Skip to main content

பருவப் பலாச்சுளையும் பக்குவத்து கொய்யாவும்..!!

வெளிநாடுகளில் , டாடி , மம்மியைத் தவிர மற்ற எல்லோரையும் அங்கிள் , ஆன் ட்டி என்ற இரண்டே வார்த்தைகளில் முடித்து விடுகிறார்கள்...ஆனால் தமிழர்கள் மட்டும்தான் மாமன் , மச்சான் , சித்தப்பா , பெரியம்மா , மச்சினன் , கொழுந்தன் என்று உறவுகளைக் கொண்டாடுகிறார்கள்......கொஞ்சம் தலைமுறை விட்டுப்போயிருந்தாலும் பங்காளி என்றும் , மிக நாட்பட்ட உறவுகளுக்கு கூட்டம் , குலம் என்றும் தங்களின் மூதாதையர்களுக்கு மதிப்புக் கொடுப்பவர்களாய் இருக்கிறார்கள்....

இன்றைக்கும் கொங்கு நாட்டிலும் சரி , தெற்கத்தி மண்ணிலும் சரி , மற்ற எல்லா உறவுகளுக்கும் இல்லாத ஒரு உரிமை தாய் மாமன் என்கிற உறவுக்கு இருக்கிறது. தன் உடன்பிறப்பின் ( பெண்) குழந்தைக்கு பேர் வைப்பது முதற்கொண்டு , முதல் மொட்டை , காது குத்து , பூப்படைகையில் குச்சு கட்டுவது என்று ஒரு தமிழ்ப்பெண்ணின் வாழ்க்கையில் அழியாத இடம் பெறுகிறது தாய் மாமன் உறவு.

தமிழகத்தின் வாழ்வியலையும் , பெருமைகளையும் , போர் திறனையும் பாட்டால் பாடி வைத்துப்போயினர் சங்க காலத்து தமிழ்ப்புலவர்கள்.....பாட்டால் பாடாத உறவுகளையும் , பெருமைகளையும் வாய்வழியாகவே தாலாட்டாகவும் , நாட்டுப்புறப் பாட்டுக்களாகவும் காத்து தன் கருவில் வைத்திருக்கிறது தமிழ்ச் சமுதாயம்....!!!

அத்தகைய தாலாட்டில் தாய்மாமன் கொண்டு வரும் சீரைப் பற்றிய ஒரு அழகு பிள்ளைத் தமிழ்.....!!!!!



கற்பகத்தைத் தேடி கனிந்து வரும்போது
உன்னரிய அம்மான்மார் என்ன கொண்டு வந்தார்கள்
கொத்துவிடா நெத்தும், கோதுபடா மாங்கனியும்
பருவப் பலாச்சுளையும் பக்குவத்து கொய்யாவும்
அக்கரையில் சர்க்கரையும், அதிமதுர தென்னவட்டும்
காய்ச்சிய பாலும், கற்கண்டும், செந்தேனும்
ஏலங்கிராம்பும், இளங்கொடிக்கால் வெற்றிலையும்
சாதிக் களிப்பாக்கும், சங்கு வெள்ளைச் சுண்ணாம்பும்
அத்தனையும் கொண்டுன்னை அறிய வந்தார்அம்மான்மார்
கனிவருக்கம் கொண்டுன்னை காண வந்தார் அம்மான்மார்
பழவருக்கம் கொண்டுன்னை பார்க்க வந்தார் அம்மான்மார்
போட்டு விளையாடப் பொன்னாலே அம்மானை
வைத்து விளையாட வண்ணக்கிலுகிலுப்பை
கட்டி விளையாடக் காசிச் சிண்டுமணி
ஓட்டி விளையாட ஒயிலா ரெயில் வண்டி
நெத்திக்குச் சுட்டி, நிழல் பார்க்கக் கண்ணாடி
காலுக்குத் தண்டை, கைக்குக் கணையாழி
கொண்டு வந்தும் காண்பார்கள், கோதைக்கிளிக்கம்மான்மார்
சங்கினால் பால் கொடுத்தால் சந்தனவாய் நோகுமென்று
தங்கத்தால் சங்கு செய்து தருவாரே தாய்மாமன்

Comments

Popular posts from this blog

பூட்டிய இரும்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது!

சீமான்களின் சபையினிலேயே , கடிதம் எழுதி எழுதிக் களைத்துப்போனதோர் கிழட்டுச் சிங்கம்.....முன்னாலுக்கும் முன்னால் அவர் கொண்ட தமிழ்ப்பற்று.....இன்னாளில் அது தமது மக்கட்பற்றாய் மாறிப்போனதொரு சோகம். ஏதோவொரு புண்ணியத்தில், எவரோ செய்த வரலாற்றுத் தவறால் , கொள்கை , தொலைநோக்கு , மக்கட்பற்று இவை பற்றிய சிந்தையேதுமின்றி அரசியலில் விபத்தாய் விளைந்த கொடநாட்டு ஈழத்தாய்....தேர்தலுக்குத் தேர்தல் மட்டுமே தமிழர் பற்றியும் , தமிழர் அரசியல் பற்றியும் எழுதி வைத்துப் பேசும் செல்வி யவர்.........இன்னமும் அவர் சேலை பிடித்துத்திரியும் வீணர் கூட்டம்.! கூட்டணிக்கேற்றப்படி கொள்கையை மாற்றிக்கொள்ளும் மருத்துவப் படையாச்சி.........வீரமிகு வன்னியகுலத்திலே வந்துதித்த சந்தர்ப்பவாதச் சாக்கடை....சமரசமற்ற கொள்கை அரசியலை சந்தர்ப்பவாதச் சாக்கடைக்குள் தள்ளிய பெருமைக்குரிய மருத்துவர் தமிழ்க்குடிதாங்காத தமிழ்க்குடிதாங்கி! யாரை எதற்காக எதிர்த்து அரசியல் செய்யவேண்டுமே அவர்களோடே தம் தேவைக்குதந்த படி கூட்டு வைத்துக்கொண்டு ஈழத்திற்க்காய் எந்நேரமும் பாடுபடும் திரு.வைகோ அவர்கள்....அவரும் சிறை சென்றார்.

நண்பர் 'டோண்டு' ராகவன்...

உயிரோடு இருக்கும்வரை அறிக்கைகளால் அர்சித்து எதிர்ப்பரசியல் நடாத்தி செத்துபோன பிறகு ஆருயிர் நண்பர் என்று அழைத்துக்கொள்ளும் எல்லா அரசியல்வாதிகளையும் போலவே நான். எனக்கும் மறைந்த உயர்திரு 'டோண்டு' ராகவன் அவர்களுக்குமான பரிச்சயம் அவ்வளவொன்றும் அதிகமில்லைதான். பதிவுலகையும் , பர்ஸனல் லைப்பையும் பிரித்து வைத்துக்கொள்ளும் எண்ணமுடைய நான் , டோண்டு மட்டுமல்ல மற்றபல பதிவுலக நண்பர்களுடனும் கூட தனிப்பட்ட தொடர்புகளை வைத்துக்கொண்டதில்லை... இருந்தாலும் , அவ்வப்போது பதிவுலக பின்னூட்டங்களின்பாலே தொடர்ந்துகொண்டிருந்த தொடர்பு , எனது 'போலி டோண்டு' பற்றிய கட்டுரையொன்றிலேயே  தீவிர விவாதமாக மாறியது.. ஆயிரம் விமர்சனங்கள் அவர் மீதோ இல்லை அவர்தம் பிற்போக்கான கருத்துக்கள் மீதோ இருந்திருக்கலாம். கடினமாக ஓரிரு முறை பேசியிருக்கலாம்.. அத்தனையும் தாண்டி அவர் மிக நல்ல மனிதர் , கடும் உழைப்பாளி என்பதை அவரது பதிவுலகம் மூலமாக அறிந்தவனெனினும் உறுதியாக கூறவியலும்.. அத்தகைய நல்ல மனிதரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் , நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்... வருத்தங்கள

எஸ்.எஸ்.பொன்முடி - மனிதருள் மாணிக்கம்.

எஸ்.எஸ்.பொன்முடி , கொங்குச்சீமையிலே குறிப்பாக பல்லடம் , சூலூர் வட்டாரத்தில் தெரியாதவர்கள் சொற்பமே. எஸ்.எஸ். பொன்முடி அவர்கள் மட்டுமல்ல , அவர்களது குடும்பமே சூலூரில் பழம்பெருமை மிக்க குடும்பம். காலங்காலமாக அவர்களது குடும்பத்தினரே சூலூரின் அனைத்து தேர்தல்களிலும் வென்றதும் , வெல்வதும் வரலாறு. பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்தவராயினும் மாற்றுக்கட்சியினராலும் மதிக்கப்படும் சில மனிதர்களில் எஸ்.எஸ் பொன்முடியும் ஒருவர். அவருக்கும் , எனக்குமான பரிச்சயமொன்றும் அவ்வளவு அதிகமில்லைதான். அப்போது எனக்கு ஒரு பத்திலிருந்து , பதினைந்து வயதிருந்திருக்கலாம். கலங்கலில் கவுன்சிலர் தங்கவேலு சர்வ அதிகாரமும் பொருந்தியவராய் வலம் வந்துகொண்டிருந்தார். அவர் எஸ்.எஸ்.பொன்முடியின் வலக்கரம். ஊருக்கு மேற்கே ஜல்லிக்குழி என்ற மனிதர்கள் உபயோகப்படுத்த முடியாத , இயலாத பகுதி ஒன்றிருந்தது.....அப்போது கழகம் ஆட்சியிலிருந்தது + பொன்முடி எம்.எல்.ஏவாக இருந்தார். கட்சிக்காரர்கள் , குறிப்பாக ஒடுக்கப்பட்ட , மிக பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் கேட்டுக்கொண்டதற்காக , மிகுந்த பிரயாசைப்பட்டு தங்கவேல் மற்றும் எஸ்.எஸ்.பொன்முடி அவ