எஸ்.எஸ்.பொன்முடி , கொங்குச்சீமையிலே குறிப்பாக பல்லடம் , சூலூர் வட்டாரத்தில் தெரியாதவர்கள் சொற்பமே.
எஸ்.எஸ். பொன்முடி அவர்கள் மட்டுமல்ல , அவர்களது குடும்பமே சூலூரில் பழம்பெருமை மிக்க குடும்பம். காலங்காலமாக அவர்களது குடும்பத்தினரே சூலூரின் அனைத்து தேர்தல்களிலும் வென்றதும் , வெல்வதும் வரலாறு.
பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்தவராயினும் மாற்றுக்கட்சியினராலும் மதிக்கப்படும் சில மனிதர்களில் எஸ்.எஸ் பொன்முடியும் ஒருவர்.
அவருக்கும் , எனக்குமான பரிச்சயமொன்றும் அவ்வளவு அதிகமில்லைதான். அப்போது எனக்கு ஒரு பத்திலிருந்து , பதினைந்து வயதிருந்திருக்கலாம். கலங்கலில் கவுன்சிலர் தங்கவேலு சர்வ அதிகாரமும் பொருந்தியவராய் வலம் வந்துகொண்டிருந்தார். அவர் எஸ்.எஸ்.பொன்முடியின் வலக்கரம். ஊருக்கு மேற்கே ஜல்லிக்குழி என்ற மனிதர்கள் உபயோகப்படுத்த முடியாத , இயலாத பகுதி ஒன்றிருந்தது.....அப்போது கழகம் ஆட்சியிலிருந்தது + பொன்முடி எம்.எல்.ஏவாக இருந்தார்.
கட்சிக்காரர்கள் , குறிப்பாக ஒடுக்கப்பட்ட , மிக பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் கேட்டுக்கொண்டதற்காக , மிகுந்த பிரயாசைப்பட்டு தங்கவேல் மற்றும் எஸ்.எஸ்.பொன்முடி அவர்களின் முன்முயற்சியால் அந்த ஜல்லிக்குழி மேடாக்கப்பட்டு 'கலைஞர் நகர்' ஆக்கப்பட்டது. அதற்கு மட்டும் திரு. எஸ்.எஸ். பொன்முடி அவர்கள் குறைந்தபட்சம் தனது சொந்தப்பணத்தில் 5 லட்சம் செலவு செய்திருப்பார்....புறம்போக்கு இடங்களை ஆக்கிரமிப்பது தவறே ஆனாலும் , தனக்காக ஒன்றும் அவர் அவ்விடத்தை ஆக்கிரமித்து விடவில்லை...
இன்றும் கலங்கல் கலைஞர் நகர் அவர் பேர் சொல்லிக்கிடக்கிறது. குறைந்தபட்சம் 300 குடும்பங்கள் அங்கே சொந்தவீடு கட்டி வாழ்கின்றன.
காலப்போக்கில் , பெயர் மட்டுமே கலைஞர் நகராக இருந்தாலும் பலகட்சிக்கொடிகள் பட்டொளி வீசிப்பறந்தது கிளைக்கதை.....
ஒருமுறை 2000த்தின் துவக்கம் , திருநெல்வேலியின் 'பரணி' ஹோட்டலில் காலை உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது , அருகிலிருந்த மேசையில் அமர்ந்து உணவருந்திக்கொண்டிருந்தார் திரு.எஸ்.எஸ். பொன்முடி , இரண்டொருமுறை திரும்பித் திரும்பிப் பார்த்தேன்... எழுந்து வந்து அருகில் உட்கார்ந்தார் , தம்பி , என்ன நம்ம ஊருக்காரரா என்றார்.
ஆமாங்கண்ணா...கலங்கல் என்று சொன்னதும் விழி விரிய நிறையப் பேசினார்.... அப்போது அவர் சொன்ன சேதி இன்னும் என் நெஞ்சில் நிற்கிறது.
ஒருமுறை , 1996 எலக்சன் என்று நினைக்கிறேன். கலைஞர் நகர் வீடுகளுக்கு பட்டா எடுத்துக்கொடுக்க இயலவில்லை என்று சொல்லி , என்ன கலைஞர் நகருக்குள் நுழைய விடவில்லை என்று மிகவும் வருத்தப்பட்டார்.... ஒரு சிறிய நிகழ்வை அதிலும் ஒரு அரசியல்வாதி நினைவில் வைத்து வருத்தப்பட முடியுமா என்று அதிர்ந்துபோனேன்.....அதிலிருந்து கலைஞர் நகர் பகுதிக்கு சாகும்வரை வரப்போவதில்லை என்று முடிவெடுத்தாராம்... ஆம், அம்முடிவை அவர் சாகும் வரைக்கும் அப்பகுதிக்கு வராமலிருந்து நிறைவேற்றியே விட்டார்.
ஆம், மக்களால் மதிக்கப்பட்ட , மக்களுக்காகவே இறுதிவரை உழைத்த திரு. எஸ்.எஸ்.பொன்முடி அவர்கள் நேற்றுக்காலை மறைந்துவிட்டாராம்... ஊரில் விசாரித்தேன் , ஒவ்வொருவர் குரலிலும் மெல்லியதாய் இழையோடிய சோகம்.. ஊரே கொள்ளமுடியாத கூட்டமாம். நேத்து பூராம் பஸ்ஸே வரல.....அவ்ளோ பேராம்....திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலேயே போக்குவரத்து நின்று போகும் அளவுக்கு கூட்டமாம் என்று தன்னையறியாத பெருமித உணர்வுடன் தமது உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டார்கள்...
காலம் தமது சமகாலத்தில் வாழ்ந்து வரும் மனிதர்களை கவுரவப்படுத்த தவறினாலும் , அவர்களது மறைவிலாவது கவுரவப்படுத்துகிறதே என்ற கனத்த மனத்துடன் இப்பதிவை முடிக்கிறேன்..
எஸ்.எஸ். பொன்முடி அவர்கள் மட்டுமல்ல , அவர்களது குடும்பமே சூலூரில் பழம்பெருமை மிக்க குடும்பம். காலங்காலமாக அவர்களது குடும்பத்தினரே சூலூரின் அனைத்து தேர்தல்களிலும் வென்றதும் , வெல்வதும் வரலாறு.
பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்தவராயினும் மாற்றுக்கட்சியினராலும் மதிக்கப்படும் சில மனிதர்களில் எஸ்.எஸ் பொன்முடியும் ஒருவர்.
அவருக்கும் , எனக்குமான பரிச்சயமொன்றும் அவ்வளவு அதிகமில்லைதான். அப்போது எனக்கு ஒரு பத்திலிருந்து , பதினைந்து வயதிருந்திருக்கலாம். கலங்கலில் கவுன்சிலர் தங்கவேலு சர்வ அதிகாரமும் பொருந்தியவராய் வலம் வந்துகொண்டிருந்தார். அவர் எஸ்.எஸ்.பொன்முடியின் வலக்கரம். ஊருக்கு மேற்கே ஜல்லிக்குழி என்ற மனிதர்கள் உபயோகப்படுத்த முடியாத , இயலாத பகுதி ஒன்றிருந்தது.....அப்போது கழகம் ஆட்சியிலிருந்தது + பொன்முடி எம்.எல்.ஏவாக இருந்தார்.
கட்சிக்காரர்கள் , குறிப்பாக ஒடுக்கப்பட்ட , மிக பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் கேட்டுக்கொண்டதற்காக , மிகுந்த பிரயாசைப்பட்டு தங்கவேல் மற்றும் எஸ்.எஸ்.பொன்முடி அவர்களின் முன்முயற்சியால் அந்த ஜல்லிக்குழி மேடாக்கப்பட்டு 'கலைஞர் நகர்' ஆக்கப்பட்டது. அதற்கு மட்டும் திரு. எஸ்.எஸ். பொன்முடி அவர்கள் குறைந்தபட்சம் தனது சொந்தப்பணத்தில் 5 லட்சம் செலவு செய்திருப்பார்....புறம்போக்கு இடங்களை ஆக்கிரமிப்பது தவறே ஆனாலும் , தனக்காக ஒன்றும் அவர் அவ்விடத்தை ஆக்கிரமித்து விடவில்லை...
இன்றும் கலங்கல் கலைஞர் நகர் அவர் பேர் சொல்லிக்கிடக்கிறது. குறைந்தபட்சம் 300 குடும்பங்கள் அங்கே சொந்தவீடு கட்டி வாழ்கின்றன.
காலப்போக்கில் , பெயர் மட்டுமே கலைஞர் நகராக இருந்தாலும் பலகட்சிக்கொடிகள் பட்டொளி வீசிப்பறந்தது கிளைக்கதை.....
ஒருமுறை 2000த்தின் துவக்கம் , திருநெல்வேலியின் 'பரணி' ஹோட்டலில் காலை உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது , அருகிலிருந்த மேசையில் அமர்ந்து உணவருந்திக்கொண்டிருந்தார் திரு.எஸ்.எஸ். பொன்முடி , இரண்டொருமுறை திரும்பித் திரும்பிப் பார்த்தேன்... எழுந்து வந்து அருகில் உட்கார்ந்தார் , தம்பி , என்ன நம்ம ஊருக்காரரா என்றார்.
ஆமாங்கண்ணா...கலங்கல் என்று சொன்னதும் விழி விரிய நிறையப் பேசினார்.... அப்போது அவர் சொன்ன சேதி இன்னும் என் நெஞ்சில் நிற்கிறது.
ஒருமுறை , 1996 எலக்சன் என்று நினைக்கிறேன். கலைஞர் நகர் வீடுகளுக்கு பட்டா எடுத்துக்கொடுக்க இயலவில்லை என்று சொல்லி , என்ன கலைஞர் நகருக்குள் நுழைய விடவில்லை என்று மிகவும் வருத்தப்பட்டார்.... ஒரு சிறிய நிகழ்வை அதிலும் ஒரு அரசியல்வாதி நினைவில் வைத்து வருத்தப்பட முடியுமா என்று அதிர்ந்துபோனேன்.....அதிலிருந்து கலைஞர் நகர் பகுதிக்கு சாகும்வரை வரப்போவதில்லை என்று முடிவெடுத்தாராம்... ஆம், அம்முடிவை அவர் சாகும் வரைக்கும் அப்பகுதிக்கு வராமலிருந்து நிறைவேற்றியே விட்டார்.
ஆம், மக்களால் மதிக்கப்பட்ட , மக்களுக்காகவே இறுதிவரை உழைத்த திரு. எஸ்.எஸ்.பொன்முடி அவர்கள் நேற்றுக்காலை மறைந்துவிட்டாராம்... ஊரில் விசாரித்தேன் , ஒவ்வொருவர் குரலிலும் மெல்லியதாய் இழையோடிய சோகம்.. ஊரே கொள்ளமுடியாத கூட்டமாம். நேத்து பூராம் பஸ்ஸே வரல.....அவ்ளோ பேராம்....திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலேயே போக்குவரத்து நின்று போகும் அளவுக்கு கூட்டமாம் என்று தன்னையறியாத பெருமித உணர்வுடன் தமது உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டார்கள்...
காலம் தமது சமகாலத்தில் வாழ்ந்து வரும் மனிதர்களை கவுரவப்படுத்த தவறினாலும் , அவர்களது மறைவிலாவது கவுரவப்படுத்துகிறதே என்ற கனத்த மனத்துடன் இப்பதிவை முடிக்கிறேன்..
மனிதருள் மாணிக்கம் ' திரு.எஸ்.எஸ். பொன்முடி' அவர்களுக்கு என் இதய அஞ்சலி...
வாழ்வாங்கு வாழ்க அவர்தம் புகழ்...!!!
Comments