Skip to main content

உறவுகளற்ற பொழுது.

உறவுகளற்ற பொழுது.


புழுதி படிந்த தார்ச்சாலைகள்..
தெருவில் ஹாரனுடனே கடக்கும் பேருந்துகள்..
கை காட்டாமல் திரும்பும் வாகன ஓட்டிகள்
நீர்ப்பிடிப்புக்காக சாலையில் இருக்கும் குழிகள்..
பக்கத்துவீட்டுக்காரன் போட்டிருக்கும் குப்பங்குழி
அன்றாடம் கடக்கும் சாலையோர சாக்கடைக்கால்வாய்...
அதிகாலையில் சாலையில் கழிக்கும் பெரிசுகள் , சிறிசுகள்...
ஆயிரம் பேரின் வியர்வை வாசம் நுகரும் டவுன்ஹால்....
இவையனைத்தையும் ஊரிலிருக்கும் அவஸ்தைகளாய்
ஒவ்வொரு முறையும் நினைத்துப்புலம்பும் அவனுக்கு,
ஊர்விட்டுக்கிளம்பும் அந்தப்பொழுதில் அடிவயிற்றில்
அமிலம் போல் கிளம்பும் வேதனையுணர்வும்....
உறவுகளேதுமற்ற பொழுதின் ரணமும் பலமடங்கு....





காரணம்…


நீ இங்கிருந்தபோதெல்லாம் விலகியிருக்க
காரணங்கள் கிடைத்தன எனக்கு..
ஒருநாள் , வாடிக்கையாளருடன் இரவு விருந்து.
மறுநாள் , மற்றொரு காரணம்……
இன்று….நீ இங்கில்லாத போதோ…….
உன்னுடன் அடிக்கடி தொலைபேசவாவது
காரணங்களைத் தேடுகிறேன்…


ஒருநொடி நிகழ்வுகள்.


அருவி ‘ஜோ’ வென விழுந்து என் முதுகைத் தாக்கியது.
பேயெனப் பெய்தது மழை…ஒதுங்க இடமின்றி நான்…!
காற்று வேரையும் விழுதையும் ஒருங்கே அசைத்தது….
இருட்டின் பயத்தை இன்னமும் கூட்டியது இடியும் மின்னலும்…
அன்றேறிய ரோலர் கோஸ்டரோ கீழ்நோக்கியே பயணித்தது..
இத்தனையும் நிகழ்ந்தது ஒருநொடியில்..
நீ போய் வருகிறேன் என்று சொன்ன அந்த ஒரே நொடியில்!.
                                                                                    

Comments

இத்தனையும் நிகழ்ந்தது ஒருநொடியில்..
நீ போய் வருகிறேன் என்று சொன்ன அந்த ஒரே நொடியில்!. அருமை
thank you madam...thanks for your comment.

Popular posts from this blog

யார் நமக்கு எதிரி?

ஈழப்போராட்டம் பல படிநிலைகளைக்கொண்டது, தந்தை செல்வாவில் ஆரம்பித்து, பல்வேறு போராளிக்குழுக்களில் தொடங்கி புலிகளால் வலுப்பெற்றது. மற்ற போராளிக்குழுக்களிலிருந்து புலிகளின் கைகளுக்கு முழுதும் மாறியதெப்படி?  இந்தியப்பெருந்தலைவர் இந்திராகாந்தி அவர்கள் எல்லா போராளிக்குழுக்களையும் ஆராய்ந்து புலிகள் தான் எல்லோரிலும் வலுவானவர்களாகவும் , சரியான சிந்தனைப்போக்குடையவர்களாகவும் இருப்பதாக தீர்மானித்தார்கள். அதனால் விடுதலைப்புலிகளுக்கு கூடுதல் ஆயுத பலம் மட்டுமல்ல , தார்மீக ஆதரவுத்தளமும்  கிடைத்தது.  தமிழகத்தில் எம் ஜி ஆர் அவர்களுமே விடுதலைப்புலிகளை நம்பிய அளவிற்கு மற்ற குழுக்களை நம்பவில்லை. ஏன் கலைஞர் கூட சகோதர யுத்தம் வேண்டாம் வேண்டாமென தலையில் அடித்துக்கொண்டாரே தவிர ஒரு சந்தர்ப்பத்தில் கூட புலிகளை இடித்துரைத்தாரில்லை. தனது இறுதிக்காலம்  வரை சகோதர யுத்தத்தினால் தான் புலிகள் வீழ்ந்தார்களென்பதை உறுதியாக நம்பினார். அதற்காக புலிகளை வெறுத்தாரா என்றால் ஒருகணமும் வெளிப்படையாக அவர் சொன்னதில்லை.  புலிகளால் அவர்களது மிதமிந்திய ஹீரோயிசத்தால் அதிகம் இழந்த அரசியல் கட்சி ஒன்று உலகில் இருக்கும...

செயற்கரிய செய்வர் பெரியர்….திரு.பொள்ளாச்சி நசன்.!

இந்தப்பதிவினை 2009 ல் எழுதினேன். படித்த நண்பர்கள் அனைவரும் , இது எமக்கு புதிய செய்தியே என்றார்கள்....நல்லசெய்தியினை நாலு பேருக்கு தெரியும்படி மீண்டும் உரக்கச்சொல்வதில் தவறில்லையே. அதனால் இந்த மீள்பதிவு..... நவம்பர் 2009 க்கும் 2012க்கும் இடைப்பட்ட காலவெளியில் 'தமிழம்' இணையம் தான் எத்துணை வளர்ந்திருக்கிறது? வாழ்த்துக்களும் ! , வணக்கங்களும்! த ற்செய லாக நேற்றிரவு வலையில் உலாவிக்கொண்டிருந்தேன்….மேற்கண்ட தலைப்பிலிருக்கும் குறள்மொழிக்கேற்ப , அரியதொன்றை செய்து கொண்டிருக்கும் திரு. பொள்ளாச்சி நசன் அவர்களைப் பற்றியும் , அவரது தமிழம் இணையம் பற்றியும் அரிய நேரிட்டது. உங்களில் சிற்றிதழ் தொடர்புபட்ட பலரும் அவரை அறிந்திருக்கக் கூடும்…….இன்னும் பலர் அவரைப் பற்றி அறிந்திருக்காமலும் இருக்கக் கூடும்…..என்னைப் போல..! அதனால் ஒரு சின்ன அறிமுகம்… ( சூரியனுக்கே டார்ச்சா என்று திரு.நசன் அவர்கள் கோவித்துக்கொள்ளக் கூடாது…!!) பொள்ளாச்சி நசன் என்று தன் பெயரை வழங்கும் மணிப்பிள்ளை நடேசன் தமிழம் என்னும் வலையிதழின் ஆசிரியர். இவர் சிதம்பரத்தில், செப்டம்பர் 15, 1952 அன்று பிறந்தார். பொள்ளாச்ச...

ஒற்றையாட்சி முறையா, பிரிவினைக்கான அடித்தளமா?

இந்தியா பன்முகத் தன்மை கொண்ட நாடு. வேற்றுமையில் ஒற்றுமையே நமது பலம்.. நீங்கள் விரும்பினாலோ விரும்பாவிட்டாலோ இந்தியாவில் பல்லினங்கள் உண்டு, பல மொழிகள் உண்டு , பல பழக்கவழக்கங்கள் உண்டு , இவற்றை ஏற்றுக்கொண்டு , சகிப்புத்தன்மையோடு எல்லோரும் ஓரினமாய் வாழ்வதே இந்தியா வாழ்வாங்கு வாழ்வதற்கான வழிமுறை. அதைவிடுத்து , ஒற்றையாட்சியை நிறுவுவோம் என்று சொல்லிக்கொண்டிருந்தால் இந்தியா எனும் நாடு இருக்குமா என்பதே கேள்விக்குறி!!! குறிப்பாக , வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் " நீட்" தேர்வு... எனக்கென்று என்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசும் , என்னால், என் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களெல்லாரும் சேர்ந்து நீட் எமக்கு வேண்டாம் என்று தீர்மானம் செய்கிற போது அதை வலிந்து எம் மேல் திணிக்க இந்திய நடுவண் அரசுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்ற கேள்வியெழுப்புவதில் தவறென்ன இருக்கிறது? பல பத்து சின்னஞ்சிறு நாடுகளாய் ஐரோப்பியாவில் பரவிக்கிடப்பதற்கு பாரிய காரணமென்ன? மொழி மற்றும் இனங்களால் அவர்கள் பிளவுபட்டிருக்கிறார்கள்... அதனால் தான் இந்தியாவின் பன்முகத் தன்மைக்கேற்ப மொழிவாரி மாநிலங்களை அமை...