Skip to main content

Posts

Showing posts with the label ச்சும்மா ட்ட்மாஷ்

"ஜெ" பிரதமரானால்...!!

ஆனாலும் இந்த "சோ" மா(தி)ரி பேச யாருக்கும் வராது... ஒரு விழா அதில் மாங்காய்களை தனக்குத் தோதான முறையில் அடித்துக்கொள்ளப் பார்த்திருக்கிறார்.... முதலில் , பாரதிய ஜனதா கட்சியில் பிரதமர் வேட்பாளராக இருக்கும் இரு போட்டியாளர்களை கூப்பிட்டு வைத்தார். தனக்கு "மோடி" தான் பிரதமர் சாய்ஸ் என்று சொல்லுவதற்கு வாஜ்பாயையும் துணைக்கு அழைத்தார்.......வாஜ்பாயை முன்மொழிந்ததே அத்வானி தான் என்றும் , அதுபோலவே "மோடி" யையும் அத்வானி முன்மொழிய வேண்டுமென்கிறார்... தமிழகத்தில் தனக்கான ஓட்டுவங்கியைப் பெறுக்க சில பாராளுமனற் , சட்டமன்ற தொகுதிகள் பாஜகவுக்குத் தேவை... அதனால் , அதிமுகவுடனோ , திமுகவுடனோ ஆன கூட்டணி அக்கட்சிக்கு மிகமிக அவசியம் என்பதைவிட அவசரம்... அதனால் தான் , வாஜ்பாயை பதிமூன்று மாதங்கள் படுத்திய 'ஜெ'வுடன் கூட்டணிக்குத் தவிக்கிறார்கள் அத்வானியும் , மோடியும் , சோவும்.....எப்படி இழுப்பது? ஏற்கெனவே விஜயகாந்த்தை தேவையில்லாமல் தூக்கி விட்டுவிட்டோமோ என்ற கடுப்பில் இருக்கும் அம்மா "பாஜகவை தலையில் தூக்கி சுமக்க ஒத்துக்கொள்வாரா? அதுவும் " அம்மா" தான் எல்லாமே எ...

வெறுமை நிறைந்த தனிமையும் , தனிமை நிறைந்த சனிக்கிழமையும்!

விட்டங்களும் , சுவர்களும் , ஜன்னல்களும் , திரைச்சிலைகளும் மட்டுமே சூழ அமைந்திருக்கும் , பார்க்கிறேனோ , பார்க்கவில்லையோ தற்போதைக்கு எனக்கு மிகவும் பிடித்த 'முரசு' சேனலில் 'நிலா காய்கிறது' என்ற 'இந்திரா படப்பாடல் ஒலிக்கின்ற வேளையில் இப்பதிவை எழுதத் தொடங்குகிறேன்... கடந்த பதிவினை நான் இவ்வலைப்பூவில் ஏற்றியது கடந்த ஜனவரி மாதம்......ஏன் இந்த இடைவெளி....? ஏதேனும் எழுத வேண்டுமென்று சப்ஜெக்ட் இல்லாமல் எழுத ஆரம்பிக்கும் எல்லோருக்கும் வரும் பிரச்சினை எனக்கும் வந்திருக்கிறது.... அட்டா காலை உணவு ஆகவில்லையே என்று தோன்றிற்று.......தட்டில் வேலைக்கார அம்மா கிச்சடி என்ற பெயரில் மஞ்சள் கலரில் செய்து வைத்திருந்தாலும் சாப்பிட முடிந்தது.... இட்ட அன்னம் கொஞ்சம் முன்னப்பின்ன இருந்தாலும் யாருமற்ற சூழலில் அன்னமிடமாவது அவர் இருக்கிறார் , அதனால் பிழைத்தேன். முரசு தொலைக்காட்சியில் , என்னுயிர்த்தோழன் படப்பாட்டு ஓடிக்கொண்டிருக்கிறது....மாற்றினேன்....கலைஞர் தொல்லைக்காட்சியில் , அனேகமாக ஆயிரமாவது முறை 'ஆனந்த தாண்டவம்' என்ற மொக்கைத் திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது.... வெட்டுக்கிளியோ எ...

ச்சும்மா ட்டமாஷ் - 75: மதிபாலா - திமுகவின் அடுத்த தலைமை

நண்பர் மோகன் கந்தசாமியின் ச்சும்மா டமாஷில் எனது திராவிட முன்னேற்றக் கழகம் - இனி என்ற கட்டுரை மூன்று பதிவுகளாக வெளிவந்தது. அதன் மீள்பதிவே இது. காப்பிரைட் முழுதும் ச்சும்மா ட்ட்மாஷுக்கே ! ச் சும்மா ட்டமாஷ் - 75 -க்காக பதிவர் மதிபாலா முதல் இரண்டாம் பகுதிகள் சென்ற பதிவுகளில் வெளியானது. அவர்கள் எழுதியுள்ள இந்த சிறப்புப் பதிவின் இறுதிப் பகுதி இப்பதிவில் வெளியாகிறது. மற்றும் திமுகவின் அடுத்த தலைமை இ து கொஞ்சம் சுலபமான அலசல் என்றே தோன்றுகிறது. திமுகவின் அடுத்த தலைமைக்கான முன் மொழிதலில் முன்னணியில் நிற்பவர் மு.க.ஸ்டாலின், அடுத்த அளவில் சொல்லப்படும் மு.க.அழகிரியோ, கனிமொழியோ, தயாநிதி மாறனோ திமுகவின் அனைத்துத் தரப்பினருக்கும் பரிச்சயமானவர்களோ , நீண்ட காலமாக உழைத்தவர்களோ கிடையாது. ஆனால் மு.க.ஸ்டாலின் அப்படியானவர் கிடையாது ஏன் ஸ்டாலின் திமுகவின் தலைமையாக இருக்கக் கூடாது? 1. தி முகவிற்காக பாடுபட்ட ஒருவர், அடிமட்டத் தொண்டனாக இருந்து மேலே வந்த ஒருவர், தான் மேற்கொண்ட பொறுப்புக்களை எல்லாம் சிரமேற்கொண்டு அனைவரும் பாராட்டும் வண்ணம் முடித்த ஒருவர், எல்லாவற்றிற்கும் மேலாக பணிவு, தான் சொல்ல நினைத்...

ச்சும்மா ட்டமாஷ் - 75: மதிபாலா - ப்னீக்ஸ் பறவையாய் மீண்டு வந்த திமுக. பகுதி - 2

நண்பர் மோகன் கந்தசாமியின் ச்சும்மா டமாஷில் எனது திராவிட முன்னேற்றக் கழகம் - இனி என்ற கட்டுரை மூன்று பதிவுகளாக வெளிவந்தது. அதன் மீள்பதிவே இது. காப்பிரைட் முழுதும் ச்சும்மா ட்ட்மாஷுக்கே ! செ ன்ற பதிவில் முதல் பகுதி யாக வெளியான மதிபாலா வின் கட்டுரை இப்பதிவில் தொடர்கிறது. இறுதிப் பகுதி அடுத்த பதிவில் வெளியாகும். இது ச்சும்மா ட்டமாஷ் - 75 -க்காக அவர் எழுதிய சிறப்புப்பதிவு. ப்னீக்ஸ் பறவையாய் மீண்டு வந்த திமுக தி முக தலைவராக கலைஞர் பொறுப்பேற்ற பிறகு நடாத்தப்பட்ட தேர்தலில் திமுகழகம் வெற்றிபெற்றது. கலைஞர் இரண்டாம் முறையாக பதவியேற்றார். பின்பு திமுகழகத்தின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர் அவர்கள் கருத்துவேறுபாடு காரணமாக தனிக்கட்சி தொடங்கினார் எம்.ஜி.ஆரின் பிரிவு சி னிமா கவர்ச்சி , கொள்கைப் பாடல்கள் என்ற ஜனரஞ்சகத்தின் மொத்த வடிவமான எம்.ஜி.ஆரும் அவரது கட்சியுமான அதிமுக , தமிழகத்தின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றது. அதன் பிறகு 13 ஆண்டுகள் , எம்.ஜி.ஆர் தமிழகத்தின் ஆட்சியிலிருந்தார். எம்.ஜி.ஆரின் கலருக்கும் , எம்.ஜி.ஆரின் கொள்கைப்பாடல்களுக்குமே ஓட்டுப் போட்ட மக்கள் அனேகம் பேர். இதில் கொள்கையென்ன ,கோட்பாடென...

ச்சும்மா ட்டமாஷ் - 75: மதிபாலா - திராவிட முன்னேற்ற கழகம் -இனி!

நண்பர் மோகன் கந்தசாமியின் ச்சும்மா டமாஷில் எனது திராவிட முன்னேற்றக் கழகம் - இனி என்ற கட்டுரை மூன்று பதிவுகளாக வெளிவந்தது. அதன் மீள்பதிவே இது. காப்பிரைட் முழுதும் ச்சும்மா ட்ட்மாஷுக்கே ! 'ச் சும்மா ட்டமாஷ் - 75': சிறப்பு பதிவுகள் வரிசையில் அடுத்து பதிவர் மதிபாலா அவர்கள் எழுதும் அரசியல் கட்டுரை வெளியாகிறது. திமுக -விற்கு வலுவான திராவிட மாற்று கட்சி தற்போதைய தமிழக அரசியலில் இல்லை என்னும் நிலை திமுக -வை முன்னெப்போதுமில்லாத வகையில் அக்கறை இன்மையுடன் கூடிய சோம்பல் கொள்ளச்செய்கிறது என்பது பரவலான எண்ணம். மேலும் ஒரு பெரிய அளவிலான தலைமை மாற்றத்திற்கு திமுக தயாராகி வரும் இச்சூழ்நிலையில் மாற்றத்திற்கு பிறகான திமுகவின் நிலை எவ்வாறு இருக்கும் என இக்கட்டுரை ஆராய்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் – இனி? 'தி் ராவிட முன்னேற்றக் கழகம் – இனி?' என்ற இந்தக் கேள்வி வெகு ஆழமானது. அந்தக் கேள்வியில் திமுகவின் அடுத்த அரசியல் தலைமை பற்றிய வினவல் மட்டும் அடங்கியிருக்கவில்லை…..திமுகவின் எதிர்காலம் என்ன என்னும் மாபெரும் கேள்வியும் அடங்கியிருக்கிறது திமுக ஒரு புறக்கணிக்கவியலாத சக்தி ச ற்றேறக்கு...