Skip to main content

அமெரிக்க ஊடகங்கள் திவால்!!

உலகத்தின் அனைத்துப் பகுதிகளையும் பாதித்திருக்கும் இந்தப் பொருளாதாரத் தேக்கம் யாரையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் ஜவுளித் தொழிலில் பல்லாயிரக் கணக்கானோர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. உலக போலிஸான அமெரிக்காவிலோ நிலைமை படுமோசம். லேஹ்மான் பிரதர்ஸில் ஆரம்பித்த திவால் புயல் , இப்போது அமெரிக்க பத்திரிகையுலகையே ஆட்டம் காண வைத்திருக்கிறது.

தொடர்ச்சியான நிறுவனங்களின் திவால் நோட்டீஸ் , பத்திரிகைகளின் விளம்பர வருவாயை வெகுவாக குறைத்துவிட்டது.

அனேக அமெரிக்க ஊடகங்கள் பொருளாதாரச்சூறாவளியில் சிக்கித் தவிக்கின்றன.......அதனால் நிறைய பத்திரிகையாளர்கள் மற்றும் அது சார்ந்த பணியாளர்கள் வேலை இழப்பது தொடர்கதையாகி வருகிறது.


அதனால் பொருளாதாரச் சிக்கலின் புதிய சேதாரமாக டிரிப்யூன் கம்பெனி - அமெரிக்காவின் புகழ் பெற்ற லாஸ் ஏன்சல்ஸ் டைம் மற்றும் சிகாகோ ட்ரிப்யூன் பத்திரிகைகளையும் , 23 தொலைக்காட்சி சேனல்களையும் மற்றும் 12 பத்திரிகைகளையும் கொண்ட இந்த மாபெரும் மீடியா கம்பெனி ஏற்கெனவே மஞ்சள் நோட்டீஸ் கொடுத்துவிட்டது. ட்ரிப்யூன் கம்பெனியின் தலைமை நிர்வாகி திரு.சாம் ஜெல் குறிப்பிட்டதாவது , நிறுவனத்தின் மொத்த மதிப்பான 7. 6 பில்லியன் டாலர்களை விட கடனானது 13 பில்லியனைத் தாண்டுவதாகவும் , நிலைமை தங்களுடைய கட்டுப்பாட்டில் இல்லை எனவும் , வருவாயானது அதல பாதாளத்திற்கு சென்று விட்டதாகவும் சொல்லியிருக்கிறார்.

நியூயார்க் டைம்ஸின் பிரபல பத்திரிகையாளர் திரு. காஃர் குறிப்பிடும்போது , "ஊடகத் துறையினர் பெரும்பாலும் விளம்பரத்தை நம்பியே இருப்பதால் பொருளாதாரச் சுனாமியில் அவர்களும் சிக்கிக் கொண்டார்கள்.......என்றார்.


நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை தன்னுடைய தலைமை அலுவலகத்தை அடகு வைத்து 225 மில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாக பெறுகிறது. தங்கள் நிறுவனத்தை நடத்த இதை விட வேறு வழி தெரியவில்லை என்றும் சொல்லியிருக்கிறது அது. அந்நிறுவனத்தின் பங்குகள் 55 சதவித மதிப்பை இந்த வருடத்தில் இழந்திருக்கிறது..மொத்த நிதி நெருக்கடி மதிப்பு 400 மில்லியன் டாலர்கள்.

சி.பி.எஸ் செய்தித் தொலைக்காட்சி பங்கு மதிப்புகள் 5 டாலருக்கும் குறைவாக வீழ்ச்சியுற்றிருக்கின்றன. நியூஸ் கார்ப் பங்குகள் 6 டாலருக்கும் கீழே போய்விட்டன. டைம் வார்னர் குழுமத்தின் பங்குகள் 8 டாலருக்கும் கீழே வீழ்ச்சியடைந்திருக்கின்றன.

அமெரிக்காவின் மூன்றாவது பெரிய மீடியாவான மெக் க்ளாத்தி குழுமம் 30 பத்திரிகைகளை நடத்தி வருகிறது..அதன் முக்கிய பத்திரிகையான மியாமி ஹெரால்டை விற்பனைக்கு என்று அறிவித்திருக்கிறது. அந்த மியாமி ஹெரால்டு பத்திரிகையின் சர்க்குலேசம் 210000 பிரதிகளுக்கு மேல் , அது மட்டுமின்றி 19 புலிட்சர் விருதுகளையும் பெற்ற பத்திரிகை அது.

தற்போதைய நிலவரப்படி , அமெரிக்காவின் மொத்த பத்திரிகைகளின் விளம்பர வருமானம் 2 பில்லியன் டாலர்கள்....இது மூன்றாவது காலாண்டில் 18.1 சதவீதம் வீழ்ச்சி கண்டிருக்கிறது. இணைய வருமான வீழ்ச்சியும் இரண்டாவது காலாண்டாக தொடர்கிறது. , யு.எஸ்.ஏ டுடே பத்திரிக்கை ஏற்கெனவே ஆட்குறைப்பை அறிவித்திருக்கிறது. போன வாரம் தான் சிகாகோ ட்ரிப்யூன் ஆட்குறைப்பை அறிவித்திருந்தது. யு.எஸ்.ஏ டுடே வின் தாய்க் குழுமமான கேன் னெட் தன்னிடமுள்ள 80 பத்திரிகைகளின் ஊழியர்களில் பத்து சதம் பேரை வெளியேற்றப்போவதாக அறிவித்திருக்கிறது.

17 உறுப்பினர்களைக் கொண்ட காக்ஸ் குழுமமோ , தனது வாஷிங்டன் செயல்பாட்டை மூடப் போவதாக அறிவித்திருக்கிறது.. மில்வாய்ஃக்கி ஜோர்னல் - சென் டினல் ஏற்கெனவே 20 சத ஊழியர்களை வெளியேற்றிவிட்டன. பெரும்பாலான அமெரிக்க ஊடகங்கள் தங்களது வெளி நாட்டு பிரிவுகளை மூடிவிட்டன.

மொழி பெயர்ப்பு - மதிபாலா

நன்றி -நியுஇந்த்பிரஸ்

Comments

Popular posts from this blog

பூட்டிய இரும்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது!

சீமான்களின் சபையினிலேயே , கடிதம் எழுதி எழுதிக் களைத்துப்போனதோர் கிழட்டுச் சிங்கம்.....முன்னாலுக்கும் முன்னால் அவர் கொண்ட தமிழ்ப்பற்று.....இன்னாளில் அது தமது மக்கட்பற்றாய் மாறிப்போனதொரு சோகம். ஏதோவொரு புண்ணியத்தில், எவரோ செய்த வரலாற்றுத் தவறால் , கொள்கை , தொலைநோக்கு , மக்கட்பற்று இவை பற்றிய சிந்தையேதுமின்றி அரசியலில் விபத்தாய் விளைந்த கொடநாட்டு ஈழத்தாய்....தேர்தலுக்குத் தேர்தல் மட்டுமே தமிழர் பற்றியும் , தமிழர் அரசியல் பற்றியும் எழுதி வைத்துப் பேசும் செல்வி யவர்.........இன்னமும் அவர் சேலை பிடித்துத்திரியும் வீணர் கூட்டம்.! கூட்டணிக்கேற்றப்படி கொள்கையை மாற்றிக்கொள்ளும் மருத்துவப் படையாச்சி.........வீரமிகு வன்னியகுலத்திலே வந்துதித்த சந்தர்ப்பவாதச் சாக்கடை....சமரசமற்ற கொள்கை அரசியலை சந்தர்ப்பவாதச் சாக்கடைக்குள் தள்ளிய பெருமைக்குரிய மருத்துவர் தமிழ்க்குடிதாங்காத தமிழ்க்குடிதாங்கி! யாரை எதற்காக எதிர்த்து அரசியல் செய்யவேண்டுமே அவர்களோடே தம் தேவைக்குதந்த படி கூட்டு வைத்துக்கொண்டு ஈழத்திற்க்காய் எந்நேரமும் பாடுபடும் திரு.வைகோ அவர்கள்....அவரும் சிறை சென்றார்.

நண்பர் 'டோண்டு' ராகவன்...

உயிரோடு இருக்கும்வரை அறிக்கைகளால் அர்சித்து எதிர்ப்பரசியல் நடாத்தி செத்துபோன பிறகு ஆருயிர் நண்பர் என்று அழைத்துக்கொள்ளும் எல்லா அரசியல்வாதிகளையும் போலவே நான். எனக்கும் மறைந்த உயர்திரு 'டோண்டு' ராகவன் அவர்களுக்குமான பரிச்சயம் அவ்வளவொன்றும் அதிகமில்லைதான். பதிவுலகையும் , பர்ஸனல் லைப்பையும் பிரித்து வைத்துக்கொள்ளும் எண்ணமுடைய நான் , டோண்டு மட்டுமல்ல மற்றபல பதிவுலக நண்பர்களுடனும் கூட தனிப்பட்ட தொடர்புகளை வைத்துக்கொண்டதில்லை... இருந்தாலும் , அவ்வப்போது பதிவுலக பின்னூட்டங்களின்பாலே தொடர்ந்துகொண்டிருந்த தொடர்பு , எனது 'போலி டோண்டு' பற்றிய கட்டுரையொன்றிலேயே  தீவிர விவாதமாக மாறியது.. ஆயிரம் விமர்சனங்கள் அவர் மீதோ இல்லை அவர்தம் பிற்போக்கான கருத்துக்கள் மீதோ இருந்திருக்கலாம். கடினமாக ஓரிரு முறை பேசியிருக்கலாம்.. அத்தனையும் தாண்டி அவர் மிக நல்ல மனிதர் , கடும் உழைப்பாளி என்பதை அவரது பதிவுலகம் மூலமாக அறிந்தவனெனினும் உறுதியாக கூறவியலும்.. அத்தகைய நல்ல மனிதரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் , நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்... வருத்தங்கள

எஸ்.எஸ்.பொன்முடி - மனிதருள் மாணிக்கம்.

எஸ்.எஸ்.பொன்முடி , கொங்குச்சீமையிலே குறிப்பாக பல்லடம் , சூலூர் வட்டாரத்தில் தெரியாதவர்கள் சொற்பமே. எஸ்.எஸ். பொன்முடி அவர்கள் மட்டுமல்ல , அவர்களது குடும்பமே சூலூரில் பழம்பெருமை மிக்க குடும்பம். காலங்காலமாக அவர்களது குடும்பத்தினரே சூலூரின் அனைத்து தேர்தல்களிலும் வென்றதும் , வெல்வதும் வரலாறு. பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்தவராயினும் மாற்றுக்கட்சியினராலும் மதிக்கப்படும் சில மனிதர்களில் எஸ்.எஸ் பொன்முடியும் ஒருவர். அவருக்கும் , எனக்குமான பரிச்சயமொன்றும் அவ்வளவு அதிகமில்லைதான். அப்போது எனக்கு ஒரு பத்திலிருந்து , பதினைந்து வயதிருந்திருக்கலாம். கலங்கலில் கவுன்சிலர் தங்கவேலு சர்வ அதிகாரமும் பொருந்தியவராய் வலம் வந்துகொண்டிருந்தார். அவர் எஸ்.எஸ்.பொன்முடியின் வலக்கரம். ஊருக்கு மேற்கே ஜல்லிக்குழி என்ற மனிதர்கள் உபயோகப்படுத்த முடியாத , இயலாத பகுதி ஒன்றிருந்தது.....அப்போது கழகம் ஆட்சியிலிருந்தது + பொன்முடி எம்.எல்.ஏவாக இருந்தார். கட்சிக்காரர்கள் , குறிப்பாக ஒடுக்கப்பட்ட , மிக பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் கேட்டுக்கொண்டதற்காக , மிகுந்த பிரயாசைப்பட்டு தங்கவேல் மற்றும் எஸ்.எஸ்.பொன்முடி அவ