்தன……..  மனசைக் கொஞ்சம் இறுக்கப்பிடித்துக் கொள்ளவில்லை யென்றால் அது பாட்டுக்கு எங்கெங்கோ நம்மைக் கொண்டு சென்றுவிடும்.. அப்படித்தான் அந்த இரயில் பயணமும் என் நினைவுகளை மீட்டுக்கொண்டிருந்தது. எல்லாம் கடந்த கிலோ மீட்டரில் சுவரில் தென்பட்ட “காவ்யா” ஜூவல்லரி விளம்பரத்தில் ஆரம்பித்தது. *** காவ்யா. அந்த நாளில் என்னைச் சொக்க வைத்த பெயர். பச்சையாக சொல்லப்போனால் , என்னைச் சொக்க வைத்த பிகர். 41 A கொஞ்சம் ஆபிஸுக்கு லேட்டாகப் போனாலும் , லேட்டஸ்டா போவதாக நண்பர்களிடம் சொல்லிக்கொ

விதி

சமயங்களில் விதி பற்றிய நினைப்பு சிலவும் வந்து வந்து போவதுண்டு. எதற்கெடுத்தாலும் அவன் விதி அப்படி ஆயிட்டான் என்று சொல்லும் என் அம்மத்தாக் கிளவி கூட அதற்கான காரணமாய் இருக்கலாம்.  விதிமுறை , விதிகள் எனப்படும் சட்டதிட்டங்களுக்கு உட்படும் முறையான "விதி" யினைப் பற்றி நாம் பேசவில்லை. காலம் வகுத்த வழி , கடவுள் விடுத்த விதி என்று திண்ணையில் வெத்தலை பாக்கு இடித்துக்கொண்டே ( உடனே பாரதிராஜாவின் சினிமாத்திண்ணைக்கு உங்கள் கவனம் போனால் நாம் பொறுப்பில்லை..) என்று சொல்லும் பெரிசுகள் இருக்கிறார்களே அப்படிப்பட்ட "விதி" தான் நாம் பேசுவது. சாலைகளில் , தெருக்களில் வாழைப்பழத்தைச் சாப்பிட்டு விட்டு தோலை தூக்கி எறிந்து போவதன் மூலம் வழுக்கி விழுந்த பலரது கதையும் விதி என்றால் , தோலைத் தூக்கி எறிந்து போவது எதில் சேர்த்தி?.. முழங்கால் உயரத்திற்கு  அல்லாது வேகத்தடைகளை ( தமிழில் சொல்லுவதானால். ஸ்பீடு ப்ரேக்கர்களை) போட்டதன் மூலம் எங்களது தாத்தாவின் தம்பியினுடைய பேரனின் பிள்ளையொன்று டி.வி.எஸ். பிப்டி மோட்டார் சைக்கிளில் மரணித்ததே , அதற்குப் பெயர் "விதி" என்றால் , அந்த வேகத்தடையை அப்பட

மீள்தல்…

முன்பு மதிபாலா பக்கங்கள் என்ற தலைப்பில் இன்னொரு வலைப்பூவில் பெரும்பாலும் அரசியலைப் பற்றி அலசிக்கொண்டிருந்தேன்......சலிப்புத் தட்டியதாலும் , நேரமின்மையாலும் வலைப்பூக்களிலிருந்து அனேகமாக ஒரு வருடம் விலகியே இருந்தேன்.... தற்போதைக்கு , உணர்வுகளுக்கு வடிகாலென எப்போதாவது எழுதலாம் என தீர்மானித்திருக்கிறேன்.... இவ்வலைப்பூவை "எழுதியதும் , டைப்பியதுமென பெயரிட்டு மீள்கிறேன்...! இனி அவ்வப்போது சந்திப்போம்…நன்றி.! *** வாழ்வில் நாம் பல பேரைச் சந்திக்கிறோம். சிலரை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்கிறோம் , பலரை எப்போதாவது…. வாழ்வின் சில நொடிகள் மட்டுமே வந்து போகும் பலரைக் கூட எப்போதாவது பார்த்த நினைப்புத் தோன்றும் எனக்கு….மற்றபடி இந்த அவசர உலகில் காலம் அனைத்தையும் கடந்து போகச் செய்கிறது….நாம் கடந்து போன முகங்களையும் தான்.. இது நம்மைத் தூக்கி வளர்த்த ஆத்தாவாக இருக்கட்டும் , இல்லை ஆயாவாக இருக்கட்டும்…சிறுவயதில் வீட்டுவேலை செய்யும் வேலைக்காரியிலிருந்து , காரிய நிமித்தமாக வெகு தொலைவானதொரு ஊரில் பார்த்தவர்களாக இருக்கட்டும்… பார்த்தவர்களென்றில்லை ,கேள்விப்பட்டவர்களும் , வாசித்தவர்களும் அதி