Skip to main content

பருவப் பலாச்சுளையும் பக்குவத்து கொய்யாவும்..!!

வெளிநாடுகளில் , டாடி , மம்மியைத் தவிர மற்ற எல்லோரையும் அங்கிள் , ஆன் ட்டி என்ற இரண்டே வார்த்தைகளில் முடித்து விடுகிறார்கள்...ஆனால் தமிழர்கள் மட்டும்தான் மாமன் , மச்சான் , சித்தப்பா , பெரியம்மா , மச்சினன் , கொழுந்தன் என்று உறவுகளைக் கொண்டாடுகிறார்கள்......கொஞ்சம் தலைமுறை விட்டுப்போயிருந்தாலும் பங்காளி என்றும் , மிக நாட்பட்ட உறவுகளுக்கு கூட்டம் , குலம் என்றும் தங்களின் மூதாதையர்களுக்கு மதிப்புக் கொடுப்பவர்களாய் இருக்கிறார்கள்....

இன்றைக்கும் கொங்கு நாட்டிலும் சரி , தெற்கத்தி மண்ணிலும் சரி , மற்ற எல்லா உறவுகளுக்கும் இல்லாத ஒரு உரிமை தாய் மாமன் என்கிற உறவுக்கு இருக்கிறது. தன் உடன்பிறப்பின் ( பெண்) குழந்தைக்கு பேர் வைப்பது முதற்கொண்டு , முதல் மொட்டை , காது குத்து , பூப்படைகையில் குச்சு கட்டுவது என்று ஒரு தமிழ்ப்பெண்ணின் வாழ்க்கையில் அழியாத இடம் பெறுகிறது தாய் மாமன் உறவு.

தமிழகத்தின் வாழ்வியலையும் , பெருமைகளையும் , போர் திறனையும் பாட்டால் பாடி வைத்துப்போயினர் சங்க காலத்து தமிழ்ப்புலவர்கள்.....பாட்டால் பாடாத உறவுகளையும் , பெருமைகளையும் வாய்வழியாகவே தாலாட்டாகவும் , நாட்டுப்புறப் பாட்டுக்களாகவும் காத்து தன் கருவில் வைத்திருக்கிறது தமிழ்ச் சமுதாயம்....!!!

அத்தகைய தாலாட்டில் தாய்மாமன் கொண்டு வரும் சீரைப் பற்றிய ஒரு அழகு பிள்ளைத் தமிழ்.....!!!!!



கற்பகத்தைத் தேடி கனிந்து வரும்போது
உன்னரிய அம்மான்மார் என்ன கொண்டு வந்தார்கள்
கொத்துவிடா நெத்தும், கோதுபடா மாங்கனியும்
பருவப் பலாச்சுளையும் பக்குவத்து கொய்யாவும்
அக்கரையில் சர்க்கரையும், அதிமதுர தென்னவட்டும்
காய்ச்சிய பாலும், கற்கண்டும், செந்தேனும்
ஏலங்கிராம்பும், இளங்கொடிக்கால் வெற்றிலையும்
சாதிக் களிப்பாக்கும், சங்கு வெள்ளைச் சுண்ணாம்பும்
அத்தனையும் கொண்டுன்னை அறிய வந்தார்அம்மான்மார்
கனிவருக்கம் கொண்டுன்னை காண வந்தார் அம்மான்மார்
பழவருக்கம் கொண்டுன்னை பார்க்க வந்தார் அம்மான்மார்
போட்டு விளையாடப் பொன்னாலே அம்மானை
வைத்து விளையாட வண்ணக்கிலுகிலுப்பை
கட்டி விளையாடக் காசிச் சிண்டுமணி
ஓட்டி விளையாட ஒயிலா ரெயில் வண்டி
நெத்திக்குச் சுட்டி, நிழல் பார்க்கக் கண்ணாடி
காலுக்குத் தண்டை, கைக்குக் கணையாழி
கொண்டு வந்தும் காண்பார்கள், கோதைக்கிளிக்கம்மான்மார்
சங்கினால் பால் கொடுத்தால் சந்தனவாய் நோகுமென்று
தங்கத்தால் சங்கு செய்து தருவாரே தாய்மாமன்

Comments

Popular posts from this blog

யார் நமக்கு எதிரி?

ஈழப்போராட்டம் பல படிநிலைகளைக்கொண்டது, தந்தை செல்வாவில் ஆரம்பித்து, பல்வேறு போராளிக்குழுக்களில் தொடங்கி புலிகளால் வலுப்பெற்றது. மற்ற போராளிக்குழுக்களிலிருந்து புலிகளின் கைகளுக்கு முழுதும் மாறியதெப்படி?  இந்தியப்பெருந்தலைவர் இந்திராகாந்தி அவர்கள் எல்லா போராளிக்குழுக்களையும் ஆராய்ந்து புலிகள் தான் எல்லோரிலும் வலுவானவர்களாகவும் , சரியான சிந்தனைப்போக்குடையவர்களாகவும் இருப்பதாக தீர்மானித்தார்கள். அதனால் விடுதலைப்புலிகளுக்கு கூடுதல் ஆயுத பலம் மட்டுமல்ல , தார்மீக ஆதரவுத்தளமும்  கிடைத்தது.  தமிழகத்தில் எம் ஜி ஆர் அவர்களுமே விடுதலைப்புலிகளை நம்பிய அளவிற்கு மற்ற குழுக்களை நம்பவில்லை. ஏன் கலைஞர் கூட சகோதர யுத்தம் வேண்டாம் வேண்டாமென தலையில் அடித்துக்கொண்டாரே தவிர ஒரு சந்தர்ப்பத்தில் கூட புலிகளை இடித்துரைத்தாரில்லை. தனது இறுதிக்காலம்  வரை சகோதர யுத்தத்தினால் தான் புலிகள் வீழ்ந்தார்களென்பதை உறுதியாக நம்பினார். அதற்காக புலிகளை வெறுத்தாரா என்றால் ஒருகணமும் வெளிப்படையாக அவர் சொன்னதில்லை.  புலிகளால் அவர்களது மிதமிந்திய ஹீரோயிசத்தால் அதிகம் இழந்த அரசியல் கட்சி ஒன்று உலகில் இருக்கும...

செயற்கரிய செய்வர் பெரியர்….திரு.பொள்ளாச்சி நசன்.!

இந்தப்பதிவினை 2009 ல் எழுதினேன். படித்த நண்பர்கள் அனைவரும் , இது எமக்கு புதிய செய்தியே என்றார்கள்....நல்லசெய்தியினை நாலு பேருக்கு தெரியும்படி மீண்டும் உரக்கச்சொல்வதில் தவறில்லையே. அதனால் இந்த மீள்பதிவு..... நவம்பர் 2009 க்கும் 2012க்கும் இடைப்பட்ட காலவெளியில் 'தமிழம்' இணையம் தான் எத்துணை வளர்ந்திருக்கிறது? வாழ்த்துக்களும் ! , வணக்கங்களும்! த ற்செய லாக நேற்றிரவு வலையில் உலாவிக்கொண்டிருந்தேன்….மேற்கண்ட தலைப்பிலிருக்கும் குறள்மொழிக்கேற்ப , அரியதொன்றை செய்து கொண்டிருக்கும் திரு. பொள்ளாச்சி நசன் அவர்களைப் பற்றியும் , அவரது தமிழம் இணையம் பற்றியும் அரிய நேரிட்டது. உங்களில் சிற்றிதழ் தொடர்புபட்ட பலரும் அவரை அறிந்திருக்கக் கூடும்…….இன்னும் பலர் அவரைப் பற்றி அறிந்திருக்காமலும் இருக்கக் கூடும்…..என்னைப் போல..! அதனால் ஒரு சின்ன அறிமுகம்… ( சூரியனுக்கே டார்ச்சா என்று திரு.நசன் அவர்கள் கோவித்துக்கொள்ளக் கூடாது…!!) பொள்ளாச்சி நசன் என்று தன் பெயரை வழங்கும் மணிப்பிள்ளை நடேசன் தமிழம் என்னும் வலையிதழின் ஆசிரியர். இவர் சிதம்பரத்தில், செப்டம்பர் 15, 1952 அன்று பிறந்தார். பொள்ளாச்ச...

ஒற்றையாட்சி முறையா, பிரிவினைக்கான அடித்தளமா?

இந்தியா பன்முகத் தன்மை கொண்ட நாடு. வேற்றுமையில் ஒற்றுமையே நமது பலம்.. நீங்கள் விரும்பினாலோ விரும்பாவிட்டாலோ இந்தியாவில் பல்லினங்கள் உண்டு, பல மொழிகள் உண்டு , பல பழக்கவழக்கங்கள் உண்டு , இவற்றை ஏற்றுக்கொண்டு , சகிப்புத்தன்மையோடு எல்லோரும் ஓரினமாய் வாழ்வதே இந்தியா வாழ்வாங்கு வாழ்வதற்கான வழிமுறை. அதைவிடுத்து , ஒற்றையாட்சியை நிறுவுவோம் என்று சொல்லிக்கொண்டிருந்தால் இந்தியா எனும் நாடு இருக்குமா என்பதே கேள்விக்குறி!!! குறிப்பாக , வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் " நீட்" தேர்வு... எனக்கென்று என்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசும் , என்னால், என் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களெல்லாரும் சேர்ந்து நீட் எமக்கு வேண்டாம் என்று தீர்மானம் செய்கிற போது அதை வலிந்து எம் மேல் திணிக்க இந்திய நடுவண் அரசுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்ற கேள்வியெழுப்புவதில் தவறென்ன இருக்கிறது? பல பத்து சின்னஞ்சிறு நாடுகளாய் ஐரோப்பியாவில் பரவிக்கிடப்பதற்கு பாரிய காரணமென்ன? மொழி மற்றும் இனங்களால் அவர்கள் பிளவுபட்டிருக்கிறார்கள்... அதனால் தான் இந்தியாவின் பன்முகத் தன்மைக்கேற்ப மொழிவாரி மாநிலங்களை அமை...