Skip to main content

எக்ஸைல் - நடுசென்ட்டரில் நான்.

இந்த எல்லா எழவும் ஆடிமாசம் ஒரு சனிக்கெழமை சாய்ந்தரம் ஆரம்பித்தது.

மாமியார் வீட்டில் என்டெர்டெயின்மென்ட்டுக்கு எதுவுமே இல்லாத காரணத்தாலும் , இயல்பாக இருக்கும் படிக்கும் காரணத்தாலும் வழக்கமாக குமுதம் , கல்கண்டு , ஆனந்த விகடன் , அதிகபட்சம் போனால் சமீபகாலமாக 'புதிய தலைமுறையும்' வாங்கிப்படிக்கும் நான் , தாராபுரம் பஸ் ஸ்டாண்டுக்கு பக்கத்தில் இருக்கும் ஜே.பி.புத்தக நிலையம் போனேன் , எப்போ தெரியுமா , நான் முன்பு சொன்ன அதே ஒரு சனிக்கெழமை சாயந்தரம் தான்.

சுத்திச்சுத்திப் பார்த்தபோது கண்ணில் தட்டுப்பட்டது 'சாரு நிவேதிதா'வின் எக்ஸைல் நாவல்.

பின்னட்டையிலேயே பதிப்பாளர் (ஒருவேளை பத்ரி அல்லது பா.ரா?) கோடிட்டுக்காட்டியிருந்தார்...நாந்தான் கவனிக்காம விட்டுட்டேன்.

அதுமாதிரியும் இல்லாமல் , இதுமாதிரியும் இல்லாமல் புதுமாதிரி என்றது அச்செய்தி. அப்போதும் புத்தியில்லை. நானெல்லாம் , ஆங்கிலப்புத்தகங்களில் 'ஷிட்னி ஷெல்டன் ' , அல்லது ' டைம்' தாண்டி அறியாவதனாகையால்  ' ஆட்டோ பிக்சன் ' என்ற அழியாத வரலாறு பற்றி அறியாமல் விட்டுவிட்டேன். அதனால் , பதிப்பாளரின் அடுத்த எச்சரிக்கையையும் அலட்சியப்படுத்திவிட்டேன். தவறு என்னதுதான்.

இனி நாவலைப்பற்றிய என் எண்ணங்கள்  ( கடந்த ஆடி , ஆவணி , நிகழும் புரட்டாசி மாதங்கள் வரை படித்து முடித்த அல்லது முடிக்கமுடிந்த 174 பக்கங்கள் வரை...)

****

அவள் தொலைபேசினாள். அவன் அவளை சீண்டிச்சீண்டி அதைத் தொல்லைபேசி ஆக்கிக்கொண்டிருந்தான். இந்த நிகழ்வு மட்டுமே இப்புத்தகத்தை என் அக்கா பையனிடம் இருந்து இதை 'சரோஜா தேவி' அளவுக்கு மறைக்க வேண்டிய தேவையை ஏற்படுத்தியது.

***

நான் உன்னை உருக உருக உருக காதலிக்கிறேன்  கண்ணே. அது உனது மூணாவது புருஷனுக்கு தெரியாமல் பார்த்துக்கொள்....

இதுவரை என் வாழ்வில் வராமல் எங்கே போயிருந்தீர்கள் நாதா? ஒருவேளை முன்பே வந்திருந்தால் என் மூணாவது புருஷனுக்கான தேவையே இருந்திருக்காதோ என்னவோ?

இருவரும் சேர்ந்து தெய்வீக காதல் ச்சீ கலவி புரிவோமா?

***


Je t'aime chérie fusible de fusible. Ce n'est pas ton mari prendre soin de muna ....

Où étiez-vous déjà venu dans ma vie Naata? Peut-être vous avez déjà un besoin pour mon mari pour muna iruntirukkato quelque chose?

Cci sexuelle purivoma ensemble l'amour divin?



ஏண்ணா இப்பிடி பாக்கறீங்கோ ? மேல என்ன எழுதீருக்குண்ணா? ஒண்ணும் இல்லை. கூகுள் டிரான்ஸ்லேட் யூஸ் பண்ணி மேல எழுதிருக்கிறதை ப்ரெஞ்ச் மொழியில மொழி பெயர்த்தேன் , அவ்வளவுதான்.


***

கடுகு , மிளகு , திப்பிலி , இதைக் கலந்து தின்றால் வாதம் தீருமா? தீரும் என்பவனுக்கு தீரும். தீராது என்பவனுக்கு தீராது. உங்களுக்கு  எப்படி?

கடுகைத் தட்டி , மிளகை அரைத்து , திப்பிலி சேர்த்து கசாயம் செய்யும் முறை...


கடுகு - தேவையான அளவு

மிளகு - தேவையான அளவு

திப்பிலி - தேவையான அளவு

தேவையான அளவு கடுகை எடுத்து  , நன்றாக தட்டிக்கொள்ளவும் , தேவையான அளவு மிளகை எடுத்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்,
தேவையான அளவு திப்பிலியை எடுத்து நன்றாக மேற்கொண்வற்றவுடன் சேர்த்து தண்ணீர் கலக்கி கொதிக்கவிடவும்.... கசாயம் 'ரெடி'.


***

அரிசி - 2 மூட்டை
பருப்பு - 50 கிலோ.
::
>
>
>
>
<
_
(
*
வெத்தலை - 10 கவுளி
வெட்டுப்பாக்கு - 3 கிலோ
ரோசா பாக்கு - 5 பாக்கெட்..

என்னதுன்னு பாக்கறீங்களா? என் கல்யாணதுக்கு வாங்கின ஜாமான் லிஸ்ட்டு....

***

கண்ணே. அது எப்படி உன்னைப் பாக்காமல் என்னால் இன்னமும் இருக்கமுடிகிறது? உன்னைப் பார்க்காத என் கண் அவிந்துபோய்விட்டால் தான் என்ன? அதெப்படி அனுதினமும் என் அருகில் இருக்கும் புருஷனிடம் இல்லாத பாசமும் , அன்பும் , நேசமும் , பரிவும் , காதலும் இன்னபிற இன்னபிற உன்னிடம் வந்தது? என்னை எப்படி நான் உன்னில் தொலைத்தேன்...


***

நாடி சோதிடம் கேள்விப்பட்டிருக்கீறீர்களா? கும்பகோணம் வைத்தீஸ்வரன் கோவில் பக்கம் ரொம்ப பிரபல்யம்...

சத்தியமங்கலம் அருகே பண்ணாரி அம்மன் கோவில் ரொம்ப சக்தி வாயந்தது...

பவளக்கொடி கதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
கதைபடிக்க இங்கே க்ளிக்கவும். இணையத்தில் இது ஒரு வசதி...

http://www.valaitamil.com/movie-tamil-cinema-history-pavalakodi-articles15-167-6632-0.html

***

இதுவரைக்கும் இந்தப்பதிவை படிச்சி முடிச்சிட்டீங்களா? நீங்க பெரிய ஆள்தான் சார்....

அதுமாதிரியும் இல்லாமல் , எதுமாதிரியும் இல்லாமல் , ஒரு இது மாதிரி , அதாங்க 'இது மாதிரியான' புதுமாதிரியான நாவல் ' எக்ஸைல்',

இதுவரைக்கும் புத்தகத்தைப் படித்ததோடு நிறுத்திக்கொண்டிருந்த என்னை முதன்முதலில் , படித்த ஒரு புத்தகம் பற்றி எழுத வைத்ததே 'சாரு நிவேதிதா' அவர்களின் வெற்றி..

பின் , முன் குறிப்பு:  இந்தப்பதிவு ' எக்ஸைல்' நாவலைப் படித்த ( குறைந்தபட்சம் 50 பக்கங்களாவது ) நண்பர்களானது.. படிக்காதவர்கள் ஓடிப்போய் பக்கத்து புத்தகக் கடையில் ரூ 250 கொடுத்து வாங்கி வந்து படிக்கவும்....ஒருவேளை இந்தப்பதிப்பு விற்றுத் தீர்ந்து விடலாம். அடுத்த பதிப்பு வர நாளாகலாம் அல்லது வராமலேயே இருந்துவிடலாம்..


பின்னுக்குப் பின் குறிப்பு : இந்தப் பதிவானது இதுவரை படித்து முடித்த 154 பக்களுக்கானது மட்டுமே.... கூடிய விரைவில் 2013க்கு முன்பாவது மீதியைப்படித்து முடித்துவிடுவேன். அதன்பிறகு இறுதி விமர்சனம்...

***

ஆங்...சொல்ல மறந்துவிட்டேன்..


அது டிசம்பர் மாசம்னு நெனக்கிறேன். ஒரு முழுக்கோழியை பாப்பிக்கியூ செய்து சாப்பிட ஆசைப்பட்டோம்...வாசக நெஞ்சங்கள் அதை பெரிய்ய பார்ட்டி ஆக்கிப்படணும்னு ஆசப்பட்டு....

சார்...சார்.

எங்க ஓடறீங்க...
காசு கொடுத்து புக் வாங்கி படிச்ச நானே ஓடலை....நீங்க ஏன்?

Comments

tea master said…
ha ha ha ha ha ha. mudiyala boss.

Popular posts from this blog

இதற்குத்தானா ஆசைப்பட்டீர்கள் திரு.சீமான்?

இன்று சீமான் அதிமுக கூட்டணியில் இருந்து பிரச்சாரம் பண்ணப்போவதாக ஒரு செய்தி வந்திருக்கிறது..ஏற்கெனவே ஒருமுறை செய்த பாரிய தவறொன்றை மற்றொருமுறை செய்யமாட்டார் என்றே நினைத்திருந்தேன்....இது உண்மையான செய்தியாய் இருந்தால் பேரிடிதான்..!!!! மாறாக உணர்வுள்ள இளைஞர்கள் தம் பின்னால் பேரெழுச்சியுடன் நாம் தமிழராய் எழும்போது.....அதைக்கொண்டுபோய் போய்ஸ்தோட்டத்திற்கு தாரைவார்த்துக்கொடுப்பதென்பது கனவிலும் சகிக்க முடியாத செயல்....!!  கருணாநிதிக்கு ஈழ அழிவிற்கு எவ்வளவுக்கெவ்வளவு பங்கிருக்கிறதோ அதே அளவிற்கு  சக பங்குள்ளவரே செயலலிதா... செயலலிதா என்ன செய்திருக்க வேண்டும்? என்ன செய்தார்? 1.எதிர்கட்சியாக மாபெரும் போராட்டங்களை நடாத்தியிருக்க வேண்டும்...அழிவது நம்சொந்தங்களே என்று தெரிந்திருந்தும் வாய்மூடி மெளனியாகவே இருந்தார். 2. கருணாநிதியின் எதிர்ப்பரசியலைக் கைவிட்டு விட்டு முத்துக்குமார் முதற்கொண்டு  தமிழக இளைஞர்களின் எழுச்சியை உபயோகித்து இந்திய அரசை ஸ்தம்பிக்க முயற்சித்திருக்க வேண்டும்....அதைவிடுத்து கொடநாட்டில் பள்ளி கொண்டிருந்தார்... 3.  சிறிதேனும் உண்மையான அக்கறை அவருக்கு தமிழர்பா...

யார் நமக்கு எதிரி?

ஈழப்போராட்டம் பல படிநிலைகளைக்கொண்டது, தந்தை செல்வாவில் ஆரம்பித்து, பல்வேறு போராளிக்குழுக்களில் தொடங்கி புலிகளால் வலுப்பெற்றது. மற்ற போராளிக்குழுக்களிலிருந்து புலிகளின் கைகளுக்கு முழுதும் மாறியதெப்படி?  இந்தியப்பெருந்தலைவர் இந்திராகாந்தி அவர்கள் எல்லா போராளிக்குழுக்களையும் ஆராய்ந்து புலிகள் தான் எல்லோரிலும் வலுவானவர்களாகவும் , சரியான சிந்தனைப்போக்குடையவர்களாகவும் இருப்பதாக தீர்மானித்தார்கள். அதனால் விடுதலைப்புலிகளுக்கு கூடுதல் ஆயுத பலம் மட்டுமல்ல , தார்மீக ஆதரவுத்தளமும்  கிடைத்தது.  தமிழகத்தில் எம் ஜி ஆர் அவர்களுமே விடுதலைப்புலிகளை நம்பிய அளவிற்கு மற்ற குழுக்களை நம்பவில்லை. ஏன் கலைஞர் கூட சகோதர யுத்தம் வேண்டாம் வேண்டாமென தலையில் அடித்துக்கொண்டாரே தவிர ஒரு சந்தர்ப்பத்தில் கூட புலிகளை இடித்துரைத்தாரில்லை. தனது இறுதிக்காலம்  வரை சகோதர யுத்தத்தினால் தான் புலிகள் வீழ்ந்தார்களென்பதை உறுதியாக நம்பினார். அதற்காக புலிகளை வெறுத்தாரா என்றால் ஒருகணமும் வெளிப்படையாக அவர் சொன்னதில்லை.  புலிகளால் அவர்களது மிதமிந்திய ஹீரோயிசத்தால் அதிகம் இழந்த அரசியல் கட்சி ஒன்று உலகில் இருக்கும...

செயற்கரிய செய்வர் பெரியர்….திரு.பொள்ளாச்சி நசன்.!

இந்தப்பதிவினை 2009 ல் எழுதினேன். படித்த நண்பர்கள் அனைவரும் , இது எமக்கு புதிய செய்தியே என்றார்கள்....நல்லசெய்தியினை நாலு பேருக்கு தெரியும்படி மீண்டும் உரக்கச்சொல்வதில் தவறில்லையே. அதனால் இந்த மீள்பதிவு..... நவம்பர் 2009 க்கும் 2012க்கும் இடைப்பட்ட காலவெளியில் 'தமிழம்' இணையம் தான் எத்துணை வளர்ந்திருக்கிறது? வாழ்த்துக்களும் ! , வணக்கங்களும்! த ற்செய லாக நேற்றிரவு வலையில் உலாவிக்கொண்டிருந்தேன்….மேற்கண்ட தலைப்பிலிருக்கும் குறள்மொழிக்கேற்ப , அரியதொன்றை செய்து கொண்டிருக்கும் திரு. பொள்ளாச்சி நசன் அவர்களைப் பற்றியும் , அவரது தமிழம் இணையம் பற்றியும் அரிய நேரிட்டது. உங்களில் சிற்றிதழ் தொடர்புபட்ட பலரும் அவரை அறிந்திருக்கக் கூடும்…….இன்னும் பலர் அவரைப் பற்றி அறிந்திருக்காமலும் இருக்கக் கூடும்…..என்னைப் போல..! அதனால் ஒரு சின்ன அறிமுகம்… ( சூரியனுக்கே டார்ச்சா என்று திரு.நசன் அவர்கள் கோவித்துக்கொள்ளக் கூடாது…!!) பொள்ளாச்சி நசன் என்று தன் பெயரை வழங்கும் மணிப்பிள்ளை நடேசன் தமிழம் என்னும் வலையிதழின் ஆசிரியர். இவர் சிதம்பரத்தில், செப்டம்பர் 15, 1952 அன்று பிறந்தார். பொள்ளாச்ச...