Skip to main content

நல்ல நண்பர்களைப் பெற நாற்பது வழிகள்.!

60 நாட்களில் ஆங்கிலம் கற்றுக்கொள்ளலாம் , பத்தே நாளில் மூல வியாதிக்கு டாட்டா காட்டலாம் என்பது போன்ற போலி விளம்பரங்களிலொன்றாக இதையும் நினைத்துக்கொண்டு வந்திருந்தால் நீங்கள் தவறான இடத்திற்கு வந்திருக்கிறீர்கள்..

அது மட்டுமின்றி , தமிழ் மணத்தில் நட்பு வட்டம் ஏற்படுத்துவத்ற்கும் இந்தப்பதிவிற்கும் சம்பந்தமேதுமில்லை..அதற்கு நிறைய வேறு வழிகள் இருக்கின்றன.....(தெரிந்தால் சொல்லவும் ....) , இனியாவது பதிவிற்கு வாடா என்கிறீர்களா ,???? ஓக்கே , வந்தாச்சு...!!!

நட்பு

பெற்றோர்களிடமும் , கட்டிய மனைவியிடமும் இருக்காத நமது ரகசியங்கள் பல நண்பர்களிடம் இருக்கக் கூடும்...அத்தகைய நண்பர்கள் உங்களுக்கு நம்பிக்கையான மற்றும் உண்மையானவர்களாகவும் இருப்பதென்பது மிக அவசியம்.


அதைத்தான் வள்ளுவரும் இவ்வாறு குறிப்பிடுகிறார்..

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.

நட்பு என்பது யாரோ தெருவில் போகும் ஒரு சிலருடன் சிறிது நேரம் பேசி பின் ஒரு காபி ஷாப்பில் கலந்துரையாடுவது மட்டுமல்ல..நீங்கள் துக்கமாயிருக்கும்போது உங்கள் துக்கங்களை பகிர்ந்து கொள்வதும் , உங்களைத் தேற்றிவிடுவதுமே நட்பு. யாருடனும் இருக்கும் போது உங்கள் மனசு தெளிவாக இருக்கிறதோ அதுதான் உண்மையான நட்பு..இன்னும் நட்புக்கான இலக்கணங்களை தமிழ் சினிமாக்கள் பேசி விட்டதால் நாம் இத்துடன் நிறுத்திக் கொள்வோம் ..

அத்தகைய நல்ல நண்பர்கள் எல்லோருக்கும் கிடைப்பதில்லை..
கிடைப்பதில்லையென்றால் ??? கிடைப்பதற்கு நாம் முயற்சிக்கவில்லையென்றே பொருள்... அத்தகைய நட்பிற்குதந்த நடவடிக்கைகள் நம்மிடம் இல்லை என்பதே பொருள்...

அப்படி நினைக்கிறீர்களா??? நம்மிடம் ஏதோ குறை இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?? கையைக் கொடுங்கள் , நம்மிடம் உள்ள குறையை கண்டறிந்தாலே குறை தொண்ணூறு சதம் தீர்ந்துவிட்டது என்று மனவியல் வல்லுநர்கள் சொல்கிறார்கள்.....( எத்தன புக் படிச்சிருக்கேன்..???)

வாருங்கள் , நல்ல நட்பைத் தேடுவோம் ,

முதலில் அதற்கான வழிகளை ( நிறைய கட்டுரைகளிலிருந்தும் , உந்து சக்திக் கட்டுரைகளிலிருந்தும் சுட்டவை - நல்லதைச் சுடுவதில் தப்பில்லை என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க ) தேடுவோம் , பின்பு நல்ல ஆத்மார்த்தமான நண்பனை , நண்பியை.......

  1. நண்பர்களான நீங்கள் கருதுபவர்களை சந்திக்கும் போது எந்நேரமும் தொண தொணவென்று நீங்களே பேசிக்கொண்டிருக்காதீர்கள்...அவர்களைப் பேச விடுங்கள்....அவர்களைக் கவனியுங்கள்.....அவர்கள் நிறைய பேசட்டும்....அதிகப்படியான பகிர்தலே ஆழமான நட்பிற்கு வழி வகுக்கும் என்பதை தெளிவுற உணருங்கள்......
    உதாரணத்திற்கு , நண்பன் தன் காதலியிடம் அவமானப் பட்டு திரும்பியிருக்கிறான் , அதை அவன் சொல்ல எத்தனிக்கிறான்......அந்தச் சமயத்தில் நேற்றிரவு பார்த்த திரைப்படம் பற்றி நீங்கள் பேசிக்கொண்டே இருந்தால் அங்கு ஒரு ஆழமான நட்பிற்கான வாய்ப்பு பட்டுப் போகிறது......மற்றவர்களின் உணர்விற்கு மதிப்புக் கொடுங்கள்.....
  2. நண்பர்களுக்கு பிடித்த விடயங்களைப் பற்றி அதிகம் பேசுங்கள்.............பிடிக்காத விடயங்களைப் பற்றி பேசவே கூடாதென்பதில்லை...பிடித்த விடயங்களைப் பற்றி மட்டுமே பேசுவதென்பதும் முறையில்லை......
    உதாரணத்திற்கு , நண்பனுக்கு உடலுறவு பற்றியும் , பெண்களுடனான உறவு பற்றியும் பேசுவதில் சங்கடம் இருக்குமென்று நீங்கள் உணர்ந்தால் அதைப் பற்றி பேசுவதை தவிருங்கள்......அதைவிடுத்து அத்தகைய நிகழ்வுகள் உங்களுக்கு பிடிக்குமென்பதாலே மற்றவர்கள் அத்தகைய பேச்சை சகித்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்.....அது ஆரோக்கியமான போக்கு அல்ல.
  3. நண்பனுடனோ , நண்பியுடனோ பேசும் போது நமக்கு அவர்கள் எவ்வளவு முக்கியம் என்பதை உணரச் செய்யுங்கள்..........அவர்கள் நமது வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதையும் பதிவு செய்யுங்கள்..அவர்கள் செய்யும் சிறுசிறு உதவிகளும் உங்கள் வாழ்க்கையில் ஒரு முக்கிய தேவையாக இருக்கிறதென்பதையும் உணர்த்துங்கள்...
  4. நட்பிற்கு முதல் நண்பன் - ஆரோக்கியமான விவாதம் , நட்பிற்கு முதல் எதிரி - விதண்டாவாதம்......விதண்டாவாதத்தை அறவே தவிருங்கள்.......நண்பர்கள் சொல்வது சரியென்றால் தொடர்ந்து உங்கள் நிலையை விட்டுக் கொடுக்காமல் பேசிக்கொண்டே இருக்காதீர்கள்...அத்தகையதோர் நிலை , கண்டிப்பாக நல்ல நண்பர்களைப் பெற்றுக் கொடுக்காது என்பதை உணருங்கள்.
  5. நண்பர்கள் யாரேனும் உங்களுக்கு உடன்படாத விடயங்களைச் செய்து விட்டால் "நீ செய்தது தவறென்று " உடனே கையைச் சுட்டாதீர்கள்... ஒவ்வொருவருடைய பார்வையும் வேறு வேறானது , ஒருவனுக்கு தவறெனத் தெரியும் விடயம் மற்றவனுக்கும் அவ்வாறே தெரியாது என்ற மாபெறும் உண்மையை உங்கள் மனதில் இருத்திக் கொள்ளுங்கள்......அத்தகைய "தவறு" என்ற சுட்டிக்காட்டல் நமது ஆராயும் திறனையும் , விவாதத்தின் போக்கையும் நீர்த்துப் போயிடச் செய்ய வல்லவை என்பதை உணருங்கள்........
இன்னும் 35 வழிகள் தொடர்ச்சியான பதிவுகளில்......உங்கள் விமர்சனங்கள் இன்னும் இந்தத் தொடர்ச்சியான பதிவிற்கு வலு சேர்க்க உதவும்...

Comments

Popular posts from this blog

இதற்குத்தானா ஆசைப்பட்டீர்கள் திரு.சீமான்?

இன்று சீமான் அதிமுக கூட்டணியில் இருந்து பிரச்சாரம் பண்ணப்போவதாக ஒரு செய்தி வந்திருக்கிறது..ஏற்கெனவே ஒருமுறை செய்த பாரிய தவறொன்றை மற்றொருமுறை செய்யமாட்டார் என்றே நினைத்திருந்தேன்....இது உண்மையான செய்தியாய் இருந்தால் பேரிடிதான்..!!!! மாறாக உணர்வுள்ள இளைஞர்கள் தம் பின்னால் பேரெழுச்சியுடன் நாம் தமிழராய் எழும்போது.....அதைக்கொண்டுபோய் போய்ஸ்தோட்டத்திற்கு தாரைவார்த்துக்கொடுப்பதென்பது கனவிலும் சகிக்க முடியாத செயல்....!!  கருணாநிதிக்கு ஈழ அழிவிற்கு எவ்வளவுக்கெவ்வளவு பங்கிருக்கிறதோ அதே அளவிற்கு  சக பங்குள்ளவரே செயலலிதா... செயலலிதா என்ன செய்திருக்க வேண்டும்? என்ன செய்தார்? 1.எதிர்கட்சியாக மாபெரும் போராட்டங்களை நடாத்தியிருக்க வேண்டும்...அழிவது நம்சொந்தங்களே என்று தெரிந்திருந்தும் வாய்மூடி மெளனியாகவே இருந்தார். 2. கருணாநிதியின் எதிர்ப்பரசியலைக் கைவிட்டு விட்டு முத்துக்குமார் முதற்கொண்டு  தமிழக இளைஞர்களின் எழுச்சியை உபயோகித்து இந்திய அரசை ஸ்தம்பிக்க முயற்சித்திருக்க வேண்டும்....அதைவிடுத்து கொடநாட்டில் பள்ளி கொண்டிருந்தார்... 3.  சிறிதேனும் உண்மையான அக்கறை அவருக்கு தமிழர்பா...

யார் நமக்கு எதிரி?

ஈழப்போராட்டம் பல படிநிலைகளைக்கொண்டது, தந்தை செல்வாவில் ஆரம்பித்து, பல்வேறு போராளிக்குழுக்களில் தொடங்கி புலிகளால் வலுப்பெற்றது. மற்ற போராளிக்குழுக்களிலிருந்து புலிகளின் கைகளுக்கு முழுதும் மாறியதெப்படி?  இந்தியப்பெருந்தலைவர் இந்திராகாந்தி அவர்கள் எல்லா போராளிக்குழுக்களையும் ஆராய்ந்து புலிகள் தான் எல்லோரிலும் வலுவானவர்களாகவும் , சரியான சிந்தனைப்போக்குடையவர்களாகவும் இருப்பதாக தீர்மானித்தார்கள். அதனால் விடுதலைப்புலிகளுக்கு கூடுதல் ஆயுத பலம் மட்டுமல்ல , தார்மீக ஆதரவுத்தளமும்  கிடைத்தது.  தமிழகத்தில் எம் ஜி ஆர் அவர்களுமே விடுதலைப்புலிகளை நம்பிய அளவிற்கு மற்ற குழுக்களை நம்பவில்லை. ஏன் கலைஞர் கூட சகோதர யுத்தம் வேண்டாம் வேண்டாமென தலையில் அடித்துக்கொண்டாரே தவிர ஒரு சந்தர்ப்பத்தில் கூட புலிகளை இடித்துரைத்தாரில்லை. தனது இறுதிக்காலம்  வரை சகோதர யுத்தத்தினால் தான் புலிகள் வீழ்ந்தார்களென்பதை உறுதியாக நம்பினார். அதற்காக புலிகளை வெறுத்தாரா என்றால் ஒருகணமும் வெளிப்படையாக அவர் சொன்னதில்லை.  புலிகளால் அவர்களது மிதமிந்திய ஹீரோயிசத்தால் அதிகம் இழந்த அரசியல் கட்சி ஒன்று உலகில் இருக்கும...

செயற்கரிய செய்வர் பெரியர்….திரு.பொள்ளாச்சி நசன்.!

இந்தப்பதிவினை 2009 ல் எழுதினேன். படித்த நண்பர்கள் அனைவரும் , இது எமக்கு புதிய செய்தியே என்றார்கள்....நல்லசெய்தியினை நாலு பேருக்கு தெரியும்படி மீண்டும் உரக்கச்சொல்வதில் தவறில்லையே. அதனால் இந்த மீள்பதிவு..... நவம்பர் 2009 க்கும் 2012க்கும் இடைப்பட்ட காலவெளியில் 'தமிழம்' இணையம் தான் எத்துணை வளர்ந்திருக்கிறது? வாழ்த்துக்களும் ! , வணக்கங்களும்! த ற்செய லாக நேற்றிரவு வலையில் உலாவிக்கொண்டிருந்தேன்….மேற்கண்ட தலைப்பிலிருக்கும் குறள்மொழிக்கேற்ப , அரியதொன்றை செய்து கொண்டிருக்கும் திரு. பொள்ளாச்சி நசன் அவர்களைப் பற்றியும் , அவரது தமிழம் இணையம் பற்றியும் அரிய நேரிட்டது. உங்களில் சிற்றிதழ் தொடர்புபட்ட பலரும் அவரை அறிந்திருக்கக் கூடும்…….இன்னும் பலர் அவரைப் பற்றி அறிந்திருக்காமலும் இருக்கக் கூடும்…..என்னைப் போல..! அதனால் ஒரு சின்ன அறிமுகம்… ( சூரியனுக்கே டார்ச்சா என்று திரு.நசன் அவர்கள் கோவித்துக்கொள்ளக் கூடாது…!!) பொள்ளாச்சி நசன் என்று தன் பெயரை வழங்கும் மணிப்பிள்ளை நடேசன் தமிழம் என்னும் வலையிதழின் ஆசிரியர். இவர் சிதம்பரத்தில், செப்டம்பர் 15, 1952 அன்று பிறந்தார். பொள்ளாச்ச...