கெடக்கறதெல்லாம் கெடக்கட்டும் , கெழவியத் தூக்கி மனையில வை ன்னு ஊருப்பக்கம் ஒரு பழமொழி சொல்வாய்ங்க...அதுபோலத் தான் ஜோக்பாலும்...என்னவோ ஜோக்பால் வந்தா இந்தியா முழுக்க பாலாறும் , தேனாறும் ஓடும்னு ரீல் காட்டிகினு கீராரு அன்னா ஹசாரே.
அவரு கொண்டு வார ஜோக்பால் நாட்டுக்கு நல்லது பண்ணுமோ என்னமோ தெரியாது....எந்த தனியொரு சட்டமுமே நாட்டுக்கு நல்லது பண்ணாது அப்படீங்கறது மட்டும் எல்லாருக்கும் நல்லா தெரியும்..
'மம்மி' இருவது வருசமா சொத்துக்குவிப்பு வழக்கை எப்படி இழுத்தடிக்குதுன்னு எல்லாருக்கும் தெரியும்....என்ன பண்ண முடிஞ்சது சட்டத்தால்? ஒரு எழவும் பண்ண முடியலை.....
எம் முப்பாட்டனாருக்கு துளு மொழி தான் தெரியும் , குத்தப்பத்திரிக்கையை அந்த மொழில தான் மொழிபெயர்க்கணும்னு ஒரு அப்பீலூ......அப்பாலிக்கா அதுல ஸ்பெல்லிங் மிஸ்டேக்குன்னு இன்னொரு அப்பீலு....அடப்பாவிகளா அது என்ன கலியாணப் பத்திரிக்கையா , முன்பக்கம் இங்கீலீசிலும் , பின்பக்கம் தமிழ்லயும் அச்சடிச்சிக்க? என்ன எழவு சார் இது??
மம்மி கேஸ் ஒரு சேம்பிள் தான்...இது மாதிரி லச்சம் கேஸு நாடு பூராவும் இருக்கு....'சுக்ராம்'ன்னு ஒருத்தர் , நடக்கவே முடியாத வயசான காலத்தில ஜெயிலுக்கு போயாகணும்ங்கறாங்க...
சட்டத்துக்கா பஞ்சம் நம்மூருல?
ஹெல்மெட்டு போட்டாகணும்கிறது சட்டம்...எவன் மதிக்கறான்?
சீட்டு பெல்ட்டு போட்டாகணும்கிறது சட்டம் ....எவன் போடறான்?
குடிச்சிட்டு வண்டி ஓட்டக்கூடாதுங்கறான்....அப்படி ஓட்டுறவன புடிக்கிறவன் கவர்ன்மெண்டு ஊழியன்..அதான் போலீசு.....விக்கிறவனும் கவர்ன்மெண்டு ஊழியன்...அதான் டாஸ்மாக்கு ஸேல்ஸ்மேன்...தப்பு யாருகிட்ட?
லைசென்ஸு இல்லாம கார் ஓட்டக்கூடாது...சரிதேன்....ரூல்ஸ் நல்லாதான் இருக்கு...
ஓட்டினா? ஒரு நூறு ரூவாய் லஞ்சமாக் குடு...அம்புட்டுதேன்....அப்ப பிரச்சினை எங்க ? ரூல்ஸ்லயா? சட்டத்துலயா ? இல்லப்பா இல்ல...எக்ஜிகியூசன்ல....அதாவது செயல்படுத்துவறவங்கள்ள...அங்கதான் பிரச்சினை..
தீவிரவாதத்தை எதுக்க பொடா சட்டம் கொண்டுவந்தான்....அதை தப்பா யூஸ் பண்ணி மம்மி வைகோவை உள்ள போட்டாங்க அப்படீன்றது கிளைக் கதை.....மெயின் கதை , அந்த சட்டத்துக்கப்பறம் தீவிரவாதம் நின்னுச்சா? இல்லையே? அதுக்கப்புறமும் மும்பையில குண்டு வச்சான்...என்ன பண்ணிட்டோம்?
இன்னோரு உதாரணம்......
காவிரியில தண்ணி உடோணும் ,முல்லைப்பெரியாத்துல தண்ணி மட்டம் ஏத்தணும்ங்கிற உத்தரவை இருமாநிலங்களும் கால்ல தூக்கி போட்டு வெகுவருசமாச்சி....என்ன பண்ண முடிஞ்சது? ஒண்ணும் பண்ண முடியலை...இதுக்கு , இந்தப் ப்ரச்சினைக்கு லோக் பால்ல தீர்விருக்கா என்ன?
இங்க சட்டங்கள் நெறையா இருக்கு..பிரச்சனை செயல்படுத்துறதுல தான்.......
புண்ணு இருக்குன்றதுக்காக கட்டுமேல கட்டு போட்டா புண்ணு ஆறிடும்னு சொல்லறவன் முட்டாள்...அதைத்தான் அன்னா ஹசாரே சொல்றார்.........யாராச்சும் அதைப் பண்ணுவேன் , இதைப் பண்ணுவேன் ன்னு சொன்னவுடனே நம்பிடும் மக்களும் அவரை தெய்வமா பாக்குறாங்க...
என்ன பொருத்தவரை , அரசாங்கம் கொண்டு வந்த லோக்பாலும் ஜோக்பால் தான்....அன்னா ஹசாரே கொண்டு வர்றதா சொல்ற லோக்பாலும் ஜோக்பால் தான்... இந்த ரெண்டு பால்னாலயும் , பசும் பால் அளவுக்குக் கூட பிரயோசனமில்லை...
நமக்குத் தேவை ஒட்டுமொத்த ,அரசியல் மாற்றம்...
நமக்குத் தேவை சமூகத்தின் சகல அடுக்களிலும் செல்வாக்குச் செலுத்தும் ஒரு அதிபராட்சி முறை...
நாம் ஏற்படுத்தவேண்டியது பொதுத்துறை ஊழியர்களின் வேலையைப் பற்றிய பயம்...லஞ்சம் வாங்கினால் வேலை பூடும் என்கிற பயம்...
உடனே மலரவேண்டியது பொறுப்புள்ள அரசியல் தலைமைகளல்ல...
சரியான தலைமையைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்புள்ள மக்கள்........
அவரு கொண்டு வார ஜோக்பால் நாட்டுக்கு நல்லது பண்ணுமோ என்னமோ தெரியாது....எந்த தனியொரு சட்டமுமே நாட்டுக்கு நல்லது பண்ணாது அப்படீங்கறது மட்டும் எல்லாருக்கும் நல்லா தெரியும்..
'மம்மி' இருவது வருசமா சொத்துக்குவிப்பு வழக்கை எப்படி இழுத்தடிக்குதுன்னு எல்லாருக்கும் தெரியும்....என்ன பண்ண முடிஞ்சது சட்டத்தால்? ஒரு எழவும் பண்ண முடியலை.....
எம் முப்பாட்டனாருக்கு துளு மொழி தான் தெரியும் , குத்தப்பத்திரிக்கையை அந்த மொழில தான் மொழிபெயர்க்கணும்னு ஒரு அப்பீலூ......அப்பாலிக்கா அதுல ஸ்பெல்லிங் மிஸ்டேக்குன்னு இன்னொரு அப்பீலு....அடப்பாவிகளா அது என்ன கலியாணப் பத்திரிக்கையா , முன்பக்கம் இங்கீலீசிலும் , பின்பக்கம் தமிழ்லயும் அச்சடிச்சிக்க? என்ன எழவு சார் இது??
மம்மி கேஸ் ஒரு சேம்பிள் தான்...இது மாதிரி லச்சம் கேஸு நாடு பூராவும் இருக்கு....'சுக்ராம்'ன்னு ஒருத்தர் , நடக்கவே முடியாத வயசான காலத்தில ஜெயிலுக்கு போயாகணும்ங்கறாங்க...
சட்டத்துக்கா பஞ்சம் நம்மூருல?
ஹெல்மெட்டு போட்டாகணும்கிறது சட்டம்...எவன் மதிக்கறான்?
சீட்டு பெல்ட்டு போட்டாகணும்கிறது சட்டம் ....எவன் போடறான்?
குடிச்சிட்டு வண்டி ஓட்டக்கூடாதுங்கறான்....அப்படி ஓட்டுறவன புடிக்கிறவன் கவர்ன்மெண்டு ஊழியன்..அதான் போலீசு.....விக்கிறவனும் கவர்ன்மெண்டு ஊழியன்...அதான் டாஸ்மாக்கு ஸேல்ஸ்மேன்...தப்பு யாருகிட்ட?
லைசென்ஸு இல்லாம கார் ஓட்டக்கூடாது...சரிதேன்....ரூல்ஸ் நல்லாதான் இருக்கு...
ஓட்டினா? ஒரு நூறு ரூவாய் லஞ்சமாக் குடு...அம்புட்டுதேன்....அப்ப பிரச்சினை எங்க ? ரூல்ஸ்லயா? சட்டத்துலயா ? இல்லப்பா இல்ல...எக்ஜிகியூசன்ல....அதாவது செயல்படுத்துவறவங்கள்ள...அங்கதான் பிரச்சினை..
தீவிரவாதத்தை எதுக்க பொடா சட்டம் கொண்டுவந்தான்....அதை தப்பா யூஸ் பண்ணி மம்மி வைகோவை உள்ள போட்டாங்க அப்படீன்றது கிளைக் கதை.....மெயின் கதை , அந்த சட்டத்துக்கப்பறம் தீவிரவாதம் நின்னுச்சா? இல்லையே? அதுக்கப்புறமும் மும்பையில குண்டு வச்சான்...என்ன பண்ணிட்டோம்?
இன்னோரு உதாரணம்......
காவிரியில தண்ணி உடோணும் ,முல்லைப்பெரியாத்துல தண்ணி மட்டம் ஏத்தணும்ங்கிற உத்தரவை இருமாநிலங்களும் கால்ல தூக்கி போட்டு வெகுவருசமாச்சி....என்ன பண்ண முடிஞ்சது? ஒண்ணும் பண்ண முடியலை...இதுக்கு , இந்தப் ப்ரச்சினைக்கு லோக் பால்ல தீர்விருக்கா என்ன?
இங்க சட்டங்கள் நெறையா இருக்கு..பிரச்சனை செயல்படுத்துறதுல தான்.......
புண்ணு இருக்குன்றதுக்காக கட்டுமேல கட்டு போட்டா புண்ணு ஆறிடும்னு சொல்லறவன் முட்டாள்...அதைத்தான் அன்னா ஹசாரே சொல்றார்.........யாராச்சும் அதைப் பண்ணுவேன் , இதைப் பண்ணுவேன் ன்னு சொன்னவுடனே நம்பிடும் மக்களும் அவரை தெய்வமா பாக்குறாங்க...
என்ன பொருத்தவரை , அரசாங்கம் கொண்டு வந்த லோக்பாலும் ஜோக்பால் தான்....அன்னா ஹசாரே கொண்டு வர்றதா சொல்ற லோக்பாலும் ஜோக்பால் தான்... இந்த ரெண்டு பால்னாலயும் , பசும் பால் அளவுக்குக் கூட பிரயோசனமில்லை...
நமக்குத் தேவை ஒட்டுமொத்த ,அரசியல் மாற்றம்...
நமக்குத் தேவை சமூகத்தின் சகல அடுக்களிலும் செல்வாக்குச் செலுத்தும் ஒரு அதிபராட்சி முறை...
நாம் ஏற்படுத்தவேண்டியது பொதுத்துறை ஊழியர்களின் வேலையைப் பற்றிய பயம்...லஞ்சம் வாங்கினால் வேலை பூடும் என்கிற பயம்...
உடனே மலரவேண்டியது பொறுப்புள்ள அரசியல் தலைமைகளல்ல...
சரியான தலைமையைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்புள்ள மக்கள்........
Comments