Skip to main content

அமெரிக்க ஊடகங்கள் திவால்!!

உலகத்தின் அனைத்துப் பகுதிகளையும் பாதித்திருக்கும் இந்தப் பொருளாதாரத் தேக்கம் யாரையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் ஜவுளித் தொழிலில் பல்லாயிரக் கணக்கானோர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. உலக போலிஸான அமெரிக்காவிலோ நிலைமை படுமோசம். லேஹ்மான் பிரதர்ஸில் ஆரம்பித்த திவால் புயல் , இப்போது அமெரிக்க பத்திரிகையுலகையே ஆட்டம் காண வைத்திருக்கிறது.

தொடர்ச்சியான நிறுவனங்களின் திவால் நோட்டீஸ் , பத்திரிகைகளின் விளம்பர வருவாயை வெகுவாக குறைத்துவிட்டது.

அனேக அமெரிக்க ஊடகங்கள் பொருளாதாரச்சூறாவளியில் சிக்கித் தவிக்கின்றன.......அதனால் நிறைய பத்திரிகையாளர்கள் மற்றும் அது சார்ந்த பணியாளர்கள் வேலை இழப்பது தொடர்கதையாகி வருகிறது.


அதனால் பொருளாதாரச் சிக்கலின் புதிய சேதாரமாக டிரிப்யூன் கம்பெனி - அமெரிக்காவின் புகழ் பெற்ற லாஸ் ஏன்சல்ஸ் டைம் மற்றும் சிகாகோ ட்ரிப்யூன் பத்திரிகைகளையும் , 23 தொலைக்காட்சி சேனல்களையும் மற்றும் 12 பத்திரிகைகளையும் கொண்ட இந்த மாபெரும் மீடியா கம்பெனி ஏற்கெனவே மஞ்சள் நோட்டீஸ் கொடுத்துவிட்டது. ட்ரிப்யூன் கம்பெனியின் தலைமை நிர்வாகி திரு.சாம் ஜெல் குறிப்பிட்டதாவது , நிறுவனத்தின் மொத்த மதிப்பான 7. 6 பில்லியன் டாலர்களை விட கடனானது 13 பில்லியனைத் தாண்டுவதாகவும் , நிலைமை தங்களுடைய கட்டுப்பாட்டில் இல்லை எனவும் , வருவாயானது அதல பாதாளத்திற்கு சென்று விட்டதாகவும் சொல்லியிருக்கிறார்.

நியூயார்க் டைம்ஸின் பிரபல பத்திரிகையாளர் திரு. காஃர் குறிப்பிடும்போது , "ஊடகத் துறையினர் பெரும்பாலும் விளம்பரத்தை நம்பியே இருப்பதால் பொருளாதாரச் சுனாமியில் அவர்களும் சிக்கிக் கொண்டார்கள்.......என்றார்.


நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை தன்னுடைய தலைமை அலுவலகத்தை அடகு வைத்து 225 மில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாக பெறுகிறது. தங்கள் நிறுவனத்தை நடத்த இதை விட வேறு வழி தெரியவில்லை என்றும் சொல்லியிருக்கிறது அது. அந்நிறுவனத்தின் பங்குகள் 55 சதவித மதிப்பை இந்த வருடத்தில் இழந்திருக்கிறது..மொத்த நிதி நெருக்கடி மதிப்பு 400 மில்லியன் டாலர்கள்.

சி.பி.எஸ் செய்தித் தொலைக்காட்சி பங்கு மதிப்புகள் 5 டாலருக்கும் குறைவாக வீழ்ச்சியுற்றிருக்கின்றன. நியூஸ் கார்ப் பங்குகள் 6 டாலருக்கும் கீழே போய்விட்டன. டைம் வார்னர் குழுமத்தின் பங்குகள் 8 டாலருக்கும் கீழே வீழ்ச்சியடைந்திருக்கின்றன.

அமெரிக்காவின் மூன்றாவது பெரிய மீடியாவான மெக் க்ளாத்தி குழுமம் 30 பத்திரிகைகளை நடத்தி வருகிறது..அதன் முக்கிய பத்திரிகையான மியாமி ஹெரால்டை விற்பனைக்கு என்று அறிவித்திருக்கிறது. அந்த மியாமி ஹெரால்டு பத்திரிகையின் சர்க்குலேசம் 210000 பிரதிகளுக்கு மேல் , அது மட்டுமின்றி 19 புலிட்சர் விருதுகளையும் பெற்ற பத்திரிகை அது.

தற்போதைய நிலவரப்படி , அமெரிக்காவின் மொத்த பத்திரிகைகளின் விளம்பர வருமானம் 2 பில்லியன் டாலர்கள்....இது மூன்றாவது காலாண்டில் 18.1 சதவீதம் வீழ்ச்சி கண்டிருக்கிறது. இணைய வருமான வீழ்ச்சியும் இரண்டாவது காலாண்டாக தொடர்கிறது. , யு.எஸ்.ஏ டுடே பத்திரிக்கை ஏற்கெனவே ஆட்குறைப்பை அறிவித்திருக்கிறது. போன வாரம் தான் சிகாகோ ட்ரிப்யூன் ஆட்குறைப்பை அறிவித்திருந்தது. யு.எஸ்.ஏ டுடே வின் தாய்க் குழுமமான கேன் னெட் தன்னிடமுள்ள 80 பத்திரிகைகளின் ஊழியர்களில் பத்து சதம் பேரை வெளியேற்றப்போவதாக அறிவித்திருக்கிறது.

17 உறுப்பினர்களைக் கொண்ட காக்ஸ் குழுமமோ , தனது வாஷிங்டன் செயல்பாட்டை மூடப் போவதாக அறிவித்திருக்கிறது.. மில்வாய்ஃக்கி ஜோர்னல் - சென் டினல் ஏற்கெனவே 20 சத ஊழியர்களை வெளியேற்றிவிட்டன. பெரும்பாலான அமெரிக்க ஊடகங்கள் தங்களது வெளி நாட்டு பிரிவுகளை மூடிவிட்டன.

மொழி பெயர்ப்பு - மதிபாலா

நன்றி -நியுஇந்த்பிரஸ்

Comments

Popular posts from this blog

இதற்குத்தானா ஆசைப்பட்டீர்கள் திரு.சீமான்?

இன்று சீமான் அதிமுக கூட்டணியில் இருந்து பிரச்சாரம் பண்ணப்போவதாக ஒரு செய்தி வந்திருக்கிறது..ஏற்கெனவே ஒருமுறை செய்த பாரிய தவறொன்றை மற்றொருமுறை செய்யமாட்டார் என்றே நினைத்திருந்தேன்....இது உண்மையான செய்தியாய் இருந்தால் பேரிடிதான்..!!!! மாறாக உணர்வுள்ள இளைஞர்கள் தம் பின்னால் பேரெழுச்சியுடன் நாம் தமிழராய் எழும்போது.....அதைக்கொண்டுபோய் போய்ஸ்தோட்டத்திற்கு தாரைவார்த்துக்கொடுப்பதென்பது கனவிலும் சகிக்க முடியாத செயல்....!!  கருணாநிதிக்கு ஈழ அழிவிற்கு எவ்வளவுக்கெவ்வளவு பங்கிருக்கிறதோ அதே அளவிற்கு  சக பங்குள்ளவரே செயலலிதா... செயலலிதா என்ன செய்திருக்க வேண்டும்? என்ன செய்தார்? 1.எதிர்கட்சியாக மாபெரும் போராட்டங்களை நடாத்தியிருக்க வேண்டும்...அழிவது நம்சொந்தங்களே என்று தெரிந்திருந்தும் வாய்மூடி மெளனியாகவே இருந்தார். 2. கருணாநிதியின் எதிர்ப்பரசியலைக் கைவிட்டு விட்டு முத்துக்குமார் முதற்கொண்டு  தமிழக இளைஞர்களின் எழுச்சியை உபயோகித்து இந்திய அரசை ஸ்தம்பிக்க முயற்சித்திருக்க வேண்டும்....அதைவிடுத்து கொடநாட்டில் பள்ளி கொண்டிருந்தார்... 3.  சிறிதேனும் உண்மையான அக்கறை அவருக்கு தமிழர்பா...

ஒற்றையாட்சி முறையா, பிரிவினைக்கான அடித்தளமா?

இந்தியா பன்முகத் தன்மை கொண்ட நாடு. வேற்றுமையில் ஒற்றுமையே நமது பலம்.. நீங்கள் விரும்பினாலோ விரும்பாவிட்டாலோ இந்தியாவில் பல்லினங்கள் உண்டு, பல மொழிகள் உண்டு , பல பழக்கவழக்கங்கள் உண்டு , இவற்றை ஏற்றுக்கொண்டு , சகிப்புத்தன்மையோடு எல்லோரும் ஓரினமாய் வாழ்வதே இந்தியா வாழ்வாங்கு வாழ்வதற்கான வழிமுறை. அதைவிடுத்து , ஒற்றையாட்சியை நிறுவுவோம் என்று சொல்லிக்கொண்டிருந்தால் இந்தியா எனும் நாடு இருக்குமா என்பதே கேள்விக்குறி!!! குறிப்பாக , வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் " நீட்" தேர்வு... எனக்கென்று என்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசும் , என்னால், என் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களெல்லாரும் சேர்ந்து நீட் எமக்கு வேண்டாம் என்று தீர்மானம் செய்கிற போது அதை வலிந்து எம் மேல் திணிக்க இந்திய நடுவண் அரசுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்ற கேள்வியெழுப்புவதில் தவறென்ன இருக்கிறது? பல பத்து சின்னஞ்சிறு நாடுகளாய் ஐரோப்பியாவில் பரவிக்கிடப்பதற்கு பாரிய காரணமென்ன? மொழி மற்றும் இனங்களால் அவர்கள் பிளவுபட்டிருக்கிறார்கள்... அதனால் தான் இந்தியாவின் பன்முகத் தன்மைக்கேற்ப மொழிவாரி மாநிலங்களை அமை...

பூட்டிய இரும்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது!

சீமான்களின் சபையினிலேயே , கடிதம் எழுதி எழுதிக் களைத்துப்போனதோர் கிழட்டுச் சிங்கம்.....முன்னாலுக்கும் முன்னால் அவர் கொண்ட தமிழ்ப்பற்று.....இன்னாளில் அது தமது மக்கட்பற்றாய் மாறிப்போனதொரு சோகம். ஏதோவொரு புண்ணியத்தில், எவரோ செய்த வரலாற்றுத் தவறால் , கொள்கை , தொலைநோக்கு , மக்கட்பற்று இவை பற்றிய சிந்தையேதுமின்றி அரசியலில் விபத்தாய் விளைந்த கொடநாட்டு ஈழத்தாய்....தேர்தலுக்குத் தேர்தல் மட்டுமே தமிழர் பற்றியும் , தமிழர் அரசியல் பற்றியும் எழுதி வைத்துப் பேசும் செல்வி யவர்.........இன்னமும் அவர் சேலை பிடித்துத்திரியும் வீணர் கூட்டம்.! கூட்டணிக்கேற்றப்படி கொள்கையை மாற்றிக்கொள்ளும் மருத்துவப் படையாச்சி.........வீரமிகு வன்னியகுலத்திலே வந்துதித்த சந்தர்ப்பவாதச் சாக்கடை....சமரசமற்ற கொள்கை அரசியலை சந்தர்ப்பவாதச் சாக்கடைக்குள் தள்ளிய பெருமைக்குரிய மருத்துவர் தமிழ்க்குடிதாங்காத தமிழ்க்குடிதாங்கி! யாரை எதற்காக எதிர்த்து அரசியல் செய்யவேண்டுமே அவர்களோடே தம் தேவைக்குதந்த படி கூட்டு வைத்துக்கொண்டு ஈழத்திற்க்காய் எந்நேரமும் பாடுபடும் திரு.வைகோ அவர்கள்....அவரும் சிறை சென்றார்....