Skip to main content

"ஜெ" பிரதமரானால்...!!

ஆனாலும் இந்த "சோ" மா(தி)ரி பேச யாருக்கும் வராது... ஒரு விழா அதில் மாங்காய்களை தனக்குத் தோதான முறையில் அடித்துக்கொள்ளப் பார்த்திருக்கிறார்....

முதலில் , பாரதிய ஜனதா கட்சியில் பிரதமர் வேட்பாளராக இருக்கும் இரு போட்டியாளர்களை கூப்பிட்டு வைத்தார். தனக்கு "மோடி" தான் பிரதமர் சாய்ஸ் என்று சொல்லுவதற்கு வாஜ்பாயையும் துணைக்கு அழைத்தார்.......வாஜ்பாயை முன்மொழிந்ததே அத்வானி தான் என்றும் , அதுபோலவே "மோடி" யையும் அத்வானி முன்மொழிய வேண்டுமென்கிறார்...

தமிழகத்தில் தனக்கான ஓட்டுவங்கியைப் பெறுக்க சில பாராளுமனற் , சட்டமன்ற தொகுதிகள் பாஜகவுக்குத் தேவை... அதனால் , அதிமுகவுடனோ , திமுகவுடனோ ஆன கூட்டணி அக்கட்சிக்கு மிகமிக அவசியம் என்பதைவிட அவசரம்...

அதனால் தான் , வாஜ்பாயை பதிமூன்று மாதங்கள் படுத்திய 'ஜெ'வுடன் கூட்டணிக்குத் தவிக்கிறார்கள் அத்வானியும் , மோடியும் , சோவும்.....எப்படி இழுப்பது? ஏற்கெனவே விஜயகாந்த்தை தேவையில்லாமல் தூக்கி விட்டுவிட்டோமோ என்ற கடுப்பில் இருக்கும் அம்மா "பாஜகவை தலையில் தூக்கி சுமக்க ஒத்துக்கொள்வாரா? அதுவும் " அம்மா" தான் எல்லாமே என்ற அபார நம்பிக்கையில் மக்கள் இருக்கும் போது? 

மாட்டார்தானே? 

அங்குதான் "சோ" மா(தி)ரி ஆட்களின் தில்லாலங்கடித்தனம் தெரிகிறது....


பாஜக ஆட்சிக்கு வருவதற்கு புரட்சித் தலைவி அவர்களின் ஆசியும் தேவை என்பதில் சோ வும் பாஜகவும் தெளிவாக இருக்கிறார்கள்....

"சும்மா வருவாளா சுகுமாரி" என்ற முதுமொழிக்கு ஏற்ப , "ஜெ" வுக்கு பிரதமர் பதவி என்ற தூண்டிலைப் போட்டு அதிமுகவை பாஜக பக்கம் இழுக்கப் பார்க்கிறார் "சோ" , கடந்த 2001 பாராளுமன்றத் தேர்தலில் "அதிமுக" பாஜகவையும் கூட்டணி சேர்த்துக்கொண்டு சில பாராளுமனறத் தொகுதிகளில் போட்டியிட்டிருக்காவிட்டால் இன்றைக்கும் தமிழக மக்கள் பாரதிய ஜனதா என்றால் எந்தக்கடையில் கிடைக்கும் பலகாரம் என்றே கேட்டிருப்பார்கள்....

தனது கட்சியின் " அத்வானி" பிரதமராவதை விரும்பாத மோடியோ , மோடி பிரதமராவதை விரும்பாத அத்வானியோ "ஜெயலலிதா" பிரதமராவதை விரும்புவார்களா என்ன? அத்தனையும் நாடகம்....இதை "ஜெ" நம்புவாரா? நம்புகிறார் என்பதைத்தான் அவரது சமீபத்திய தேசிய அரசியல் பற்றிய பேச்சுக்கள் காட்டுகின்றன.....

ஆக , சற்றேறக்குறைய "ஜெ" - பாஜக கூட்டு முடிவாகி விட்டதென்றே சொல்லலாம்...

ஒரு வேளை " ஜெ " பிரதமாரானால்? 

இப்போதைக்கு தமிழ்நாட்டு அறிவுஜீவிகள் ( சோ மா(தி)ரி சூப்பர் டூப்பர் அறிவுஜீவிகள் தவிர்த்து) மட்டுமே சிரிக்கும் ஆட்சியின் லட்சணம் அகில இந்தியாவுக்கும் தெரியுமோ?

"அத்வானி" எந்தத் துறைக்கு அமைச்சராவார்?  முதல் மாசமா ரெண்டாவது மாசமா என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது....

நல்லவேளை இந்த முறை ஜனாதிபதியாக பிரதிபா பாட்டில் தான் இருக்கிறார்....அடுத்த முறை ஒருவேளை ஆண் ஜனாதிபதி வந்தால்????

நினைக்கவே பயமாய் இருக்கிறது.....ஒரு வேளை அவர் அடுத்த "சென்னா ரெட்டியாக" கூட இருக்கலாம்....

திமுக உறுப்பினர்களும் இருப்பதால் , பாராளுமன்றம் சரியில்லையென்று செங்கோட்டைக்கு மாற்றுவது நடக்கும் வாய்ப்பிருக்கிறது.......அகில உலகத்திலும் அதி சிறந்த மருத்துவமனையொன்று அங்கே கட்டப்படுவதற்கான பிரகாசமான வாய்ப்புத் தெரிகிறது....

தலைநகர் டெல்லியில் இருக்கும் ரவுடிகளும் , திருடர்களும் பாகிஸ்தானுக்கு ஓடிப்போவது நடந்தாலும் நடக்கும்....பாகிஸ்தான் அரசு இந்தியா ரவுடிகளை தம் நாட்டின் மீது ஏவி விடுகிறது என்று ஐ.நாவின் புகாரளிப்பதான கனவொன்று வருகிறது...

டெல்லியில் இருக்கும் நூலகங்களனைத்தும் குழந்தைகள் நல மருத்துவமனையாக வாய்ப்பிருக்கிறது.....

மாநில கவர்னர்கள் மாதமொருமுறை மாற்றப்படும் வாய்ப்பு அதிகம்....

மத்திய அமைச்சர்கள் மாற்றுத் துறை என்றொரு புது அமைச்சகம் செயல்பட வாய்ப்பதிகம்...அத்துறை பதினைந்து நாளுக்கொருமுறை புது அமைச்சர் செயல்படுவார் என்ற கொசுரு அறிவிப்பை நீங்கள் கணக்கிலெடுக்கக்கூடாது..

அதிகாரிகள் நலத்துறை இனிமேல் அதிகாரிகள் மாற்றுத்துறை என்ற பெயரில் செயல்படும் என்ற அறிவிப்பு வந்தாலும் வரலாம்.

டெல்லியில் இருந்து சென்னைக்கு மாற்றப்பட்ட அதிகாரி தனது பணி மாற்ற உத்தரவையடுத்து சென்னைக்கு ரயிலில் செல்லக்கூடாது என்ற உத்தரவு வரலாம்....ஏனென்றால் , சென்னையிலிருந்து மதுரைக்கு மாற்றப்பட்ட அதிகாரி மதுரை சென்று சேருமுன் சேலத்துக்கு மாற்றப்பட்ட நிலை இந்திய அளவில் வரக்கூடாது என்ற முன்யோசனையாக இருக்கலாம்.....

ராம்தேவாவது , ஹசாரே வாவது அத்துணை பேரையும் நில அபகரிப்புச் சட்டத்தில் தூக்கி உள்ளே போடுங்க என்ற உத்தரவு வரலாம்....மன்மோகன் சிங் அவர்களைக் கூட அச்சடடத்திலேயே கைது பண்ணலாம்....!!!

கொஞ்சம் குண்டா இருக்கிறார் என்பதற்காக சரத் பவாரை குண்டர் சட்டத்தில் கைது பண்ணச் சொல்லலாம்......

என்.டி.டி.வி அலுவலகம் " அம்மாவைச் சும்மா என்று சொன்ன குற்றத்திற்காக ஆண்டுக்கணக்கில் முறை வைத்து அதிமுகவினர் தாக்குதலில் ஈடுபடலாம்..

பெங்களூர் சொத்துக்குவிப்பு வழக்கில் , திடீர் திருப்பமாக பேராசிரியர் அன்பழகன் அவர்கள் " பிரதமர் " ஜெ கட்டுப்பாட்டில் இருக்கும் நீதித்துறையால் நியாயம் கிடைக்காது " அதனால் சர்வதேச கோர்ட் தான் விசாரணை செய்யவேண்டும் என்று முறையிடலாம்....!!!

இந்தியா முழுக்க கவர்ன்மெண்ட்டே டாஸ்மாக் நடத்தும் , அத்துணை சரக்குகளையும் "மிடாஸ்' ஆலையிலிருந்து தான் கொள்முதல் செய்யவேண்டும் என்று ஒரு வாய்மொழி உத்தரவு வரலாம்...!!

முத்தாய்ப்பாக சம்மரில் டெல்லி சூடு அதிகமாக இருக்கிற நேரத்தில் தலைநகரை " கொடநாட்டுக்கு" மாற்றி விடுவதாக அறிவிப்பு வந்தாலும் வரலாம்...

"துக்ளக்" சோ மாதிரி ஆட்களின் ஆலோசனையில் நடக்கும் ஆட்சியில் "துக்ளக்" நடவடிக்கைகள் இல்லாமல் இருந்தால் தானே ஆச்சரியம்...

Comments

Robin said…
சோ அவங்க ஆளு பிரதமர் ஆகணும்னு ஆசைப்படுகிறார் :)
Anonymous said…
Hahahaha


I can't stop the laugh when I'm Reading It.
TBR. JOSPEH said…
சோ ஒரு பிறவி நகைச்சுவை நடிகர். ஆகவே அவர் கூறியதை படித்துவிட்டு வாய் விட்டு சிரித்துவிட்டு போய்விட வேண்டும்.
ஆக சோமாரி,கேப்மாரியெல்லாம் ஒன்னா
சேர்நது ஏமாளிகளுக்கு மூனு பட்டை நாமம் போட முடிவாயிருச்சு? ம்..ம்
மதிபாலா said…
Robin said...
சோ அவங்க ஆளு பிரதமர் ஆகணும்னு ஆசைப்படுகிறார் ://

வாங்க மிஸ்டர் ராபின்......எப்படி இருக்கீங்க?

எப்பவுமே , அவுங்க ஆளுங்கதானே எல்லாப்பதவியிலயும் இருக்காங்க...
மதிபாலா said…
Anonymous said...
Hahahaha


I can't stop the laugh when I'm Reading It.//

ஹஹஹ....அம்மா பிரதமரானால் உலகமே சிரிக்கும்!... அதுனால நல்லா சிரிச்சி வையிங்க பாஸ்
மதிபாலா said…
Tbr Joseph said...
சோ ஒரு பிறவி நகைச்சுவை நடிகர். ஆகவே அவர் கூறியதை படித்துவிட்டு வாய் விட்டு சிரித்துவிட்டு போய்விட வேண்டும்./

அதெப்படி வுடுறது தல?
அவர் நம்ம , உங்க , எங்க எல்லார் வாழ்க்கையிலயும் அல்லவா வெளையாடுறார்?
மதிபாலா said…
வலிபோக்கன் said...
ஆக சோமாரி,கேப்மாரியெல்லாம் ஒன்னா
சேர்நது ஏமாளிகளுக்கு மூனு பட்டை நாமம் போட முடிவாயிருச்சு? ம்..ம்

January 17, 2012 2:32 AM//

இனிமேல புதுசா போடணுமா என்ன தலைவரே? அதான் எப்பவுமே போடுறாங்களே...!
மதிபாலா said…
வலிபோக்கன் said...
ஆக சோமாரி,கேப்மாரியெல்லாம் ஒன்னா
சேர்நது ஏமாளிகளுக்கு மூனு பட்டை நாமம் போட முடிவாயிருச்சு? ம்..ம்

January 17, 2012 2:32 AM//

இனிமேல புதுசா போடணுமா என்ன தலைவரே? அதான் எப்பவுமே போடுறாங்களே...!
Vijay Periasamy said…
ரொம்ப அருமை !
நல்ல நகைச்சுவையான கற்பனை !

இணையத் தமிழன்,
http://inaya-tamilan.blogspot.com
Nandri Thiru Vijay Periyasamy

Popular posts from this blog

இதற்குத்தானா ஆசைப்பட்டீர்கள் திரு.சீமான்?

இன்று சீமான் அதிமுக கூட்டணியில் இருந்து பிரச்சாரம் பண்ணப்போவதாக ஒரு செய்தி வந்திருக்கிறது..ஏற்கெனவே ஒருமுறை செய்த பாரிய தவறொன்றை மற்றொருமுறை செய்யமாட்டார் என்றே நினைத்திருந்தேன்....இது உண்மையான செய்தியாய் இருந்தால் பேரிடிதான்..!!!! மாறாக உணர்வுள்ள இளைஞர்கள் தம் பின்னால் பேரெழுச்சியுடன் நாம் தமிழராய் எழும்போது.....அதைக்கொண்டுபோய் போய்ஸ்தோட்டத்திற்கு தாரைவார்த்துக்கொடுப்பதென்பது கனவிலும் சகிக்க முடியாத செயல்....!!  கருணாநிதிக்கு ஈழ அழிவிற்கு எவ்வளவுக்கெவ்வளவு பங்கிருக்கிறதோ அதே அளவிற்கு  சக பங்குள்ளவரே செயலலிதா... செயலலிதா என்ன செய்திருக்க வேண்டும்? என்ன செய்தார்? 1.எதிர்கட்சியாக மாபெரும் போராட்டங்களை நடாத்தியிருக்க வேண்டும்...அழிவது நம்சொந்தங்களே என்று தெரிந்திருந்தும் வாய்மூடி மெளனியாகவே இருந்தார். 2. கருணாநிதியின் எதிர்ப்பரசியலைக் கைவிட்டு விட்டு முத்துக்குமார் முதற்கொண்டு  தமிழக இளைஞர்களின் எழுச்சியை உபயோகித்து இந்திய அரசை ஸ்தம்பிக்க முயற்சித்திருக்க வேண்டும்....அதைவிடுத்து கொடநாட்டில் பள்ளி கொண்டிருந்தார்... 3.  சிறிதேனும் உண்மையான அக்கறை அவருக்கு தமிழர்பா...

ஒற்றையாட்சி முறையா, பிரிவினைக்கான அடித்தளமா?

இந்தியா பன்முகத் தன்மை கொண்ட நாடு. வேற்றுமையில் ஒற்றுமையே நமது பலம்.. நீங்கள் விரும்பினாலோ விரும்பாவிட்டாலோ இந்தியாவில் பல்லினங்கள் உண்டு, பல மொழிகள் உண்டு , பல பழக்கவழக்கங்கள் உண்டு , இவற்றை ஏற்றுக்கொண்டு , சகிப்புத்தன்மையோடு எல்லோரும் ஓரினமாய் வாழ்வதே இந்தியா வாழ்வாங்கு வாழ்வதற்கான வழிமுறை. அதைவிடுத்து , ஒற்றையாட்சியை நிறுவுவோம் என்று சொல்லிக்கொண்டிருந்தால் இந்தியா எனும் நாடு இருக்குமா என்பதே கேள்விக்குறி!!! குறிப்பாக , வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் " நீட்" தேர்வு... எனக்கென்று என்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசும் , என்னால், என் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களெல்லாரும் சேர்ந்து நீட் எமக்கு வேண்டாம் என்று தீர்மானம் செய்கிற போது அதை வலிந்து எம் மேல் திணிக்க இந்திய நடுவண் அரசுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்ற கேள்வியெழுப்புவதில் தவறென்ன இருக்கிறது? பல பத்து சின்னஞ்சிறு நாடுகளாய் ஐரோப்பியாவில் பரவிக்கிடப்பதற்கு பாரிய காரணமென்ன? மொழி மற்றும் இனங்களால் அவர்கள் பிளவுபட்டிருக்கிறார்கள்... அதனால் தான் இந்தியாவின் பன்முகத் தன்மைக்கேற்ப மொழிவாரி மாநிலங்களை அமை...

பூட்டிய இரும்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது!

சீமான்களின் சபையினிலேயே , கடிதம் எழுதி எழுதிக் களைத்துப்போனதோர் கிழட்டுச் சிங்கம்.....முன்னாலுக்கும் முன்னால் அவர் கொண்ட தமிழ்ப்பற்று.....இன்னாளில் அது தமது மக்கட்பற்றாய் மாறிப்போனதொரு சோகம். ஏதோவொரு புண்ணியத்தில், எவரோ செய்த வரலாற்றுத் தவறால் , கொள்கை , தொலைநோக்கு , மக்கட்பற்று இவை பற்றிய சிந்தையேதுமின்றி அரசியலில் விபத்தாய் விளைந்த கொடநாட்டு ஈழத்தாய்....தேர்தலுக்குத் தேர்தல் மட்டுமே தமிழர் பற்றியும் , தமிழர் அரசியல் பற்றியும் எழுதி வைத்துப் பேசும் செல்வி யவர்.........இன்னமும் அவர் சேலை பிடித்துத்திரியும் வீணர் கூட்டம்.! கூட்டணிக்கேற்றப்படி கொள்கையை மாற்றிக்கொள்ளும் மருத்துவப் படையாச்சி.........வீரமிகு வன்னியகுலத்திலே வந்துதித்த சந்தர்ப்பவாதச் சாக்கடை....சமரசமற்ற கொள்கை அரசியலை சந்தர்ப்பவாதச் சாக்கடைக்குள் தள்ளிய பெருமைக்குரிய மருத்துவர் தமிழ்க்குடிதாங்காத தமிழ்க்குடிதாங்கி! யாரை எதற்காக எதிர்த்து அரசியல் செய்யவேண்டுமே அவர்களோடே தம் தேவைக்குதந்த படி கூட்டு வைத்துக்கொண்டு ஈழத்திற்க்காய் எந்நேரமும் பாடுபடும் திரு.வைகோ அவர்கள்....அவரும் சிறை சென்றார்....