Skip to main content

சிரியா : உலகப்போரின் நுழைவாயில்.

சிரியா.

சமீபத்தில் செய்திகளைப் பார்க்கும் , படிக்கும் பலருக்கும் இப்பெயர் ஒன்றும் புதிதாய் இருக்காது... பெரும்பாலும் , மேற்கத்திய நாடுகளின் செய்திகளையே கக்கும் நமது ஊடகங்களின் செய்திகளுக்குப்பின்னால் மிகப் பயங்கரமான உண்மைகள் புதைந்து கிடக்கின்றன...

பாஷர் அல் ஆஷாத் என்ற கொடுங்கோலன் மக்களைக் கொல்கிறான் என்றே உச்சரித்துப்பழகிய பல தொலைக்காட்சி நிருபர்களையும் தாண்டி , அமெரிக்கா சிரியாவில் நுழைந்து மக்களைக் காக்குமா என்ற பொழுதுபோகா விவாதங்களையும் தாண்டி பல நிஜங்கள் மறைக்கப்படுகின்றன.

லிபியா போன்றே சிரியாவும் கடந்து போகும் என்றே உலக நாடுகள் நினைத்துக்கொண்டிருக்கின்றன. ஆனால் , அப்படியல்ல , இந்த நிகழ்வுகள் பாரிய மாற்றங்களை பூமிப்பந்தில் ஏற்படுத்தப்போகின்றன  என பல உலக அறிஞர்கள் கருதுகிறார்கள்.

லிபிய புரட்சிக்கும் , இப்போது நடந்துகொண்டிருக்கும சிரிய புரட்சிக்குமான வேறுபாடு என்ன. ?

முதல் வேறுபாடு , லிபியா போன்று நண்பர்களில்லாத நாடல்ல சிரியா. ரஷ்யாவின் கடற்படைத் தளத்தைக்கொண்டிருக்கும் நாடு. ரஷியாவிடமிருந்து ஆயுதங்களை வாங்கிக்குவிக்கும் நாடு சிரியா.

சிரியா என்பது ஈரான் மீதான அமெரிக்காவின் , இசுரேலின் படையெடுப்புக்கான முதல் படி...

ஆகவே , சிரியாவை அதன் ஆட்சியாளர்களை ஈரானோ , ரஷியாவோ விட்டுக்கொடுக்கும் என்று எண்ணுபவர்கள் சி.என்.என்னையும் , பி.பி.சியையும் மாற்றி மாற்றி பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்...

இன்று மத்திய கிழக்கில் இசுலாமியர்களிடையே ஒரு பாரிய பிளவு ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. ஷியா மற்றும் ஷுன்னி பிரிவுகளிடையேயான சண்டை மென்மேலும் வலுக்கிறது. அத்தனைக்கும் அடிகோலியதற்கான காரணம் எல்லோருக்கும் தெரிந்ததே. ஷியாக்களும் , ஷுன்னிக்களும் சண்டையிட்டுக்கொள்ளும்போதுதானே 'இசுரேல்' என்ற பொது எதிரி நிம்மதியாக காலம் கழிக்கமுடியும்?

சில பத்தாண்டுகளுக்கு முன் நிலைமை எப்படி?

ஷியா பிரிவு இசுலாமியர்கள் பெரும்பான்மையாக வசித்த ஈராக்கின் அதிபராக ஷுன்னி சதாம் உசேன் இருந்தார். தேன்கூட்டை கலைத்து புண்ணியம் தேடிக்கொண்ட அமெரிக்காதான் , இன்று , ஈராக்கில் ஷியாக்களும் , ஷுன்னிக்களும் சண்டையிட்டு மாண்டுபோகிறார்கள்.

அதே குள்ள நரித்தனம்தான் சிரியாவிலும் நடக்கிறது.... சிரியாவின் அதிபர் 'ஆஷாத்' ஒரு ஆலவைட்  , அதாவது ஷியா பிரிவு முஸ்லிம்களின் ஒரு பகுதி.....ஆனால் , சிரியாவின் பெரும்பான்மை மக்கள் ஷுன்னி பிரிவினர்.

இன்று ஆட்சியாளர்களுக்கு எதிரான தெருமுனை ஆர்ப்பாட்டமாக ஆரம்பித்த சிரியப்புரட்சி , இன்று வகுப்புமோதலாக காட்சியளிக்கிறது. காரணம் யார்  தெரியுமா?

சிரியாவில் சனநாயகத்தை ஏற்படுத்த துடிப்பது யார் தெரியுமா? ஆண்டாண்டுகாலமாக சவுதியை ஆண்டுகொண்டிருக்கும் சர்வாதிகார சவுதி மன்னரும் , கத்தார் மன்னரும் தான் , விளையாட்டாக இல்லை?

அதுதான் , அமெரிக்காவின் தந்திரம்....ஆனால் அது அவர்களுக்கே வேட்டு வைப்பதாக முடிந்துவிடும் என்பதை தலிபான்களையோ , அல்குவைதாவையோ பார்த்து உணர்ந்துகொண்டார்களில்லை அமெரிக்கர்கள்...

இக்காலச்சூழலில், ரஷியாவுக்கும் , அமெரிக்காவுக்குமான உறவு படுவேகமான வீழ்ச்சியை சந்தித்துக்கொண்டிருக்கிறது என்பதை சமிப கால செய்திகள் உணர்த்துகின்றன...

அமெரிக்கா , ரஷிய மனித உரிமை மீறல் அதிகாரிகளை அமெரிக்காவில் விடமுடியாது என்று சட்டம் கொண்டு வர , ரஷியாவோ ரஷியக்குழந்தைகள் விற்பனைக்கல்ல , அதனால் அவர்களை அமெரிக்கர்கள் தத்தெடுக்கக்கூடாது என்று சட்டம் கொண்டு வருகிறார்கள். அது மட்டுமின்றி , முன்னால் சோவியத் குடியரசுகளில் ஒன்றான 'ஜார்ஜியா' நேட்டோ உறுப்பினராக துடிக்கிறது. அதை ரஷியா தனது பாதுகாப்புக்கு பாரதூரமென கருதுகிறது...

ரஷ்யாவுக்கு அண்மையில்  தனது ஏவுகணைகளையும் ,  மிஷைல் ஷீல்டு எனப்படும் ஏவுகணை எதிர்ப்புக்கருவிகளையும் வைக்க ஆசைப்படுகிறது 'ன நேட்டோ. அது தனது பாதுக்காப்பிற்கு பாதகம் என ரஷ்யா எதிர்க்கிறது...
சமீபத்தில் தனது கடற்பரப்பை அண்மித்த அமெரிக்க போர்க்கப்பல்களுக்கு எதிராக வார்னிங் ஷாட் எனப்படும் எச்சரிக்கை குண்டுகளை வீசியிருக்கிறது ரஷ்யா.

அமெரிக்கா புரிந்து கொள்ள மறுக்கும் ஒருவிடயம் , கார்ப்பசேவ் தலைமையிலான பலகீனமான சோவியத்தோ அல்லது யெல்சின் தலைமையிலான பிறநாடுகளின் உதவியை எதிர்ப்பார்க்கும் பலகீனமான ரஷியாவோ அல்ல இன்றைக்கு விளாடிமிர் புதின் தலைமையிலான 'ரஷ்யா'.

கொசாவோவில் , யுகோஸ்லாவியாவில் செய்ததை போல ஒருதலைப்பட்சமாக  அமெரிக்காவோ , நேட்டோ நாடுகளோ , சிரியாவில் கை வைத்தால் , அவர்கள் போராடப்போவது சிரிய அதிபர் ஆசாத் தோடு மட்டும் அல்ல , திரைமறைவில் ரஷியாவோடும் , ஈரானோடும் , அவர்களுடன் அதீத தொடர்பு வைத்துக்கொண்டிருக்கும் சீனாவோடும் தான்..... மீண்டுமொரு ப்ராக்சி யுத்த அத்தியாயம் தொடங்கும்....

எப்படி வியட்நாமில் வடக்கு தெற்கு என்று சண்டையிட்டார்களோ , எப்படி கிழக்கு , மேற்கு என்று ஜெர்மனியைத்துண்டாடி ப்ராக்சி யுத்தம் நடந்ததோ அதுபோலவே , பிரிதொரு பனிப்போர் துவங்கும்...

இதுகாறும் பனிப்போருக்கு பிந்தைய காலத்தில் , பொருளாதாரம் , சமூகம் ,தொழில் இவைகளில் கவனம் செலுத்திய உலகம் மீண்டுமொரு ஆயுதப்போட்டிக்குள் தள்ளப் படும்....

ஷியா மற்றும் ஷுன்னி முஸ்லீம்களுக்கிடையேயான போட்டியும் , சண்டையும் மத்திய கிழக்கில் உச்சமடையும்... ஈராக் , ஈரான் , போன்ற ஷியா நாடுகள் ஒரு பிரிவாகவும் , சவுதி , எகிப்து போன்ற ஷுன்னி நாடுகள் இருபிரிவாகவும் பிரிந்து ஆயுதங்களை வாங்கிக்குவிப்பார்கள்...

கிழக்காசியாவில் சீனாவும் , வடகொரியாவும் , இயற்கையான கம்யூனிசக்கூட்டணி நாடுகள்... அவர்கள் ரஷியாவின் பக்கத்தில் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை...

பொலிவாரியன் நாடுகளான , வெனிசுலா , பொலிவியா , மற்றும் சில மத்திய , தென் அமெரிக்க நாடுகள் மற்றும் க்யூபா போன்ற நாடுகள் அமெரிக்க எதிர்ப்புக்குப் பேர் போனவை , அவை இயற்கையாகவே ரஷிய , சீனக்கூட்டில் சங்கமமாகும்.  அர்ஜென்டினாவுக்கும் , இங்கிலாந்துக்கும் இருக்கும் முட்டல் மோதல் பெயர்போனது...

அப்போட்டியின் உச்சம் இன்னுமொரு உலகப்போர்தான் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

இரண்டாம் உலகப்போர் ஆசியாவையும் , ஐரோப்பாவையும் மட்டுமே மையம் கொண்டிருந்தது. ஆனால் இன்னுமொரு உலகப்போர்  ஒட்டுமொத்த உலகத்தையுமே மையம் கொள்ளும்..

ஆக, சிரியா என்பது உலகப்போரின் , உலகளாவிய ஆயுதப்போட்டியின் நுழைவு வாயில்தான்......

இன்னொரு உலகப்போரை தடுத்து நிறுத்தும் சக்தி ஒரு நாட்டுக்கு மட்டுமே உண்டு... அது எந்த நாடு தெரியுமா? சர்வ வல்லமை பொருந்திய அமெரிக்காதான் அது.... அது தன் வாலைச்சுருட்டிக்கொண்டு , எண்ணைக்கான சண்டைகளை நிறுத்திக்கொண்டு சும்மா இருந்தாலே உலகம் அமைதியடையும். அதன் தோழமை நாடான இசுரேலையும் கொஞ்சம் அடக்கி வைத்தால் மட்டுமே இன்னும் பத்தாண்டுகளிலாவது பதற்றம் தணியும்...

ஆனால், வல்லாதிக்க ஆசையில் உலவும் அமெரிக்கா  தனது தணியாத ஏகாதிபத்திய ஆசையை விட்டுக்கொடுக்கும் வாய்ப்பில்லையென்பதால் , இன்னொரு உலகப்போர் இன்வைட்டபில் அதாவது தவிர்க்க முடியாதது.

எப்போது என்பதே கேள்வி. அப்போருக்குப் பின் யார் மிஞ்சப்போகிறார்கள் என்பதே கேள்வி...

Comments

புலி வருது said…
புலி வருது , புலி வருது

Popular posts from this blog

இதற்குத்தானா ஆசைப்பட்டீர்கள் திரு.சீமான்?

இன்று சீமான் அதிமுக கூட்டணியில் இருந்து பிரச்சாரம் பண்ணப்போவதாக ஒரு செய்தி வந்திருக்கிறது..ஏற்கெனவே ஒருமுறை செய்த பாரிய தவறொன்றை மற்றொருமுறை செய்யமாட்டார் என்றே நினைத்திருந்தேன்....இது உண்மையான செய்தியாய் இருந்தால் பேரிடிதான்..!!!! மாறாக உணர்வுள்ள இளைஞர்கள் தம் பின்னால் பேரெழுச்சியுடன் நாம் தமிழராய் எழும்போது.....அதைக்கொண்டுபோய் போய்ஸ்தோட்டத்திற்கு தாரைவார்த்துக்கொடுப்பதென்பது கனவிலும் சகிக்க முடியாத செயல்....!!  கருணாநிதிக்கு ஈழ அழிவிற்கு எவ்வளவுக்கெவ்வளவு பங்கிருக்கிறதோ அதே அளவிற்கு  சக பங்குள்ளவரே செயலலிதா... செயலலிதா என்ன செய்திருக்க வேண்டும்? என்ன செய்தார்? 1.எதிர்கட்சியாக மாபெரும் போராட்டங்களை நடாத்தியிருக்க வேண்டும்...அழிவது நம்சொந்தங்களே என்று தெரிந்திருந்தும் வாய்மூடி மெளனியாகவே இருந்தார். 2. கருணாநிதியின் எதிர்ப்பரசியலைக் கைவிட்டு விட்டு முத்துக்குமார் முதற்கொண்டு  தமிழக இளைஞர்களின் எழுச்சியை உபயோகித்து இந்திய அரசை ஸ்தம்பிக்க முயற்சித்திருக்க வேண்டும்....அதைவிடுத்து கொடநாட்டில் பள்ளி கொண்டிருந்தார்... 3.  சிறிதேனும் உண்மையான அக்கறை அவருக்கு தமிழர்பா...

யார் நமக்கு எதிரி?

ஈழப்போராட்டம் பல படிநிலைகளைக்கொண்டது, தந்தை செல்வாவில் ஆரம்பித்து, பல்வேறு போராளிக்குழுக்களில் தொடங்கி புலிகளால் வலுப்பெற்றது. மற்ற போராளிக்குழுக்களிலிருந்து புலிகளின் கைகளுக்கு முழுதும் மாறியதெப்படி?  இந்தியப்பெருந்தலைவர் இந்திராகாந்தி அவர்கள் எல்லா போராளிக்குழுக்களையும் ஆராய்ந்து புலிகள் தான் எல்லோரிலும் வலுவானவர்களாகவும் , சரியான சிந்தனைப்போக்குடையவர்களாகவும் இருப்பதாக தீர்மானித்தார்கள். அதனால் விடுதலைப்புலிகளுக்கு கூடுதல் ஆயுத பலம் மட்டுமல்ல , தார்மீக ஆதரவுத்தளமும்  கிடைத்தது.  தமிழகத்தில் எம் ஜி ஆர் அவர்களுமே விடுதலைப்புலிகளை நம்பிய அளவிற்கு மற்ற குழுக்களை நம்பவில்லை. ஏன் கலைஞர் கூட சகோதர யுத்தம் வேண்டாம் வேண்டாமென தலையில் அடித்துக்கொண்டாரே தவிர ஒரு சந்தர்ப்பத்தில் கூட புலிகளை இடித்துரைத்தாரில்லை. தனது இறுதிக்காலம்  வரை சகோதர யுத்தத்தினால் தான் புலிகள் வீழ்ந்தார்களென்பதை உறுதியாக நம்பினார். அதற்காக புலிகளை வெறுத்தாரா என்றால் ஒருகணமும் வெளிப்படையாக அவர் சொன்னதில்லை.  புலிகளால் அவர்களது மிதமிந்திய ஹீரோயிசத்தால் அதிகம் இழந்த அரசியல் கட்சி ஒன்று உலகில் இருக்கும...

செயற்கரிய செய்வர் பெரியர்….திரு.பொள்ளாச்சி நசன்.!

இந்தப்பதிவினை 2009 ல் எழுதினேன். படித்த நண்பர்கள் அனைவரும் , இது எமக்கு புதிய செய்தியே என்றார்கள்....நல்லசெய்தியினை நாலு பேருக்கு தெரியும்படி மீண்டும் உரக்கச்சொல்வதில் தவறில்லையே. அதனால் இந்த மீள்பதிவு..... நவம்பர் 2009 க்கும் 2012க்கும் இடைப்பட்ட காலவெளியில் 'தமிழம்' இணையம் தான் எத்துணை வளர்ந்திருக்கிறது? வாழ்த்துக்களும் ! , வணக்கங்களும்! த ற்செய லாக நேற்றிரவு வலையில் உலாவிக்கொண்டிருந்தேன்….மேற்கண்ட தலைப்பிலிருக்கும் குறள்மொழிக்கேற்ப , அரியதொன்றை செய்து கொண்டிருக்கும் திரு. பொள்ளாச்சி நசன் அவர்களைப் பற்றியும் , அவரது தமிழம் இணையம் பற்றியும் அரிய நேரிட்டது. உங்களில் சிற்றிதழ் தொடர்புபட்ட பலரும் அவரை அறிந்திருக்கக் கூடும்…….இன்னும் பலர் அவரைப் பற்றி அறிந்திருக்காமலும் இருக்கக் கூடும்…..என்னைப் போல..! அதனால் ஒரு சின்ன அறிமுகம்… ( சூரியனுக்கே டார்ச்சா என்று திரு.நசன் அவர்கள் கோவித்துக்கொள்ளக் கூடாது…!!) பொள்ளாச்சி நசன் என்று தன் பெயரை வழங்கும் மணிப்பிள்ளை நடேசன் தமிழம் என்னும் வலையிதழின் ஆசிரியர். இவர் சிதம்பரத்தில், செப்டம்பர் 15, 1952 அன்று பிறந்தார். பொள்ளாச்ச...