Skip to main content

போபால் , மணிபால், ஜோக்பால் , பசும்பால்!!

கெடக்கறதெல்லாம் கெடக்கட்டும் , கெழவியத் தூக்கி மனையில வை ன்னு ஊருப்பக்கம் ஒரு பழமொழி சொல்வாய்ங்க...அதுபோலத் தான் ஜோக்பாலும்...என்னவோ ஜோக்பால் வந்தா இந்தியா முழுக்க பாலாறும் , தேனாறும் ஓடும்னு ரீல் காட்டிகினு கீராரு அன்னா ஹசாரே.

அவரு கொண்டு வார ஜோக்பால் நாட்டுக்கு நல்லது பண்ணுமோ என்னமோ தெரியாது....எந்த தனியொரு சட்டமுமே நாட்டுக்கு நல்லது பண்ணாது அப்படீங்கறது மட்டும் எல்லாருக்கும் நல்லா தெரியும்..

'மம்மி' இருவது வருசமா சொத்துக்குவிப்பு வழக்கை எப்படி இழுத்தடிக்குதுன்னு எல்லாருக்கும் தெரியும்....என்ன பண்ண முடிஞ்சது சட்டத்தால்? ஒரு எழவும் பண்ண முடியலை.....

எம் முப்பாட்டனாருக்கு துளு மொழி தான் தெரியும் , குத்தப்பத்திரிக்கையை அந்த மொழில தான் மொழிபெயர்க்கணும்னு ஒரு அப்பீலூ......அப்பாலிக்கா அதுல ஸ்பெல்லிங் மிஸ்டேக்குன்னு இன்னொரு அப்பீலு....அடப்பாவிகளா அது என்ன கலியாணப் பத்திரிக்கையா , முன்பக்கம் இங்கீலீசிலும் , பின்பக்கம் தமிழ்லயும் அச்சடிச்சிக்க? என்ன எழவு சார் இது??

மம்மி கேஸ் ஒரு சேம்பிள் தான்...இது மாதிரி லச்சம் கேஸு நாடு பூராவும் இருக்கு....'சுக்ராம்'ன்னு ஒருத்தர் , நடக்கவே முடியாத வயசான காலத்தில ஜெயிலுக்கு போயாகணும்ங்கறாங்க...

சட்டத்துக்கா பஞ்சம் நம்மூருல?

ஹெல்மெட்டு போட்டாகணும்கிறது சட்டம்...எவன் மதிக்கறான்?

சீட்டு பெல்ட்டு போட்டாகணும்கிறது சட்டம் ....எவன் போடறான்?

குடிச்சிட்டு வண்டி ஓட்டக்கூடாதுங்கறான்....அப்படி ஓட்டுறவன புடிக்கிறவன் கவர்ன்மெண்டு ஊழியன்..அதான் போலீசு.....விக்கிறவனும் கவர்ன்மெண்டு ஊழியன்...அதான் டாஸ்மாக்கு ஸேல்ஸ்மேன்...தப்பு யாருகிட்ட?

லைசென்ஸு இல்லாம கார் ஓட்டக்கூடாது...சரிதேன்....ரூல்ஸ் நல்லாதான் இருக்கு...

ஓட்டினா? ஒரு நூறு ரூவாய் லஞ்சமாக் குடு...அம்புட்டுதேன்....அப்ப பிரச்சினை எங்க ? ரூல்ஸ்லயா? சட்டத்துலயா ? இல்லப்பா இல்ல...எக்ஜிகியூசன்ல....அதாவது செயல்படுத்துவறவங்கள்ள...அங்கதான் பிரச்சினை..

தீவிரவாதத்தை எதுக்க பொடா சட்டம் கொண்டுவந்தான்....அதை தப்பா யூஸ் பண்ணி மம்மி வைகோவை உள்ள போட்டாங்க அப்படீன்றது கிளைக் கதை.....மெயின் கதை , அந்த சட்டத்துக்கப்பறம் தீவிரவாதம் நின்னுச்சா? இல்லையே? அதுக்கப்புறமும் மும்பையில குண்டு வச்சான்...என்ன பண்ணிட்டோம்?

இன்னோரு உதாரணம்......

காவிரியில தண்ணி உடோணும் ,முல்லைப்பெரியாத்துல தண்ணி மட்டம் ஏத்தணும்ங்கிற உத்தரவை இருமாநிலங்களும் கால்ல தூக்கி போட்டு வெகுவருசமாச்சி....என்ன பண்ண முடிஞ்சது? ஒண்ணும் பண்ண முடியலை...இதுக்கு , இந்தப் ப்ரச்சினைக்கு லோக் பால்ல தீர்விருக்கா என்ன?

இங்க சட்டங்கள் நெறையா இருக்கு..பிரச்சனை செயல்படுத்துறதுல தான்.......

புண்ணு இருக்குன்றதுக்காக கட்டுமேல கட்டு போட்டா புண்ணு ஆறிடும்னு சொல்லறவன் முட்டாள்...அதைத்தான் அன்னா ஹசாரே சொல்றார்.........யாராச்சும் அதைப் பண்ணுவேன் , இதைப் பண்ணுவேன் ன்னு சொன்னவுடனே நம்பிடும் மக்களும் அவரை தெய்வமா பாக்குறாங்க...

என்ன பொருத்தவரை , அரசாங்கம் கொண்டு வந்த லோக்பாலும் ஜோக்பால் தான்....அன்னா ஹசாரே கொண்டு வர்றதா சொல்ற லோக்பாலும் ஜோக்பால் தான்... இந்த ரெண்டு பால்னாலயும் , பசும் பால் அளவுக்குக் கூட பிரயோசனமில்லை...

நமக்குத் தேவை ஒட்டுமொத்த ,அரசியல் மாற்றம்...

நமக்குத் தேவை சமூகத்தின் சகல அடுக்களிலும் செல்வாக்குச் செலுத்தும் ஒரு அதிபராட்சி முறை...


நாம் ஏற்படுத்தவேண்டியது பொதுத்துறை ஊழியர்களின் வேலையைப் பற்றிய பயம்...லஞ்சம் வாங்கினால் வேலை பூடும் என்கிற பயம்...


உடனே மலரவேண்டியது பொறுப்புள்ள அரசியல் தலைமைகளல்ல...

சரியான தலைமையைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்புள்ள மக்கள்........

Comments

Popular posts from this blog

இதற்குத்தானா ஆசைப்பட்டீர்கள் திரு.சீமான்?

இன்று சீமான் அதிமுக கூட்டணியில் இருந்து பிரச்சாரம் பண்ணப்போவதாக ஒரு செய்தி வந்திருக்கிறது..ஏற்கெனவே ஒருமுறை செய்த பாரிய தவறொன்றை மற்றொருமுறை செய்யமாட்டார் என்றே நினைத்திருந்தேன்....இது உண்மையான செய்தியாய் இருந்தால் பேரிடிதான்..!!!! மாறாக உணர்வுள்ள இளைஞர்கள் தம் பின்னால் பேரெழுச்சியுடன் நாம் தமிழராய் எழும்போது.....அதைக்கொண்டுபோய் போய்ஸ்தோட்டத்திற்கு தாரைவார்த்துக்கொடுப்பதென்பது கனவிலும் சகிக்க முடியாத செயல்....!!  கருணாநிதிக்கு ஈழ அழிவிற்கு எவ்வளவுக்கெவ்வளவு பங்கிருக்கிறதோ அதே அளவிற்கு  சக பங்குள்ளவரே செயலலிதா... செயலலிதா என்ன செய்திருக்க வேண்டும்? என்ன செய்தார்? 1.எதிர்கட்சியாக மாபெரும் போராட்டங்களை நடாத்தியிருக்க வேண்டும்...அழிவது நம்சொந்தங்களே என்று தெரிந்திருந்தும் வாய்மூடி மெளனியாகவே இருந்தார். 2. கருணாநிதியின் எதிர்ப்பரசியலைக் கைவிட்டு விட்டு முத்துக்குமார் முதற்கொண்டு  தமிழக இளைஞர்களின் எழுச்சியை உபயோகித்து இந்திய அரசை ஸ்தம்பிக்க முயற்சித்திருக்க வேண்டும்....அதைவிடுத்து கொடநாட்டில் பள்ளி கொண்டிருந்தார்... 3.  சிறிதேனும் உண்மையான அக்கறை அவருக்கு தமிழர்பா...

யார் நமக்கு எதிரி?

ஈழப்போராட்டம் பல படிநிலைகளைக்கொண்டது, தந்தை செல்வாவில் ஆரம்பித்து, பல்வேறு போராளிக்குழுக்களில் தொடங்கி புலிகளால் வலுப்பெற்றது. மற்ற போராளிக்குழுக்களிலிருந்து புலிகளின் கைகளுக்கு முழுதும் மாறியதெப்படி?  இந்தியப்பெருந்தலைவர் இந்திராகாந்தி அவர்கள் எல்லா போராளிக்குழுக்களையும் ஆராய்ந்து புலிகள் தான் எல்லோரிலும் வலுவானவர்களாகவும் , சரியான சிந்தனைப்போக்குடையவர்களாகவும் இருப்பதாக தீர்மானித்தார்கள். அதனால் விடுதலைப்புலிகளுக்கு கூடுதல் ஆயுத பலம் மட்டுமல்ல , தார்மீக ஆதரவுத்தளமும்  கிடைத்தது.  தமிழகத்தில் எம் ஜி ஆர் அவர்களுமே விடுதலைப்புலிகளை நம்பிய அளவிற்கு மற்ற குழுக்களை நம்பவில்லை. ஏன் கலைஞர் கூட சகோதர யுத்தம் வேண்டாம் வேண்டாமென தலையில் அடித்துக்கொண்டாரே தவிர ஒரு சந்தர்ப்பத்தில் கூட புலிகளை இடித்துரைத்தாரில்லை. தனது இறுதிக்காலம்  வரை சகோதர யுத்தத்தினால் தான் புலிகள் வீழ்ந்தார்களென்பதை உறுதியாக நம்பினார். அதற்காக புலிகளை வெறுத்தாரா என்றால் ஒருகணமும் வெளிப்படையாக அவர் சொன்னதில்லை.  புலிகளால் அவர்களது மிதமிந்திய ஹீரோயிசத்தால் அதிகம் இழந்த அரசியல் கட்சி ஒன்று உலகில் இருக்கும...

செயற்கரிய செய்வர் பெரியர்….திரு.பொள்ளாச்சி நசன்.!

இந்தப்பதிவினை 2009 ல் எழுதினேன். படித்த நண்பர்கள் அனைவரும் , இது எமக்கு புதிய செய்தியே என்றார்கள்....நல்லசெய்தியினை நாலு பேருக்கு தெரியும்படி மீண்டும் உரக்கச்சொல்வதில் தவறில்லையே. அதனால் இந்த மீள்பதிவு..... நவம்பர் 2009 க்கும் 2012க்கும் இடைப்பட்ட காலவெளியில் 'தமிழம்' இணையம் தான் எத்துணை வளர்ந்திருக்கிறது? வாழ்த்துக்களும் ! , வணக்கங்களும்! த ற்செய லாக நேற்றிரவு வலையில் உலாவிக்கொண்டிருந்தேன்….மேற்கண்ட தலைப்பிலிருக்கும் குறள்மொழிக்கேற்ப , அரியதொன்றை செய்து கொண்டிருக்கும் திரு. பொள்ளாச்சி நசன் அவர்களைப் பற்றியும் , அவரது தமிழம் இணையம் பற்றியும் அரிய நேரிட்டது. உங்களில் சிற்றிதழ் தொடர்புபட்ட பலரும் அவரை அறிந்திருக்கக் கூடும்…….இன்னும் பலர் அவரைப் பற்றி அறிந்திருக்காமலும் இருக்கக் கூடும்…..என்னைப் போல..! அதனால் ஒரு சின்ன அறிமுகம்… ( சூரியனுக்கே டார்ச்சா என்று திரு.நசன் அவர்கள் கோவித்துக்கொள்ளக் கூடாது…!!) பொள்ளாச்சி நசன் என்று தன் பெயரை வழங்கும் மணிப்பிள்ளை நடேசன் தமிழம் என்னும் வலையிதழின் ஆசிரியர். இவர் சிதம்பரத்தில், செப்டம்பர் 15, 1952 அன்று பிறந்தார். பொள்ளாச்ச...