Skip to main content

விதி

சமயங்களில் விதி பற்றிய நினைப்பு சிலவும் வந்து வந்து போவதுண்டு. எதற்கெடுத்தாலும் அவன் விதி அப்படி ஆயிட்டான் என்று சொல்லும் என் அம்மத்தாக் கிளவி கூட அதற்கான காரணமாய் இருக்கலாம். 

விதிமுறை , விதிகள் எனப்படும் சட்டதிட்டங்களுக்கு உட்படும் முறையான "விதி" யினைப் பற்றி நாம் பேசவில்லை. காலம் வகுத்த வழி , கடவுள் விடுத்த விதி என்று திண்ணையில் வெத்தலை பாக்கு இடித்துக்கொண்டே ( உடனே பாரதிராஜாவின் சினிமாத்திண்ணைக்கு உங்கள் கவனம் போனால் நாம் பொறுப்பில்லை..) என்று சொல்லும் பெரிசுகள் இருக்கிறார்களே அப்படிப்பட்ட "விதி" தான் நாம் பேசுவது.

சாலைகளில் , தெருக்களில் வாழைப்பழத்தைச் சாப்பிட்டு விட்டு தோலை தூக்கி எறிந்து போவதன் மூலம் வழுக்கி விழுந்த பலரது கதையும் விதி என்றால் , தோலைத் தூக்கி எறிந்து போவது எதில் சேர்த்தி?..

முழங்கால் உயரத்திற்கு  அல்லாது வேகத்தடைகளை ( தமிழில் சொல்லுவதானால்.ஸ்பீடு ப்ரேக்கர்களை) போட்டதன் மூலம் எங்களது தாத்தாவின் தம்பியினுடைய பேரனின் பிள்ளையொன்று டி.வி.எஸ். பிப்டி மோட்டார் சைக்கிளில் மரணித்ததே , அதற்குப் பெயர் "விதி" என்றால் , அந்த வேகத்தடையை அப்படி முட்டாள்தனமாக போட்டு வைத்த புத்திசாலிப் போக்குவரத்துக் காவலர்களின் மதியை என்ன வென்று சொல்ல?

எல்லாம் விதித்த படியே நடந்தது என்றால் , விதியை விதித்தது யார்?

கடவுளா? 

கடவுள்தான் விதியை விதைத்தானென்றால் அந்தக் கடவுள் தானா "அய்ஷா" வின் காதையும் மூக்கையும் அறுக்கச் சொன்னானா? 

யார் அந்த அய்ஷா?

ஆப்கானிஸ்தானின் ஏதோ ஒரு மூலையில் இன்றைக்கு இரத்தமும் , சதையுமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பெண்....

மனதைத் திடப்படுத்திக்கொண்டு இப்புகைப்படத்தைப் பாருங்கள்...அல்லது மனத்திடம் இல்லாதவர்கள் இதைப் பார்க்காதீர்கள்...



இந்தக் கொடூரமான நிகழ்வு "விதி" யால் நடந்ததா? விதியென்ற பேரில் மனிதத்தை சிதைக்கும் மனிதர்களால் வந்ததா? 

"தலிபான்"கள் இசுலாமிய விதிகளை இப்பெண் மதிக்கவில்லையென்பதால் காதையும் , மூக்கையும் அறுத்து வீசியிருக்கிறார்கள்..இதைத் தான் இசுலாம் போதிக்கிறதா? இதைத்தான் இறைத்தூதர் நபிகள் நாயகம் ( சல்) அவர்கள் போதித்தாரா? 

இதைப்பற்றி அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் " டைம்" பத்திரிக்கை விரிவானதொரு கட்டுரையைத் தந்திருக்கிறது.  அமெரிக்காவின் ஆப்கானிஸ்தானத்தை ஒட்டிய நிலைப்பாட்டை ஆதரிக்கும் வண்ணம் அப்பத்திரிக்கை இதை வெளியிட்டிருக்கலாம்.......அதைப் பற்றிய விமர்சனப் பார்வை எமக்குமுண்டு....

அதுபற்றிய இணைப்பிற்கு : 

ஆனால் , இந்நிகழ்வை சார்புப்பார்வையின்றி பார்ப்பதே நமது குறிக்கோள்...!

மனிதர்கள் மீது நம்பிக்கை குறையும் போது மதத்தின் மீது நம்பிக்கை வருகிறது...ஆனால் , மதத்தின் பெயரால் இதுபோன்ற காட்டுமிராண்டித்தனங்கள் நிகழ்கின்ற போது மதங்களைப் பற்றிய நமது பார்வையும் மாறிப்போகிறது...

காலணி போட்டு நடக்கக்கூடாது என்று சொல்லும் உயர்சாதிப் ஆதிக்கம் இந்துமதம் என்ற போர்வையில் "ஆதி திராவிடர்களுக்கு" விதிக்கப்பட்ட விதியாகிப்போனது.... 

ஆடுகளை , கோழிகளை ஆண்டவனுக்குப் படைக்கும் கலாச்சாரமும் கூட நாளடைவில் , சடங்காகவும் , விதியாகவும் மாறிப்போனது....அதே மதத்தின் பெயரால் "மாடுகளை" வெட்டுவது மட்டும் தவறானது....காரணம் அது சாமியாம்..

அதே மாட்டை கெழடு தட்டினால் வைத்துப் பராமரிப்பதில்லை நாம்.. அடிமாட்டுக்காக கேரளாவுக்கு விற்றுக்காசு பார்த்துவிடுகிறோம்...பால் தராத பசு மாடுகளை "அது சாமி" என்பதற்காக வெறுமனே சாப்பாடும் , புண்ணாக்கும் போட்டு வளர்ப்பதில்லை........எங்கியோ தீட்டுப்பட்டுப்போச்சு என்று துண்டுக்கடியில் விரல்களைப் பிடித்து விலை பேசி விட்டு விடுகிறோம்...

சுயநலங்களால் நிரம்பிய இச்சமூகம், நாளடைவில் தமக்குகந்தவற்றை விதியாக்கி விட்டுவிடுகிறது. சுயமாகச் சிந்திக்கத் தெரியாத மனிதர்களோ அவைகளை தமது விதிகளாக ஏற்றுக்கொண்டு விடுகிறார்கள்..

இப்போது சொல்லுங்கள்....நாம் சுயசிந்தனையை ஒட்டி வாழும் மனிதர்களா? இல்லை விதிக்கப்பட்ட விதிகளை ஒட்டி வாழும் மாக்களா? 

வழிகள் இரண்டும் திறந்தே இருக்கின்றன....வாழ்வது எப்போதும் நம் கையில்...

குதிரையின் லகான்கள் நம்மிடமே...நாம் தீர்மானிக்க வேண்டியது குதிரையை எத்திசையில் செலுத்துவது என்பது பற்றி மட்டுமே...

Comments

Robin said…
திரும்பவும் எழுத வந்ததில் மகிழ்ச்சி!
மோகன் said…
மீண்டு வந்ததில் மெத்த மகிழ்ச்சி.

கடந்த பதிவிலேயே பின்னூட்டம் போடணும்னு முயற்சித்தேன் முடியல.

பதிவு பத்தி என்ன சொல்ல ?

ம்ம்.சிந்திக்கவேண்டிய கருத்து.
KATHIR = RAY said…
விதி என்பது செயல் அல்ல
செயலின் முடிவு

விதி என்பது வாழ்க்கையின் நிகழ்ச்சி நிரல்

உங்களது வாழ்க்கையை ஆரம்பத்திலிருந்து கவனித்து பாருங்கள் உங்களுக்கு உங்கள் விதி புரியும்

நிகழ்ச்சி நிரலின்
ஆரம்பம் பிறப்பு
இடையில் வாழ்வின் நிலைகள்
முடிவு இறப்பு
திரும்பவும் எழுத வந்ததில் மகிழ்ச்சி!/

மிக்க நன்றி திரு.ராபின். நான் பதிவெழுத வந்த புதிதிலும் அனேகமாக நீங்கள் தான் ஒரு விவாதக் களம் மூலம் என்னை வரவேற்றீர்கள்.. அன்பிற்கு நன்றி.

வாழ்த்துக்கள் , நீங்கள் ஏதும் வலைப்பூவில் எழுதுகிறீர்களா?

அறிந்து கொள்ள ஆவல்.

தோழமையுடன்
மதிபாலா
மீண்டு வந்ததில் மெத்த மகிழ்ச்சி. //

நன்றி திரு.மோகன் , கடந்த பதிவில் பபளிஷ் பண்ணும் போது பின்னூட்டம் தேவையற்றது என்ற தெரிவை என்னையறியாமலேயே தேர்ந்தெடுத்திருந்தேன். அதனால் பின்னூட்டங்களைப் பெற இயலாமல் போனது , அதற்கான வருத்தங்கள்.

பின்னூட்டத்திற்கும் , கருத்திற்கும் நன்றிகள்.

தோழமையுடன்
மதிபாலா
விதி என்பது செயல் அல்ல
செயலின் முடிவு

விதி என்பது வாழ்க்கையின் நிகழ்ச்சி நிரல் //

விதி என்பது வாழ்க்கையின் நிகழ்ச்சிகளை எழுதி வைக்கும் , பதிவுப்புத்தகம் தானா என்ன?

**

உங்களது வாழ்க்கையை ஆரம்பத்திலிருந்து கவனித்து பாருங்கள் உங்களுக்கு உங்கள் விதி புரியும்

நிகழ்ச்சி நிரலின்
ஆரம்பம் பிறப்பு
இடையில் வாழ்வின் நிலைகள்
முடிவு இறப்பு //

சத்தியமாகச் சொல்கிறேன் , மேற்கண்ட வாதத்தினைப் புரிந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு மண்டையில் சரக்கில்லை. எனக்குப் பெரியவர்கள் சொன்னதெல்லாம் ஒன்றுதான்...

எது நடந்ததோ அது விதிப்படியே நடந்தது...எது நடக்கிறதோ அதும் விதிப்படியே நடக்கும் ...நீ , நான் , அவன் , இவன் , எவனும் இவ்வுலகில் மாற்றக் கூடியது எதுவுமில்லை..

நன்றி ,

வருகைக்கும் , கருத்துக்கும்

தோழமையுடன்
மதிபாலா
Anonymous said…
( தமிழில் சொல்லுவதானால்.ஸ்பீடு ப்ரேக்கர்களை) ...

கோயமுத்தூரு குசும்பு

Popular posts from this blog

இதற்குத்தானா ஆசைப்பட்டீர்கள் திரு.சீமான்?

இன்று சீமான் அதிமுக கூட்டணியில் இருந்து பிரச்சாரம் பண்ணப்போவதாக ஒரு செய்தி வந்திருக்கிறது..ஏற்கெனவே ஒருமுறை செய்த பாரிய தவறொன்றை மற்றொருமுறை செய்யமாட்டார் என்றே நினைத்திருந்தேன்....இது உண்மையான செய்தியாய் இருந்தால் பேரிடிதான்..!!!! மாறாக உணர்வுள்ள இளைஞர்கள் தம் பின்னால் பேரெழுச்சியுடன் நாம் தமிழராய் எழும்போது.....அதைக்கொண்டுபோய் போய்ஸ்தோட்டத்திற்கு தாரைவார்த்துக்கொடுப்பதென்பது கனவிலும் சகிக்க முடியாத செயல்....!!  கருணாநிதிக்கு ஈழ அழிவிற்கு எவ்வளவுக்கெவ்வளவு பங்கிருக்கிறதோ அதே அளவிற்கு  சக பங்குள்ளவரே செயலலிதா... செயலலிதா என்ன செய்திருக்க வேண்டும்? என்ன செய்தார்? 1.எதிர்கட்சியாக மாபெரும் போராட்டங்களை நடாத்தியிருக்க வேண்டும்...அழிவது நம்சொந்தங்களே என்று தெரிந்திருந்தும் வாய்மூடி மெளனியாகவே இருந்தார். 2. கருணாநிதியின் எதிர்ப்பரசியலைக் கைவிட்டு விட்டு முத்துக்குமார் முதற்கொண்டு  தமிழக இளைஞர்களின் எழுச்சியை உபயோகித்து இந்திய அரசை ஸ்தம்பிக்க முயற்சித்திருக்க வேண்டும்....அதைவிடுத்து கொடநாட்டில் பள்ளி கொண்டிருந்தார்... 3.  சிறிதேனும் உண்மையான அக்கறை அவருக்கு தமிழர்பா...

யார் நமக்கு எதிரி?

ஈழப்போராட்டம் பல படிநிலைகளைக்கொண்டது, தந்தை செல்வாவில் ஆரம்பித்து, பல்வேறு போராளிக்குழுக்களில் தொடங்கி புலிகளால் வலுப்பெற்றது. மற்ற போராளிக்குழுக்களிலிருந்து புலிகளின் கைகளுக்கு முழுதும் மாறியதெப்படி?  இந்தியப்பெருந்தலைவர் இந்திராகாந்தி அவர்கள் எல்லா போராளிக்குழுக்களையும் ஆராய்ந்து புலிகள் தான் எல்லோரிலும் வலுவானவர்களாகவும் , சரியான சிந்தனைப்போக்குடையவர்களாகவும் இருப்பதாக தீர்மானித்தார்கள். அதனால் விடுதலைப்புலிகளுக்கு கூடுதல் ஆயுத பலம் மட்டுமல்ல , தார்மீக ஆதரவுத்தளமும்  கிடைத்தது.  தமிழகத்தில் எம் ஜி ஆர் அவர்களுமே விடுதலைப்புலிகளை நம்பிய அளவிற்கு மற்ற குழுக்களை நம்பவில்லை. ஏன் கலைஞர் கூட சகோதர யுத்தம் வேண்டாம் வேண்டாமென தலையில் அடித்துக்கொண்டாரே தவிர ஒரு சந்தர்ப்பத்தில் கூட புலிகளை இடித்துரைத்தாரில்லை. தனது இறுதிக்காலம்  வரை சகோதர யுத்தத்தினால் தான் புலிகள் வீழ்ந்தார்களென்பதை உறுதியாக நம்பினார். அதற்காக புலிகளை வெறுத்தாரா என்றால் ஒருகணமும் வெளிப்படையாக அவர் சொன்னதில்லை.  புலிகளால் அவர்களது மிதமிந்திய ஹீரோயிசத்தால் அதிகம் இழந்த அரசியல் கட்சி ஒன்று உலகில் இருக்கும...

செயற்கரிய செய்வர் பெரியர்….திரு.பொள்ளாச்சி நசன்.!

இந்தப்பதிவினை 2009 ல் எழுதினேன். படித்த நண்பர்கள் அனைவரும் , இது எமக்கு புதிய செய்தியே என்றார்கள்....நல்லசெய்தியினை நாலு பேருக்கு தெரியும்படி மீண்டும் உரக்கச்சொல்வதில் தவறில்லையே. அதனால் இந்த மீள்பதிவு..... நவம்பர் 2009 க்கும் 2012க்கும் இடைப்பட்ட காலவெளியில் 'தமிழம்' இணையம் தான் எத்துணை வளர்ந்திருக்கிறது? வாழ்த்துக்களும் ! , வணக்கங்களும்! த ற்செய லாக நேற்றிரவு வலையில் உலாவிக்கொண்டிருந்தேன்….மேற்கண்ட தலைப்பிலிருக்கும் குறள்மொழிக்கேற்ப , அரியதொன்றை செய்து கொண்டிருக்கும் திரு. பொள்ளாச்சி நசன் அவர்களைப் பற்றியும் , அவரது தமிழம் இணையம் பற்றியும் அரிய நேரிட்டது. உங்களில் சிற்றிதழ் தொடர்புபட்ட பலரும் அவரை அறிந்திருக்கக் கூடும்…….இன்னும் பலர் அவரைப் பற்றி அறிந்திருக்காமலும் இருக்கக் கூடும்…..என்னைப் போல..! அதனால் ஒரு சின்ன அறிமுகம்… ( சூரியனுக்கே டார்ச்சா என்று திரு.நசன் அவர்கள் கோவித்துக்கொள்ளக் கூடாது…!!) பொள்ளாச்சி நசன் என்று தன் பெயரை வழங்கும் மணிப்பிள்ளை நடேசன் தமிழம் என்னும் வலையிதழின் ஆசிரியர். இவர் சிதம்பரத்தில், செப்டம்பர் 15, 1952 அன்று பிறந்தார். பொள்ளாச்ச...