இன்று டெசோ மாநாடு நடந்து முடிந்திருக்கிறது.....அவர்களும் ஒரு தீர்மானம் போட்டு விட்டு கலைந்து விட்டார்கள்.... ஆனால் , கருணாநிதியின் இந்த திடீர் ஈழப்பாசம் கண்டு எல்லாத் தரப்பினரும் அவர் நாடகம் போடுவதாக கூக்குரலிடுகிறார்கள்... கருணாநிதியின் ஈழப்பாசம் நாடகமென்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லைதான்...
ஆனால் , இன்று கருணாநிதியைக் குற்றம் சொல்கிற வைகோ , நெடுமாறன் , சீமான் போன்றவர்களுக்கு கருணாநிதியைக் குற்றம் சொல்ல என்ன வக்கிருக்கிறது? என்ன உரிமையிருக்கிறது?
போர் நடந்தால் அப்பாவி மக்கள் சாகத்தானே வேண்டும் என்றழைத்த ஜெயலலிதாவை ஈழத்தாயாக ஏற்றுக்கொள்வதில் இல்லாத சிரமம் கருணாநிதியை ஏற்றுக்கொள்வதில் இவர்களுக்கு என்ன இருக்கிறது?
பிரபாகரனைப் பிடித்து வந்து தூக்கிலிட வேண்டும் என்று சொன்ன செயலலிதாவிற்கு பல்லக்குத் தூக்கிய வைகோவிற்கும் , சீமானுக்கும் அப்படி என்னதான் கருணாநிதியிடத்தில் பிரச்சினை?
நாளெல்லாம் கருணாநிதி துரோகி என்று பேசும் பெருந்தகைகளே , ஜெயலலிதா என்ன செய்து கிழித்தார் உங்களுக்களித்த வாக்குறுதிப்படி? ஈழத்துக்கு இராணுவம் அனுப்பினாரா? இல்லை இந்திய நடுவண் அரசைப் பிடித்து உலுக்கினாரா ஈழம் வேண்டுமென்று? இல்லை ஒரு மறியல்? தெருமுனைக்கூட்டம்? ஆர்ப்பாட்டம் நடத்தினாரா ? இல்லையே? இன்று செய்யக்கூடிய நிலையில் தானே இருக்கிறார் ஜெயல்லிதா....ஏன் செய்யவில்லை? ஏன் அவர் உங்களுக்குத் துரோகியாகத் தெரியவில்லை?
இவர்களுக்குத் தேவையெல்லாம் அரசியல் பிழைப்பு....இவர்களுக்குத் தேவையெல்லாம் ஈழத்தை வைத்து அரசியல் செய்வது... இவர்களுக்குத் தேவையெல்லாம் ஈழத்திற்காக தமிழகத்தின் ஆதரவு பட்டும் படாமலுமே இருப்பது...!!
தமிழகத்தின் எழுச்சியை எப்படி முத்துக்குமரன் மரணத்தின் பின் தடுத்தார்களோ அதைப்போலவே இப்போதும் செய்கிறார்கள்... வைகோ , நெடுமாறன் மற்றும் சீமான் போன்றவர்களால் எப்போதுமே ஒட்டுமொத்த தமிழினத்தின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள முடியாது...
அதிமுகவோ , திமுகவோ இன்றி தமிழகத்தில் மாபெறும் மக்களியக்கம் ஒன்றை ஈழத்திற்காய் நடத்த எவராலும் தமிழகத்தில் முடியாது.... அதுபோன்ற மக்களியக்கம் நடக்குமென்று கட்டுக்கதை விட்டு நயமாய்ப் பொய் பேசி மக்களை , குறிப்பாக புலம்பெயர் தமிழ் மக்களை ஒரு மாயையைக்குள் வைத்திருப்பதே இவர்களின் நோக்கம்....
எப்படி தேர்தல் முடிந்து பி.ஜே.பி வந்தால் உடனே இந்தியப் படை பிரபாகரனைக் காப்பாற்ற உடனே வரும் என்று புலிகளை நம்ப வைத்தார்களோ அதுபோலவே இப்போதும் மக்களை நம்ப வைக்கிறார்கள்.!
இன்றைக்கு ஈழ மக்களுக்குத் துரோகி யாரெனில் ,தமிழகத்தை ஒருமித்த குரலில் பேச வைப்பதற்கு சற்றம் முயற்சியெடுக்காத வைகோ , சீமான் , நெடுமாறன் போன்றவர்கள் தான்..... வெகுஜன இயக்கமொன்றின் ஆதரவை பெற்றுக்கொள்வதில் இவர்கள் சற்றும் முயற்சி எடுக்காமல் விட்டேத்தியாய் இருப்பதுதான் , ஆகப்பெரிய துரோகத்தனம்!
ஆனால் , இன்று கருணாநிதியைக் குற்றம் சொல்கிற வைகோ , நெடுமாறன் , சீமான் போன்றவர்களுக்கு கருணாநிதியைக் குற்றம் சொல்ல என்ன வக்கிருக்கிறது? என்ன உரிமையிருக்கிறது?
போர் நடந்தால் அப்பாவி மக்கள் சாகத்தானே வேண்டும் என்றழைத்த ஜெயலலிதாவை ஈழத்தாயாக ஏற்றுக்கொள்வதில் இல்லாத சிரமம் கருணாநிதியை ஏற்றுக்கொள்வதில் இவர்களுக்கு என்ன இருக்கிறது?
பிரபாகரனைப் பிடித்து வந்து தூக்கிலிட வேண்டும் என்று சொன்ன செயலலிதாவிற்கு பல்லக்குத் தூக்கிய வைகோவிற்கும் , சீமானுக்கும் அப்படி என்னதான் கருணாநிதியிடத்தில் பிரச்சினை?
நாளெல்லாம் கருணாநிதி துரோகி என்று பேசும் பெருந்தகைகளே , ஜெயலலிதா என்ன செய்து கிழித்தார் உங்களுக்களித்த வாக்குறுதிப்படி? ஈழத்துக்கு இராணுவம் அனுப்பினாரா? இல்லை இந்திய நடுவண் அரசைப் பிடித்து உலுக்கினாரா ஈழம் வேண்டுமென்று? இல்லை ஒரு மறியல்? தெருமுனைக்கூட்டம்? ஆர்ப்பாட்டம் நடத்தினாரா ? இல்லையே? இன்று செய்யக்கூடிய நிலையில் தானே இருக்கிறார் ஜெயல்லிதா....ஏன் செய்யவில்லை? ஏன் அவர் உங்களுக்குத் துரோகியாகத் தெரியவில்லை?
இவர்களுக்குத் தேவையெல்லாம் அரசியல் பிழைப்பு....இவர்களுக்குத் தேவையெல்லாம் ஈழத்தை வைத்து அரசியல் செய்வது... இவர்களுக்குத் தேவையெல்லாம் ஈழத்திற்காக தமிழகத்தின் ஆதரவு பட்டும் படாமலுமே இருப்பது...!!
தமிழகத்தின் எழுச்சியை எப்படி முத்துக்குமரன் மரணத்தின் பின் தடுத்தார்களோ அதைப்போலவே இப்போதும் செய்கிறார்கள்... வைகோ , நெடுமாறன் மற்றும் சீமான் போன்றவர்களால் எப்போதுமே ஒட்டுமொத்த தமிழினத்தின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள முடியாது...
அதிமுகவோ , திமுகவோ இன்றி தமிழகத்தில் மாபெறும் மக்களியக்கம் ஒன்றை ஈழத்திற்காய் நடத்த எவராலும் தமிழகத்தில் முடியாது.... அதுபோன்ற மக்களியக்கம் நடக்குமென்று கட்டுக்கதை விட்டு நயமாய்ப் பொய் பேசி மக்களை , குறிப்பாக புலம்பெயர் தமிழ் மக்களை ஒரு மாயையைக்குள் வைத்திருப்பதே இவர்களின் நோக்கம்....
எப்படி தேர்தல் முடிந்து பி.ஜே.பி வந்தால் உடனே இந்தியப் படை பிரபாகரனைக் காப்பாற்ற உடனே வரும் என்று புலிகளை நம்ப வைத்தார்களோ அதுபோலவே இப்போதும் மக்களை நம்ப வைக்கிறார்கள்.!
இன்றைக்கு ஈழ மக்களுக்குத் துரோகி யாரெனில் ,தமிழகத்தை ஒருமித்த குரலில் பேச வைப்பதற்கு சற்றம் முயற்சியெடுக்காத வைகோ , சீமான் , நெடுமாறன் போன்றவர்கள் தான்..... வெகுஜன இயக்கமொன்றின் ஆதரவை பெற்றுக்கொள்வதில் இவர்கள் சற்றும் முயற்சி எடுக்காமல் விட்டேத்தியாய் இருப்பதுதான் , ஆகப்பெரிய துரோகத்தனம்!
Comments