Skip to main content

யார் பெறுவார் ஆர்கே நகரின் அரியாசனம்..?

சிலகாலம் முன்புவரை ஆர்.கே நகர் தமிழகத்தில் அவ்வளவாக உச்சரிக்கப்படாத பெயர்தான். முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் போட்டியிட்டது முதல் விஐபி தொகுதியானது​ ஆர்.கே.நகர்.

முன்னாள் முதல்வரின் மறைவுக்குப்பின்னர் பின்னர் நடக்கும் ஆர் கே நகர் தொகுதி இடைத்தேர்தலானது , சமீபத்தில் எந்தவொரு தொகுதியின் இடைத்தேர்தலுமே பெறாதவொரு முக்கியத்துவத்தைப்பெற்றிருக்கிறது.... ஏன்?? 

திமுக ஒருபுறமும், அதிமுகவின் இரண்டுபிரிவுகளும் , ஜெ. அண்ணன் மகள் தீபா அவர்கள் இன்னொரு புறமுமாக புழுதி பறக்கப்போகிறது இன்னுஞ் சிலவாரங்களுக்கு அத்தொகுதி....இத்தொகுதியில் வெல்வது யார் என்பது மக்களின் கையில் தான் இருக்கிறது. 

ஆனால், களத்தில் நிற்கப்போகும் ஒவ்வொரு கட்சிக்குமே / பிரிவுக்குமே இதன் முடிவு ஒரு முக்கிய பாடத்தை சொல்லிச்செல்ல காத்திருக்கிறது
​. 


​வென்றிருக்கவேண்டிய 2016 தேர்தலை சிலபல காரணங்களால் மயிரிழையில் கோட்டை விட்ட திமுகவுக்கு இது "வாழ்வா சாவா " தேர்தல் இல்லையென்றாலும் கூட, இதில் பெறும் வெற்றி வரப்போகும் பாராளுமன்றத் தேர்தலின் கூட்டணிக்கணக்கிற்கு உதவக்கூடும்..யாருமில்லா தனிவெளியில் உலாவிக்கொண்டிருக்கும் பல கட்சிகள் ஒரு தீர்க்கமான முடிவெடுக்க அவர்கள் பெறும் வெற்றி உதவக்கூடும்...சுருங்கச்சொல்லின் , அடுத்த ஆட்சியையே விரைவில் கைப்பற்ற உதவக்கூடும்.. 

சசிகலா தரப்பு அதிமுகவிற்கோ இதில் பெறும் வெற்றியானது முக்கியமென்பதை விட அவர்களது அரசியல் எதிர்காலத்தையே நிர்யணிக்கும் தேர்தலாகவே இது அமையப்ப்போகிறது.. ஏன்? ஓபிஎஸ்ஸுற்கே கட்சித்தொண்டர்களின் ஆதரவிருக்கிறது
​ ​
என்ற பிம்பம் அகற்றப்படும், கட்சியில் சசிகலா அவர்களது பிடி உறுதிப்படுத்தப்படும். தினகரனும் , சசிகலாவும் தமிழக அரசியலில் தவிர்க்கவியலா சக்தியாக மாறுவதற்கான அடித்தளம் ஆர் கே நகரில் தான் இருக்கிறது.

ஒருவேளை ,திமுக ஜெயித்து சசிகலா தரப்பு  தோற்றாலும் கூட இரண்டாமிடத்தைப்பிடிக்குமானாலும் கூட கட்சியில் சசிகலா அவர்களது தலைமை ஏற்றுக்கொள்ளப்படும்...அல்லது இப்போதைக்கு அதற்கான விவாதங்கள் மட்டுப்படும்! மூன்றாமிடத்திற்கு அவர்கள் வரும் பட்சத்தில் பலதலைகள் ஓபிஎஸ் தரப்பிற்கு போவதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கும்!

ஓ.பி.எஸ் தரப்பிற்கோ இந்தத் தேர்தல்தான் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தலாக அமையும், இதில் வென்றாலோ இல்லை இரண்டாமிடம் பெற்றாலோ தான்  தமது இருப்பை தக்கவைத்துக்கொள்ளவியலும் என்பதில் சந்தேகம் தான் உண்டோ??

தீபா அவர்கள் கணிசமான வாக்குக்களைப்பெற்றாலே அவருக்கான இடம் அரசியலில் கிடைக்கப்பெறும்..

யார் வென்றால் நல்லது என்பது அவரவர் பார்வையைப் பொறுத்து மாறும்..ஆனால் ஒன்றுமட்டும் உறுதி... இந்த தேர்தல் முடிவுக்குப்பின்னரே அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தமிழக அரசியலின் திசை எவ்வாறு பயணிக்கும் என்பதை ஓரளவு கணித்துவிட இயலும்..

யார் பெறுவார் ஆர்.கே.நகரின் அரியாசனம்?

எல்லா கேள்விக்களுக்கும் சரியான விடை இருக்கிறதோ இல்லையோ , சவுகரியமான விடையொன்றிருக்கிறது... அதுதான்...... "காலம் தான் பதில் சொல்லும்". 

​- ​மதிபாலா 

Comments

Popular posts from this blog

இதற்குத்தானா ஆசைப்பட்டீர்கள் திரு.சீமான்?

இன்று சீமான் அதிமுக கூட்டணியில் இருந்து பிரச்சாரம் பண்ணப்போவதாக ஒரு செய்தி வந்திருக்கிறது..ஏற்கெனவே ஒருமுறை செய்த பாரிய தவறொன்றை மற்றொருமுறை செய்யமாட்டார் என்றே நினைத்திருந்தேன்....இது உண்மையான செய்தியாய் இருந்தால் பேரிடிதான்..!!!! மாறாக உணர்வுள்ள இளைஞர்கள் தம் பின்னால் பேரெழுச்சியுடன் நாம் தமிழராய் எழும்போது.....அதைக்கொண்டுபோய் போய்ஸ்தோட்டத்திற்கு தாரைவார்த்துக்கொடுப்பதென்பது கனவிலும் சகிக்க முடியாத செயல்....!!  கருணாநிதிக்கு ஈழ அழிவிற்கு எவ்வளவுக்கெவ்வளவு பங்கிருக்கிறதோ அதே அளவிற்கு  சக பங்குள்ளவரே செயலலிதா... செயலலிதா என்ன செய்திருக்க வேண்டும்? என்ன செய்தார்? 1.எதிர்கட்சியாக மாபெரும் போராட்டங்களை நடாத்தியிருக்க வேண்டும்...அழிவது நம்சொந்தங்களே என்று தெரிந்திருந்தும் வாய்மூடி மெளனியாகவே இருந்தார். 2. கருணாநிதியின் எதிர்ப்பரசியலைக் கைவிட்டு விட்டு முத்துக்குமார் முதற்கொண்டு  தமிழக இளைஞர்களின் எழுச்சியை உபயோகித்து இந்திய அரசை ஸ்தம்பிக்க முயற்சித்திருக்க வேண்டும்....அதைவிடுத்து கொடநாட்டில் பள்ளி கொண்டிருந்தார்... 3.  சிறிதேனும் உண்மையான அக்கறை அவருக்கு தமிழர்பா...

யார் நமக்கு எதிரி?

ஈழப்போராட்டம் பல படிநிலைகளைக்கொண்டது, தந்தை செல்வாவில் ஆரம்பித்து, பல்வேறு போராளிக்குழுக்களில் தொடங்கி புலிகளால் வலுப்பெற்றது. மற்ற போராளிக்குழுக்களிலிருந்து புலிகளின் கைகளுக்கு முழுதும் மாறியதெப்படி?  இந்தியப்பெருந்தலைவர் இந்திராகாந்தி அவர்கள் எல்லா போராளிக்குழுக்களையும் ஆராய்ந்து புலிகள் தான் எல்லோரிலும் வலுவானவர்களாகவும் , சரியான சிந்தனைப்போக்குடையவர்களாகவும் இருப்பதாக தீர்மானித்தார்கள். அதனால் விடுதலைப்புலிகளுக்கு கூடுதல் ஆயுத பலம் மட்டுமல்ல , தார்மீக ஆதரவுத்தளமும்  கிடைத்தது.  தமிழகத்தில் எம் ஜி ஆர் அவர்களுமே விடுதலைப்புலிகளை நம்பிய அளவிற்கு மற்ற குழுக்களை நம்பவில்லை. ஏன் கலைஞர் கூட சகோதர யுத்தம் வேண்டாம் வேண்டாமென தலையில் அடித்துக்கொண்டாரே தவிர ஒரு சந்தர்ப்பத்தில் கூட புலிகளை இடித்துரைத்தாரில்லை. தனது இறுதிக்காலம்  வரை சகோதர யுத்தத்தினால் தான் புலிகள் வீழ்ந்தார்களென்பதை உறுதியாக நம்பினார். அதற்காக புலிகளை வெறுத்தாரா என்றால் ஒருகணமும் வெளிப்படையாக அவர் சொன்னதில்லை.  புலிகளால் அவர்களது மிதமிந்திய ஹீரோயிசத்தால் அதிகம் இழந்த அரசியல் கட்சி ஒன்று உலகில் இருக்கும...

செயற்கரிய செய்வர் பெரியர்….திரு.பொள்ளாச்சி நசன்.!

இந்தப்பதிவினை 2009 ல் எழுதினேன். படித்த நண்பர்கள் அனைவரும் , இது எமக்கு புதிய செய்தியே என்றார்கள்....நல்லசெய்தியினை நாலு பேருக்கு தெரியும்படி மீண்டும் உரக்கச்சொல்வதில் தவறில்லையே. அதனால் இந்த மீள்பதிவு..... நவம்பர் 2009 க்கும் 2012க்கும் இடைப்பட்ட காலவெளியில் 'தமிழம்' இணையம் தான் எத்துணை வளர்ந்திருக்கிறது? வாழ்த்துக்களும் ! , வணக்கங்களும்! த ற்செய லாக நேற்றிரவு வலையில் உலாவிக்கொண்டிருந்தேன்….மேற்கண்ட தலைப்பிலிருக்கும் குறள்மொழிக்கேற்ப , அரியதொன்றை செய்து கொண்டிருக்கும் திரு. பொள்ளாச்சி நசன் அவர்களைப் பற்றியும் , அவரது தமிழம் இணையம் பற்றியும் அரிய நேரிட்டது. உங்களில் சிற்றிதழ் தொடர்புபட்ட பலரும் அவரை அறிந்திருக்கக் கூடும்…….இன்னும் பலர் அவரைப் பற்றி அறிந்திருக்காமலும் இருக்கக் கூடும்…..என்னைப் போல..! அதனால் ஒரு சின்ன அறிமுகம்… ( சூரியனுக்கே டார்ச்சா என்று திரு.நசன் அவர்கள் கோவித்துக்கொள்ளக் கூடாது…!!) பொள்ளாச்சி நசன் என்று தன் பெயரை வழங்கும் மணிப்பிள்ளை நடேசன் தமிழம் என்னும் வலையிதழின் ஆசிரியர். இவர் சிதம்பரத்தில், செப்டம்பர் 15, 1952 அன்று பிறந்தார். பொள்ளாச்ச...