Skip to main content

பருவப் பலாச்சுளையும் பக்குவத்து கொய்யாவும்..!!

வெளிநாடுகளில் , டாடி , மம்மியைத் தவிர மற்ற எல்லோரையும் அங்கிள் , ஆன் ட்டி என்ற இரண்டே வார்த்தைகளில் முடித்து விடுகிறார்கள்...ஆனால் தமிழர்கள் மட்டும்தான் மாமன் , மச்சான் , சித்தப்பா , பெரியம்மா , மச்சினன் , கொழுந்தன் என்று உறவுகளைக் கொண்டாடுகிறார்கள்......கொஞ்சம் தலைமுறை விட்டுப்போயிருந்தாலும் பங்காளி என்றும் , மிக நாட்பட்ட உறவுகளுக்கு கூட்டம் , குலம் என்றும் தங்களின் மூதாதையர்களுக்கு மதிப்புக் கொடுப்பவர்களாய் இருக்கிறார்கள்....

இன்றைக்கும் கொங்கு நாட்டிலும் சரி , தெற்கத்தி மண்ணிலும் சரி , மற்ற எல்லா உறவுகளுக்கும் இல்லாத ஒரு உரிமை தாய் மாமன் என்கிற உறவுக்கு இருக்கிறது. தன் உடன்பிறப்பின் ( பெண்) குழந்தைக்கு பேர் வைப்பது முதற்கொண்டு , முதல் மொட்டை , காது குத்து , பூப்படைகையில் குச்சு கட்டுவது என்று ஒரு தமிழ்ப்பெண்ணின் வாழ்க்கையில் அழியாத இடம் பெறுகிறது தாய் மாமன் உறவு.

தமிழகத்தின் வாழ்வியலையும் , பெருமைகளையும் , போர் திறனையும் பாட்டால் பாடி வைத்துப்போயினர் சங்க காலத்து தமிழ்ப்புலவர்கள்.....பாட்டால் பாடாத உறவுகளையும் , பெருமைகளையும் வாய்வழியாகவே தாலாட்டாகவும் , நாட்டுப்புறப் பாட்டுக்களாகவும் காத்து தன் கருவில் வைத்திருக்கிறது தமிழ்ச் சமுதாயம்....!!!

அத்தகைய தாலாட்டில் தாய்மாமன் கொண்டு வரும் சீரைப் பற்றிய ஒரு அழகு பிள்ளைத் தமிழ்.....!!!!!



கற்பகத்தைத் தேடி கனிந்து வரும்போது
உன்னரிய அம்மான்மார் என்ன கொண்டு வந்தார்கள்
கொத்துவிடா நெத்தும், கோதுபடா மாங்கனியும்
பருவப் பலாச்சுளையும் பக்குவத்து கொய்யாவும்
அக்கரையில் சர்க்கரையும், அதிமதுர தென்னவட்டும்
காய்ச்சிய பாலும், கற்கண்டும், செந்தேனும்
ஏலங்கிராம்பும், இளங்கொடிக்கால் வெற்றிலையும்
சாதிக் களிப்பாக்கும், சங்கு வெள்ளைச் சுண்ணாம்பும்
அத்தனையும் கொண்டுன்னை அறிய வந்தார்அம்மான்மார்
கனிவருக்கம் கொண்டுன்னை காண வந்தார் அம்மான்மார்
பழவருக்கம் கொண்டுன்னை பார்க்க வந்தார் அம்மான்மார்
போட்டு விளையாடப் பொன்னாலே அம்மானை
வைத்து விளையாட வண்ணக்கிலுகிலுப்பை
கட்டி விளையாடக் காசிச் சிண்டுமணி
ஓட்டி விளையாட ஒயிலா ரெயில் வண்டி
நெத்திக்குச் சுட்டி, நிழல் பார்க்கக் கண்ணாடி
காலுக்குத் தண்டை, கைக்குக் கணையாழி
கொண்டு வந்தும் காண்பார்கள், கோதைக்கிளிக்கம்மான்மார்
சங்கினால் பால் கொடுத்தால் சந்தனவாய் நோகுமென்று
தங்கத்தால் சங்கு செய்து தருவாரே தாய்மாமன்

Comments

Popular posts from this blog

இதற்குத்தானா ஆசைப்பட்டீர்கள் திரு.சீமான்?

இன்று சீமான் அதிமுக கூட்டணியில் இருந்து பிரச்சாரம் பண்ணப்போவதாக ஒரு செய்தி வந்திருக்கிறது..ஏற்கெனவே ஒருமுறை செய்த பாரிய தவறொன்றை மற்றொருமுறை செய்யமாட்டார் என்றே நினைத்திருந்தேன்....இது உண்மையான செய்தியாய் இருந்தால் பேரிடிதான்..!!!! மாறாக உணர்வுள்ள இளைஞர்கள் தம் பின்னால் பேரெழுச்சியுடன் நாம் தமிழராய் எழும்போது.....அதைக்கொண்டுபோய் போய்ஸ்தோட்டத்திற்கு தாரைவார்த்துக்கொடுப்பதென்பது கனவிலும் சகிக்க முடியாத செயல்....!!  கருணாநிதிக்கு ஈழ அழிவிற்கு எவ்வளவுக்கெவ்வளவு பங்கிருக்கிறதோ அதே அளவிற்கு  சக பங்குள்ளவரே செயலலிதா... செயலலிதா என்ன செய்திருக்க வேண்டும்? என்ன செய்தார்? 1.எதிர்கட்சியாக மாபெரும் போராட்டங்களை நடாத்தியிருக்க வேண்டும்...அழிவது நம்சொந்தங்களே என்று தெரிந்திருந்தும் வாய்மூடி மெளனியாகவே இருந்தார். 2. கருணாநிதியின் எதிர்ப்பரசியலைக் கைவிட்டு விட்டு முத்துக்குமார் முதற்கொண்டு  தமிழக இளைஞர்களின் எழுச்சியை உபயோகித்து இந்திய அரசை ஸ்தம்பிக்க முயற்சித்திருக்க வேண்டும்....அதைவிடுத்து கொடநாட்டில் பள்ளி கொண்டிருந்தார்... 3.  சிறிதேனும் உண்மையான அக்கறை அவருக்கு தமிழர்பா...

ஒற்றையாட்சி முறையா, பிரிவினைக்கான அடித்தளமா?

இந்தியா பன்முகத் தன்மை கொண்ட நாடு. வேற்றுமையில் ஒற்றுமையே நமது பலம்.. நீங்கள் விரும்பினாலோ விரும்பாவிட்டாலோ இந்தியாவில் பல்லினங்கள் உண்டு, பல மொழிகள் உண்டு , பல பழக்கவழக்கங்கள் உண்டு , இவற்றை ஏற்றுக்கொண்டு , சகிப்புத்தன்மையோடு எல்லோரும் ஓரினமாய் வாழ்வதே இந்தியா வாழ்வாங்கு வாழ்வதற்கான வழிமுறை. அதைவிடுத்து , ஒற்றையாட்சியை நிறுவுவோம் என்று சொல்லிக்கொண்டிருந்தால் இந்தியா எனும் நாடு இருக்குமா என்பதே கேள்விக்குறி!!! குறிப்பாக , வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் " நீட்" தேர்வு... எனக்கென்று என்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசும் , என்னால், என் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களெல்லாரும் சேர்ந்து நீட் எமக்கு வேண்டாம் என்று தீர்மானம் செய்கிற போது அதை வலிந்து எம் மேல் திணிக்க இந்திய நடுவண் அரசுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்ற கேள்வியெழுப்புவதில் தவறென்ன இருக்கிறது? பல பத்து சின்னஞ்சிறு நாடுகளாய் ஐரோப்பியாவில் பரவிக்கிடப்பதற்கு பாரிய காரணமென்ன? மொழி மற்றும் இனங்களால் அவர்கள் பிளவுபட்டிருக்கிறார்கள்... அதனால் தான் இந்தியாவின் பன்முகத் தன்மைக்கேற்ப மொழிவாரி மாநிலங்களை அமை...

பூட்டிய இரும்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது!

சீமான்களின் சபையினிலேயே , கடிதம் எழுதி எழுதிக் களைத்துப்போனதோர் கிழட்டுச் சிங்கம்.....முன்னாலுக்கும் முன்னால் அவர் கொண்ட தமிழ்ப்பற்று.....இன்னாளில் அது தமது மக்கட்பற்றாய் மாறிப்போனதொரு சோகம். ஏதோவொரு புண்ணியத்தில், எவரோ செய்த வரலாற்றுத் தவறால் , கொள்கை , தொலைநோக்கு , மக்கட்பற்று இவை பற்றிய சிந்தையேதுமின்றி அரசியலில் விபத்தாய் விளைந்த கொடநாட்டு ஈழத்தாய்....தேர்தலுக்குத் தேர்தல் மட்டுமே தமிழர் பற்றியும் , தமிழர் அரசியல் பற்றியும் எழுதி வைத்துப் பேசும் செல்வி யவர்.........இன்னமும் அவர் சேலை பிடித்துத்திரியும் வீணர் கூட்டம்.! கூட்டணிக்கேற்றப்படி கொள்கையை மாற்றிக்கொள்ளும் மருத்துவப் படையாச்சி.........வீரமிகு வன்னியகுலத்திலே வந்துதித்த சந்தர்ப்பவாதச் சாக்கடை....சமரசமற்ற கொள்கை அரசியலை சந்தர்ப்பவாதச் சாக்கடைக்குள் தள்ளிய பெருமைக்குரிய மருத்துவர் தமிழ்க்குடிதாங்காத தமிழ்க்குடிதாங்கி! யாரை எதற்காக எதிர்த்து அரசியல் செய்யவேண்டுமே அவர்களோடே தம் தேவைக்குதந்த படி கூட்டு வைத்துக்கொண்டு ஈழத்திற்க்காய் எந்நேரமும் பாடுபடும் திரு.வைகோ அவர்கள்....அவரும் சிறை சென்றார்....