Skip to main content

Posts

Showing posts from January, 2013

எனக்குப் பிறகு ஸ்டாலின் : கருணாநிதி

சமுதாய மேன்மைக்காக என் ஆயுள் இருக்கிற வரை பாடுபடுவேன். அதற்குப் பிறகு ஸ்டாலின் என்பதை நீங்கள் மறந்து விடக் கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இன்று வேலூர் மேற்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் சாமுவேல் செல்லப்பாண்டியன் தலைமையில் 2000க்கு மேற்பட்ட பா.ம.க. வினர் அந்தக் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்த போது கிருணாநிதி ஆற்றிய உரையில், " இன்றைக்கு ஒரு கட்சியின் அமைப்பிலே இருந்து விடுபட்டு இங்கே வந்திருக்கிறோம் என்பதை எண்ணிப் பார்க்கிற நேரத்தில் அந்த அமைப்பைப் பற்றி குறை கூறத் தேவையில்லை. அந்த அமைப்பைக் குற்றஞ்சாட்டத் தேவையில்லை. குற்றம் இருந்த காரணத்தால்தான், குறைகள் இருந்த காரணத்தால் தான் அங்கிருந்து பிரிந்து வந்து திராவிட முன்னேற்றக் கழகத்திலே இணைந்திருக்கிறோம் என்று முற்றுப்புள்ளி வைத்த பிறகு, அதைப் பற்றிப் பேச வேண்டிய அவசியமில்லை. உங்களையெல்லாம் பிரிந்திருக்கின்ற அந்தத் தலைமை, ஒரு காலத்தில் எனக்கு மிக மிக வேண்டிய, நட்பு கொண்ட, கொள்கையுடைய தலைமையாகத் தான் இருந்தது. ஆனால் நீங்கள் பத்திரிகைகளைப் பார்த்திருப்பீர்கள். கூட்டங்களிலே கேட்டிருப்பீர்கள்