விட்டங்களும் , சுவர்களும் , ஜன்னல்களும் , திரைச்சிலைகளும் மட்டுமே சூழ அமைந்திருக்கும் , பார்க்கிறேனோ , பார்க்கவில்லையோ தற்போதைக்கு எனக்கு மிகவும் பிடித்த 'முரசு' சேனலில் 'நிலா காய்கிறது' என்ற 'இந்திரா படப்பாடல் ஒலிக்கின்ற வேளையில் இப்பதிவை எழுதத் தொடங்குகிறேன்...
கடந்த பதிவினை நான் இவ்வலைப்பூவில் ஏற்றியது கடந்த ஜனவரி மாதம்......ஏன் இந்த இடைவெளி....? ஏதேனும் எழுத வேண்டுமென்று சப்ஜெக்ட் இல்லாமல் எழுத ஆரம்பிக்கும் எல்லோருக்கும் வரும் பிரச்சினை எனக்கும் வந்திருக்கிறது....
அட்டா காலை உணவு ஆகவில்லையே என்று தோன்றிற்று.......தட்டில் வேலைக்கார அம்மா கிச்சடி என்ற பெயரில் மஞ்சள் கலரில் செய்து வைத்திருந்தாலும் சாப்பிட முடிந்தது.... இட்ட அன்னம் கொஞ்சம் முன்னப்பின்ன இருந்தாலும் யாருமற்ற சூழலில் அன்னமிடமாவது அவர் இருக்கிறார் , அதனால் பிழைத்தேன்.
முரசு தொலைக்காட்சியில் , என்னுயிர்த்தோழன் படப்பாட்டு ஓடிக்கொண்டிருக்கிறது....மாற்றினேன்....கலைஞர் தொல்லைக்காட்சியில் , அனேகமாக ஆயிரமாவது முறை 'ஆனந்த தாண்டவம்' என்ற மொக்கைத் திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது....
வெட்டுக்கிளியோ என்னமோ , அதே ஷேப்பில் ஒரு பூச்சி எங்கிருந்தோ வந்து டைனிங் டேபிள் ஓரத்தில் அமர்ந்தது.....கரப்பான்பூச்சியைக்கண்டாலே எனக்கு அலர்ஜி.........அதனால் ஒதுங்கி உட்கார்ந்துகொண்டேன்......சிறிதுநேரம் வட்டமடித்தது....போர்க்காலங்களில் துப்பாக்கிக்குண்டுகளிலிருந்து தப்பிக்க தரையில் படுத்துக்கொள்வார்களே அது போல் அந்த வெட்டுக்கிளி தாககுதலிருந்து தப்பித்தேன்...நல்லவேளை வீட்டில் யாருமில்லை.....
சேனல் மாற்றினேன்....
சிரிப்பொலியில் சந்தானமும் , ஜீவாவும் ஒயின்ஷாப்பில் சரக்கடித்துக்கொண்டிருந்தார்கள்.....சிவா மனசுல சக்தி படம் என்றே நினைக்கிறேன்.... பின்னாளில் அதே டைரக்டர் .'பாஸ்' என்கிற பாஸ்கரன்' என்ற பெயரில் ரீமேக் பண்ணினாரே அதே படம்தான் பாஸ்...!
;
;
:
:
:
:
:
சாரி பாஸ்.....திடிரென எனது க்ரோம் தொங்கிவிட்டது.........எத்தனை நேரம் முயற்சி பண்ணியும் என்னால் மீண்டும் டைப்ப முடியவில்லை...நல்லவேளை ப்ளாக்கர் என்ற அற்புத சக்தி மீண்டும் என் க்ரோமை உயிர்த்தெழ வைத்தபோது முதலில் எழுதிய மேலிருக்கும் இலக்கிய வாக்கியங்களனைத்தையும் தன்னகத்தே சேமித்து வைத்திருந்தது....
இல்லாவிட்டால் , ஒருவேளை நான் எழுதிய ஆறு பத்திகளை ப்ளாக்கர் சேமிக்காமல் போயிருந்தால் திரும்ப எழுதக் கஷ்டப்பட்டுக்கொண்டு மீண்டும் பதிவு மூலம் உங்களை தொரந்தரவு படுத்தியிருக்க மாட்டேனோ என்னவோ.....யார் கண்டது...இனியாவது தொடர்ச்சியாக எழுதலாம் என்று நினைத்திருக்கும் என்ற எண்ணம் கூட முடிந்து போயிருக்கலாம்......க்ரோம் என்ற ஒரு சின்ன சாப்ட்வேரின் சதியால் 'மதிபாலா' என்ற இலக்கியவாதி , எழுத்தாளர் , கவிஞர் வலையுலகிலிருந்து காணாமல் போயிருப்பார்.
போரடித்தது..அனேகமாக மேற்கண்ட பத்திகளைப் படித்து உங்களுக்கு அடிக்கிறதே அதே போன்ற போர் தான் என்று நினைக்கிறேன்....
சேனலை மாற்றினேன்......சித்திரம் தொலைக்காட்சியில் ஒரு வெள்ளைக்கார சிறுவனும் , சீனச்சிறுமியும் கையில் ஏதோ எல்க்ட்ரானிக் சாதனத்தை வைத்து ஆராய்ந்து கொண்டிருந்தார்கள்..
குறிப்பிட வேண்டிய காட்சி அது...
சீனச்சிறுமி என் கையில் கொடு அதை என்கிறாள்....அமெரிக்கச் சிறுவன் , உனக்கென்ன தெரியும் ? நாம் அமெரிக்காரன் , அதனால் எலக்ட்ரானிக்ஸ் எல்லாம் எனக்கு அத்துப்படி' என்று பிடுங்கும் போது தவறி தண்ணீரில் விழுகிறது அந்த சாதனம்...' நீ ஒரு மக்கு சாம்பிராணி' என்கிறாள் அச்சிறுமி..
இக்காட்சியிலிருந்து எனக்கு மூன்று விடயங்கள் தெளிவானது...
1. ஆங்கிலப் படங்களை தமிழில் மொழிபெயர்க்கும் போதே சில டயலாக்குகளின் உண்மை அர்த்தம் தெரிகிறது.
2. அமெரிக்காக்காரனுக்கு தனக்கு எல்லாம் தெரியும் என்ற அதிகார தோரணை இருக்கிறது..அல்லது அப்படிப் படத்தில் காண்பிக்கப்படுகிறது...
3. அழகான செந்தமிழ் வசனங்கள் , ஆங்கில மொழிபெயர்ப்புப் படங்களில் மட்டுமே தற்போது கேட்க்கிடைக்கிறது....
சரி அது கிடக்கட்டும்...!
ஒரு மனிதன் குழந்தை குட்டிகளோடே இருந்து கொண்டு , திடிரென தனித்து விடப்பட்டால் என்ன செய்வான்???? என்னைப்போல பதிவு எழுத வாய்ப்பிருப்பவன் பதிவெழுத ஆரம்பிப்பான்....ஆக , பதிவொன்று இன்று போடவேண்டுமென்று முடிவெடுத்து டைப்ப ஆரம்பித்துவிட்டேன்..
ஆனா , எதைப் பத்தி எழுதுறது???
அட , மேற்கண்டவற்றை எழுதி திருப்பிப்படிக்கையில் இதையே கூட பதிவாகப்போடலாம் என்று தோணிற்று....போட்டுவிட்டேன்...!!!!
மீளச்சந்திப்பதில் மெத்த மகிழ்ச்சி!!!
இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.....
தமிழ்ப்புத்தாண்டான தைத் திருநாளுக்கு முன்னாடி இன்னொரு பதிவெழுதுவேனா என்பது சந்தேகம் என்பதால் தமிழ்ப்புத்தாண்டிற்கும் சேர்த்தே வாழ்த்துக்கள்..!!
யாரும் பின்னூட்டம் , கின்னூட்டம் போட்டு நிறைய ஊக்கப்படுத்தி மீண்டும் என்னை பதிவுலக அடிமையாக்க முயற்சிக்க வேண்டாம் என்று வேண்டி விரும்பி தாழ்மையுடன் கேட்டுக்கொல்கிறேன்...!!!
தோழமையுடன்
மதிபாலா.
கடந்த பதிவினை நான் இவ்வலைப்பூவில் ஏற்றியது கடந்த ஜனவரி மாதம்......ஏன் இந்த இடைவெளி....? ஏதேனும் எழுத வேண்டுமென்று சப்ஜெக்ட் இல்லாமல் எழுத ஆரம்பிக்கும் எல்லோருக்கும் வரும் பிரச்சினை எனக்கும் வந்திருக்கிறது....
அட்டா காலை உணவு ஆகவில்லையே என்று தோன்றிற்று.......தட்டில் வேலைக்கார அம்மா கிச்சடி என்ற பெயரில் மஞ்சள் கலரில் செய்து வைத்திருந்தாலும் சாப்பிட முடிந்தது.... இட்ட அன்னம் கொஞ்சம் முன்னப்பின்ன இருந்தாலும் யாருமற்ற சூழலில் அன்னமிடமாவது அவர் இருக்கிறார் , அதனால் பிழைத்தேன்.
முரசு தொலைக்காட்சியில் , என்னுயிர்த்தோழன் படப்பாட்டு ஓடிக்கொண்டிருக்கிறது....மாற்றினேன்....கலைஞர் தொல்லைக்காட்சியில் , அனேகமாக ஆயிரமாவது முறை 'ஆனந்த தாண்டவம்' என்ற மொக்கைத் திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது....
வெட்டுக்கிளியோ என்னமோ , அதே ஷேப்பில் ஒரு பூச்சி எங்கிருந்தோ வந்து டைனிங் டேபிள் ஓரத்தில் அமர்ந்தது.....கரப்பான்பூச்சியைக்கண்டாலே எனக்கு அலர்ஜி.........அதனால் ஒதுங்கி உட்கார்ந்துகொண்டேன்......சிறிதுநேரம் வட்டமடித்தது....போர்க்காலங்களில் துப்பாக்கிக்குண்டுகளிலிருந்து தப்பிக்க தரையில் படுத்துக்கொள்வார்களே அது போல் அந்த வெட்டுக்கிளி தாககுதலிருந்து தப்பித்தேன்...நல்லவேளை வீட்டில் யாருமில்லை.....
சேனல் மாற்றினேன்....
சிரிப்பொலியில் சந்தானமும் , ஜீவாவும் ஒயின்ஷாப்பில் சரக்கடித்துக்கொண்டிருந்தார்கள்.....சிவா மனசுல சக்தி படம் என்றே நினைக்கிறேன்.... பின்னாளில் அதே டைரக்டர் .'பாஸ்' என்கிற பாஸ்கரன்' என்ற பெயரில் ரீமேக் பண்ணினாரே அதே படம்தான் பாஸ்...!
;
;
:
:
:
:
:
சாரி பாஸ்.....திடிரென எனது க்ரோம் தொங்கிவிட்டது.........எத்தனை நேரம் முயற்சி பண்ணியும் என்னால் மீண்டும் டைப்ப முடியவில்லை...நல்லவேளை ப்ளாக்கர் என்ற அற்புத சக்தி மீண்டும் என் க்ரோமை உயிர்த்தெழ வைத்தபோது முதலில் எழுதிய மேலிருக்கும் இலக்கிய வாக்கியங்களனைத்தையும் தன்னகத்தே சேமித்து வைத்திருந்தது....
இல்லாவிட்டால் , ஒருவேளை நான் எழுதிய ஆறு பத்திகளை ப்ளாக்கர் சேமிக்காமல் போயிருந்தால் திரும்ப எழுதக் கஷ்டப்பட்டுக்கொண்டு மீண்டும் பதிவு மூலம் உங்களை தொரந்தரவு படுத்தியிருக்க மாட்டேனோ என்னவோ.....யார் கண்டது...இனியாவது தொடர்ச்சியாக எழுதலாம் என்று நினைத்திருக்கும் என்ற எண்ணம் கூட முடிந்து போயிருக்கலாம்......க்ரோம் என்ற ஒரு சின்ன சாப்ட்வேரின் சதியால் 'மதிபாலா' என்ற இலக்கியவாதி , எழுத்தாளர் , கவிஞர் வலையுலகிலிருந்து காணாமல் போயிருப்பார்.
போரடித்தது..அனேகமாக மேற்கண்ட பத்திகளைப் படித்து உங்களுக்கு அடிக்கிறதே அதே போன்ற போர் தான் என்று நினைக்கிறேன்....
சேனலை மாற்றினேன்......சித்திரம் தொலைக்காட்சியில் ஒரு வெள்ளைக்கார சிறுவனும் , சீனச்சிறுமியும் கையில் ஏதோ எல்க்ட்ரானிக் சாதனத்தை வைத்து ஆராய்ந்து கொண்டிருந்தார்கள்..
குறிப்பிட வேண்டிய காட்சி அது...
சீனச்சிறுமி என் கையில் கொடு அதை என்கிறாள்....அமெரிக்கச் சிறுவன் , உனக்கென்ன தெரியும் ? நாம் அமெரிக்காரன் , அதனால் எலக்ட்ரானிக்ஸ் எல்லாம் எனக்கு அத்துப்படி' என்று பிடுங்கும் போது தவறி தண்ணீரில் விழுகிறது அந்த சாதனம்...' நீ ஒரு மக்கு சாம்பிராணி' என்கிறாள் அச்சிறுமி..
இக்காட்சியிலிருந்து எனக்கு மூன்று விடயங்கள் தெளிவானது...
1. ஆங்கிலப் படங்களை தமிழில் மொழிபெயர்க்கும் போதே சில டயலாக்குகளின் உண்மை அர்த்தம் தெரிகிறது.
2. அமெரிக்காக்காரனுக்கு தனக்கு எல்லாம் தெரியும் என்ற அதிகார தோரணை இருக்கிறது..அல்லது அப்படிப் படத்தில் காண்பிக்கப்படுகிறது...
3. அழகான செந்தமிழ் வசனங்கள் , ஆங்கில மொழிபெயர்ப்புப் படங்களில் மட்டுமே தற்போது கேட்க்கிடைக்கிறது....
சரி அது கிடக்கட்டும்...!
ஒரு மனிதன் குழந்தை குட்டிகளோடே இருந்து கொண்டு , திடிரென தனித்து விடப்பட்டால் என்ன செய்வான்???? என்னைப்போல பதிவு எழுத வாய்ப்பிருப்பவன் பதிவெழுத ஆரம்பிப்பான்....ஆக , பதிவொன்று இன்று போடவேண்டுமென்று முடிவெடுத்து டைப்ப ஆரம்பித்துவிட்டேன்..
ஆனா , எதைப் பத்தி எழுதுறது???
அட , மேற்கண்டவற்றை எழுதி திருப்பிப்படிக்கையில் இதையே கூட பதிவாகப்போடலாம் என்று தோணிற்று....போட்டுவிட்டேன்...!!!!
மீளச்சந்திப்பதில் மெத்த மகிழ்ச்சி!!!
இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.....
தமிழ்ப்புத்தாண்டான தைத் திருநாளுக்கு முன்னாடி இன்னொரு பதிவெழுதுவேனா என்பது சந்தேகம் என்பதால் தமிழ்ப்புத்தாண்டிற்கும் சேர்த்தே வாழ்த்துக்கள்..!!
யாரும் பின்னூட்டம் , கின்னூட்டம் போட்டு நிறைய ஊக்கப்படுத்தி மீண்டும் என்னை பதிவுலக அடிமையாக்க முயற்சிக்க வேண்டாம் என்று வேண்டி விரும்பி தாழ்மையுடன் கேட்டுக்கொல்கிறேன்...!!!
தோழமையுடன்
மதிபாலா.
Comments