Skip to main content

தமிழகத்தின் தலையில் இடிவிழ...!

இதை சாபமாகச் சொல்லவில்லை. தமிழகத்துக்கு நேரிட்ட சாபக்கேட்டைச் சுட்டவே சொல்கிறேன். 


உலகம் முழுமையும்  இன்றைக்குப் பேசப்படுகிற ஒருவிடயமாக விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்திய ரகசியங்கள் இருக்கின்றன. உலகளாவிய முறையில் ஊருக்கு ஒன்றெனவும் , உள்ளுக்கு வேறெனவும் அமெரிக்கா ஆடிய தகிடுதத்தங்களைப் போட்டுக்கொடுத்து புண்ணியம் தேடிக்கொண்டிருக்கிறார் அஸ்ஸாங்கே.


அத்தகைய விக்கிலீக்ஸ் கூட சிறிலங்காவில் நிகழ்ந்த பாரிய மனிதப்படுகொலை பற்றி விரிவான கட்டுரை ( அது எழுதிய இரு கட்டுரைகளில் ஒன்று சிறிலங்கா பற்றியது , பிரிதொன்று விஸா, மாஸ்டர்கார்டு பற்றியது. )


பிரித்தானியத் தொலைக்காட்சி நிறுவனமான சேனல் - 4 , இதுகாறும் வெளீவந்த போர்க்குற்ற காணொலிகளை ஆராய்ந்து சர்வ நிச்சயமாக போர்க்குற்ற விசாரணையொன்று இலங்கையில் தேவை என்று தொடர்ந்து வலியுறுத்துகிறது.......... 

அதன் ஆய்வுகள் கீழ்க்கண்ட இணைப்புக்களில்.....



அமெரிக்காவிலிருந்து வெளிவரும் வாஷிங்டன் டைம்ஸ் , நியுயார்க் போஸ்ட் என்ற பற்பல செய்தி இதழ்கள் , போர்க்குற்ற சந்தேக நபரொருவர் , டிப்ளமேட்டிக் இம்யூனிட்டி முலம் ஐக்கிய நாடுகள் சபையில் நுழைந்திருக்கிறார் என்று தொடர்ந்து குரலலெழுப்புகின்றன. இலங்கை இராணுவத்தின் தமிழனப்படுகொலையின் சூத்திரதாரியாக விளங்கிய சவேந்திர  சில்வா தான் அவர்.

அச்செய்திகளின் தமிழாக்கம் இங்கே.

உலகளாவிய போர்க்குற்ற நீதிமன்றம் இரட்டைக்குடியுரிமையுள்ள "பாலித கோகன்னா போன்றவர்களை தண்டிக்க அல்லது வழக்குத்தொடர முழு வாய்ப்புள்ளது என்ற செய்தி ஆய்வை தமிழர்க்கு நேரடித்தொடர்பில்லாத 'இன்னர் சிட்டி பிரஸ்' போன்ற இணைய செய்தித்தளங்கள் தொடர்ந்து வெளியிட்டும் , ஐக்கிய நாடுகள் சபையினை கேள்விக்கணைகளால் துளைத்தெடுக்கின்றன. 

அந்த ஆய்வின் 

அவசரகாலச் சட்ட அடக்குமுறையில் இருந்தாலும் , முடிந்த வரை இலைமறை காயாய் இலங்கை அரசை இடித்துரைக்க முயலும் வலம்புரி போன்ற யாழ்ப்பாண தமிழப்பத்திரிக்கைகளும் இருக்கத்தான் செய்கின்றன. 

அது போலவே , உலகளாவிய முறையில் பல்வேறு சர்வதேச ஊடகங்களும் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்தான சர்வதேச விசாரணை தேவை என்ற ஒருமித்த குரலெழுப்புகின்றன.

ஒரே இரவில் ஐம்பதனாயிரத்துக்கும் மேற்ற புலம்பெயர் தமிழ்மக்கள் லண்டனில் கூடி மகிந்தாவிற்கு வாழ்நாள் முழுதிலும் மறக்கமுடியாத அவமானத்தைத் தந்திருக்கிறார்கள்..

ஆனால் , தமிழகமும் , தமிழகத்துத் தமிழர்களும் என்ன செய்கிறார்கள்???

தமிழகத்து அரசுதான் என்ன செய்கிறது?  அதன் எதிர்க்கட்சிதான் என்ன செய்கிறது? இன்னபல உதிரிக்கட்சிகளூம் தான் என்ன செய்கின்றன? தான் சேர்ந்த இனத்தில் 40000 பேர்கள் அழிக்கப்பட்டபோது கூட பேசாத இவர்கள் என்ன எழவைத்தான் சாதிக்கப்போகிறார்கள்???

அவர்கள் தான் அப்படியென்றால், அவர்களின் நேர்மையின்மையைச் சுட்டிக்காட்ட வேண்டிய தமிழகத்தின் பெரும்பாலான ஊடகங்கள் கூட இது போன்ற செய்திகளை இருட்டடிப்பு செய்யும் கொடுமையைத்தான் என்னென்பது?

குறைந்தப்பட்ச செய்திகளையாவது காட்டும் தார்மீக நெறியினை தமிழகத்து ஊடகங்கள் மறந்தது தான் என்ன கொடுமை???

இப்போ சொல்லுங்கள் , ஈழத்து மூதாட்டியொருவர் ஒருவேளை நம்மைப் பார்த்து "தமிழகத்தின் தலையில் இடிவிழ" என்று சபித்தால் அது தவறா என்று???

Comments

Unknown said…
இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் சாத்தியமே இல்லாத ஈழம் என்ற மாயைக்கு நாம் (இந்தியா) ஒப்பாரி வைத்துக்கொண்டிருப்பது..

அல்லது வைகோ, விடுதலை பூனை குருமா, சீமான் போன்று விடுதலை புலிகளிடம் அடித்த காசுக்கும் தங்க கட்டிகளுக்கும் கூவிக்கொண்டிருக்க முடியுமா.
Anonymous said…
அட குடக்கு, அவுரு இந்தியாவச் சொல்லலீங்க , தமிழர்களை சொல்லுருறாரு!
Anonymous said…
அட குடக்கு , கொன்னவனே (இந்தியா) எதுக்கு ஒப்பாரி வைக்கணும்? ஆதாரம் வேணுமா...கேளுங்க சொல்றேன்
Bibiliobibuli said…
நல்லதோர் தொகுப்பு மதிபாலா. நான் நினைத்திருந்தேன் இதை தொகுத்துப் போடவேண்டுமென்று. நன்றி உங்களுக்கு.

போர்க்குற்றங்களுக்காக விசாரிக்கப்பட வேண்டுமென்ற ராணுவ தளபதிகள் ஒவ்வொருவராக மெல்ல, மெல்ல ஆதரங்களுடன் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள். தற்சமயம் 53 வது டிவிசன் கட்டளைத்தளபதி தான் இசைப்பிரியாவின் விடயத்தில் சனல் 4 இடம் வசமாக மாட்டிக்கொண்டிருக்கிறார். பார்க்கலாம் இன்னும் எவ்வளவு காலம் எடுக்கும் இவர்களை ICC யில் நிறுத்துவதற்கு!!!

Channel 4 - Jonathan Miller, Inner City Press- Mathew Russel Lee இவர்களுக்கு இலங்கை விடயத்திலுள்ள உள்ள அக்கறை ஏனோ கொஞ்சம் அதிசயிக்க வைக்கிறது. அமெரிக்க பத்திரிகைகளிடம் முன்னைக்கு இப்போ ஈழத்தமிழர் விடயத்தில் நல்லதோர் மாற்றம் தெரிகிறது.

தமிழகம் பற்றி எந்த கருத்தும் சொல்லத்தோன்றவில்லை.
வாங்க தம்பி, நல்லா இருக்கீங்களா?
உங்கள் தளத்தை அறிமுகப்படுத்திய ரதிக்கும் உங்கள் அக்கறைக்கும் நனறி.

Popular posts from this blog

இதற்குத்தானா ஆசைப்பட்டீர்கள் திரு.சீமான்?

இன்று சீமான் அதிமுக கூட்டணியில் இருந்து பிரச்சாரம் பண்ணப்போவதாக ஒரு செய்தி வந்திருக்கிறது..ஏற்கெனவே ஒருமுறை செய்த பாரிய தவறொன்றை மற்றொருமுறை செய்யமாட்டார் என்றே நினைத்திருந்தேன்....இது உண்மையான செய்தியாய் இருந்தால் பேரிடிதான்..!!!! மாறாக உணர்வுள்ள இளைஞர்கள் தம் பின்னால் பேரெழுச்சியுடன் நாம் தமிழராய் எழும்போது.....அதைக்கொண்டுபோய் போய்ஸ்தோட்டத்திற்கு தாரைவார்த்துக்கொடுப்பதென்பது கனவிலும் சகிக்க முடியாத செயல்....!!  கருணாநிதிக்கு ஈழ அழிவிற்கு எவ்வளவுக்கெவ்வளவு பங்கிருக்கிறதோ அதே அளவிற்கு  சக பங்குள்ளவரே செயலலிதா... செயலலிதா என்ன செய்திருக்க வேண்டும்? என்ன செய்தார்? 1.எதிர்கட்சியாக மாபெரும் போராட்டங்களை நடாத்தியிருக்க வேண்டும்...அழிவது நம்சொந்தங்களே என்று தெரிந்திருந்தும் வாய்மூடி மெளனியாகவே இருந்தார். 2. கருணாநிதியின் எதிர்ப்பரசியலைக் கைவிட்டு விட்டு முத்துக்குமார் முதற்கொண்டு  தமிழக இளைஞர்களின் எழுச்சியை உபயோகித்து இந்திய அரசை ஸ்தம்பிக்க முயற்சித்திருக்க வேண்டும்....அதைவிடுத்து கொடநாட்டில் பள்ளி கொண்டிருந்தார்... 3.  சிறிதேனும் உண்மையான அக்கறை அவருக்கு தமிழர்பா...

யார் நமக்கு எதிரி?

ஈழப்போராட்டம் பல படிநிலைகளைக்கொண்டது, தந்தை செல்வாவில் ஆரம்பித்து, பல்வேறு போராளிக்குழுக்களில் தொடங்கி புலிகளால் வலுப்பெற்றது. மற்ற போராளிக்குழுக்களிலிருந்து புலிகளின் கைகளுக்கு முழுதும் மாறியதெப்படி?  இந்தியப்பெருந்தலைவர் இந்திராகாந்தி அவர்கள் எல்லா போராளிக்குழுக்களையும் ஆராய்ந்து புலிகள் தான் எல்லோரிலும் வலுவானவர்களாகவும் , சரியான சிந்தனைப்போக்குடையவர்களாகவும் இருப்பதாக தீர்மானித்தார்கள். அதனால் விடுதலைப்புலிகளுக்கு கூடுதல் ஆயுத பலம் மட்டுமல்ல , தார்மீக ஆதரவுத்தளமும்  கிடைத்தது.  தமிழகத்தில் எம் ஜி ஆர் அவர்களுமே விடுதலைப்புலிகளை நம்பிய அளவிற்கு மற்ற குழுக்களை நம்பவில்லை. ஏன் கலைஞர் கூட சகோதர யுத்தம் வேண்டாம் வேண்டாமென தலையில் அடித்துக்கொண்டாரே தவிர ஒரு சந்தர்ப்பத்தில் கூட புலிகளை இடித்துரைத்தாரில்லை. தனது இறுதிக்காலம்  வரை சகோதர யுத்தத்தினால் தான் புலிகள் வீழ்ந்தார்களென்பதை உறுதியாக நம்பினார். அதற்காக புலிகளை வெறுத்தாரா என்றால் ஒருகணமும் வெளிப்படையாக அவர் சொன்னதில்லை.  புலிகளால் அவர்களது மிதமிந்திய ஹீரோயிசத்தால் அதிகம் இழந்த அரசியல் கட்சி ஒன்று உலகில் இருக்கும...

செயற்கரிய செய்வர் பெரியர்….திரு.பொள்ளாச்சி நசன்.!

இந்தப்பதிவினை 2009 ல் எழுதினேன். படித்த நண்பர்கள் அனைவரும் , இது எமக்கு புதிய செய்தியே என்றார்கள்....நல்லசெய்தியினை நாலு பேருக்கு தெரியும்படி மீண்டும் உரக்கச்சொல்வதில் தவறில்லையே. அதனால் இந்த மீள்பதிவு..... நவம்பர் 2009 க்கும் 2012க்கும் இடைப்பட்ட காலவெளியில் 'தமிழம்' இணையம் தான் எத்துணை வளர்ந்திருக்கிறது? வாழ்த்துக்களும் ! , வணக்கங்களும்! த ற்செய லாக நேற்றிரவு வலையில் உலாவிக்கொண்டிருந்தேன்….மேற்கண்ட தலைப்பிலிருக்கும் குறள்மொழிக்கேற்ப , அரியதொன்றை செய்து கொண்டிருக்கும் திரு. பொள்ளாச்சி நசன் அவர்களைப் பற்றியும் , அவரது தமிழம் இணையம் பற்றியும் அரிய நேரிட்டது. உங்களில் சிற்றிதழ் தொடர்புபட்ட பலரும் அவரை அறிந்திருக்கக் கூடும்…….இன்னும் பலர் அவரைப் பற்றி அறிந்திருக்காமலும் இருக்கக் கூடும்…..என்னைப் போல..! அதனால் ஒரு சின்ன அறிமுகம்… ( சூரியனுக்கே டார்ச்சா என்று திரு.நசன் அவர்கள் கோவித்துக்கொள்ளக் கூடாது…!!) பொள்ளாச்சி நசன் என்று தன் பெயரை வழங்கும் மணிப்பிள்ளை நடேசன் தமிழம் என்னும் வலையிதழின் ஆசிரியர். இவர் சிதம்பரத்தில், செப்டம்பர் 15, 1952 அன்று பிறந்தார். பொள்ளாச்ச...