Skip to main content

என்னைப் பாதித்த சென்னை.

"சென்னை" என்று சொன்னாலே என் மனதிற்குள் இனம் புரியாத ஒரு கலக்கம் எப்போதுமே இருப்பதுண்டு.ஏன்???

அதற்கான முதற்காரணம் , ரயில்வே ஸ்டேஷனில் இருந்து துவங்கி விடுகிறது. பொதுவாகவே , நான் கொஞ்சம் மென்மையானவன்...மென்மையானவன் என்று சொல்வதை விட கூச்ச  சுபாவத்துக்காரன் என்றும் வைத்துக்கொள்ளலாம். பொது இடத்தில் அதிர்ந்து கூட பேசுவதில் விருப்பமற்றவன். 

அப்படிப்பட்ட நான் , சென்னையின் கூலிகள் அதட்டும் அதட்டலுக்கு கொஞ்சம் அதிர்ந்துதான் போவேன்......எனது சென்னை அனுபவங்கள் சில உங்கள் பார்வைக்கு....

 ***

சில வருடங்களுக்கு முன் , சென்னைக்கு வந்திருந்தேன். எனது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்திற்கு சற்றேறக்குறைய 8 மணி நேர இடைவெளி இருந்தது....என்ன செய்வதென யோசித்து பின்பு "க்ளோக்" ரூமில் ( பொருட்கள் பாதுகாக்கும் அறை) எனது சூட்கேஸினை வைத்துப்பூட்டினேன்.. எனக்கு நன்றாக நினைவிருந்தது அப்போது அதற்கான பணத்தைக் கொடுத்ததும் , அவர் சில்லறையை திருப்பிக்கொடுத்ததும்..... 

பின்பு வெளியே போய்விட்டு , விமானநிலையத்திற்கு டாக்ஸி எடுத்துக்கொண்டு பொருட்களை எடுக்க வந்தேன்....எடுத்துக்கொடுத்து விட்டு ( அதே ஆள்...)  பணம் கேட்டார்............காலையில் கொடுத்தேனே என்று சொன்னதுதான் தாமதம்..

"யோவ்...என்ன ப்ராடு பண்றியா நீ....என்று ஏகவசனத்தில் ஆரம்பித்து பத்து நிமிடம் பேசி முடித்தார் அவர்....என்ன செய்வது ,  எதுவும் பேசாமல் கூனிக்குருகி "காசை" எடுத்துக்கொடுத்து வந்து விட்டேன் நான்...it was so embrassing situation you know. 

தராதரம் ஏதுமின்றி அவர் செய்த அந்தச் செயல் வெகுவாக என்னைப் பாதித்திருந்தது ..

***

அதே சென்னை ரயில்வே ஸ்டேஷனுக்கு  நேரெதிரே , சென்ட்ரல் லாட்ஜ் என்று ஒன்று இருக்கிறது.....ஒருமுறை கோவை திரும்பும் வழியில் புகைவண்டிக்கு நேரமிருந்த காரணத்தால் அந்த விடுதியில் தங்கி விட்டு பயணிக்கலாம் என்று நானும் , என் நண்பன் ரஞ்சித்தும் தீர்மானித்தோம்.

எனது சூட்கேஸ்  விமான ஊழியர்களால் சரிவர கையாளப்படாததால் ஹேண்டில் பிய்ந்திருந்தது....அது நல்ல கனமும் கூட...சாலையை கிராஸ் பண்ணி கொண்டு போவதில் இருந்த சிரமம் கருதி ஒரு ஆட்டோ பிடித்து ஸ்டேஷன்  வரை கொண்டு சென்று அங்கே ஒரு கூலியைப் பிடிக்கலாம் என்று தீர்மானித்து , ஒரு ஆட்டோவையும் பிடித்தோம்....இறக்கி விட்டுவிட்டு அவன் கேட்ட தொகை எவ்வளவு தெரியுமா? 100 ரூபாய்......என்னப்பா இவ்ளோ கேக்குறே என்று சொன்னதுக்கு ஆரம்பித்தான் பாருங்கள்......

என்ன ஒரு மனசாட்சியே இல்லாத மிருகமாய் அவன் இருக்க முடியும்?

***

அடுத்த கதை....சென்னை விமான நிலையம் அருகில் ஒரு ஹோட்டல் இருக்கிறது...குறுகிய பயண நேர இடைவெளிக்கு அங்கே சிலசமயம் தங்குவதுண்டு........பதிவு செய்யும் போது  சொன்னால் அவர்களே விமான நிலையத்தில் வந்து  பிக்-அப் செய்து கொள்வார்கள்... எனக்கும் , என் நண்பருக்குமாக ( வெளிநாட்டு நண்பர்..)  இரண்டு அறைகள் பதிவு செய்திருந்தோம்......

ஒரு பெரிய டெம்போ டிராவலரை ( உலகத்திலேயே நான் கண்ட மிகப் பெரிய விமான நிலைய பிக்-அப் வண்டி அதுதான் என்பது கிளைக்கதை....) .. கொண்டு வந்து பிக் அப்பினார்கள்... வண்டியை விட்டு இறங்கும் போது டிரைவருக்கு "டிப்ஸ்" கொடுக்க ஆசைப்பட்டார் என் வெளிநாட்டு நண்பர்.... 

500 ரூபாய் தாளொன்றை ( கணக்கு தெரியாமல் ) எடுத்து என்னிடம் காட்டி இவ்வளவு கொடுக்கலாமா என்று கேட்டார் அவர்....இல்லை "டிப்ஸ்"க்கு அது ரொம்ப அதிகம் என்று நான் விளக்கிவிட்டு என் பையில் இருந்து ஐம்பது ரூபாய் தாள் ஒன்றை எடுத்து வண்டி ஓட்டுனருக்கு கொடுத்தேன்....

அதற்கு அந்த டிரைவர் சொன்ன    வார்த்தை இன்னமும் என் காதில் நிற்கிறது..." யோவ்...சாவுகிராக்கி..கொடுக்கற மனுசன் கொடுத்தாலும் நீ வுட மாட்டேன்றே...உம் பிச்சைக் காசு 50 ரூபாயை நீயே வச்சுக்க " என்று தூக்கி  என் மூஞ்சியில் வீசினார்...

இன்னமும் அம்பது ருபாய்க்கு இந்தியாவில் மதிப்பிருப்பதாகவே அறிகிறேன்...மதிப்பில்லாமல் போது மனிதனுக்குத்தான்....

அதே பயணத்தின் அடுத்த  நாள் சென்னை எனக்கு மிக வித்தியாசமான அனுபவத்தை   அளித்தது...."பாரமவுண்ட் ஏர்வேஸ்"  என்னும் அற்புத  நிறுவனம் தான் அந்த அழகிய அனுபவத்திற்கான மூலம்....அன்பான உபசரிப்பு , விருந்தோம்பல்... பெட்டியைக் கூட  அவர்களே கையாண்ட விதம்...எல்லாமும்  சேர்த்து அற்புத சேவையை வழ்ங்கினார்கள்..

இதெல்லாம் சில சேம்பிள்கள்தான்... என்னைப் பாதித்த "சென்னை" கதை  இன்னமும் இருக்கிறது.....

இப்போதெல்லாம் , கொஞ்சம் விமானக்கட்டணம் அதிகமாகவே இருந்தாலும் கோவையிலிருந்தோ , பெங்களூரிலிருந்தோ கிளம்பி விடுகிறேன்...முடிந்த அளவிற்கு சென்னையை "ஸ்கிப்" பண்ணி விடுகிறேன்....


உலகெங்கும் பணத்திற்கான மதிப்பு அனுதினமும் குறைந்து கொண்டுதான் வருகிறது...அதினினும் வேகமாக மனிதனுக்கான மதிப்பு சென்னையில் குறைகிறது..குறைந்து கொண்டே வருகிறது. மாறாக உலகின் மற்ற பாகங்கள் பணத்தைவிட மனிதனைக் கொண்டாடுகின்றன.

அதை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தை விட தனிமனிதர்களான நமக்கு மட்டுமே உண்டு....!!

Comments

Anonymous said…
gud..... xperience......
நன்றி அனானி..

actually , it is a "bad" experience.
இந்த கேவலம் சென்னையின் வரலாற்றுடன் தொடர்புடையது.சென்னையில் வாழ்பவர்களில் ஆண்டாண்டு காலமாக அங்கேயே பரம்பரையாக இருந்து வாழ்பவர்கள் பெரும்பாலும் இந்த மனபோக்கு உள்ளவர்கள்தான்.இவர்களுக்கு கல்வி அறிவும்,பழக்க வழக்க குண நலன்களோ இருக்காது. கேவலமாக, பிறரை மதிக்காத, நம்பாத, நாகரீகம் அற்ற அடாவடித்தனமான போக்கு ,பிறரை எத்தி ஏமாற்றும் புத்தியும் ,மரியாதை குறைவான பேச்சு முறைகளும் சாதரணமாக காணப்படும்.ஒரு வேலை இது Xenophobia என்ற மன நோயின் பரம்பரை பழக்கம்.சீக்கிரம் மாறாது.
மீதம் உள்ள அணைவரும் தமிழ் நாட்டின் பிற ஏனைய பகுதிகளில் இருந்து வேலை நிமித்தம் 'பட்டண' வாசியாகிபோனவர்கள். இவர்கள் தங்கள் சொந்த மண்ணின் குண நலன்களோடு வாழ்பவர்கள். முதலில் சொல்லப்பட்ட வகைக்கு முடிலும் எதிமறையான பழக வழக்கங்களை உடையவர்கள். யாரிடமும் மரியாதையுடன் பழகுவார்கள்.
If you are in Rome,Do what Romes do - இந்த பாலிசியை புரிந்து கொண்டவர்கள் நாங்கள்.
ஆளை பார்த்தவுடன், 'இன்னாது' என்று ஆரம்பித்தாலே போதும். புரிந்துவிடும் அவர்களுக்கு 'நம் ஜம்பம் இவர்களிடம் செல்லாது ' என்று. வழிக்கு வருவார்கள். இது என் முப்பது வருட சென்னை அனுபவத்தில் ஒன்று. மற்றபடி சென்னை வெய்யில் தான் கொடுமையாக இருக்கும் தவிர இதுவும் ஒரு நல்ல ஊர்தான். நிறைய வட நாட்டவர்கள் சொல்லும் புகழ்ச்சி இது.
தேவன் said…
நல்ல பதிவு இது. உண்மையில் சென்னையில் மனிதம் குறைந்துதான் போனது. இதே ஹைதராபாத் போங்கள். அழகாக மீட்டர் போட்டு ஆட்டோ ஓட்டுவார்கள்.மிச்சக்காசு ஐம்பது பைசா ஆகவே இருந்தாலும் திருப்பிக்கொடுப்பார்கள். சென்னையில் அதை எல்லாம் நீங்கள் எதிர்பார்க்கவே முடியாது. மரியாதை கெட்ட ஊர் இது. அங்கேயே வசித்தாலும் அவலங்கலை ஒத்துக்கொள்வதில் தப்பில்லை!

ஆனால் , கொஞ்சம் அதட்டலாக பேசிப்பாருங்கள்.சத்தமில்லாமல் கொடுத்ததை வாங்கிக்கொண்டு நடையைக் கட்டுவார்கள். ஆனால் எல்லோரும் அப்படியெண்று சொல்லமுடியாது.
அன்பின் நண்பரே...



வலைச்சரத்தில் இன்றைய எனது பகிர்வில் உங்களது சிறுகதை குறித்து பகிர்ந்துள்ளேன்.

வலைச்சரம் பார்க்க : http://blogintamil.blogspot.com/

நன்றி.

நட்புடன்,
சே.குமார்.

http://vayalaan.blogspot.com
நண்பர் கக்கு மாணிக்கம்

நன்றி தங்கள் கருத்துக்கும் , வருகைக்கும்.

நண்பர் தேவன்


இந்த ஆட்டோ மீட்டர் கேவலம் சென்னையில் மட்டுமல்ல , கோவையிலும் உண்டு.. நன்றி வருகைக்கும் , கருத்துக்கும்.

நண்பர் சே.குமார்..

அன்பு நண்பருக்கு,

எனது சிறுகதையை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.

வாழ்த்துக்கள்... இங்கே நீங்கள் பின்னூட்டியிருக்கும் தோழர்களும் , நண்பர்களும் அனேகர் எமக்கு புதியவர்கள்.. அத்தகைய அறிமுகத்திற்கும் நன்றி.

நியாயமற்ற தாமதத்திற்கு பொருத்தருள்க.

தோழமையுடன்,
மதிபாலா
நல்ல பதிவு இது. உண்மையில் சென்னையில் மனிதம் குறைந்துதான் போனது.
Vee said…
Why blood? Saaaaaaaaame blood.

Popular posts from this blog

பூட்டிய இரும்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது!

சீமான்களின் சபையினிலேயே , கடிதம் எழுதி எழுதிக் களைத்துப்போனதோர் கிழட்டுச் சிங்கம்.....முன்னாலுக்கும் முன்னால் அவர் கொண்ட தமிழ்ப்பற்று.....இன்னாளில் அது தமது மக்கட்பற்றாய் மாறிப்போனதொரு சோகம். ஏதோவொரு புண்ணியத்தில், எவரோ செய்த வரலாற்றுத் தவறால் , கொள்கை , தொலைநோக்கு , மக்கட்பற்று இவை பற்றிய சிந்தையேதுமின்றி அரசியலில் விபத்தாய் விளைந்த கொடநாட்டு ஈழத்தாய்....தேர்தலுக்குத் தேர்தல் மட்டுமே தமிழர் பற்றியும் , தமிழர் அரசியல் பற்றியும் எழுதி வைத்துப் பேசும் செல்வி யவர்.........இன்னமும் அவர் சேலை பிடித்துத்திரியும் வீணர் கூட்டம்.! கூட்டணிக்கேற்றப்படி கொள்கையை மாற்றிக்கொள்ளும் மருத்துவப் படையாச்சி.........வீரமிகு வன்னியகுலத்திலே வந்துதித்த சந்தர்ப்பவாதச் சாக்கடை....சமரசமற்ற கொள்கை அரசியலை சந்தர்ப்பவாதச் சாக்கடைக்குள் தள்ளிய பெருமைக்குரிய மருத்துவர் தமிழ்க்குடிதாங்காத தமிழ்க்குடிதாங்கி! யாரை எதற்காக எதிர்த்து அரசியல் செய்யவேண்டுமே அவர்களோடே தம் தேவைக்குதந்த படி கூட்டு வைத்துக்கொண்டு ஈழத்திற்க்காய் எந்நேரமும் பாடுபடும் திரு.வைகோ அவர்கள்....அவரும் சிறை சென்றார்.

நண்பர் 'டோண்டு' ராகவன்...

உயிரோடு இருக்கும்வரை அறிக்கைகளால் அர்சித்து எதிர்ப்பரசியல் நடாத்தி செத்துபோன பிறகு ஆருயிர் நண்பர் என்று அழைத்துக்கொள்ளும் எல்லா அரசியல்வாதிகளையும் போலவே நான். எனக்கும் மறைந்த உயர்திரு 'டோண்டு' ராகவன் அவர்களுக்குமான பரிச்சயம் அவ்வளவொன்றும் அதிகமில்லைதான். பதிவுலகையும் , பர்ஸனல் லைப்பையும் பிரித்து வைத்துக்கொள்ளும் எண்ணமுடைய நான் , டோண்டு மட்டுமல்ல மற்றபல பதிவுலக நண்பர்களுடனும் கூட தனிப்பட்ட தொடர்புகளை வைத்துக்கொண்டதில்லை... இருந்தாலும் , அவ்வப்போது பதிவுலக பின்னூட்டங்களின்பாலே தொடர்ந்துகொண்டிருந்த தொடர்பு , எனது 'போலி டோண்டு' பற்றிய கட்டுரையொன்றிலேயே  தீவிர விவாதமாக மாறியது.. ஆயிரம் விமர்சனங்கள் அவர் மீதோ இல்லை அவர்தம் பிற்போக்கான கருத்துக்கள் மீதோ இருந்திருக்கலாம். கடினமாக ஓரிரு முறை பேசியிருக்கலாம்.. அத்தனையும் தாண்டி அவர் மிக நல்ல மனிதர் , கடும் உழைப்பாளி என்பதை அவரது பதிவுலகம் மூலமாக அறிந்தவனெனினும் உறுதியாக கூறவியலும்.. அத்தகைய நல்ல மனிதரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் , நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்... வருத்தங்கள

எஸ்.எஸ்.பொன்முடி - மனிதருள் மாணிக்கம்.

எஸ்.எஸ்.பொன்முடி , கொங்குச்சீமையிலே குறிப்பாக பல்லடம் , சூலூர் வட்டாரத்தில் தெரியாதவர்கள் சொற்பமே. எஸ்.எஸ். பொன்முடி அவர்கள் மட்டுமல்ல , அவர்களது குடும்பமே சூலூரில் பழம்பெருமை மிக்க குடும்பம். காலங்காலமாக அவர்களது குடும்பத்தினரே சூலூரின் அனைத்து தேர்தல்களிலும் வென்றதும் , வெல்வதும் வரலாறு. பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்தவராயினும் மாற்றுக்கட்சியினராலும் மதிக்கப்படும் சில மனிதர்களில் எஸ்.எஸ் பொன்முடியும் ஒருவர். அவருக்கும் , எனக்குமான பரிச்சயமொன்றும் அவ்வளவு அதிகமில்லைதான். அப்போது எனக்கு ஒரு பத்திலிருந்து , பதினைந்து வயதிருந்திருக்கலாம். கலங்கலில் கவுன்சிலர் தங்கவேலு சர்வ அதிகாரமும் பொருந்தியவராய் வலம் வந்துகொண்டிருந்தார். அவர் எஸ்.எஸ்.பொன்முடியின் வலக்கரம். ஊருக்கு மேற்கே ஜல்லிக்குழி என்ற மனிதர்கள் உபயோகப்படுத்த முடியாத , இயலாத பகுதி ஒன்றிருந்தது.....அப்போது கழகம் ஆட்சியிலிருந்தது + பொன்முடி எம்.எல்.ஏவாக இருந்தார். கட்சிக்காரர்கள் , குறிப்பாக ஒடுக்கப்பட்ட , மிக பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் கேட்டுக்கொண்டதற்காக , மிகுந்த பிரயாசைப்பட்டு தங்கவேல் மற்றும் எஸ்.எஸ்.பொன்முடி அவ