Skip to main content

எக்ஸைல் - நடுசென்ட்டரில் நான்.

இந்த எல்லா எழவும் ஆடிமாசம் ஒரு சனிக்கெழமை சாய்ந்தரம் ஆரம்பித்தது.

மாமியார் வீட்டில் என்டெர்டெயின்மென்ட்டுக்கு எதுவுமே இல்லாத காரணத்தாலும் , இயல்பாக இருக்கும் படிக்கும் காரணத்தாலும் வழக்கமாக குமுதம் , கல்கண்டு , ஆனந்த விகடன் , அதிகபட்சம் போனால் சமீபகாலமாக 'புதிய தலைமுறையும்' வாங்கிப்படிக்கும் நான் , தாராபுரம் பஸ் ஸ்டாண்டுக்கு பக்கத்தில் இருக்கும் ஜே.பி.புத்தக நிலையம் போனேன் , எப்போ தெரியுமா , நான் முன்பு சொன்ன அதே ஒரு சனிக்கெழமை சாயந்தரம் தான்.

சுத்திச்சுத்திப் பார்த்தபோது கண்ணில் தட்டுப்பட்டது 'சாரு நிவேதிதா'வின் எக்ஸைல் நாவல்.

பின்னட்டையிலேயே பதிப்பாளர் (ஒருவேளை பத்ரி அல்லது பா.ரா?) கோடிட்டுக்காட்டியிருந்தார்...நாந்தான் கவனிக்காம விட்டுட்டேன்.

அதுமாதிரியும் இல்லாமல் , இதுமாதிரியும் இல்லாமல் புதுமாதிரி என்றது அச்செய்தி. அப்போதும் புத்தியில்லை. நானெல்லாம் , ஆங்கிலப்புத்தகங்களில் 'ஷிட்னி ஷெல்டன் ' , அல்லது ' டைம்' தாண்டி அறியாவதனாகையால்  ' ஆட்டோ பிக்சன் ' என்ற அழியாத வரலாறு பற்றி அறியாமல் விட்டுவிட்டேன். அதனால் , பதிப்பாளரின் அடுத்த எச்சரிக்கையையும் அலட்சியப்படுத்திவிட்டேன். தவறு என்னதுதான்.

இனி நாவலைப்பற்றிய என் எண்ணங்கள்  ( கடந்த ஆடி , ஆவணி , நிகழும் புரட்டாசி மாதங்கள் வரை படித்து முடித்த அல்லது முடிக்கமுடிந்த 174 பக்கங்கள் வரை...)

****

அவள் தொலைபேசினாள். அவன் அவளை சீண்டிச்சீண்டி அதைத் தொல்லைபேசி ஆக்கிக்கொண்டிருந்தான். இந்த நிகழ்வு மட்டுமே இப்புத்தகத்தை என் அக்கா பையனிடம் இருந்து இதை 'சரோஜா தேவி' அளவுக்கு மறைக்க வேண்டிய தேவையை ஏற்படுத்தியது.

***

நான் உன்னை உருக உருக உருக காதலிக்கிறேன்  கண்ணே. அது உனது மூணாவது புருஷனுக்கு தெரியாமல் பார்த்துக்கொள்....

இதுவரை என் வாழ்வில் வராமல் எங்கே போயிருந்தீர்கள் நாதா? ஒருவேளை முன்பே வந்திருந்தால் என் மூணாவது புருஷனுக்கான தேவையே இருந்திருக்காதோ என்னவோ?

இருவரும் சேர்ந்து தெய்வீக காதல் ச்சீ கலவி புரிவோமா?

***


Je t'aime chérie fusible de fusible. Ce n'est pas ton mari prendre soin de muna ....

Où étiez-vous déjà venu dans ma vie Naata? Peut-être vous avez déjà un besoin pour mon mari pour muna iruntirukkato quelque chose?

Cci sexuelle purivoma ensemble l'amour divin?



ஏண்ணா இப்பிடி பாக்கறீங்கோ ? மேல என்ன எழுதீருக்குண்ணா? ஒண்ணும் இல்லை. கூகுள் டிரான்ஸ்லேட் யூஸ் பண்ணி மேல எழுதிருக்கிறதை ப்ரெஞ்ச் மொழியில மொழி பெயர்த்தேன் , அவ்வளவுதான்.


***

கடுகு , மிளகு , திப்பிலி , இதைக் கலந்து தின்றால் வாதம் தீருமா? தீரும் என்பவனுக்கு தீரும். தீராது என்பவனுக்கு தீராது. உங்களுக்கு  எப்படி?

கடுகைத் தட்டி , மிளகை அரைத்து , திப்பிலி சேர்த்து கசாயம் செய்யும் முறை...


கடுகு - தேவையான அளவு

மிளகு - தேவையான அளவு

திப்பிலி - தேவையான அளவு

தேவையான அளவு கடுகை எடுத்து  , நன்றாக தட்டிக்கொள்ளவும் , தேவையான அளவு மிளகை எடுத்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்,
தேவையான அளவு திப்பிலியை எடுத்து நன்றாக மேற்கொண்வற்றவுடன் சேர்த்து தண்ணீர் கலக்கி கொதிக்கவிடவும்.... கசாயம் 'ரெடி'.


***

அரிசி - 2 மூட்டை
பருப்பு - 50 கிலோ.
::
>
>
>
>
<
_
(
*
வெத்தலை - 10 கவுளி
வெட்டுப்பாக்கு - 3 கிலோ
ரோசா பாக்கு - 5 பாக்கெட்..

என்னதுன்னு பாக்கறீங்களா? என் கல்யாணதுக்கு வாங்கின ஜாமான் லிஸ்ட்டு....

***

கண்ணே. அது எப்படி உன்னைப் பாக்காமல் என்னால் இன்னமும் இருக்கமுடிகிறது? உன்னைப் பார்க்காத என் கண் அவிந்துபோய்விட்டால் தான் என்ன? அதெப்படி அனுதினமும் என் அருகில் இருக்கும் புருஷனிடம் இல்லாத பாசமும் , அன்பும் , நேசமும் , பரிவும் , காதலும் இன்னபிற இன்னபிற உன்னிடம் வந்தது? என்னை எப்படி நான் உன்னில் தொலைத்தேன்...


***

நாடி சோதிடம் கேள்விப்பட்டிருக்கீறீர்களா? கும்பகோணம் வைத்தீஸ்வரன் கோவில் பக்கம் ரொம்ப பிரபல்யம்...

சத்தியமங்கலம் அருகே பண்ணாரி அம்மன் கோவில் ரொம்ப சக்தி வாயந்தது...

பவளக்கொடி கதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
கதைபடிக்க இங்கே க்ளிக்கவும். இணையத்தில் இது ஒரு வசதி...

http://www.valaitamil.com/movie-tamil-cinema-history-pavalakodi-articles15-167-6632-0.html

***

இதுவரைக்கும் இந்தப்பதிவை படிச்சி முடிச்சிட்டீங்களா? நீங்க பெரிய ஆள்தான் சார்....

அதுமாதிரியும் இல்லாமல் , எதுமாதிரியும் இல்லாமல் , ஒரு இது மாதிரி , அதாங்க 'இது மாதிரியான' புதுமாதிரியான நாவல் ' எக்ஸைல்',

இதுவரைக்கும் புத்தகத்தைப் படித்ததோடு நிறுத்திக்கொண்டிருந்த என்னை முதன்முதலில் , படித்த ஒரு புத்தகம் பற்றி எழுத வைத்ததே 'சாரு நிவேதிதா' அவர்களின் வெற்றி..

பின் , முன் குறிப்பு:  இந்தப்பதிவு ' எக்ஸைல்' நாவலைப் படித்த ( குறைந்தபட்சம் 50 பக்கங்களாவது ) நண்பர்களானது.. படிக்காதவர்கள் ஓடிப்போய் பக்கத்து புத்தகக் கடையில் ரூ 250 கொடுத்து வாங்கி வந்து படிக்கவும்....ஒருவேளை இந்தப்பதிப்பு விற்றுத் தீர்ந்து விடலாம். அடுத்த பதிப்பு வர நாளாகலாம் அல்லது வராமலேயே இருந்துவிடலாம்..


பின்னுக்குப் பின் குறிப்பு : இந்தப் பதிவானது இதுவரை படித்து முடித்த 154 பக்களுக்கானது மட்டுமே.... கூடிய விரைவில் 2013க்கு முன்பாவது மீதியைப்படித்து முடித்துவிடுவேன். அதன்பிறகு இறுதி விமர்சனம்...

***

ஆங்...சொல்ல மறந்துவிட்டேன்..


அது டிசம்பர் மாசம்னு நெனக்கிறேன். ஒரு முழுக்கோழியை பாப்பிக்கியூ செய்து சாப்பிட ஆசைப்பட்டோம்...வாசக நெஞ்சங்கள் அதை பெரிய்ய பார்ட்டி ஆக்கிப்படணும்னு ஆசப்பட்டு....

சார்...சார்.

எங்க ஓடறீங்க...
காசு கொடுத்து புக் வாங்கி படிச்ச நானே ஓடலை....நீங்க ஏன்?

Comments

tea master said…
ha ha ha ha ha ha. mudiyala boss.

Popular posts from this blog

பூட்டிய இரும்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது!

சீமான்களின் சபையினிலேயே , கடிதம் எழுதி எழுதிக் களைத்துப்போனதோர் கிழட்டுச் சிங்கம்.....முன்னாலுக்கும் முன்னால் அவர் கொண்ட தமிழ்ப்பற்று.....இன்னாளில் அது தமது மக்கட்பற்றாய் மாறிப்போனதொரு சோகம். ஏதோவொரு புண்ணியத்தில், எவரோ செய்த வரலாற்றுத் தவறால் , கொள்கை , தொலைநோக்கு , மக்கட்பற்று இவை பற்றிய சிந்தையேதுமின்றி அரசியலில் விபத்தாய் விளைந்த கொடநாட்டு ஈழத்தாய்....தேர்தலுக்குத் தேர்தல் மட்டுமே தமிழர் பற்றியும் , தமிழர் அரசியல் பற்றியும் எழுதி வைத்துப் பேசும் செல்வி யவர்.........இன்னமும் அவர் சேலை பிடித்துத்திரியும் வீணர் கூட்டம்.! கூட்டணிக்கேற்றப்படி கொள்கையை மாற்றிக்கொள்ளும் மருத்துவப் படையாச்சி.........வீரமிகு வன்னியகுலத்திலே வந்துதித்த சந்தர்ப்பவாதச் சாக்கடை....சமரசமற்ற கொள்கை அரசியலை சந்தர்ப்பவாதச் சாக்கடைக்குள் தள்ளிய பெருமைக்குரிய மருத்துவர் தமிழ்க்குடிதாங்காத தமிழ்க்குடிதாங்கி! யாரை எதற்காக எதிர்த்து அரசியல் செய்யவேண்டுமே அவர்களோடே தம் தேவைக்குதந்த படி கூட்டு வைத்துக்கொண்டு ஈழத்திற்க்காய் எந்நேரமும் பாடுபடும் திரு.வைகோ அவர்கள்....அவரும் சிறை சென்றார்.

நண்பர் 'டோண்டு' ராகவன்...

உயிரோடு இருக்கும்வரை அறிக்கைகளால் அர்சித்து எதிர்ப்பரசியல் நடாத்தி செத்துபோன பிறகு ஆருயிர் நண்பர் என்று அழைத்துக்கொள்ளும் எல்லா அரசியல்வாதிகளையும் போலவே நான். எனக்கும் மறைந்த உயர்திரு 'டோண்டு' ராகவன் அவர்களுக்குமான பரிச்சயம் அவ்வளவொன்றும் அதிகமில்லைதான். பதிவுலகையும் , பர்ஸனல் லைப்பையும் பிரித்து வைத்துக்கொள்ளும் எண்ணமுடைய நான் , டோண்டு மட்டுமல்ல மற்றபல பதிவுலக நண்பர்களுடனும் கூட தனிப்பட்ட தொடர்புகளை வைத்துக்கொண்டதில்லை... இருந்தாலும் , அவ்வப்போது பதிவுலக பின்னூட்டங்களின்பாலே தொடர்ந்துகொண்டிருந்த தொடர்பு , எனது 'போலி டோண்டு' பற்றிய கட்டுரையொன்றிலேயே  தீவிர விவாதமாக மாறியது.. ஆயிரம் விமர்சனங்கள் அவர் மீதோ இல்லை அவர்தம் பிற்போக்கான கருத்துக்கள் மீதோ இருந்திருக்கலாம். கடினமாக ஓரிரு முறை பேசியிருக்கலாம்.. அத்தனையும் தாண்டி அவர் மிக நல்ல மனிதர் , கடும் உழைப்பாளி என்பதை அவரது பதிவுலகம் மூலமாக அறிந்தவனெனினும் உறுதியாக கூறவியலும்.. அத்தகைய நல்ல மனிதரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் , நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்... வருத்தங்கள

எஸ்.எஸ்.பொன்முடி - மனிதருள் மாணிக்கம்.

எஸ்.எஸ்.பொன்முடி , கொங்குச்சீமையிலே குறிப்பாக பல்லடம் , சூலூர் வட்டாரத்தில் தெரியாதவர்கள் சொற்பமே. எஸ்.எஸ். பொன்முடி அவர்கள் மட்டுமல்ல , அவர்களது குடும்பமே சூலூரில் பழம்பெருமை மிக்க குடும்பம். காலங்காலமாக அவர்களது குடும்பத்தினரே சூலூரின் அனைத்து தேர்தல்களிலும் வென்றதும் , வெல்வதும் வரலாறு. பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்தவராயினும் மாற்றுக்கட்சியினராலும் மதிக்கப்படும் சில மனிதர்களில் எஸ்.எஸ் பொன்முடியும் ஒருவர். அவருக்கும் , எனக்குமான பரிச்சயமொன்றும் அவ்வளவு அதிகமில்லைதான். அப்போது எனக்கு ஒரு பத்திலிருந்து , பதினைந்து வயதிருந்திருக்கலாம். கலங்கலில் கவுன்சிலர் தங்கவேலு சர்வ அதிகாரமும் பொருந்தியவராய் வலம் வந்துகொண்டிருந்தார். அவர் எஸ்.எஸ்.பொன்முடியின் வலக்கரம். ஊருக்கு மேற்கே ஜல்லிக்குழி என்ற மனிதர்கள் உபயோகப்படுத்த முடியாத , இயலாத பகுதி ஒன்றிருந்தது.....அப்போது கழகம் ஆட்சியிலிருந்தது + பொன்முடி எம்.எல்.ஏவாக இருந்தார். கட்சிக்காரர்கள் , குறிப்பாக ஒடுக்கப்பட்ட , மிக பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் கேட்டுக்கொண்டதற்காக , மிகுந்த பிரயாசைப்பட்டு தங்கவேல் மற்றும் எஸ்.எஸ்.பொன்முடி அவ