Skip to main content

கலியாணமாம் கலியாணம்!

"கண்ணு.....நான் நேத்துதான் சித்தநாயக்கம்பாளையம் வள்ளுவன்கிட்ட
போயுருந்தனா...அவுங்க கொசவந்தோட்டத்துல இருக்குற புத்துங்கண்ணுக்கு
வாரமொருக்கா பாலூத்தச் சொன்னாங்கோ...! எண்ணி ஒரே மாசத்துல காரியம்
முடியுமுங்குறான் அந்த வள்ளுவன்.." மகளிடம் சொன்னாள் சானகி.



பாலும் ஊத்தியாயிற்று.


"பொண்ணு லட்சணமாத்தான் இருக்குது. ஆனா படிப்பு பத்தாதுங்கறார்
மாப்பிள்ளை.." தரகர் சொன்ன சேதி கேட்டு நொந்து போனாள் சானகி. மாதமும்
கழிந்தது.



"சத்திக்குட்டி.....அந்த வள்ளுவங்கிட்ட மறுக்கா ஒரு தாட்டி போயிருந்தேன். ஏதோ
ராகு தோஷமிருக்குதாமா........திருநாகேஸ்வரம் போயி இராகு பகவானுக்கு
"பாலாபிஷேகம் " பண்ணினா தோஷமெல்லாம் போயிருமாமாம். எப்ப போலாம்?"


திருநாகேஸ்வரமும் போய் வந்தாயிற்று.



"மாப்புளைக்கு பொண்ணைப் பிடிச்சுருக்காம். அவுங்கம்மா எத்தன பவுனு
போடுவீங்கன்னு கேட்டாங்க. " மேற்காலவூட்டு ரங்கண்ணன் கேட்டார்.


"அவியள கேட்டுட்டு பொழுதுக்குள்ள சொல்றேனுங்கண்ணா " சொன்னாள் ஜானகி.


"ஏனுங்க... , திருநாகேஸ்வரம் போய்ட்டு வந்தவுடனே வரன் அமையுமுன்னு சோசியன் சொன்னாருல்ல.....கடன வுடன வாங்கியாவது இந்தக் கலியாணத்த முடிக்கோணும். ஆவுணி வந்தா வயசு 28 ஆகுது. வயசுப் பொம்பளைய வூட்ல வெச்சிட்டு அக்கம்பக்கத்து ஆளுங்க பேச்சத் தாங்க முடியல. எத்தன பவுனு போட முடியும்னு நம்ம ரங்கண்ணன் கேட்டாருங்க...."

"இவுளுக்கப்புறம் ஒரு ஆம்பளப் புள்ளையிருக்குது சானகி. ஆனாலும்
சத்திக்குட்டிக்கும் வயசாகுது. அதனால என் சக்திக்கு மீறினாலும் கடன வுடன வாங்கி ஒரு 25 பவுனு போடேறேன்னு சொல்லிடு"

"25 பவுனுன்னா ஆகாதுங்கறாங்கோ. புதுசா ஏதோ பிளசரு காரு "உண்டாயோ " என்னமோ அதும் , 50 பவுனும் போட்டா உடனே நிச்சியம் பண்ணிக்கலா முங்கறாங்கோ மாப்ளை ஊட்டுக்காரங்க. " ரங்கண்ணன் சொன்னார்.


வியாபாரம் படியவில்லை. நொந்து போனாள் ஜானகி.......


***


காளிம்மா சொன்னார் என நாட்ராயன் கோயிலுக்கு செவ்வாக்கெழம , செவ்வாக்கெழம போயி சாமி கேட்டுட்டும் வந்தாச்சி. மாரியாத்தா கோயிலுக்கு
வாரமொருக்கா எட்டு நெய் வெளக்கு ஏத்தியும் வெச்சி வாரம் அஞ்சாகுது.


"ஏனுங்க , இந்த சித்தநாயக்கம்பாளைய சோசியன் சொல்றது நடக்கவே மாட்டீங்குது. அவினாசிப் பக்கம் தெக்கலூருல ஒரு சோசியக்காரன் இருக்கானாமா , சொன்னா பலிக்குதுன்றாங்க. ஒரு எட்டு போயிட்டு வந்துரட்டுமா ? "

"சானகி , அப்பிடியே நம்ம தம்பி சாதகத்தையும் எடுத்துப் போயிட்டு வா..!"

தெக்கலூர் சோசியன் சொன்னான் .

" புள்ள சாதகத்துல ரெண்டுல சனி இருக்குது. இந்த ஆனி மாசத்துக்குள்ள கலியாணம் ஆகலேன்னா , குரு பலன் முடிஞ்சிரும். அப்புறம் ரெண்டு வருசத்துக்கு அப்பறந்தேன் குரு பலன் . அதுனால கொஞ்சம் வெட்டு
வெடுக்குன்னு மாப்பளை பாருங்க. கும்பகோணத்துல இருக்குற திருமணஞ்சேரி"க்கு ஒரு எட்டு போய்ட்டு வந்துடுங்கோ. முடிஞ்சா அம்மிணிக்கு சிம்ம லக்கினம்ங்கிறதால பக்கத்துல இருக்குற சூரியனார் கோயிலுக்கும் ஒரு எட்டு போய்ட்டு வந்துடுங்க"


திருமணஞ்சேரியும் போயாகிற்று , சூரியனார் கோயிலும் போயாகிற்று.


வரன் ஏதும் படிவதாக இல்லை. போகாத தரகனூடில்லை. சூலூர்ல கொங்கு திருமண மண்டபத்துல எழுதி வச்சா நெறைய வரன் வருதாம். சானகி சத்திக்குட்டியையும் கூட்டிக் கொண்டு போயி எழுதி வைத்துவிட்டு வந்தாள்.


"ம்ஹூம்" ஒரு பலனுமில்லை. பரிகாரங்களாலும் , புதுப்புதுக் கோயில்களாலும்
அடுத்த சில வருடங்கள் கழிந்தன.


****


கழியும் ஒவ்வொரு நாளும் வீட்டுக்குத் தான் பாரமென்ற நினைவுடனே குலைந்து போனாள் சத்திக்குட்டி. ஓவ்வொரு காலையும் தெருவோரப் பிள்ளையாருக்கு ஈரத்தலையுடன் தண்ணீர் ஊற்றும் போதும் ஏதாவது இடியோ , மின்னலோ தன்னை வந்து கொண்டு போய் விடாதோ , இந்த உலகத்தை விட்டு விடைபெற்று விடலாம் என்ற அளவில் சிந்திக்க ஆரம்பித்திருந்தாள் சத்திக்குட்டி.


ஒரு சுபயோக சுபதினத்தில் ,ஊருக்கு வரும் மினி பஸ்ஸின் ஓட்டுநரை கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோயிலில் கரம் பிடித்தாள் சத்திக்குட்டி.
வீட்டின் முன் மாலையும் , கழுத்துமாக வந்து நின்ற சத்திக்குட்டியை நோக்கி
உச்சஸ்தாயியில் கத்திக்கொண்டிருந்தார் அப்பா.


"காதல் பண்ணறேன்னு எவனையோ கூட்டிட்டு வந்திருக்கியே , நீ குடியானவன்
ஊட்டுப் புள்ளையாடீ ? என் குடும்ப மானத்தைக் கெடுத்த வந்தவளே.
இதுக்காகத்தானா உன்னப் பெத்தேன் ? . எங்காச்சும் போயிடு , எங்கண் முன்னாடி
நிக்காதே...இனி நீ யாரோ , நான் யாரோ.....! இன்னியோட தலை முழுகிட்டேன்
உன்னை..!"


அமைதியாக கண்ணில் நீர் வடிய நின்று கொண்டிருந்தாள் சானகி. அந்தக் கண்ணீருக்கு தாய்மைக்கே உண்டான ஆயிரம் அர்த்தங்கள்....!

Popular posts from this blog

இதற்குத்தானா ஆசைப்பட்டீர்கள் திரு.சீமான்?

இன்று சீமான் அதிமுக கூட்டணியில் இருந்து பிரச்சாரம் பண்ணப்போவதாக ஒரு செய்தி வந்திருக்கிறது..ஏற்கெனவே ஒருமுறை செய்த பாரிய தவறொன்றை மற்றொருமுறை செய்யமாட்டார் என்றே நினைத்திருந்தேன்....இது உண்மையான செய்தியாய் இருந்தால் பேரிடிதான்..!!!! மாறாக உணர்வுள்ள இளைஞர்கள் தம் பின்னால் பேரெழுச்சியுடன் நாம் தமிழராய் எழும்போது.....அதைக்கொண்டுபோய் போய்ஸ்தோட்டத்திற்கு தாரைவார்த்துக்கொடுப்பதென்பது கனவிலும் சகிக்க முடியாத செயல்....!!  கருணாநிதிக்கு ஈழ அழிவிற்கு எவ்வளவுக்கெவ்வளவு பங்கிருக்கிறதோ அதே அளவிற்கு  சக பங்குள்ளவரே செயலலிதா... செயலலிதா என்ன செய்திருக்க வேண்டும்? என்ன செய்தார்? 1.எதிர்கட்சியாக மாபெரும் போராட்டங்களை நடாத்தியிருக்க வேண்டும்...அழிவது நம்சொந்தங்களே என்று தெரிந்திருந்தும் வாய்மூடி மெளனியாகவே இருந்தார். 2. கருணாநிதியின் எதிர்ப்பரசியலைக் கைவிட்டு விட்டு முத்துக்குமார் முதற்கொண்டு  தமிழக இளைஞர்களின் எழுச்சியை உபயோகித்து இந்திய அரசை ஸ்தம்பிக்க முயற்சித்திருக்க வேண்டும்....அதைவிடுத்து கொடநாட்டில் பள்ளி கொண்டிருந்தார்... 3.  சிறிதேனும் உண்மையான அக்கறை அவருக்கு தமிழர்பா...

யார் நமக்கு எதிரி?

ஈழப்போராட்டம் பல படிநிலைகளைக்கொண்டது, தந்தை செல்வாவில் ஆரம்பித்து, பல்வேறு போராளிக்குழுக்களில் தொடங்கி புலிகளால் வலுப்பெற்றது. மற்ற போராளிக்குழுக்களிலிருந்து புலிகளின் கைகளுக்கு முழுதும் மாறியதெப்படி?  இந்தியப்பெருந்தலைவர் இந்திராகாந்தி அவர்கள் எல்லா போராளிக்குழுக்களையும் ஆராய்ந்து புலிகள் தான் எல்லோரிலும் வலுவானவர்களாகவும் , சரியான சிந்தனைப்போக்குடையவர்களாகவும் இருப்பதாக தீர்மானித்தார்கள். அதனால் விடுதலைப்புலிகளுக்கு கூடுதல் ஆயுத பலம் மட்டுமல்ல , தார்மீக ஆதரவுத்தளமும்  கிடைத்தது.  தமிழகத்தில் எம் ஜி ஆர் அவர்களுமே விடுதலைப்புலிகளை நம்பிய அளவிற்கு மற்ற குழுக்களை நம்பவில்லை. ஏன் கலைஞர் கூட சகோதர யுத்தம் வேண்டாம் வேண்டாமென தலையில் அடித்துக்கொண்டாரே தவிர ஒரு சந்தர்ப்பத்தில் கூட புலிகளை இடித்துரைத்தாரில்லை. தனது இறுதிக்காலம்  வரை சகோதர யுத்தத்தினால் தான் புலிகள் வீழ்ந்தார்களென்பதை உறுதியாக நம்பினார். அதற்காக புலிகளை வெறுத்தாரா என்றால் ஒருகணமும் வெளிப்படையாக அவர் சொன்னதில்லை.  புலிகளால் அவர்களது மிதமிந்திய ஹீரோயிசத்தால் அதிகம் இழந்த அரசியல் கட்சி ஒன்று உலகில் இருக்கும...

செயற்கரிய செய்வர் பெரியர்….திரு.பொள்ளாச்சி நசன்.!

இந்தப்பதிவினை 2009 ல் எழுதினேன். படித்த நண்பர்கள் அனைவரும் , இது எமக்கு புதிய செய்தியே என்றார்கள்....நல்லசெய்தியினை நாலு பேருக்கு தெரியும்படி மீண்டும் உரக்கச்சொல்வதில் தவறில்லையே. அதனால் இந்த மீள்பதிவு..... நவம்பர் 2009 க்கும் 2012க்கும் இடைப்பட்ட காலவெளியில் 'தமிழம்' இணையம் தான் எத்துணை வளர்ந்திருக்கிறது? வாழ்த்துக்களும் ! , வணக்கங்களும்! த ற்செய லாக நேற்றிரவு வலையில் உலாவிக்கொண்டிருந்தேன்….மேற்கண்ட தலைப்பிலிருக்கும் குறள்மொழிக்கேற்ப , அரியதொன்றை செய்து கொண்டிருக்கும் திரு. பொள்ளாச்சி நசன் அவர்களைப் பற்றியும் , அவரது தமிழம் இணையம் பற்றியும் அரிய நேரிட்டது. உங்களில் சிற்றிதழ் தொடர்புபட்ட பலரும் அவரை அறிந்திருக்கக் கூடும்…….இன்னும் பலர் அவரைப் பற்றி அறிந்திருக்காமலும் இருக்கக் கூடும்…..என்னைப் போல..! அதனால் ஒரு சின்ன அறிமுகம்… ( சூரியனுக்கே டார்ச்சா என்று திரு.நசன் அவர்கள் கோவித்துக்கொள்ளக் கூடாது…!!) பொள்ளாச்சி நசன் என்று தன் பெயரை வழங்கும் மணிப்பிள்ளை நடேசன் தமிழம் என்னும் வலையிதழின் ஆசிரியர். இவர் சிதம்பரத்தில், செப்டம்பர் 15, 1952 அன்று பிறந்தார். பொள்ளாச்ச...