Skip to main content

மீள்தல்…

முன்பு மதிபாலா பக்கங்கள் என்ற தலைப்பில் இன்னொரு வலைப்பூவில் பெரும்பாலும் அரசியலைப் பற்றி அலசிக்கொண்டிருந்தேன்......சலிப்புத் தட்டியதாலும் , நேரமின்மையாலும் வலைப்பூக்களிலிருந்து அனேகமாக ஒரு வருடம் விலகியே இருந்தேன்....

தற்போதைக்கு , உணர்வுகளுக்கு வடிகாலென எப்போதாவது எழுதலாம் என தீர்மானித்திருக்கிறேன்.... இவ்வலைப்பூவை "எழுதியதும் , டைப்பியதுமென பெயரிட்டு மீள்கிறேன்...!

இனி அவ்வப்போது சந்திப்போம்…நன்றி.!

***

வாழ்வில் நாம் பல பேரைச் சந்திக்கிறோம். சிலரை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்கிறோம் , பலரை எப்போதாவது….

வாழ்வின் சில நொடிகள் மட்டுமே வந்து போகும் பலரைக் கூட எப்போதாவது பார்த்த நினைப்புத் தோன்றும் எனக்கு….மற்றபடி இந்த அவசர உலகில் காலம் அனைத்தையும் கடந்து போகச் செய்கிறது….நாம் கடந்து போன முகங்களையும் தான்..


இது நம்மைத் தூக்கி வளர்த்த ஆத்தாவாக இருக்கட்டும் , இல்லை ஆயாவாக இருக்கட்டும்…சிறுவயதில் வீட்டுவேலை செய்யும் வேலைக்காரியிலிருந்து , காரிய நிமித்தமாக வெகு தொலைவானதொரு ஊரில் பார்த்தவர்களாக இருக்கட்டும்…

பார்த்தவர்களென்றில்லை ,கேள்விப்பட்டவர்களும் , வாசித்தவர்களும் அதில் அடக்கம்.!

அவர்களில் ஒரு சிலரை இம்மீள்தல் பதிவில் நினைவு படுத்திக்கொள்கிறேன்.

***


கண்ணாள்…

நாங்கள் வசித்ததும் , வசித்துக்கொண்டிருப்பதும் நகரத்துக்கும் , கிராமத்துக்கும் நடுப்பட்டதொரு ஊர். அருகிலிருந்த நகரமொன்றில் சமையல் காண்டிராக்டர் ஒருவரிடம் வேலை பார்த்த கண்ணாள் , எங்கள் வீட்டிற்கு ஆஸ்தான சமையல்காரர். எந்த விசேடமாக இருந்தாலும் சரி அவர்தான் சமையல்…


குறிப்பு

இப்போது அவர் என்று நான் அவரை அழைத்தாலும் , அப்போதெல்லாம் , வா – போ என்றுதான் அழைப்பதுண்டு. கொங்குச்சீமையில் “வலையர்”களுக்கான மதிப்பு அவ்வளவுதான் “இருந்தது”.

“இருந்தது” என்று சொல்லும் போது அது இறந்த காலம் ஆகிவிடுகிறது…இப்போதும் இருக்கிறதானபடியால் “இருக்கிறது” என்றே சொல்ல வேண்டும்.
ஆகவே கொங்குச்சீமையில் “வலையர்”களுக்கான மதிப்பு அவ்வளவுதான் “இருக்கிறது”.

எப்போது அழைத்தாலும் சலிக்காமல் வந்து எல்லா வேலையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்வார்..எப்போது நான் அம்மாவிடம் அடம் பிடித்து பணத்திற்கு ( முட்டாய் வாங்கத்தான்…..!!) அழுதாலும் , அம்மாவிற்குத் தெரியாமல் காசு கொடுப்பார்….அதனால் எனக்கு அவர் மீது தனிப்பிரியமுண்டு.

கடந்த முறை எனது திருமணத்திற்கு அழைக்கச் சென்ற போது , பக்கவாத நோயால் படுத்திருந்தார்…

உடல் மெலிந்து ,

சாயம் போன நூல்சீலை கட்டி ,

அழுக்குப் போர்வையொன்றில் படுத்திருந்தார்.

இலேசான வெளிச்சம் குடிசையின் தடுக்குகளில் இருக்கும் ஓட்டை வழியே பரவியிருந்தது.

கண்ணீர் மல்க “நல்லா இருக்கீங்களா? “ என்றார்….

“நல்லா இருக்கேங்க….நீங்க எப்படி இருக்கீங்க ? ” என்ற என் குரலுக்கு இலேசான புன்முறுவலித்தார்….ஆனால் அதிலிருந்த வேதனையையும் , காரணத்தையும் என்னால் உணர முடிந்தது….

“ இருக்கேன் சாமி…புள்ள குட்டீக பொழப்ப பாக்க டவுனுக்குப் போயிட்டாங்க…இங்க நா மட்டும் தனியா கெடந்து அல்லாடுறேன்…எப்பவாச்சும் எதுத்தூட்டு “ சுப்பாத்தா “ சோறு கொண்டு வந்து போடும்...உங்களுக்கு கலர் வாங்கிக்கொடுக்க கூட ஆளில்லாமப் போச்சு இங்க…”

தனது சுருக்குப் பையில் முடிந்துவைத்திருந்த ஐந்து ருபாய் நாணய மிரண்டை எடுத்துக்கொடுத்து ,

“உங்க கலியாணத்துக்குத் தான் என்னால சமையல் வேலை செய்ய முடியலை போங்க….உங்க அக்கா சீரு மொதக்கொண்டு இந்தக் கையாலதான் சோறாக்கிப்போட்டேன்……உங்க கல்யாணத்துக்கு என்னால வரக்கூடிய முடியாது…..இதான் என் கையில இருக்கு , மறுக்காம வெச்சுக்கங்கங்க இராசா….” என்றார்..

மறுக்க முடியவில்லை…

வாங்கிக்கொண்டேன்………..

கையிலிருந்த சில ரூபாய்த்தாள்களை அவரிடம் திணித்துவிட்டு வண்டி ஏறினேன் கனத்த இதயத்துடன்....

காலம் தான் மனிதர்களை எப்படி மாற்றிவிடுகிறது பாருங்கள்….



Comments

Popular posts from this blog

பூட்டிய இரும்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது!

சீமான்களின் சபையினிலேயே , கடிதம் எழுதி எழுதிக் களைத்துப்போனதோர் கிழட்டுச் சிங்கம்.....முன்னாலுக்கும் முன்னால் அவர் கொண்ட தமிழ்ப்பற்று.....இன்னாளில் அது தமது மக்கட்பற்றாய் மாறிப்போனதொரு சோகம். ஏதோவொரு புண்ணியத்தில், எவரோ செய்த வரலாற்றுத் தவறால் , கொள்கை , தொலைநோக்கு , மக்கட்பற்று இவை பற்றிய சிந்தையேதுமின்றி அரசியலில் விபத்தாய் விளைந்த கொடநாட்டு ஈழத்தாய்....தேர்தலுக்குத் தேர்தல் மட்டுமே தமிழர் பற்றியும் , தமிழர் அரசியல் பற்றியும் எழுதி வைத்துப் பேசும் செல்வி யவர்.........இன்னமும் அவர் சேலை பிடித்துத்திரியும் வீணர் கூட்டம்.! கூட்டணிக்கேற்றப்படி கொள்கையை மாற்றிக்கொள்ளும் மருத்துவப் படையாச்சி.........வீரமிகு வன்னியகுலத்திலே வந்துதித்த சந்தர்ப்பவாதச் சாக்கடை....சமரசமற்ற கொள்கை அரசியலை சந்தர்ப்பவாதச் சாக்கடைக்குள் தள்ளிய பெருமைக்குரிய மருத்துவர் தமிழ்க்குடிதாங்காத தமிழ்க்குடிதாங்கி! யாரை எதற்காக எதிர்த்து அரசியல் செய்யவேண்டுமே அவர்களோடே தம் தேவைக்குதந்த படி கூட்டு வைத்துக்கொண்டு ஈழத்திற்க்காய் எந்நேரமும் பாடுபடும் திரு.வைகோ அவர்கள்....அவரும் சிறை சென்றார்.

நண்பர் 'டோண்டு' ராகவன்...

உயிரோடு இருக்கும்வரை அறிக்கைகளால் அர்சித்து எதிர்ப்பரசியல் நடாத்தி செத்துபோன பிறகு ஆருயிர் நண்பர் என்று அழைத்துக்கொள்ளும் எல்லா அரசியல்வாதிகளையும் போலவே நான். எனக்கும் மறைந்த உயர்திரு 'டோண்டு' ராகவன் அவர்களுக்குமான பரிச்சயம் அவ்வளவொன்றும் அதிகமில்லைதான். பதிவுலகையும் , பர்ஸனல் லைப்பையும் பிரித்து வைத்துக்கொள்ளும் எண்ணமுடைய நான் , டோண்டு மட்டுமல்ல மற்றபல பதிவுலக நண்பர்களுடனும் கூட தனிப்பட்ட தொடர்புகளை வைத்துக்கொண்டதில்லை... இருந்தாலும் , அவ்வப்போது பதிவுலக பின்னூட்டங்களின்பாலே தொடர்ந்துகொண்டிருந்த தொடர்பு , எனது 'போலி டோண்டு' பற்றிய கட்டுரையொன்றிலேயே  தீவிர விவாதமாக மாறியது.. ஆயிரம் விமர்சனங்கள் அவர் மீதோ இல்லை அவர்தம் பிற்போக்கான கருத்துக்கள் மீதோ இருந்திருக்கலாம். கடினமாக ஓரிரு முறை பேசியிருக்கலாம்.. அத்தனையும் தாண்டி அவர் மிக நல்ல மனிதர் , கடும் உழைப்பாளி என்பதை அவரது பதிவுலகம் மூலமாக அறிந்தவனெனினும் உறுதியாக கூறவியலும்.. அத்தகைய நல்ல மனிதரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் , நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்... வருத்தங்கள

எஸ்.எஸ்.பொன்முடி - மனிதருள் மாணிக்கம்.

எஸ்.எஸ்.பொன்முடி , கொங்குச்சீமையிலே குறிப்பாக பல்லடம் , சூலூர் வட்டாரத்தில் தெரியாதவர்கள் சொற்பமே. எஸ்.எஸ். பொன்முடி அவர்கள் மட்டுமல்ல , அவர்களது குடும்பமே சூலூரில் பழம்பெருமை மிக்க குடும்பம். காலங்காலமாக அவர்களது குடும்பத்தினரே சூலூரின் அனைத்து தேர்தல்களிலும் வென்றதும் , வெல்வதும் வரலாறு. பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்தவராயினும் மாற்றுக்கட்சியினராலும் மதிக்கப்படும் சில மனிதர்களில் எஸ்.எஸ் பொன்முடியும் ஒருவர். அவருக்கும் , எனக்குமான பரிச்சயமொன்றும் அவ்வளவு அதிகமில்லைதான். அப்போது எனக்கு ஒரு பத்திலிருந்து , பதினைந்து வயதிருந்திருக்கலாம். கலங்கலில் கவுன்சிலர் தங்கவேலு சர்வ அதிகாரமும் பொருந்தியவராய் வலம் வந்துகொண்டிருந்தார். அவர் எஸ்.எஸ்.பொன்முடியின் வலக்கரம். ஊருக்கு மேற்கே ஜல்லிக்குழி என்ற மனிதர்கள் உபயோகப்படுத்த முடியாத , இயலாத பகுதி ஒன்றிருந்தது.....அப்போது கழகம் ஆட்சியிலிருந்தது + பொன்முடி எம்.எல்.ஏவாக இருந்தார். கட்சிக்காரர்கள் , குறிப்பாக ஒடுக்கப்பட்ட , மிக பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் கேட்டுக்கொண்டதற்காக , மிகுந்த பிரயாசைப்பட்டு தங்கவேல் மற்றும் எஸ்.எஸ்.பொன்முடி அவ