Skip to main content

ச்சும்மா ட்டமாஷ் - 75: மதிபாலா - ப்னீக்ஸ் பறவையாய் மீண்டு வந்த திமுக. பகுதி - 2

நண்பர் மோகன் கந்தசாமியின் ச்சும்மா டமாஷில் எனது திராவிட முன்னேற்றக் கழகம் - இனி என்ற கட்டுரை மூன்று பதிவுகளாக வெளிவந்தது. அதன் மீள்பதிவே இது. காப்பிரைட் முழுதும் ச்சும்மா ட்ட்மாஷுக்கே !



சென்ற பதிவில் முதல் பகுதியாக வெளியான மதிபாலாவின் கட்டுரை இப்பதிவில் தொடர்கிறது. இறுதிப் பகுதி அடுத்த பதிவில் வெளியாகும். இது ச்சும்மா ட்டமாஷ் - 75 -க்காக அவர் எழுதிய சிறப்புப்பதிவு.


ப்னீக்ஸ் பறவையாய் மீண்டு வந்த திமுக

திமுக தலைவராக கலைஞர் பொறுப்பேற்ற பிறகு நடாத்தப்பட்ட தேர்தலில் திமுகழகம் வெற்றிபெற்றது. கலைஞர் இரண்டாம் முறையாக பதவியேற்றார். பின்பு திமுகழகத்தின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர் அவர்கள் கருத்துவேறுபாடு காரணமாக தனிக்கட்சி தொடங்கினார்

எம்.ஜி.ஆரின் பிரிவு

சினிமா கவர்ச்சி , கொள்கைப் பாடல்கள் என்ற ஜனரஞ்சகத்தின் மொத்த வடிவமான எம்.ஜி.ஆரும் அவரது கட்சியுமான அதிமுக , தமிழகத்தின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றது. அதன் பிறகு 13 ஆண்டுகள் , எம்.ஜி.ஆர் தமிழகத்தின் ஆட்சியிலிருந்தார். எம்.ஜி.ஆரின் கலருக்கும் , எம்.ஜி.ஆரின் கொள்கைப்பாடல்களுக்குமே ஓட்டுப் போட்ட மக்கள் அனேகம் பேர். இதில் கொள்கையென்ன ,கோட்பாடென்ன , எல்லாம் காற்றில் பறந்தன….அந்த மாயைதான் இன்றைக்கும் அவரது சாதனைகளென பெரிதாகச் சொல்ல ஏதுமில்லாவிட்டாலும் , தொலைநோக்கு திட்டங்கள் ஏதுமில்லாவிட்டாலும் அவரைப் புகழ்ந்து பேசக் காரணம் என்றால் அதில் மிகையில்லை

மூக நீதியை அடிப்படையாகக் கொண்ட ஒரு கட்சியை, தனது ஆரம்பமே தலித்களுக்கும் , தாழ்த்தப்பட்டவர்களுக்கும் உரிமை பெற்றுக்கொடுக்க முயற்சித்த ஒரு கட்சியை வெறும் சமபந்தி விருந்தினாலும் ,ஊடகக் கவர்ச்சியாலும் தோற்கடித்தார் எம்.ஜி.ஆர் என்னும் தனி மனிதர்……அத்தனி மனிதரை பின்னாலிருந்து இயக்கியது கலைஞரையும் , திமுகவையும் ஜென்ம பகைவர்களான கருதிக்கொண்டிருந்த பார்ப்பன ஊடகங்கள். அன்று திமுக பார்ப்பன ஆதிக்கத்தை வேரறுப்பதிலேயே குறியாக இருந்த காலம்..அன்றைய வன்மத்தை இன்றும் கூட மறக்காத பார்ப்பன ஊடகங்கள், இன்றும் கூட திமுகவின் செய்திகளை திரித்துக்கூற முயலும் பார்ப்பன ஊடகங்கள், எதற்குமே தகுதியில்லாத விஜயகாந்தை தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக சித்தரிக்க முயலும் இந்த ஊடகங்கள் அன்றைக்கு எப்படி செயல்பட்டிருப்பார்கள் என்று எண்ணிப் பார்த்தால் எம்.ஜி.ஆரின் மிஸ்டர். க்ளீன் இமேஜ் உருவாக்கப்பட்ட ஒன்று என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

றைந்த ஒரு தலைவரை கொச்சைப்படுத்தும் நோக்கமில்லை நமக்கு , ஆனால் தொடர்ந்து வரும் ஆரிய , திராவிடச் சண்டையில் கொஞ்சமேனும் தமிழர்களைத் தலைநிமிர வைத்த திமுகவை முடக்கும் முயற்சியில் பார்ப்பனர்கள் தாற்காலிக வெற்றி பெற்றார்கள் என்பதைச் சொல்லும் முகமாகவே மேற்கண்ட செய்திகளைச் சொன்னோம்.

13 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்தும் எம்.ஜி.ஆரால் திமுகவிற்கும் , உடன்பிறப்புக்களுக்கும் இருந்த பந்தத்தை உடைக்க முடியவில்லை. திமுகவின் தொண்டர் பரப்பு அப்படியே இருந்தது…கழகத்தையும் , கலைஞரையும் உயிரெனக் கொண்டவர்கள் கழகத்திலேயே இருந்தார்கள். இன்னுஞ் சொல்லப்போனால் திமுகவிற்கு அது ஒரு நல்ல வாய்ப்பாகவே இருந்தது. பதவிச்சுகத்திற்காக கட்சியில் திழைப்பவர்கள் யார் , உண்மையிலேயே கழகத்தின் பால் பற்றுக்கொண்டவர்கள் யார் என்பதை அடையாளம் காணும் அற்புத வாய்ப்பாகவே இருந்தது. அந்த அக்னிப்பரிட்சையில் திமுகவும் , அதன் தொண்டர்களும் வென்று காட்டினார்கள்


ப்னீக்ஸ் பறவையாய் மீண்டு வந்த திமுக

ரித்திரத்தில் தொடர்ச்சியாக மூன்று தேர்தல்களில் தோல்வியடைந்த அரசியல் கட்சிகள் காணாமல் போனதான வரலாறுதான் உண்டு இங்கே…ஆனால் அதன் பிறகும் எழுந்து நின்ற அதிசயம் தான் திமுக. எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிறகு நடந்த 1989 தேர்தலில் எம்.ஜி.ஆரின் மனைவியும் , சினிமாவில் எம்.ஜி.ஆருடன் சேர்ந்து ஆடிய ஜெயலலிதாவும் இரு பிரிவுகளாக பிரிந்து நின்றனர். அந்தத் தேர்தலே திமுகவின் மீள் வருகைக்கு கட்டியம் கூறிற்று.

1991ல் ஆட்சி புலிகளுக்கு ஆதரவளிப்பதாக பொய்க்குற்றச்சாட்டு சொல்லப்பட்டு திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. 2001ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தமிழகத்திற்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய தமிழகம் வந்த காங்கிரஸ் தலைவர் ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்பட்டார். ராஜிவ் கொலைக்கு கலைஞரே காரணம் என்று முக்குக்கு முக்கு பிரச்சாரம் செய்த ஜெயல்லிதா ஆட்சிப்பொறுப்பை ஏற்றார். திமுக சொல்லவொணாத அடக்குமுறைக்கு ஆட்பட்டது. ஒரு ரூபாய் சம்பளம் பெற்று நூறு கோடி ரூபாயில் கல்யாணம் நடத்திய அதிசயமும் அப்போதுதான் நடந்தது, ஆட்டோ அனுப்பும் கலாச்சாரமும், கஞ்சா கேஸ் கலாச்சாரமும், கொஞ்சமும் அரசியல் நாகரீகமில்லாத ஒரு சூழலும் தமிழகத்தில் அப்போதுதான் தொடங்கிற்று.

வைகோவின் பிரிவு

ம்.ஜி.ஆரின் பிரிவுக்கு பிறகு கட்சியில் ஏற்பட்ட மற்றொரு மாபெரும் பிளவாகவே மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை எல்லோரும் கருதினார்கள். திமுகவின் இளைஞர் பட்டாளம் வைகோவின் பின்னால் சென்று விட்டதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதினார்கள். பாதிக்கும் மேற்பட்ட மாவட்டச்செயலாளர்கள் வைகோவின் பின்னால் அணி வகுத்தார்கள். கட்சியின் அடையாளமான உதயசூரியனே முடக்கப்பட்டுவிடக்கூடும் என்றார்கள். ஆனால அத்துணை அனுமானங்களையும் உடைத்தெறிந்து விட்டு, 1996ல் நடந்த தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சிக்கட்டிலில் ஏறியது. ஜெயலலிதா கூட தோற்றுப்போனார்

ஜெயலலிதாவின் மேல் தொடரப்பட்ட நியாயமான வழக்குகளை , தன் மீது காழ்ப்புணர்ச்சியுடன் திமுக வழக்குப் போட்டதாக பிரச்சாரம் செய்த ஜெயலலிதா 2001 ல் மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றார். அரசு ஊழியர்களும் , போக்குவரத்து கழக ஊழியர்களும் கொத்தடிமை போல நடத்தப்பட்டனர். மக்கள் மேல் அநியாயத்திற்கு வரிச்சுமைகள் சுமத்தப்பட்டன. அதுவரை தான் செய்ததெல்லாம் சரியெனவே வாதிட்டு வந்த செயலலிதா நாடாளுமன்றத் தேர்தலில் தனக்கேற்பட்ட வரலாறு காணாத தோல்வியால் யூ டேர்ன் எடுத்தார். பறிக்கப்பட்ட சலுகைகளை அள்ளி அள்ளிக் கொடுத்தார். அவரது யூ டேர்ன் சிறிதளவு மக்களைக் கவர்ந்தாலும் தமிழக மக்கள் 2006ல் கழகத்திடம் மீண்டும் ஆட்சிப்பொறுப்பைக் கொடுத்தார்கள்…அந்தத் தேர்தல் தமிழக வரலாற்றில் முதன் முதலில் ஒரு மைனாரிட்டி அரசாங்கத்திற்கு அடி கோலிற்று. சில இலவச அறிவிப்புகள் பிடிக்காத சாராரும், விஜயகாந்த் அவர்களின் நுழைவும் அந்த மைனாரிட்டி அரசின் காரணாங்களாயினர்.

னால் அந்தத் தேர்தலில் , தனது தேர்தல் அறிக்கையையே கதாநாயகனாக மாற்றிய திமுக இன்று வரை ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து கொண்டிருக்கிறது


திமுகவின் எதிர்காலம்

திமுகவின் எதிர்காலம் என்ற கேள்வியை நாம் திமுகவின் வரலாற்றின் மூலமாகவே சந்திக்க வேண்டியிருக்கிறது. திமுகவின் வரலாறானது அளப்பரிய வெற்றிகளையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது என்பதையும் மிகப்பெரும் சரிவுகளையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது என்பதை கடந்த சில பத்திகளில் பார்த்தோம். ஒவ்வொரு முறையும் தனது தோல்விகளுக்கான பதிலை தனது வெற்றிகளிலிருந்தே அக்கழகம் பெற்றுக் கொண்டிருக்கிறது. அவ்வெற்றிகளையும் தோல்விகளையும் சீர்தூக்கிப் பார்க்கையில் நமக்குத் தெரிவதெல்லாம், எப்பேர்ப்பட்ட நெருக்கடியான சூழல்களிலும் கூட கழகத்திற்கான அடித்தளம் மிக வலுவாகவே கட்டப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படைக் கொள்கைகளான கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற வீரியமான வார்த்தைகளை இன்றைக்கும் தமது உயிர்மூச்செனக் கொண்ட உடன்பிறப்புக்கள் இன்னும் மிகுதியாக இருக்கிறார்கள். அதனால்தான் மிக விரைவில் தோல்வியிலிருந்து திமுக மீள முடிகிறது

1972 ல் எம்.ஜி.ஆரின் அசுர பலமும், திமுகவிற்கெதிரான ஊடக எதிர்ப்பும் , சினிமாக் கவர்ச்சியும் திமுகவிற்கு தோல்வியைக் கொடுத்தன. 1991ல் ராஜிவ் கொலை என்ற அனுதாப அலை திமுகவிற்கு தோல்வியைக் கொடுத்தது. 2001ல் எதிர்க்கட்சி கூட்டணி பலமும் , பணப்புழக்கமில்லை என்ற பிரச்சாரமும் தோல்வியைக் கொடுத்தது. இன்று சினிமாக் கவர்ச்சியாலும், பதவி ஆசையாலும் ஒரு சில இளைஞர்கள் விஜயகாந்த் பின்னாலும் , சரத்குமார் பின்னாலும் அணி வகுத்திருக்கலாம். ஆனால் , தங்களைப் பிணைக்கும் எந்தவொரு கொள்கையும் , சக்தியுமில்லாமல் நீண்ட காலம் அவர்களைப் பிணைத்து வைக்க முடியாது. அத்தகைய திடீர் கட்சிகளால், அடித்தளம் வலுவாகவுள்ள திமுகவை அத்துணை சீக்கிரம் வீழ்த்தி விட முடியாதென்பதே உண்மை. மாறாக ஒரு சர்வாதிகார மையத்தைக் கொண்டுள்ள கட்சிகள் வீழ்வதற்கே வாய்ப்புண்டு என்றே நான் கருதுகிறேன்.


உட்கட்சி ஜனநாயகம்

ம்.ஜி.ஆர் தனது கட்சியை ஒரு நிறுவனம் போலத்தான் நடத்தினார். உட்கட்சி ஜனநாயகம் என்றால் கிலோ என்ன விலை என்றுதான் இன்றும் அதிமுகவினர் கேட்பார்கள். ஆனால் அன்றும் உட்கட்சி ஜனநாயகத்தின் ஒரு அடையாளமாகத்தான் இருந்தது திமுக. இன்றும் கூட. இன்று 2008ல் கூட, நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் உட்கட்சித் தேர்தலை நடந்தால் உள்குத்துக்கள் தோல்விகளைத் தர வல்லவை என்ற நிலையிலும் உட்கட்சித் தேர்தல்களை நடத்துகிறது திமுக

னால், நமது எம்.ஜி.ஆரைப் பார்த்துத்தான் நாம் கட்சிப்பதவியில் இருக்கிறோமா இல்லையா என்ற பரிதாப சூழலில் இருக்கிறது அதிமுக…எம்.ஜி.ஆரின் பார்மூலாவில் ஆட்சியைப் பிடிக்க முயற்சிக்கும் விஜய்காந்த் கட்சியிலும் அவ்வாறே. அதனாலேயே இன்று வரை கட்சியின் இரண்டாம் மட்டத்தலைவர்கள் நம்பிக்கையளிக்கக் கூடியவர்களாக திமுகவில் காட்சியளிக்கிறார்கள். ஒரு பத்து இரண்டாம் மட்டத் தலைவர்கள் திமுகவில் உடனே தெரியக் கூடியவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அதிமுகவிலோ மற்ற எந்த தமிழக / தேசியக் கட்சியிலுமே தலைமையால் திணிக்கப்பட்டவர்களே இரண்டாம் மட்டத்தலைவர்களாகிறார்கள். அதனால் கட்சித்தலைமைக்கும், தொண்டர்களுக்குமிடையிலான பாலமாக செயல்பட திணிக்கப்பட்ட தலைவர்களால் இயல்வதில்லை.

ந்திரிப் பொறுப்பை இழந்த பின்பும், மாவட்டச்செயலாளராக கட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஈரோடு என்.கே.கே.பி. ராஜா அவர்களின் பேட்டியே அதற்கு நல்ல சான்று. மந்திரிப் பொறுப்பைக் காட்டிலும் உயர்ந்தது கழகத்தின் மாவட்டச் செயலாளர் பொறுப்பு பெரியது, அதையே நான் விரும்புகிறேன்” என்று சொன்ன ஒரு வார்த்தையே திமுகவின் வலிமை என்பது ஆட்சி அதிகாரத்தில் இல்லை. அதன் தொண்டர்களின் மன வலிவில் இருக்கிறது என்பது புலனாகிறது. தனது வலிமையென்ன என்பதை திமுக தெரிந்தே வைத்திருக்கிறது.


திராவிட முன்னேற்றக் கழகமும், கொள்கைகளும்

திமுகவின் எதிர்காலம் என்பது அது எத்துணை காலம் தனது கொள்கைகளை அடை காத்து வைத்திருக்கிறது என்பதைப் பொறுத்துதான் இருக்கிறது. சொல்லப்போனால் இன்றைக்கும் கொள்கைகளை கொஞ்சமாவது மதிக்கும் , அதற்கு தன் கவனத்தைச் செலுத்தும் ஒரே இயக்கம் திமுகதான் என்று சொன்னால் அது மிகையில்லை. திமுகவின் எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனையாதலால் , அந்த நிலைப்பாட்டை நாம் இன்றைய நிகழ்வுகளை கொண்டே பார்க்க வேண்டும்.

1. ரசு ஊழியர்களுக்கும், அரசுப் பணியாளர்களுக்கும் உரிய சம்பளத்தையும் சலுகைகளையும், போனஸ்களையும் கொடுத்து திமுக , தொழிலாளிகளின் உரிமைகளை மறுக்காமல் தொழிலாளிகளின் அரசாக இருக்கிறது.

2. ரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்று ஏழைகளின் அரசாக காட்சியளிக்கிறது

3. மூக நீதிக்கொள்கையில் நம்பிக்கை கொண்டு இட ஒதுக்கீடு இந்தியா முழுமைக்கும் பரவவும் , க்ருமி லேயரை எதிர்க்கவும் , முஸ்லீம் , கிறித்துவ மதங்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் அருந்ததியினருக்கான தனி இட ஒதுக்கீடு என்று தன்னாலான முயற்சிகளை மேற்கொள்கிறது.

4. தாழ்த்தப்பட்ட சமூகமும் அர்ச்சகராகலாம் என்று சாதி ஒழிப்புக்கொள்கையை கொஞ்சமேனும் முன்னெடுத்துச் செல்கிறது

5. மிழுணர்வாளர்களின் உணர்வுகளை மதிக்கும் விதமாக தமிழ்ப்புத்தாண்டு தைப் பொங்கலே என்று அறிவித்திருக்கிறது. தமிழ் மொழியை செம்மொழியாக்க இயன்ற வரை போராடி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறது

6. மிழ்த் தேசிய உணர்வாளர்களுக்கும் , தமிழீழ உணர்வாளர்களுக்கும் மாபெரும் எதிர்ப்புக்கிடையே , தனது கூட்டணிக்கட்சியே எதிர்த்தாலும் கூட கருத்துச் சுதந்திரத்தை வழங்கியிருக்கிறது.

7. தேவையான சமயங்களில் , தவறிழைப்போர் மிக உயர்பதவிலியிருந்தாலும் அவர்களை தூக்கிவீசத் தயங்காமல் இருக்கிறது. அதற்கு நேற்று என்.கே.பி.ராஜாவும் இன்று வீரபாண்டியாருமே உதாரணம்.

8. எதிர்க்கட்சிகளின் முறையான குற்றச்சாட்டுகளுக்கும் , வாதங்களுக்கும் பொறுப்புடன் பதில் தந்து கொண்டிருக்கிறது.

9. ஜெயலலிதாவின் வருகையினால் முடிவுரை கட்டப்பட்ட அரசியல் நாகரீகத்தை மீண்டும் கொண்டுவரும் முயற்சியில் தன்னை அர்பணித்துக்கொண்டிருக்கிறது. அதற்கான சமீபத்திய உதாரணங்கள் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு தன் நிலையை தாழ்த்திக் கொண்டு அனைத்துக் கட்சிகளையும் அழைத்திருப்பதாக கலைஞர் அறிவித்தது மற்றும் மின் வெட்டுப் பிரச்சினையில் அதிமுகவையும் விவாதத்திற்கு வரச்சொல்லி வலியச் சென்று அழைத்தது திமுக.

10. ன்றைக்கும் , அதிமுக தலைவி கொடநாட்டிலும் , 2011ல் முதல்வாராவேன் என்று சொல்லிக் கொள்ளும் விஜயகாந்த் பொள்ளாச்சியில் படப்பிடிப்பிலும் பிஸியாக இருக்கும்ப் போது திமுகவின் தலைமையும் , அத்துணை மட்டங்களும் மக்களை நேரடியாக சந்தித்து அரசியல் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்

11. ளைஞர் சக்தியும் , மகளிர் சக்தியும் 60 ஆண்டு காலமானாலும் தம்மிடையே கணிசமாக இருக்கிறதென்பதை கட்டியம் கூறும் முகமாய் இரண்டு மிகப்பெரிய மாநாடுகளை வரலாறு காணாத வெற்றியுடன் நடத்திக் காட்டியிருக்கிறது திமுக.

னது கொள்கைகளிலிருந்தோ, பார்வைகளிலிருந்தோ இன்று வரை திமுக விலகவில்லை என்பதற்கு மேற்கண்ட உதாரணங்களே சாட்சி. குறைகளற்ற அரசாக திமுக ஆட்சி இருக்கிறதென்பது என் கருத்தல்ல. குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஒரு ரூபாய் அரிசியையும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான தாராள நிதி வழங்கலையும், இரண்டு ஏக்கர் விவசாய நிலங்களை ஏழைகளுக்கு தருவதையும், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ததையும் பாராட்டும் அதே வேளை இலவச வண்ணத்தொலைக்காட்சி திட்டத்தையும், மின் வெட்டை ஒட்டிய சொதப்பலையும் நாம் ரசிக்கவில்லை என்பதையும் பதிவு செய்ய வேண்டிய கடமை நமக்கு உண்டு

தேபோல், கட்சியளவில் தயாநிதி மாறன் திணிப்பு மற்றும் விலக்கல், கனிமொழி திணிப்பு, ஈழத்தமிழர் விடயத்தில் ராஜினாமா நாடகம் இன்னுஞ்சில நிகழ்வுகள் நமக்கு ஏற்புடையதாயில்லை. அங்கொன்றும், இங்கொன்றுமாக விமர்சனங்கள் இருப்பினும் பெரிய அளவிலான உடன்பிறப்புக்களின் நம்பிக்கையை சிதைக்கும் வண்ணம் நிகழ்வுகள் யாதுமிருப்பதாக நாம் கருதவில்லை. அதனால் தனது உடன்பிறப்புக்களின் நம்பிக்கையை கலைஞரும், திமுகவும் தக்க வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

க, கட்சி மீது பற்றுக்கொண்ட உடன்பிறப்புக்களை தன்னகத்தே இன்றுவரை வைத்துக்கொண்டிருக்கும் திமுகவின் எதிர்காலம் வழக்கம் போலவே வெற்றிகளும் , தோல்விகளும் கலந்ததாக இருக்கும். அதைப்பற்றிய பெரிதொரு கவலை தேவையே இல்லை என்பதே எம் கருத்து. கலைஞருக்குப் பின்னும் கூட...

ன்?

பார்ப்போம்...



[தொடரும்]

Comments

Popular posts from this blog

பூட்டிய இரும்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது!

சீமான்களின் சபையினிலேயே , கடிதம் எழுதி எழுதிக் களைத்துப்போனதோர் கிழட்டுச் சிங்கம்.....முன்னாலுக்கும் முன்னால் அவர் கொண்ட தமிழ்ப்பற்று.....இன்னாளில் அது தமது மக்கட்பற்றாய் மாறிப்போனதொரு சோகம். ஏதோவொரு புண்ணியத்தில், எவரோ செய்த வரலாற்றுத் தவறால் , கொள்கை , தொலைநோக்கு , மக்கட்பற்று இவை பற்றிய சிந்தையேதுமின்றி அரசியலில் விபத்தாய் விளைந்த கொடநாட்டு ஈழத்தாய்....தேர்தலுக்குத் தேர்தல் மட்டுமே தமிழர் பற்றியும் , தமிழர் அரசியல் பற்றியும் எழுதி வைத்துப் பேசும் செல்வி யவர்.........இன்னமும் அவர் சேலை பிடித்துத்திரியும் வீணர் கூட்டம்.! கூட்டணிக்கேற்றப்படி கொள்கையை மாற்றிக்கொள்ளும் மருத்துவப் படையாச்சி.........வீரமிகு வன்னியகுலத்திலே வந்துதித்த சந்தர்ப்பவாதச் சாக்கடை....சமரசமற்ற கொள்கை அரசியலை சந்தர்ப்பவாதச் சாக்கடைக்குள் தள்ளிய பெருமைக்குரிய மருத்துவர் தமிழ்க்குடிதாங்காத தமிழ்க்குடிதாங்கி! யாரை எதற்காக எதிர்த்து அரசியல் செய்யவேண்டுமே அவர்களோடே தம் தேவைக்குதந்த படி கூட்டு வைத்துக்கொண்டு ஈழத்திற்க்காய் எந்நேரமும் பாடுபடும் திரு.வைகோ அவர்கள்....அவரும் சிறை சென்றார்.

நண்பர் 'டோண்டு' ராகவன்...

உயிரோடு இருக்கும்வரை அறிக்கைகளால் அர்சித்து எதிர்ப்பரசியல் நடாத்தி செத்துபோன பிறகு ஆருயிர் நண்பர் என்று அழைத்துக்கொள்ளும் எல்லா அரசியல்வாதிகளையும் போலவே நான். எனக்கும் மறைந்த உயர்திரு 'டோண்டு' ராகவன் அவர்களுக்குமான பரிச்சயம் அவ்வளவொன்றும் அதிகமில்லைதான். பதிவுலகையும் , பர்ஸனல் லைப்பையும் பிரித்து வைத்துக்கொள்ளும் எண்ணமுடைய நான் , டோண்டு மட்டுமல்ல மற்றபல பதிவுலக நண்பர்களுடனும் கூட தனிப்பட்ட தொடர்புகளை வைத்துக்கொண்டதில்லை... இருந்தாலும் , அவ்வப்போது பதிவுலக பின்னூட்டங்களின்பாலே தொடர்ந்துகொண்டிருந்த தொடர்பு , எனது 'போலி டோண்டு' பற்றிய கட்டுரையொன்றிலேயே  தீவிர விவாதமாக மாறியது.. ஆயிரம் விமர்சனங்கள் அவர் மீதோ இல்லை அவர்தம் பிற்போக்கான கருத்துக்கள் மீதோ இருந்திருக்கலாம். கடினமாக ஓரிரு முறை பேசியிருக்கலாம்.. அத்தனையும் தாண்டி அவர் மிக நல்ல மனிதர் , கடும் உழைப்பாளி என்பதை அவரது பதிவுலகம் மூலமாக அறிந்தவனெனினும் உறுதியாக கூறவியலும்.. அத்தகைய நல்ல மனிதரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் , நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்... வருத்தங்கள

எஸ்.எஸ்.பொன்முடி - மனிதருள் மாணிக்கம்.

எஸ்.எஸ்.பொன்முடி , கொங்குச்சீமையிலே குறிப்பாக பல்லடம் , சூலூர் வட்டாரத்தில் தெரியாதவர்கள் சொற்பமே. எஸ்.எஸ். பொன்முடி அவர்கள் மட்டுமல்ல , அவர்களது குடும்பமே சூலூரில் பழம்பெருமை மிக்க குடும்பம். காலங்காலமாக அவர்களது குடும்பத்தினரே சூலூரின் அனைத்து தேர்தல்களிலும் வென்றதும் , வெல்வதும் வரலாறு. பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்தவராயினும் மாற்றுக்கட்சியினராலும் மதிக்கப்படும் சில மனிதர்களில் எஸ்.எஸ் பொன்முடியும் ஒருவர். அவருக்கும் , எனக்குமான பரிச்சயமொன்றும் அவ்வளவு அதிகமில்லைதான். அப்போது எனக்கு ஒரு பத்திலிருந்து , பதினைந்து வயதிருந்திருக்கலாம். கலங்கலில் கவுன்சிலர் தங்கவேலு சர்வ அதிகாரமும் பொருந்தியவராய் வலம் வந்துகொண்டிருந்தார். அவர் எஸ்.எஸ்.பொன்முடியின் வலக்கரம். ஊருக்கு மேற்கே ஜல்லிக்குழி என்ற மனிதர்கள் உபயோகப்படுத்த முடியாத , இயலாத பகுதி ஒன்றிருந்தது.....அப்போது கழகம் ஆட்சியிலிருந்தது + பொன்முடி எம்.எல்.ஏவாக இருந்தார். கட்சிக்காரர்கள் , குறிப்பாக ஒடுக்கப்பட்ட , மிக பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் கேட்டுக்கொண்டதற்காக , மிகுந்த பிரயாசைப்பட்டு தங்கவேல் மற்றும் எஸ்.எஸ்.பொன்முடி அவ