Skip to main content

யார் பெறுவார் ஆர்கே நகரின் அரியாசனம்..?

சிலகாலம் முன்புவரை ஆர்.கே நகர் தமிழகத்தில் அவ்வளவாக உச்சரிக்கப்படாத பெயர்தான். முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் போட்டியிட்டது முதல் விஐபி தொகுதியானது​ ஆர்.கே.நகர்.

முன்னாள் முதல்வரின் மறைவுக்குப்பின்னர் பின்னர் நடக்கும் ஆர் கே நகர் தொகுதி இடைத்தேர்தலானது , சமீபத்தில் எந்தவொரு தொகுதியின் இடைத்தேர்தலுமே பெறாதவொரு முக்கியத்துவத்தைப்பெற்றிருக்கிறது.... ஏன்?? 

திமுக ஒருபுறமும், அதிமுகவின் இரண்டுபிரிவுகளும் , ஜெ. அண்ணன் மகள் தீபா அவர்கள் இன்னொரு புறமுமாக புழுதி பறக்கப்போகிறது இன்னுஞ் சிலவாரங்களுக்கு அத்தொகுதி....இத்தொகுதியில் வெல்வது யார் என்பது மக்களின் கையில் தான் இருக்கிறது. 

ஆனால், களத்தில் நிற்கப்போகும் ஒவ்வொரு கட்சிக்குமே / பிரிவுக்குமே இதன் முடிவு ஒரு முக்கிய பாடத்தை சொல்லிச்செல்ல காத்திருக்கிறது
​. 


​வென்றிருக்கவேண்டிய 2016 தேர்தலை சிலபல காரணங்களால் மயிரிழையில் கோட்டை விட்ட திமுகவுக்கு இது "வாழ்வா சாவா " தேர்தல் இல்லையென்றாலும் கூட, இதில் பெறும் வெற்றி வரப்போகும் பாராளுமன்றத் தேர்தலின் கூட்டணிக்கணக்கிற்கு உதவக்கூடும்..யாருமில்லா தனிவெளியில் உலாவிக்கொண்டிருக்கும் பல கட்சிகள் ஒரு தீர்க்கமான முடிவெடுக்க அவர்கள் பெறும் வெற்றி உதவக்கூடும்...சுருங்கச்சொல்லின் , அடுத்த ஆட்சியையே விரைவில் கைப்பற்ற உதவக்கூடும்.. 

சசிகலா தரப்பு அதிமுகவிற்கோ இதில் பெறும் வெற்றியானது முக்கியமென்பதை விட அவர்களது அரசியல் எதிர்காலத்தையே நிர்யணிக்கும் தேர்தலாகவே இது அமையப்ப்போகிறது.. ஏன்? ஓபிஎஸ்ஸுற்கே கட்சித்தொண்டர்களின் ஆதரவிருக்கிறது
​ ​
என்ற பிம்பம் அகற்றப்படும், கட்சியில் சசிகலா அவர்களது பிடி உறுதிப்படுத்தப்படும். தினகரனும் , சசிகலாவும் தமிழக அரசியலில் தவிர்க்கவியலா சக்தியாக மாறுவதற்கான அடித்தளம் ஆர் கே நகரில் தான் இருக்கிறது.

ஒருவேளை ,திமுக ஜெயித்து சசிகலா தரப்பு  தோற்றாலும் கூட இரண்டாமிடத்தைப்பிடிக்குமானாலும் கூட கட்சியில் சசிகலா அவர்களது தலைமை ஏற்றுக்கொள்ளப்படும்...அல்லது இப்போதைக்கு அதற்கான விவாதங்கள் மட்டுப்படும்! மூன்றாமிடத்திற்கு அவர்கள் வரும் பட்சத்தில் பலதலைகள் ஓபிஎஸ் தரப்பிற்கு போவதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கும்!

ஓ.பி.எஸ் தரப்பிற்கோ இந்தத் தேர்தல்தான் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தலாக அமையும், இதில் வென்றாலோ இல்லை இரண்டாமிடம் பெற்றாலோ தான்  தமது இருப்பை தக்கவைத்துக்கொள்ளவியலும் என்பதில் சந்தேகம் தான் உண்டோ??

தீபா அவர்கள் கணிசமான வாக்குக்களைப்பெற்றாலே அவருக்கான இடம் அரசியலில் கிடைக்கப்பெறும்..

யார் வென்றால் நல்லது என்பது அவரவர் பார்வையைப் பொறுத்து மாறும்..ஆனால் ஒன்றுமட்டும் உறுதி... இந்த தேர்தல் முடிவுக்குப்பின்னரே அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தமிழக அரசியலின் திசை எவ்வாறு பயணிக்கும் என்பதை ஓரளவு கணித்துவிட இயலும்..

யார் பெறுவார் ஆர்.கே.நகரின் அரியாசனம்?

எல்லா கேள்விக்களுக்கும் சரியான விடை இருக்கிறதோ இல்லையோ , சவுகரியமான விடையொன்றிருக்கிறது... அதுதான்...... "காலம் தான் பதில் சொல்லும்". 

​- ​மதிபாலா 

Comments

Popular posts from this blog

இதற்குத்தானா ஆசைப்பட்டீர்கள் திரு.சீமான்?

இன்று சீமான் அதிமுக கூட்டணியில் இருந்து பிரச்சாரம் பண்ணப்போவதாக ஒரு செய்தி வந்திருக்கிறது..ஏற்கெனவே ஒருமுறை செய்த பாரிய தவறொன்றை மற்றொருமுறை செய்யமாட்டார் என்றே நினைத்திருந்தேன்....இது உண்மையான செய்தியாய் இருந்தால் பேரிடிதான்..!!!! மாறாக உணர்வுள்ள இளைஞர்கள் தம் பின்னால் பேரெழுச்சியுடன் நாம் தமிழராய் எழும்போது.....அதைக்கொண்டுபோய் போய்ஸ்தோட்டத்திற்கு தாரைவார்த்துக்கொடுப்பதென்பது கனவிலும் சகிக்க முடியாத செயல்....!!  கருணாநிதிக்கு ஈழ அழிவிற்கு எவ்வளவுக்கெவ்வளவு பங்கிருக்கிறதோ அதே அளவிற்கு  சக பங்குள்ளவரே செயலலிதா... செயலலிதா என்ன செய்திருக்க வேண்டும்? என்ன செய்தார்? 1.எதிர்கட்சியாக மாபெரும் போராட்டங்களை நடாத்தியிருக்க வேண்டும்...அழிவது நம்சொந்தங்களே என்று தெரிந்திருந்தும் வாய்மூடி மெளனியாகவே இருந்தார். 2. கருணாநிதியின் எதிர்ப்பரசியலைக் கைவிட்டு விட்டு முத்துக்குமார் முதற்கொண்டு  தமிழக இளைஞர்களின் எழுச்சியை உபயோகித்து இந்திய அரசை ஸ்தம்பிக்க முயற்சித்திருக்க வேண்டும்....அதைவிடுத்து கொடநாட்டில் பள்ளி கொண்டிருந்தார்... 3.  சிறிதேனும் உண்மையான அக்கறை அவருக்கு தமிழர்பா...

பூட்டிய இரும்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது!

சீமான்களின் சபையினிலேயே , கடிதம் எழுதி எழுதிக் களைத்துப்போனதோர் கிழட்டுச் சிங்கம்.....முன்னாலுக்கும் முன்னால் அவர் கொண்ட தமிழ்ப்பற்று.....இன்னாளில் அது தமது மக்கட்பற்றாய் மாறிப்போனதொரு சோகம். ஏதோவொரு புண்ணியத்தில், எவரோ செய்த வரலாற்றுத் தவறால் , கொள்கை , தொலைநோக்கு , மக்கட்பற்று இவை பற்றிய சிந்தையேதுமின்றி அரசியலில் விபத்தாய் விளைந்த கொடநாட்டு ஈழத்தாய்....தேர்தலுக்குத் தேர்தல் மட்டுமே தமிழர் பற்றியும் , தமிழர் அரசியல் பற்றியும் எழுதி வைத்துப் பேசும் செல்வி யவர்.........இன்னமும் அவர் சேலை பிடித்துத்திரியும் வீணர் கூட்டம்.! கூட்டணிக்கேற்றப்படி கொள்கையை மாற்றிக்கொள்ளும் மருத்துவப் படையாச்சி.........வீரமிகு வன்னியகுலத்திலே வந்துதித்த சந்தர்ப்பவாதச் சாக்கடை....சமரசமற்ற கொள்கை அரசியலை சந்தர்ப்பவாதச் சாக்கடைக்குள் தள்ளிய பெருமைக்குரிய மருத்துவர் தமிழ்க்குடிதாங்காத தமிழ்க்குடிதாங்கி! யாரை எதற்காக எதிர்த்து அரசியல் செய்யவேண்டுமே அவர்களோடே தம் தேவைக்குதந்த படி கூட்டு வைத்துக்கொண்டு ஈழத்திற்க்காய் எந்நேரமும் பாடுபடும் திரு.வைகோ அவர்கள்....அவரும் சிறை சென்றார்....

நண்பர் 'டோண்டு' ராகவன்...

உயிரோடு இருக்கும்வரை அறிக்கைகளால் அர்சித்து எதிர்ப்பரசியல் நடாத்தி செத்துபோன பிறகு ஆருயிர் நண்பர் என்று அழைத்துக்கொள்ளும் எல்லா அரசியல்வாதிகளையும் போலவே நான். எனக்கும் மறைந்த உயர்திரு 'டோண்டு' ராகவன் அவர்களுக்குமான பரிச்சயம் அவ்வளவொன்றும் அதிகமில்லைதான். பதிவுலகையும் , பர்ஸனல் லைப்பையும் பிரித்து வைத்துக்கொள்ளும் எண்ணமுடைய நான் , டோண்டு மட்டுமல்ல மற்றபல பதிவுலக நண்பர்களுடனும் கூட தனிப்பட்ட தொடர்புகளை வைத்துக்கொண்டதில்லை... இருந்தாலும் , அவ்வப்போது பதிவுலக பின்னூட்டங்களின்பாலே தொடர்ந்துகொண்டிருந்த தொடர்பு , எனது 'போலி டோண்டு' பற்றிய கட்டுரையொன்றிலேயே  தீவிர விவாதமாக மாறியது.. ஆயிரம் விமர்சனங்கள் அவர் மீதோ இல்லை அவர்தம் பிற்போக்கான கருத்துக்கள் மீதோ இருந்திருக்கலாம். கடினமாக ஓரிரு முறை பேசியிருக்கலாம்.. அத்தனையும் தாண்டி அவர் மிக நல்ல மனிதர் , கடும் உழைப்பாளி என்பதை அவரது பதிவுலகம் மூலமாக அறிந்தவனெனினும் உறுதியாக கூறவியலும்.. அத்தகைய நல்ல மனிதரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் , நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்... வருத்தங்கள...