Skip to main content

இதற்குத்தானா ஆசைப்பட்டீர்கள் திரு.சீமான்?

இன்று சீமான் அதிமுக கூட்டணியில் இருந்து பிரச்சாரம் பண்ணப்போவதாக ஒரு செய்தி வந்திருக்கிறது..ஏற்கெனவே ஒருமுறை செய்த பாரிய தவறொன்றை மற்றொருமுறை செய்யமாட்டார் என்றே நினைத்திருந்தேன்....இது உண்மையான செய்தியாய் இருந்தால் பேரிடிதான்..!!!!

மாறாக உணர்வுள்ள இளைஞர்கள் தம் பின்னால் பேரெழுச்சியுடன் நாம் தமிழராய் எழும்போது.....அதைக்கொண்டுபோய் போய்ஸ்தோட்டத்திற்கு தாரைவார்த்துக்கொடுப்பதென்பது கனவிலும் சகிக்க முடியாத செயல்....!!  கருணாநிதிக்கு ஈழ அழிவிற்கு எவ்வளவுக்கெவ்வளவு பங்கிருக்கிறதோ அதே அளவிற்கு  சக பங்குள்ளவரே செயலலிதா...

செயலலிதா என்ன செய்திருக்க வேண்டும்? என்ன செய்தார்?

1.எதிர்கட்சியாக மாபெரும் போராட்டங்களை நடாத்தியிருக்க வேண்டும்...அழிவது நம்சொந்தங்களே என்று தெரிந்திருந்தும் வாய்மூடி மெளனியாகவே இருந்தார்.

2. கருணாநிதியின் எதிர்ப்பரசியலைக் கைவிட்டு விட்டு முத்துக்குமார் முதற்கொண்டு  தமிழக இளைஞர்களின் எழுச்சியை உபயோகித்து இந்திய அரசை ஸ்தம்பிக்க முயற்சித்திருக்க வேண்டும்....அதைவிடுத்து கொடநாட்டில் பள்ளி கொண்டிருந்தார்...

3.  சிறிதேனும் உண்மையான அக்கறை அவருக்கு தமிழர்பால் இருக்குமானால் ,குறைந்தபட்சம் சட்டசபையிலேனும் திமுக கூட்டணி அரசிற்கு நெருக்கடி ஏற்படுத்தி இருக்கவேண்டும்......ஆனால், அவரது கட்சி எம்.எல்.ஏக்கள் யாருமே அதுபற்றி சிந்தித்திருப்பார்களா என்பதே சந்தேகம்.

4. கடந்த தேர்தலில் தெருவுக்குத் தெரு "ஈழம்" என்ற செயலலிதா, கள்ளிப்பட்டியில் தண்ணீர் வரவில்லையென்றால் ஆர்ப்பாட்டம் நடாத்துகின்ற செயலலிதா, ஈழத்துக்காக என்னென்ன செய்தார் என்று பட்டியலிட்டால் எதுவும் மிஞ்சாது!!!

5. கலைஞர் , சன் தொலைக்காட்சிகள் ஈழச்செய்திகளை எவ்வளவுக்கெவ்வளவு புறக்கணித்தனவோ அது போன்றே   ஈழச்செய்திகளை புறக்கணித்தது செயா தொலைக்காட்சி...இதை மறுக்க முடியுமா?

6. சீமான் தொடர்ச்சியாக கைது செய்யப்படும்போதும் கூட யாதொரு கவனமும் செலுத்தாதவர் அவர்.

7. பெரியார் யாரையெல்லாம் காலமெல்லாம் எதிர்த்தாரோ அத்தகைய அனைத்து குணங்களையும் ஒருங்கே கொண்டிருப்பவர் செல்வி செயலலிதா அவர்கள்...


இன்றைக்கு இளைஞர் கூட்டம் சீமானுக்குப் பின்னால் தென்படுவதற்குக் காரணமே வைகோ ,திருமாவளவன் போன்றவர்களின் சமரச அரசியலால்தான்..........அதே சமரச அரசியலை சீமானும் செய்வாரானால்  பத்தொடு பதினைந்தாக காணாமல் போவார்......வைகோ பேசாத அரசியலொன்றையும்,ஆவேசமொன்றையும் தம் பேச்சில் கொண்டுவர இயலாது...

வைகோ எப்படி போயஸ்தோட்டத்தில் உட்கார்ந்து போர்ப்பரணி பாட முடியாதோ அதுபோலவே போயஸ்தோட்டத்தினுடனான சமரச , இணக்க அரசியலின் மூலம் உணர்வுள்ள தமிழர் கூட்டத்தினை ஒருபோதும் சீமானால் திரட்ட முடியாது....

காரணம், எதிரி அங்கேயும் இருக்கிறான்.....

நாம் தமிழர் பேரியக்கமானது கருவுற்ற சிறு சிசு....அதைக் கருவிலேயே கலைத்து விடக்கூடாது....வாராது வந்த மாமணியாய் வந்த சீமான் அவர்களும் வழிதவறி இன்னொருமுறை செயலலிதாவை "ஈழத்தாய்" என்பாரானால் அதைவிட பெரும் சோகம் "நாம் தமிழர்களுக்கு இருக்கமுடியாது.."!! அதை ஏற்றுக்கொள்ளவும் முடியாது....

காங்கிரஸ், திமுக எதிர்ப்பென்பதை கட்சி வலுப்பெறும் வரை தேர்தல் அரசியலன்றி மாற்று வழிகளில் கையாள வாய்ப்பு எப்போதுமே இருக்கிறது..... வெறும் நான்கைந்து எம்.எல்.ஏ சீட்டுக்களால் ஒரு எழவும் புடுங்க முடியாது என்பதே உண்மை...மாற்றாய் அத்தகைய தேர்தல் வெற்றிகளும், சில எம்.எல்.ஏ பதவிகளும் ,ஆட்சி மாற்றமும் சாதிக்கப்போவது தற்போதைக்கு ஒன்றுமே இல்லை என்பதே நிதர்சனம்...!!!


ஆதரவு கொடுத்தவர்கள் துரோகி என்றால், அதைதெரிந்தே அமைதி காத்தது  அதிமுக..அதைப்போன்றதொரு அணியில் சீமானும் சேருவானால், அவருக்கு வைகோ , திருமா வரிசையில்  மீண்டுமொரு ஆசனம் காத்துக்கொண்டே இருக்கிறது...

இதற்குத்தானா ஆசைப்பட்டீர்கள் திரு.சீமான்?

Comments

கடுமையான ஏமாற்றம்.இது போன்ற செயல்கள் முற்றிலும் நம்பிக்கை இழக்கச் செய்கின்றன
Anonymous said…
சிரிப்பாய் சிரிக்க வேண்டும் போலத் தோன்றுகிறது. ஆனால் அழுகைதான் வருகிறது. சீமானுமா ஓட்டுப்பொறுக்கி ஆகிறார்? திருப்பி அடிப்பேன் என்று சூனியர் விகடனில் ஆணி புடுங்கிய கதை வேறு. உண்மையில் சகிக்க முடியவில்லை.


- பெயர் சொல்ல விரும்பாத மும்பை நாம் தமிழர் இயக்கத் தோழன்
Anonymous said…
எங்கேயும் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தால் இதுபோன்ற ஏமாற்றங்கள் சகஜந்தான் செந்திலான்.

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
Unknown said…
தற்போதைக்கு கருணா-வை தோற்கடிப்பதற்காக ஜெ.வை கருவியாக பயன்படுத்துவேன்--சீமான்.இதில் என்ன தவறு?
மும்பைத்தமிழன் said…
தற்போதைக்கு கருணா-வை தோற்கடிப்பதற்காக ஜெ.வை கருவியாக பயன்படுத்துவேன்--சீமான்.இதில் என்ன தவறு?

இதென்னய்யா கொடுமையா இருக்கு? ஒருவேளை ஜெ. ஆட்சிக்கு வந்தால் அதன்பிறகான நிலைமை என்ன? நாம் தமிழர் இயக்கம் மூலையில் உக்காரவேண்டியது தான். இன்றைய தேவை கொள்கைகளூடான மக்களைத்திரட்டுதல்தானே தவிர ஓட்டரசியல் அல்ல.
Anonymous said…
//
6. சீமான் தொடர்ச்சியாக கைது செய்யப்படும்போதும் கூட யாதொரு கவனமும் செலுத்தாதவர் அவர்.//

சீமானை கைது செய்யச் சொல்லி கருணாநிதிக்கு இன்ஸ்ட்ரெக்சன் கொடுத்தவரே ஜேதான். அவரது காட்டமான் அறிக்கைக்கு பிறகுதான் சீமான் கைது செய்யப்பட்டார். இந்த விவரமெல்லாம் சீமானுக்கோ அல்லது சீமான் மாதிரி வாய்ச்சவடால் பேர்வழிகளை கண்டு மயங்கும், எங்கும், எப்போதும் எளிய தீர்வை மட்டுமே தேடும் மதிபாலா போன்றோர்களுக்கோ தெரியுமா என்று தெரியவில்லை.
\\தற்போதைக்கு கருணா-வை தோற்கடிப்பதற்காக ஜெ.வை கருவியாக பயன்படுத்துவேன்--சீமான்.இதில் என்ன தவறு?\\

செயவே எதிரிதான் நமக்கு நாம் தமிழர்கள் வேறு பாதையை தேர்தெடுக்க வேண்டும்......
Admin said…
இது எல்லாம் எதிர்பார்த்தவைகள்தானே!

தமிழக அரசியல் சந்தையில் தற்போது அதிகம் விற்கப்படுவதும் வாங்கப்படுவதும் ஈழம்... ஈழத்தமிழ் உணர்வு....

நடத்துங்கோ நடத்துங்கோ!!!!!!!!!!!!!
Unknown said…
நண்பரே இது ஒரு சரியான முடிவு......

மக்களை நம்பி இறங்குபன் தலைவனாக முடியாது.............நேரதுகேற்றாட் போல் காய் நகர்துபவனே அறிவாளி........
மிகவும் வருத்தமாக இருக்கிறது.
முத்துராமலிங்கம் சிலைக்கு மாலை அணிவித்தபோது அதை ஒரு சறுக்கல், திருத்திக்கொள்வார் என்ற நம்பிக்கை இருந்தது. பிறகு விஜய்யை வைத்து படம் என்ற செய்தி வந்தபோதே இவரது நம்பகத்தன்மை கேள்விக்குளானது.

மீண்டும் ஒரு 'கைப்புள்ள' உருவாகிறார்.

---------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் - ஜன'2011)
Anonymous said…
அப்படிப்போடு
குமார் said…
கருணாநிதிக்கும், ஜெயலலிதாவிர்க்கும் ஈழ விசயத்தில் மிகுந்த வித்தியாசம் இருக்கிறது. கருணாநிதி ஈழத்திர்க்கு எதிராக காங்கிரசுக்கு ஆதரவாக பல செயல்களை செய்தவர். மிகப்பெரிய துரோகி. ஜெயலலிதா எனக்கும் ஈழத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பார்.. அவரிடம் நீங்கள் ஆதரவையும் எதிர்பார்க்க முடியாது, கருணாநிதி போல துரோகமும் செய்ய மாட்டார். ஜெயாவின் நடவடிக்கை தமிழகத்தில் அவரின் அரசியல் சார்ந்து இருக்குமே தவிர, ஈழத்தில் சிங்களவனை ஊக்கப்படுத்துவதாக இருக்காது..
Anonymous said…
நல்லதொரு பார்வை.

plz. contaci me
jaani.n at gmail.com
Anonymous said…
சீமான் எப்போது விஜயை ரோஷமுள்ள மானமுள்ள உண்மைத்தமிழன் என்று சொன்னாரோ அப்போதே எனக்கு இவர் மேல் உள்ள மரியாதை போய் விட்டது.

தற்செயலாக காங்கிரஸ் அதிமுக உடன் கூட்டணி போட்டால் இவர் என்ன செய்வார்? ஜெயலலிதா அதற்க்கான முயற்சிகலிலும் ஈடுபட்டது/ஈடுபட்டு கொண்டு இருப்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம் தான். இந்த விடயங்களை எல்லாம் எண்ணி பார்க்காமல் சீமாண் இந்த முடிவை எடுத்தது மிகவும் வேதனைக்குரியது.
கடுமையான ஏமாற்றம்.இது போன்ற செயல்கள் முற்றிலும் நம்பிக்கை இழக்கச் செய்கின்றன/

ஆம் திரு.செந்திலான்.! பார்ப்போம் , என்ன நடக்கிறதென்று.!
திருப்பி அடிப்பேன் என்று சூனியர் விகடனில் ஆணி புடுங்கிய கதை வேறு. உண்மையில் சகிக்க முடியவில்லை.


- பெயர் சொல்ல விரும்பாத மும்பை நாம் தமிழர் இயக்கத் தோழன்//

இதைச் சொல்ல நீங்கள் ஏன் உங்கள் பெயரை மறைக்க வேண்டும்??? எனினும் , ஆதங்கங்களை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி...
Anonymous said...

எங்கேயும் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தால் இதுபோன்ற ஏமாற்றங்கள் சகஜந்தான் செந்திலான்.

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா//

அது சரி....சகஜமான அரசியல்வாதி இவரில்லையென்று கூட செல்லும் போது , வந்த ஏமாற்றத்தைக்கூட வெளியே சொல்லக்கூடாதா?
தற்போதைக்கு கருணா-வை தோற்கடிப்பதற்காக ஜெ.வை கருவியாக பயன்படுத்துவேன்--சீமான்.இதில் என்ன தவறு?/

ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம்...நாளைக்கே காங்கிரஸ் அதிமுக கூட்டணிக்கு மாறினால் காங்கிரஸை வீழ்த்த திமுகவுடன் சீமான் கூட்டணி வைத்துக்கொண்டால் ஒத்துக்கொள்வீர்களா தோழரே?
இதென்னய்யா கொடுமையா இருக்கு? ஒருவேளை ஜெ. ஆட்சிக்கு வந்தால் அதன்பிறகான நிலைமை என்ன? நாம் தமிழர் இயக்கம் மூலையில் உக்காரவேண்டியது தான். இன்றைய தேவை கொள்கைகளூடான மக்களைத்திரட்டுதல்தானே தவிர ஓட்டரசியல் அல்ல.//

அதானே?
சீமானை கைது செய்யச் சொல்லி கருணாநிதிக்கு இன்ஸ்ட்ரெக்சன் கொடுத்தவரே ஜேதான். அவரது காட்டமான் அறிக்கைக்கு பிறகுதான் சீமான் கைது செய்யப்பட்டார். இந்த விவரமெல்லாம் சீமானுக்கோ அல்லது சீமான் மாதிரி வாய்ச்சவடால் பேர்வழிகளை கண்டு மயங்கும், எங்கும், எப்போதும் எளிய தீர்வை மட்டுமே தேடும் மதிபாலா போன்றோர்களுக்கோ தெரியுமா என்று தெரியவில்லை.//


எளிய தீர்வு.......விளக்கம் ப்ளிஸ்!
செயவே எதிரிதான் நமக்கு நாம் தமிழர்கள் வேறு பாதையை தேர்தெடுக்க வேண்டும்......///

அந்த மாற்றுப்பாதையாகத் தான் நாம் தமிழர் வளரும் என எதிர்ப்பார்த்தேன். முழு மனதோடு ஆதரித்தேன்/தோம்/க்கிறோம்..!! ரபி பெர்னாட் பேட்டியிலேயே தடுமாறினார் திரு.சீமான்.......ஆனால் , இப்போது தடுமாறினால் எழ முடியாமல் போகலாம் என்று சொல்லி வைக்கிறோம்! வைக்கோ சிறந்த உதாரணம்...!
இது எல்லாம் எதிர்பார்த்தவைகள்தானே!

தமிழக அரசியல் சந்தையில் தற்போது அதிகம் விற்கப்படுவதும் வாங்கப்படுவதும் ஈழம்... ஈழத்தமிழ் உணர்வு....

நடத்துங்கோ நடத்துங்கோ!!!!!!!!!!!!!//

:(
:(
:(
:(
நண்பரே இது ஒரு சரியான முடிவு......

மக்களை நம்பி இறங்குபன் தலைவனாக முடியாது.............நேரதுகேற்றாட் போல் காய் நகர்துபவனே அறிவாளி........///


நேரத்துக்கேற்றபடி காய் நகர்த்துவது அறிவாளிகள் மட்டுமல்லர்...சந்தர்ப்பவாதிகளும் கூட....கொள்கைச் சமரசமின்றி இயக்கம் நடத்துபவனே நீடித்து நிற்கமுடியும்...!!!
மிகவும் வருத்தமாக இருக்கிறது.
முத்துராமலிங்கம் சிலைக்கு மாலை அணிவித்தபோது அதை ஒரு சறுக்கல், திருத்திக்கொள்வார் என்ற நம்பிக்கை இருந்தது. பிறகு விஜய்யை வைத்து படம் என்ற செய்தி வந்தபோதே இவரது நம்பகத்தன்மை கேள்விக்குளானது.

மீண்டும் ஒரு 'கைப்புள்ள' உருவாகிறார்.

---------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் - ஜன'2011)//

உருவாகக் கூடாது என்பது என் விருப்பம்...பார்ப்போம் காலம் பதில் சொல்லட்டும்
கருணாநிதிக்கும், ஜெயலலிதாவிர்க்கும் ஈழ விசயத்தில் மிகுந்த வித்தியாசம் இருக்கிறது. கருணாநிதி ஈழத்திர்க்கு எதிராக காங்கிரசுக்கு ஆதரவாக பல செயல்களை செய்தவர். மிகப்பெரிய துரோகி. ஜெயலலிதா எனக்கும் ஈழத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பார்.. அவரிடம் நீங்கள் ஆதரவையும் எதிர்பார்க்க முடியாது, கருணாநிதி போல துரோகமும் செய்ய மாட்டார். ஜெயாவின் நடவடிக்கை தமிழகத்தில் அவரின் அரசியல் சார்ந்து இருக்குமே தவிர, ஈழத்தில் சிங்களவனை ஊக்கப்படுத்துவதாக இருக்காது..//

என்ன சொல்ல வருகிறீர்கள் நண்பரே.புரியவில்லை?
நல்லதொரு பார்வை.

plz. contaci me
jaani.n at gmail.com/

THANKS , I WILL.
சீமான் எப்போது விஜயை ரோஷமுள்ள மானமுள்ள உண்மைத்தமிழன் என்று சொன்னாரோ அப்போதே எனக்கு இவர் மேல் உள்ள மரியாதை போய் விட்டது.

தற்செயலாக காங்கிரஸ் அதிமுக உடன் கூட்டணி போட்டால் இவர் என்ன செய்வார்? ஜெயலலிதா அதற்க்கான முயற்சிகலிலும் ஈடுபட்டது/ஈடுபட்டு கொண்டு இருப்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம் தான். இந்த விடயங்களை எல்லாம் எண்ணி பார்க்காமல் சீமாண் இந்த முடிவை எடுத்தது மிகவும் வேதனைக்குரியது.//

உங்கள் வேதனையில் பங்கெடுத்துக்கொள்வதைத் தவிர வேறென்ன செய்ய?
NADESAN said…
சரியான கட்டுரை சரியாக சொன்னீர்கள்

அன்புடன்
நெல்லை பெ. நடேசன்
அமீரகம்
கடுமயான கருத்தாக இருந்தாலும் சிந்திக்கவும் வைக்கிறது... உங்க் பகிர்வு..... முடிவை பார்ப்போம்.
Thameez said…
சவுக்கடி.?? மானங்கெட்ட சீமான். இவன் பின்னாடி போறதுக்கு ஒரு கூட்டம். இவனுக்கு என்ன தைரியம் இருக்கு கருணாநிதி பத்தி பேச. அவரைவிட இப்போ இவன் கேவலமானவன்!! இன்னைக்கு விடுதலை புலி இயக்கத்துக்கு தடை கொண்டுவந்ததே இந்த பொம்பள தானே. அதை ஏன் யாரும் சொல்ல மறுக்கீரர்கள்?
Anonymous said…
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால்..,
முண்டாசு கவிஞன் பாரதியின் வரிகள் இன்றும் இந்த கேடு கெட்டவனை, " போராளி என்ற போர்வையில்.., ஏமாற்றும் சீமானை, "போர் என்றால் மக்கள் சாகத் தான் செய்வார்கள்" என்று சொன்ன ஜெயலலிதாவின் கைக்கூலியை",
நினைத்து பாடப் பட்டதோ???

Pl visit my post for spits on SEEMAAN's face..,
http://saigokulakrishna.blogspot.com/2011/01/blog-post_10.html

Cinema Politicians growing their wealth and life by cheating the peoples who admired by a harsh/ high pitch talks!and honey binded the words Tamil, Eezham!

Bullshit! These bleddy b-----'s cann't do anything unless barking in the streets like a Dogs's.
you know barking dog's are not suitable for catching animals.,
Only barking.., barking! barking!
Ayyo! until the last tamilian is going to brave.,
Anonymous said…
ஈழத்திலே போர் நடந்தபோது " போர் என்றால் மக்கள் இறப்பார்கள்" என்று சொன்னது ஜெ தான். இதை மறந்து சீமான் சேர்வது, தமிழக சாதாரண அரசியல்வாதி போல ஆகிவிட்டார்..
Jawahar said…
இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிரான பேச்சுக்களை ஜெயலலிதா எப்படி எதிர்கொள்வார்ன்னு வைகோவைப் பார்த்து பாடம் படிக்காதது அவசர முடிவு.

சீமானுக்கு இப்போதைய தேவை கொஞ்சம் விளம்பரம். அது நல்லாவே கிடைச்சுகிட்டு இருக்கு.

http://kgjawarlal.wordpress.com
RAJESH said…
CLAPS.CLAPS.

REAL VIEW SEEMAN HAS TO THINK!
Anonymous said…
பகையாளி குடியை உறவாடிக் கெடு என்ற அடிப்படையில் தற்போது சீமான் ஜெயலலிதாவுடன் சேர்ந்திருக்கிறார். சரியான நேரத்தில் அவரைக் கவிழ்ப்பது சீமானின் திட்டமாக இருக்கலாம். தேர்தல் தொடங்குவதற்குச் சில நாட்களுக்கு முன்பாகச் சீமான் ஜெயலலிதாவை உதறித்தள்ளுவார் என எதிர்பார்க்கலாம்.
சீமான் ஒரு சராசரி சினிமாக்காரர், பணம்,புகழ் தேடி அலைந்து கொண்டிருந்த ஒரு கலைஞன்,இன உணர்வு என்கிற புளியங்கொம்பு கிடைத்த உடன் அதை பிடித்துக் கொண்டு பிழைக்க நினைத்த ஆசாமி...அந்த அளவில் மட்டுமே அவரை பார்க்க வேண்டும்.

தமிழினத்தை காக்க வந்த இன்னொரு பெரியார் போலவும்,இளம் சேகுவரா போலவும் பிம்பித்துக் கொண்டது நம் தவறு!

ரத்த சரித்திரம் திரைப் படம் தமிழ் நாட்டில் திரையிட விடமாட்டோம் என்று சொல்லிவிட்டு சூர்யாவுக்காக பின் வாங்கியது!

விஜய் கால்ஷீட் கிடைக்கிறது என்பதற்காக அவருக்கு சப்பை கட்டி பேசியது!

ஜெயலலிதாவை மேடைகளில் எத்தனை கொச்சையாக பேச முடியுமோ அவ்வளவும் பேசிவிட்டு,கருனாநிதியை எதிர்க்கிறேன் பேர்வழியென சொல்லிக் கொண்டு வலிய போய் ஆதரவு சொல்லி சரணடைவது...

இன்னும் இவரது குட்டிகரணங்கள் தொடரலாம்...
NADESAN said...

சரியான கட்டுரை சரியாக சொன்னீர்கள்

அன்புடன்
நெல்லை பெ. நடேசன்
அமீரகம்/

நன்றி திரு.நடேசன்..
Reggie J. said…
உண்மையாகவே ஈழத்தமிழர் மீது அக்கறை இருக்குமானால், சீமான் என்ன செய்திருக்க வேண்டும் - வைகோ மற்றும் நெடுமாறன் இவர்களை ஒன்று சேர்த்து தனிக்கூடடணி அமைத்து இருக்கலாம்.

He does not have a strategic thinking, rather just another tactical politician(!!??). To defeat DMK and Congress I, he is partnering with ADMK. Bull Shit! That's why, I am saying - His motive is to defeat DMK and Congress I, not to find a solution for Sri Lankan Tamils long term. Get Educated Seeman, for God's sake!
Blogger சி. கருணாகரசு said...

கடுமயான கருத்தாக இருந்தாலும் சிந்திக்கவும் வைக்கிறது... உங்க் பகிர்வு..... முடிவை பார்ப்போம்.//

நன்றி திரு.கருணாகரசு.

முடிவு அனேகமாக தெரிந்து விட்ட ஒன்றாகவே இருக்கிறது. ஒருவேளை அதுதான் முடிவாகவிருந்தால் ஒதுங்கியிருப்பதே என்னளவில் சிறந்த முடிவாக இருக்கமுடியும்!
Thameez said...

சவுக்கடி.?? மானங்கெட்ட சீமான். இவன் பின்னாடி போறதுக்கு ஒரு கூட்டம். இவனுக்கு என்ன தைரியம் இருக்கு கருணாநிதி பத்தி பேச. அவரைவிட இப்போ இவன் கேவலமானவன்!! இன்னைக்கு விடுதலை புலி இயக்கத்துக்கு தடை கொண்டுவந்ததே இந்த பொம்பள தானே. அதை ஏன் யாரும் சொல்ல மறுக்கீரர்கள்?/

கொழுகொம்பிற்கு தவித்த இளைஞர்களுக்கு ஆதார சக்தியாக வந்தவர் சீமான்.....கிழட்டுத்தாத்தாவிடமோ , புரட்டுத்தலைவியிடமோ அவர்களிடம் சரணாகதி அடைந்து கிடக்கும் திருமா , வைகோவிடமோ இல்லாத நேர்மையும் , கருத்துச்செறிவும் சீமானிடம் இருந்தது...இருக்கிறது.... அதனால் அவர் பின்னால் போவதில் எந்த தவறும் இருப்பதாக நான் எண்ணவில்லை...

ஆனால் , அவர் தற்போது போகும் வழி , அவரையும் , நாம் தமிழர் இயக்கத்தையும் முடக்கிப்போடும் என்பதில் சிறு சந்தேகம் கூட எனக்கு இல்லை! தற்காலிக இன துரோகியை அழிக்க , இன எதிரியிடம் சரணடவது முட்டாள் தனம்!
Blogger Sai Gokula Krishna said...

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால்..,
முண்டாசு கவிஞன் பாரதியின் வரிகள் இன்றும் இந்த கேடு கெட்டவனை, " போராளி என்ற போர்வையில்.., ஏமாற்றும் சீமானை, "போர் என்றால் மக்கள் சாகத் தான் செய்வார்கள்" என்று சொன்ன ஜெயலலிதாவின் கைக்கூலியை",
நினைத்து பாடப் பட்டதோ???//

உங்கள் பதிவினை படித்தேன் திரு.சாய் கோகுலகிருஷ்ணா , நிறைய பேசவேண்டும்..அதற்கான மனநிலை தற்போது இல்லை..கூடிய விரைவில்!...தற்போதைக்கு "தமிஷ்" அவர்களுக்கு சொன்ன பதிலையே உங்களுக்குமானதாய் எடுத்துக்கொள்க. நன்றி.!
ஈழத்திலே போர் நடந்தபோது " போர் என்றால் மக்கள் இறப்பார்கள்" என்று சொன்னது ஜெ தான். இதை மறந்து சீமான் சேர்வது, தமிழக சாதாரண அரசியல்வாதி போல ஆகிவிட்டார்../

உண்மையில் வருத்தமே!

***

இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிரான பேச்சுக்களை ஜெயலலிதா எப்படி எதிர்கொள்வார்ன்னு வைகோவைப் பார்த்து பாடம் படிக்காதது அவசர முடிவு.

சீமானுக்கு இப்போதைய தேவை கொஞ்சம் விளம்பரம். அது நல்லாவே கிடைச்சுகிட்டு இருக்கு.

http://kgjawarlal.wordpress.com //

நிச்சயம்...வைகோவின் அழிவிற்கு காரணமான பாதையிலேயே சீமானும் பயணிப்பது அல்லது பயணிக்க முடிவெடுத்திருப்பது தவ்று என்று அவர் உணர்வார்....

****


RAJESH said...

CLAPS.CLAPS.

REAL VIEW SEEMAN HAS TO THINK!//

Yes I hope he will think.
Anonymous said...

பகையாளி குடியை உறவாடிக் கெடு என்ற அடிப்படையில் தற்போது சீமான் ஜெயலலிதாவுடன் சேர்ந்திருக்கிறார். சரியான நேரத்தில் அவரைக் கவிழ்ப்பது சீமானின் திட்டமாக இருக்கலாம். தேர்தல் தொடங்குவதற்குச் சில நாட்களுக்கு முன்பாகச் சீமான் ஜெயலலிதாவை உதறித்தள்ளுவார் என எதிர்பார்க்கலாம்.

January 11, 2011 7:08 AM //

ஒருதரம் சேர்ந்தாலே அந்த அணியின் அவலங்களைப் பற்றி வெளியில் சொல்ல எந்தவிதமான மூகாந்திரமும் ஒரு கட்சிக்கு இல்லாமல் போகிறது.....இன்றைக்கு செயலலிதாவுடன் சேர்ந்தால் , அதன் பின் எந்த விமர்சனத்தையும் செயலலிதா மீது "ஈழப்போரில் வாளாவிருந்ததைப் பற்றி சொல்லமுடியாது....சொன்ன மறுநிமிடமே எழும் கேள்வி " இதெல்லாம் தெரியாமயா போன எலக்சன்லே கூட்டு வச்சாங்க? " கனவு காண்பதற்கு எல்லோருக்கும் உரிமை இருக்கிறது...உதறித்தள்ளுவது சீமானா இல்லை செயலலிதாவா என்று கூடிய விரைவில் உங்களுக்குத் தெரியும் அனானிமஸ்.!
Blogger மு.சரவணக்குமார் said...

சீமான் ஒரு சராசரி சினிமாக்காரர், பணம்,புகழ் தேடி அலைந்து கொண்டிருந்த ஒரு கலைஞன்,இன உணர்வு என்கிற புளியங்கொம்பு கிடைத்த உடன் அதை பிடித்துக் கொண்டு பிழைக்க நினைத்த ஆசாமி...அந்த அளவில் மட்டுமே அவரை பார்க்க வேண்டும்.//

சாதாரண சினிமாக்காரரை வன்னிக்கு ஏன் தலைவர் பிரபாகரன் அழைக்கவேண்டும்? இறுதி நொடிகளில் கூட சூசை சீமானை அழைக்கவேண்டும்?

****
தமிழினத்தை காக்க வந்த இன்னொரு பெரியார் போலவும்,இளம் சேகுவரா போலவும் பிம்பித்துக் கொண்டது நம் தவறு!//



இருக்கலாம்...தற்போதைக்கு ஒத்துக்கொள்ள முடியவில்லை

***
ரத்த சரித்திரம் திரைப் படம் தமிழ் நாட்டில் திரையிட விடமாட்டோம் என்று சொல்லிவிட்டு சூர்யாவுக்காக பின் வாங்கியது!

விஜய் கால்ஷீட் கிடைக்கிறது என்பதற்காக அவருக்கு சப்பை கட்டி பேசியது!

ஜெயலலிதாவை மேடைகளில் எத்தனை கொச்சையாக பேச முடியுமோ அவ்வளவும் பேசிவிட்டு,கருனாநிதியை எதிர்க்கிறேன் பேர்வழியென சொல்லிக் கொண்டு வலிய போய் ஆதரவு சொல்லி சரணடைவது...///

நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை என்பதில் தவறேதுமில்லை...ஆனால் , சினிமா அவரது தொழில் சம்பந்தப்பட்ட விடயம் ...அதில் ஏற்படப்போகும் காம்ப்ரமைஸ் பற்றி எந்த எதிர்மறைக் கருத்தும் என்னிடம் இல்லை..ஆனால் அரசியல் சார்ந்த கருத்துக்களைக் கண்டிப்பாக அவர் மீள்பரிசீலனை செய்தல் தகும்!

இன்னும் இவரது குட்டிகரணங்கள் தொடரலாம்...
ரத்த சரித்திரம் திரைப் படம் தமிழ் நாட்டில் திரையிட விடமாட்டோம் என்று சொல்லிவிட்டு சூர்யாவுக்காக பின் வாங்கியது!

விஜய் கால்ஷீட் கிடைக்கிறது என்பதற்காக அவருக்கு சப்பை கட்டி பேசியது!

ஜெயலலிதாவை மேடைகளில் எத்தனை கொச்சையாக பேச முடியுமோ அவ்வளவும் பேசிவிட்டு,கருனாநிதியை எதிர்க்கிறேன் பேர்வழியென சொல்லிக் கொண்டு வலிய போய் ஆதரவு சொல்லி சரணடைவது...

இன்னும் இவரது குட்டிகரணங்கள் தொடரலாம்...//

நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை என்பதில் தவறேதுமில்லை...ஆனால் , சினிமா அவரது தொழில் சம்பந்தப்பட்ட விடயம் ...அதில் ஏற்படப்போகும் காம்ப்ரமைஸ் பற்றி எந்த எதிர்மறைக் கருத்தும் என்னிடம் இல்லை..ஆனால் அரசியல் சார்ந்த கருத்துக்களைக் கண்டிப்பாக அவர் மீள்பரிசீலனை செய்தல் தகும்!
உண்மையாகவே ஈழத்தமிழர் மீது அக்கறை இருக்குமானால், சீமான் என்ன செய்திருக்க வேண்டும் - வைகோ மற்றும் நெடுமாறன் இவர்களை ஒன்று சேர்த்து தனிக்கூடடணி அமைத்து இருக்கலாம். //

இதுவே சரியானதாக இருக்க முடியும..வெல்வதோ , வெல்லாததோ என்பதையும் தாண்டி ஈழ உணர்வுள்ள மக்கள் சக்தியையாவது வெளிக்காட்டியிருக்க முடியும்!
யாசவி said…
அன்பு மதிபாலா,

என்னை மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.

உங்களுடைய பதிவும் பின்னூட்டங்களும் ஆச்சர்யமூட்டுகிறது.

ஈழ ஆதரவு என்பது வேறு அதிகாரம் என்பது வேறு. வெறும் ஈழ ஆதரவை வைத்து பதிவுதான் போட முடியும். அதிகாரம் இருந்தால்தான் சாதிக்க அல்லது அழுத்தம் கொடுக்கவாவது முடியும்.

இளைஞர்கள் இருக்கிறார்கள் சரிதான். ஆனால் கிரவுண்ட் ரியாலிட்டி என்று ஒன்று இருக்கிறது. ஈழம் என்பது ஒரு விலைபோகும் சரக்கு இல்லை அல்லது விற்பதற்கு திமுக அல்லது அதிமுக போன்ற ப்ராண்ட் வேல்யூ இல்லாமல் பொது மக்களிடம் சேர்ப்பது சிரமம் என்பது ஒரு கசப்பான உண்மை.

நீங்கள் ஐடியல்- ஆன ஒரு பிம்பத்தை தேடுகிறீர்கள். அதனால்தான் வைகோ வகையறாக்களை குறை கூறுகிறீர்கள்.

(திருமா அதில் சேர்க்கவில்லை)

யாருடைய சிந்தனையும் 100 சதவீதம் யாருக்கும் ஒத்து வராது. பிரச்சினைகளை முன்வைத்து ஒன்றாக செயல்பட்டால்தான் முன்னேற்றம் காண முடியும்.

அதைவிடுத்து குற்றம் குறை காண ஆரம்பித்தால்.....

என்னுடைய தாழ்மையான கருத்து மட்டுமே. யாரையும் காயப்படுத்த அல்ல.
Prakash said…
Can expect below shall happen in due course,

1. Jaya shall never meet Seemon or she will not allow Seemon to meet her in Boes Garden or ADMK HQ.
2. All dealings with Seeman shall be done thru ViKO only and Jaya will treat Seeman as untouchable.
3. Jaya & Seemon shall never share a common dias in any public meeting.
4. If Seemon & his party is contesting in any constituency, Jaya shall NOT campaign in those Constituencies.
5. If ADMK losses the election, CHO and other likeminded ADMK sympathizers shall say, because of “terrorists” like Seemon supported and campaigned for ADMK, it lost the election.

Though DMK to be defeated because of its recent Anti Tamil policies and becoming slave of Congress.

But the question is,

BY WHOM DMK to be defeated?

Is it by the hands of Brahminical elements like CHO & Jaya Or Is it by biased North Indian Vested elements who wants to defame Dravidian identity. No way…DMK to be defeated only by a True Tamil party. This might not happen during this election, but Seemon & likeminded parties need to become a mainstream political party and do this in 2016.

In this 2011 election, Seemon can focus only in Congress Constituencies and ensure their defeat.
யாசவி said...

அன்பு மதிபாலா,

என்னை மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.

உங்களுடைய பதிவும் பின்னூட்டங்களும் ஆச்சர்யமூட்டுகிறது.

ஈழ ஆதரவு என்பது வேறு அதிகாரம் என்பது வேறு. வெறும் ஈழ ஆதரவை வைத்து பதிவுதான் போட முடியும். அதிகாரம் இருந்தால்தான் சாதிக்க அல்லது அழுத்தம் கொடுக்கவாவது முடியும்.

இளைஞர்கள் இருக்கிறார்கள் சரிதான். ஆனால் கிரவுண்ட் ரியாலிட்டி என்று ஒன்று இருக்கிறது. ஈழம் என்பது ஒரு விலைபோகும் சரக்கு இல்லை அல்லது விற்பதற்கு திமுக அல்லது அதிமுக போன்ற ப்ராண்ட் வேல்யூ இல்லாமல் பொது மக்களிடம் சேர்ப்பது சிரமம் என்பது ஒரு கசப்பான உண்மை.

நீங்கள் ஐடியல்- ஆன ஒரு பிம்பத்தை தேடுகிறீர்கள். அதனால்தான் வைகோ வகையறாக்களை குறை கூறுகிறீர்கள்.

(திருமா அதில் சேர்க்கவில்லை)

யாருடைய சிந்தனையும் 100 சதவீதம் யாருக்கும் ஒத்து வராது. பிரச்சினைகளை முன்வைத்து ஒன்றாக செயல்பட்டால்தான் முன்னேற்றம் காண முடியும்.

அதைவிடுத்து குற்றம் குறை காண ஆரம்பித்தால்.....

என்னுடைய தாழ்மையான கருத்து மட்டுமே. யாரையும் காயப்படுத்த அல்ல./

உங்களை மறக்க முடியுமா நண்பா? ஆனால், எனக்காக நீங்கள் சிந்திப்பதும்,நான் இப்படித்தான் நினைத்திருப்பேன் என்பதுமாக நீங்கள் வாதாடுவதுமான போக்கே எனக்கு கவலை தருகிறது....ஈழம் என்பது விற்கப்பட வேண்டிய சரக்கல்ல என்ற அளவில் நிறுத்திக்கொள்கிறேன்
அன்பு மதிபாலா,

என்னை மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.

உங்களுடைய பதிவும் பின்னூட்டங்களும் ஆச்சர்யமூட்டுகிறது.

ஈழ ஆதரவு என்பது வேறு அதிகாரம் என்பது வேறு. வெறும் ஈழ ஆதரவை வைத்து பதிவுதான் போட முடியும். அதிகாரம் இருந்தால்தான் சாதிக்க அல்லது அழுத்தம் கொடுக்கவாவது முடியும்.

இளைஞர்கள் இருக்கிறார்கள் சரிதான். ஆனால் கிரவுண்ட் ரியாலிட்டி என்று ஒன்று இருக்கிறது. ஈழம் என்பது ஒரு விலைபோகும் சரக்கு இல்லை அல்லது விற்பதற்கு திமுக அல்லது அதிமுக போன்ற ப்ராண்ட் வேல்யூ இல்லாமல் பொது மக்களிடம் சேர்ப்பது சிரமம் என்பது ஒரு கசப்பான உண்மை.

நீங்கள் ஐடியல்- ஆன ஒரு பிம்பத்தை தேடுகிறீர்கள். அதனால்தான் வைகோ வகையறாக்களை குறை கூறுகிறீர்கள்.

(திருமா அதில் சேர்க்கவில்லை)

யாருடைய சிந்தனையும் 100 சதவீதம் யாருக்கும் ஒத்து வராது. பிரச்சினைகளை முன்வைத்து ஒன்றாக செயல்பட்டால்தான் முன்னேற்றம் காண முடியும்.

அதைவிடுத்து குற்றம் குறை காண ஆரம்பித்தால்.....

என்னுடைய தாழ்மையான கருத்து மட்டுமே. யாரையும் காயப்படுத்த அல்ல.

January 11, 2011 7:32 PM
Delete
Blogger Prakash said...

Can expect below shall happen in due course,

1. Jaya shall never meet Seemon or she will not allow Seemon to meet her in Boes Garden or ADMK HQ.
2. All dealings with Seeman shall be done thru ViKO only and Jaya will treat Seeman as untouchable.
3. Jaya & Seemon shall never share a common dias in any public meeting.
4. If Seemon & his party is contesting in any constituency, Jaya shall NOT campaign in those Constituencies.
5. If ADMK losses the election, CHO and other likeminded ADMK sympathizers shall say, because of “terrorists” like Seemon supported and campaigned for ADMK, it lost the election.

Though DMK to be defeated because of its recent Anti Tamil policies and becoming slave of Congress.

But the question is,

BY WHOM DMK to be defeated?

Is it by the hands of Brahminical elements like CHO & Jaya Or Is it by biased North Indian Vested elements who wants to defame Dravidian identity. No way…DMK to be defeated only by a True Tamil party. This might not happen during this election, but Seemon & likeminded parties need to become a mainstream political party and do this in 2016.

In this 2011 election, Seemon can focus only in Congress Constituencies and ensure their defeat.///

I LOVE YOUR COMMENT MR PRAKASH. IT DESERVES AN APPLAUD.

Popular posts from this blog

பூட்டிய இரும்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது!

சீமான்களின் சபையினிலேயே , கடிதம் எழுதி எழுதிக் களைத்துப்போனதோர் கிழட்டுச் சிங்கம்.....முன்னாலுக்கும் முன்னால் அவர் கொண்ட தமிழ்ப்பற்று.....இன்னாளில் அது தமது மக்கட்பற்றாய் மாறிப்போனதொரு சோகம். ஏதோவொரு புண்ணியத்தில், எவரோ செய்த வரலாற்றுத் தவறால் , கொள்கை , தொலைநோக்கு , மக்கட்பற்று இவை பற்றிய சிந்தையேதுமின்றி அரசியலில் விபத்தாய் விளைந்த கொடநாட்டு ஈழத்தாய்....தேர்தலுக்குத் தேர்தல் மட்டுமே தமிழர் பற்றியும் , தமிழர் அரசியல் பற்றியும் எழுதி வைத்துப் பேசும் செல்வி யவர்.........இன்னமும் அவர் சேலை பிடித்துத்திரியும் வீணர் கூட்டம்.! கூட்டணிக்கேற்றப்படி கொள்கையை மாற்றிக்கொள்ளும் மருத்துவப் படையாச்சி.........வீரமிகு வன்னியகுலத்திலே வந்துதித்த சந்தர்ப்பவாதச் சாக்கடை....சமரசமற்ற கொள்கை அரசியலை சந்தர்ப்பவாதச் சாக்கடைக்குள் தள்ளிய பெருமைக்குரிய மருத்துவர் தமிழ்க்குடிதாங்காத தமிழ்க்குடிதாங்கி! யாரை எதற்காக எதிர்த்து அரசியல் செய்யவேண்டுமே அவர்களோடே தம் தேவைக்குதந்த படி கூட்டு வைத்துக்கொண்டு ஈழத்திற்க்காய் எந்நேரமும் பாடுபடும் திரு.வைகோ அவர்கள்....அவரும் சிறை சென்றார்.

நண்பர் 'டோண்டு' ராகவன்...

உயிரோடு இருக்கும்வரை அறிக்கைகளால் அர்சித்து எதிர்ப்பரசியல் நடாத்தி செத்துபோன பிறகு ஆருயிர் நண்பர் என்று அழைத்துக்கொள்ளும் எல்லா அரசியல்வாதிகளையும் போலவே நான். எனக்கும் மறைந்த உயர்திரு 'டோண்டு' ராகவன் அவர்களுக்குமான பரிச்சயம் அவ்வளவொன்றும் அதிகமில்லைதான். பதிவுலகையும் , பர்ஸனல் லைப்பையும் பிரித்து வைத்துக்கொள்ளும் எண்ணமுடைய நான் , டோண்டு மட்டுமல்ல மற்றபல பதிவுலக நண்பர்களுடனும் கூட தனிப்பட்ட தொடர்புகளை வைத்துக்கொண்டதில்லை... இருந்தாலும் , அவ்வப்போது பதிவுலக பின்னூட்டங்களின்பாலே தொடர்ந்துகொண்டிருந்த தொடர்பு , எனது 'போலி டோண்டு' பற்றிய கட்டுரையொன்றிலேயே  தீவிர விவாதமாக மாறியது.. ஆயிரம் விமர்சனங்கள் அவர் மீதோ இல்லை அவர்தம் பிற்போக்கான கருத்துக்கள் மீதோ இருந்திருக்கலாம். கடினமாக ஓரிரு முறை பேசியிருக்கலாம்.. அத்தனையும் தாண்டி அவர் மிக நல்ல மனிதர் , கடும் உழைப்பாளி என்பதை அவரது பதிவுலகம் மூலமாக அறிந்தவனெனினும் உறுதியாக கூறவியலும்.. அத்தகைய நல்ல மனிதரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் , நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்... வருத்தங்கள

எஸ்.எஸ்.பொன்முடி - மனிதருள் மாணிக்கம்.

எஸ்.எஸ்.பொன்முடி , கொங்குச்சீமையிலே குறிப்பாக பல்லடம் , சூலூர் வட்டாரத்தில் தெரியாதவர்கள் சொற்பமே. எஸ்.எஸ். பொன்முடி அவர்கள் மட்டுமல்ல , அவர்களது குடும்பமே சூலூரில் பழம்பெருமை மிக்க குடும்பம். காலங்காலமாக அவர்களது குடும்பத்தினரே சூலூரின் அனைத்து தேர்தல்களிலும் வென்றதும் , வெல்வதும் வரலாறு. பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்தவராயினும் மாற்றுக்கட்சியினராலும் மதிக்கப்படும் சில மனிதர்களில் எஸ்.எஸ் பொன்முடியும் ஒருவர். அவருக்கும் , எனக்குமான பரிச்சயமொன்றும் அவ்வளவு அதிகமில்லைதான். அப்போது எனக்கு ஒரு பத்திலிருந்து , பதினைந்து வயதிருந்திருக்கலாம். கலங்கலில் கவுன்சிலர் தங்கவேலு சர்வ அதிகாரமும் பொருந்தியவராய் வலம் வந்துகொண்டிருந்தார். அவர் எஸ்.எஸ்.பொன்முடியின் வலக்கரம். ஊருக்கு மேற்கே ஜல்லிக்குழி என்ற மனிதர்கள் உபயோகப்படுத்த முடியாத , இயலாத பகுதி ஒன்றிருந்தது.....அப்போது கழகம் ஆட்சியிலிருந்தது + பொன்முடி எம்.எல்.ஏவாக இருந்தார். கட்சிக்காரர்கள் , குறிப்பாக ஒடுக்கப்பட்ட , மிக பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் கேட்டுக்கொண்டதற்காக , மிகுந்த பிரயாசைப்பட்டு தங்கவேல் மற்றும் எஸ்.எஸ்.பொன்முடி அவ