வெளிநாடுகளில் , டாடி , மம்மியைத் தவிர மற்ற எல்லோரையும் அங்கிள் , ஆன் ட்டி என்ற இரண்டே வார்த்தைகளில் முடித்து விடுகிறார்கள்...ஆனால் தமிழர்கள் மட்டும்தான் மாமன் , மச்சான் , சித்தப்பா , பெரியம்மா , மச்சினன் , கொழுந்தன் என்று உறவுகளைக் கொண்டாடுகிறார்கள்......கொஞ்சம் தலைமுறை விட்டுப்போயிருந்தாலும் பங்காளி என்றும் , மிக நாட்பட்ட உறவுகளுக்கு கூட்டம் , குலம் என்றும் தங்களின் மூதாதையர்களுக்கு மதிப்புக் கொடுப்பவர்களாய் இருக்கிறார்கள்....
இன்றைக்கும் கொங்கு நாட்டிலும் சரி , தெற்கத்தி மண்ணிலும் சரி , மற்ற எல்லா உறவுகளுக்கும் இல்லாத ஒரு உரிமை தாய் மாமன் என்கிற உறவுக்கு இருக்கிறது. தன் உடன்பிறப்பின் ( பெண்) குழந்தைக்கு பேர் வைப்பது முதற்கொண்டு , முதல் மொட்டை , காது குத்து , பூப்படைகையில் குச்சு கட்டுவது என்று ஒரு தமிழ்ப்பெண்ணின் வாழ்க்கையில் அழியாத இடம் பெறுகிறது தாய் மாமன் உறவு.
தமிழகத்தின் வாழ்வியலையும் , பெருமைகளையும் , போர் திறனையும் பாட்டால் பாடி வைத்துப்போயினர் சங்க காலத்து தமிழ்ப்புலவர்கள்.....பாட்டால் பாடாத உறவுகளையும் , பெருமைகளையும் வாய்வழியாகவே தாலாட்டாகவும் , நாட்டுப்புறப் பாட்டுக்களாகவும் காத்து தன் கருவில் வைத்திருக்கிறது தமிழ்ச் சமுதாயம்....!!!
அத்தகைய தாலாட்டில் தாய்மாமன் கொண்டு வரும் சீரைப் பற்றிய ஒரு அழகு பிள்ளைத் தமிழ்.....!!!!!
இன்றைக்கும் கொங்கு நாட்டிலும் சரி , தெற்கத்தி மண்ணிலும் சரி , மற்ற எல்லா உறவுகளுக்கும் இல்லாத ஒரு உரிமை தாய் மாமன் என்கிற உறவுக்கு இருக்கிறது. தன் உடன்பிறப்பின் ( பெண்) குழந்தைக்கு பேர் வைப்பது முதற்கொண்டு , முதல் மொட்டை , காது குத்து , பூப்படைகையில் குச்சு கட்டுவது என்று ஒரு தமிழ்ப்பெண்ணின் வாழ்க்கையில் அழியாத இடம் பெறுகிறது தாய் மாமன் உறவு.
தமிழகத்தின் வாழ்வியலையும் , பெருமைகளையும் , போர் திறனையும் பாட்டால் பாடி வைத்துப்போயினர் சங்க காலத்து தமிழ்ப்புலவர்கள்.....பாட்டால் பாடாத உறவுகளையும் , பெருமைகளையும் வாய்வழியாகவே தாலாட்டாகவும் , நாட்டுப்புறப் பாட்டுக்களாகவும் காத்து தன் கருவில் வைத்திருக்கிறது தமிழ்ச் சமுதாயம்....!!!
அத்தகைய தாலாட்டில் தாய்மாமன் கொண்டு வரும் சீரைப் பற்றிய ஒரு அழகு பிள்ளைத் தமிழ்.....!!!!!
கற்பகத்தைத் தேடி கனிந்து வரும்போது உன்னரிய அம்மான்மார் என்ன கொண்டு வந்தார்கள் கொத்துவிடா நெத்தும், கோதுபடா மாங்கனியும் பருவப் பலாச்சுளையும் பக்குவத்து கொய்யாவும் அக்கரையில் சர்க்கரையும், அதிமதுர தென்னவட்டும் காய்ச்சிய பாலும், கற்கண்டும், செந்தேனும் ஏலங்கிராம்பும், இளங்கொடிக்கால் வெற்றிலையும் சாதிக் களிப்பாக்கும், சங்கு வெள்ளைச் சுண்ணாம்பும் அத்தனையும் கொண்டுன்னை அறிய வந்தார்அம்மான்மார் கனிவருக்கம் கொண்டுன்னை காண வந்தார் அம்மான்மார் பழவருக்கம் கொண்டுன்னை பார்க்க வந்தார் அம்மான்மார் போட்டு விளையாடப் பொன்னாலே அம்மானை வைத்து விளையாட வண்ணக்கிலுகிலுப்பை கட்டி விளையாடக் காசிச் சிண்டுமணி ஓட்டி விளையாட ஒயிலா ரெயில் வண்டி நெத்திக்குச் சுட்டி, நிழல் பார்க்கக் கண்ணாடி காலுக்குத் தண்டை, கைக்குக் கணையாழி கொண்டு வந்தும் காண்பார்கள், கோதைக்கிளிக்கம்மான்மார் சங்கினால் பால் கொடுத்தால் சந்தனவாய் நோகுமென்று தங்கத்தால் சங்கு செய்து தருவாரே தாய்மாமன் |
Comments