Skip to main content

ஹிட்லர் ரிட்டன்ஸ்!!!

நவீன ஹிட்லர்.



நக்கீரன் மீதான தாக்குதல் 1991 முதல் 1996 வரையான ஜெயலலிதாவின் கொடுங்கோலாட்சியை நியாபகப்படுத்துகிறது..இரண்டு நாட்கள் அப்பத்திரிக்கை அலுவலகத்தின் மீது தொடர்ந்து தாக்குதல் என்பதையும் , அக்கட்டிடத்துக்கான மின்சார மற்றும் குடிநீர் இணைப்பை துண்டித்தார்கள் என்பதையும் பார்க்கும் போது , ஜெயலலிதாவின் மமதை புரிகிறது...





ஜெயலலிதா என்னவோ யோக்கிய சீலர் எனவும் , சசிகலா தான் எல்லா தகிடுதத்தமும் செய்தார் என்றும் புழுகித் திரிந்த தினமலர் , தினமணி , விகடன் , குமுதம் போன்ற பத்திரிக்கைகளின் குட்டு வெளிப்பட்டது , "கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்ற பழமொழியை நினைவுபடுத்துகிறது.....

எங்கப்பா இங்க நெறையா பேரு  பத்திரிக்கை சுதந்திரம் பத்தி பக்கம் பக்கமா பேசுவீங்களே , கொஞ்சம் வந்து என்னான்னு கேளுங்களேன்...!!

Comments

Anonymous said…
poda lossu.
as usual you are coming and supporting corrupt DMK goonda
Anonymous said…
Nakeeran deserves this kind of treatment.
Anonymous said…
நக்கீரன் மீது தாக்குதல் நடத்தாமல் சட்டப்படியாக இந்த பிரச்சனையை அதிமுக அணுகியிருக்கலாம். ஆனால் நக்கீரனும் பத்திரிக்கை சுதந்திரம் என்ற பெயரில் யாரை பற்றியும் அவதூறாக எழுதக்கூடாது.
Anonymous Anonymous said...

poda lossu.
as usual you are coming and supporting corrupt DMK goonda //

இன்னாபா இது......இதுல டி.எம்.கே சப்போர்ட் எங்க வந்துச்சி?
Anonymous Anonymous said...

Nakeeran deserves this kind of treatment.//

so do tamilnadu peoples...deserves this worst Governance.
Anonymous Anonymous said...

நக்கீரன் மீது தாக்குதல் நடத்தாமல் சட்டப்படியாக இந்த பிரச்சனையை அதிமுக அணுகியிருக்கலாம். ஆனால் நக்கீரனும் பத்திரிக்கை சுதந்திரம் என்ற பெயரில் யாரை பற்றியும் அவதூறாக எழுதக்கூடாது.//

இது நக்கீரனுக்கு மட்டும் பொருந்துமா இல்லை ராசா மற்றும் கனிமொழியை இணைத்து பச்சைபச்சையாகப் பேசும் மற்ற ஊடகங்களுக்கும் பொருந்துமா? தவிர செயலலிதா பொதுக்குழுவில் சொன்னதாகத் தானே நக்கீரன் செய்தி வெளியிட்டிருக்கிறது? அப்படிச் சொல்லவில்லையென்றால் இன்றுவரை ஜெயலலிதா ஏன் மறுப்புத் தெரிவிக்கவில்லை.?

Popular posts from this blog

பூட்டிய இரும்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது!

சீமான்களின் சபையினிலேயே , கடிதம் எழுதி எழுதிக் களைத்துப்போனதோர் கிழட்டுச் சிங்கம்.....முன்னாலுக்கும் முன்னால் அவர் கொண்ட தமிழ்ப்பற்று.....இன்னாளில் அது தமது மக்கட்பற்றாய் மாறிப்போனதொரு சோகம். ஏதோவொரு புண்ணியத்தில், எவரோ செய்த வரலாற்றுத் தவறால் , கொள்கை , தொலைநோக்கு , மக்கட்பற்று இவை பற்றிய சிந்தையேதுமின்றி அரசியலில் விபத்தாய் விளைந்த கொடநாட்டு ஈழத்தாய்....தேர்தலுக்குத் தேர்தல் மட்டுமே தமிழர் பற்றியும் , தமிழர் அரசியல் பற்றியும் எழுதி வைத்துப் பேசும் செல்வி யவர்.........இன்னமும் அவர் சேலை பிடித்துத்திரியும் வீணர் கூட்டம்.! கூட்டணிக்கேற்றப்படி கொள்கையை மாற்றிக்கொள்ளும் மருத்துவப் படையாச்சி.........வீரமிகு வன்னியகுலத்திலே வந்துதித்த சந்தர்ப்பவாதச் சாக்கடை....சமரசமற்ற கொள்கை அரசியலை சந்தர்ப்பவாதச் சாக்கடைக்குள் தள்ளிய பெருமைக்குரிய மருத்துவர் தமிழ்க்குடிதாங்காத தமிழ்க்குடிதாங்கி! யாரை எதற்காக எதிர்த்து அரசியல் செய்யவேண்டுமே அவர்களோடே தம் தேவைக்குதந்த படி கூட்டு வைத்துக்கொண்டு ஈழத்திற்க்காய் எந்நேரமும் பாடுபடும் திரு.வைகோ அவர்கள்....அவரும் சிறை சென்றார்.

நண்பர் 'டோண்டு' ராகவன்...

உயிரோடு இருக்கும்வரை அறிக்கைகளால் அர்சித்து எதிர்ப்பரசியல் நடாத்தி செத்துபோன பிறகு ஆருயிர் நண்பர் என்று அழைத்துக்கொள்ளும் எல்லா அரசியல்வாதிகளையும் போலவே நான். எனக்கும் மறைந்த உயர்திரு 'டோண்டு' ராகவன் அவர்களுக்குமான பரிச்சயம் அவ்வளவொன்றும் அதிகமில்லைதான். பதிவுலகையும் , பர்ஸனல் லைப்பையும் பிரித்து வைத்துக்கொள்ளும் எண்ணமுடைய நான் , டோண்டு மட்டுமல்ல மற்றபல பதிவுலக நண்பர்களுடனும் கூட தனிப்பட்ட தொடர்புகளை வைத்துக்கொண்டதில்லை... இருந்தாலும் , அவ்வப்போது பதிவுலக பின்னூட்டங்களின்பாலே தொடர்ந்துகொண்டிருந்த தொடர்பு , எனது 'போலி டோண்டு' பற்றிய கட்டுரையொன்றிலேயே  தீவிர விவாதமாக மாறியது.. ஆயிரம் விமர்சனங்கள் அவர் மீதோ இல்லை அவர்தம் பிற்போக்கான கருத்துக்கள் மீதோ இருந்திருக்கலாம். கடினமாக ஓரிரு முறை பேசியிருக்கலாம்.. அத்தனையும் தாண்டி அவர் மிக நல்ல மனிதர் , கடும் உழைப்பாளி என்பதை அவரது பதிவுலகம் மூலமாக அறிந்தவனெனினும் உறுதியாக கூறவியலும்.. அத்தகைய நல்ல மனிதரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் , நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்... வருத்தங்கள

எஸ்.எஸ்.பொன்முடி - மனிதருள் மாணிக்கம்.

எஸ்.எஸ்.பொன்முடி , கொங்குச்சீமையிலே குறிப்பாக பல்லடம் , சூலூர் வட்டாரத்தில் தெரியாதவர்கள் சொற்பமே. எஸ்.எஸ். பொன்முடி அவர்கள் மட்டுமல்ல , அவர்களது குடும்பமே சூலூரில் பழம்பெருமை மிக்க குடும்பம். காலங்காலமாக அவர்களது குடும்பத்தினரே சூலூரின் அனைத்து தேர்தல்களிலும் வென்றதும் , வெல்வதும் வரலாறு. பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்தவராயினும் மாற்றுக்கட்சியினராலும் மதிக்கப்படும் சில மனிதர்களில் எஸ்.எஸ் பொன்முடியும் ஒருவர். அவருக்கும் , எனக்குமான பரிச்சயமொன்றும் அவ்வளவு அதிகமில்லைதான். அப்போது எனக்கு ஒரு பத்திலிருந்து , பதினைந்து வயதிருந்திருக்கலாம். கலங்கலில் கவுன்சிலர் தங்கவேலு சர்வ அதிகாரமும் பொருந்தியவராய் வலம் வந்துகொண்டிருந்தார். அவர் எஸ்.எஸ்.பொன்முடியின் வலக்கரம். ஊருக்கு மேற்கே ஜல்லிக்குழி என்ற மனிதர்கள் உபயோகப்படுத்த முடியாத , இயலாத பகுதி ஒன்றிருந்தது.....அப்போது கழகம் ஆட்சியிலிருந்தது + பொன்முடி எம்.எல்.ஏவாக இருந்தார். கட்சிக்காரர்கள் , குறிப்பாக ஒடுக்கப்பட்ட , மிக பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் கேட்டுக்கொண்டதற்காக , மிகுந்த பிரயாசைப்பட்டு தங்கவேல் மற்றும் எஸ்.எஸ்.பொன்முடி அவ