Skip to main content

ச்சும்மா ட்டமாஷ் - 75: மதிபாலா - திமுகவின் அடுத்த தலைமை

நண்பர் மோகன் கந்தசாமியின் ச்சும்மா டமாஷில் எனது திராவிட முன்னேற்றக் கழகம் - இனி என்ற கட்டுரை மூன்று பதிவுகளாக வெளிவந்தது. அதன் மீள்பதிவே இது. காப்பிரைட் முழுதும் ச்சும்மா ட்ட்மாஷுக்கே !



ச்சும்மா ட்டமாஷ் - 75 -க்காக பதிவர் மதிபாலாமுதல் இரண்டாம் பகுதிகள் சென்ற பதிவுகளில் வெளியானது. அவர்கள் எழுதியுள்ள இந்த சிறப்புப் பதிவின் இறுதிப் பகுதி இப்பதிவில் வெளியாகிறது. மற்றும்


திமுகவின் அடுத்த தலைமை

து கொஞ்சம் சுலபமான அலசல் என்றே தோன்றுகிறது. திமுகவின் அடுத்த தலைமைக்கான முன் மொழிதலில் முன்னணியில் நிற்பவர் மு.க.ஸ்டாலின், அடுத்த அளவில் சொல்லப்படும் மு.க.அழகிரியோ, கனிமொழியோ, தயாநிதி மாறனோ திமுகவின் அனைத்துத் தரப்பினருக்கும் பரிச்சயமானவர்களோ , நீண்ட காலமாக உழைத்தவர்களோ கிடையாது. ஆனால் மு.க.ஸ்டாலின் அப்படியானவர் கிடையாது


ஏன் ஸ்டாலின் திமுகவின் தலைமையாக இருக்கக் கூடாது?

1. திமுகவிற்காக பாடுபட்ட ஒருவர், அடிமட்டத் தொண்டனாக இருந்து மேலே வந்த ஒருவர், தான் மேற்கொண்ட பொறுப்புக்களை எல்லாம் சிரமேற்கொண்டு அனைவரும் பாராட்டும் வண்ணம் முடித்த ஒருவர், எல்லாவற்றிற்கும் மேலாக பணிவு, தான் சொல்ல நினைத்ததை தெளிவுற மக்கள் விளங்கும் வண்ணம் சொல்லும் திறன் படைத்த படித்த அரசியல்வாதி – இத்தகைய ஒருவர் திமுகவிற்கு தலைமைப் பொறுப்பேற்பதில் தவறென்ன இருக்கிறது?

2. சில மாதங்களுக்கு முன்னர், பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பெனாசீர் பூட்டோ இறந்த போது ஒரு உயிலை எழுதி வைத்துவிட்ட இறந்தார்….தான் இறந்த பிறகு தனது மகன் தான் கட்சித் தலைவராக இருக்க வேண்டுமென்று. கட்சியை தனது குடும்பச்சொத்தாக கருதும் பலர் முன்னிலையில் இன்றைக்கும் கட்சிக்காக அடிமட்டத்தொண்டனாகவே இருக்க விருப்பம் என்று சொல்லும் ஒருவர் தலைவராக வருவதில் என்ன தவறிருக்க முடியும்?

3. குதியும் , திறமையும் படைத்த ஒருவர் திமுக தலைவரின் பிள்ளை என்ற ஒரே காரணத்தால் மட்டுமே தலைமையேற்கக் கூடாதா என்ன?

கவே, மு.க.ஸ்டாலின் அவர்களே அடுத்த திமுக தலைமையாக இருக்க வசதியும் , வாய்ப்பும் இருக்கிறது. அத்தலைமைப்பொறுப்பிற்கு தகுதியான நபராகவே மு.க.ஸ்டாலின் காட்சியளிக்கிறார் என்றே தமிழகத்தின் அடையாளமான திமுகவின் தொண்டர்கள் கருதுகிறார்கள். அவரைப் பற்றி தெளிந்த ஒரு பார்வைக்கு வர நாம் எமஜென்சியிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.

து மிசா காலம், இரணடாம் முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வந்த மாபெறும் சோதனை. இந்தியப்பிரதமர் இந்திராகாந்தி தனது சுயநலத்துகாக மிசாவையும், எமர்ஜென்சியையும் பயன்படுத்தி காட்டு தர்பார் நடத்தியதொரு காலம்.


எதற்கு எமர்ஜென்சி?

1971ஆம் ஆண்டு ரேபரேலி நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டாவது முறையாக போட்டியிட்ட திருமதி இந்திராகாந்தி அத்தேர்தலில் வென்றார். பிரதமரின் தனிச்செயலாளராக இருந்த யஷ்பால் கபூர் என்ற அரசு ஊழியரை தேர்தல் பணிக்கு பயன்படுத்தியதன் மூலம் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 ன் பிரிவு 123 விதி 7ன் படி சட்டவிரோதமாக செயல்பட்டதாகச் சொல்லி 1975 ஜூன் 12ம் நாள் அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அத்துடன் தண்டனையாக இந்திராகாந்தி அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு இந்தியாவின் எந்தத் தொகுதியிலும் போட்டியிடக்கூடாது என்றும் சொன்னது. உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தார் இந்திராகாந்தி. உச்சநீதிமன்றத்தில் அப்போது விடுமுறைக்கால நீதிபதியாயிருந்த வி.ஆர்.கிருஷ்ணய்யர், இந்திரா காந்தி மக்களவை உறுப்பினராய் நீடிக்கலாமெனவும் ஆனால் அவை நடவடிக்கைகளில் ஈடுபடவோ வாக்களிக்கவோ உறுப்பினர் என்பதற்கான ஊதியம் பெறவோ உரிமையில்லை எனவும் 25.6.1975 மாலை 3 மணிக்கு தீர்ப்பளித்தார்

ச்சநீதிமன்றத் தீர்ப்பை ஏற்று இந்திரா பதவி விலக வேண்டும் என்று நாடெங்கும் எதிர்ப்பலை கிளம்பியது. ஜூன் 25 ம் தேதி தில்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த எதிர்க்கட்சிகளின் பேரணி நாடு தழுவிய சத்தியாக்கிரக இயக்கத்திற்கு அறைகூவல் விடுத்தது. தனக்கு ஏற்பட்ட நெருக்கடியை நாட்டுக்கு ஏற்பட்ட நெருக்கடியாய் சித்தரித்து தீர்ப்பு வெளியான ஒரு சில மணிகளிலேயே நெருக்கடி நிலையை அறிவிக்கத் துணிந்தார் இந்திரா. இதற்காக அமைச்சரவையைக் கூட கூட்டாமல், தன் கைப்பொம்மையாயும்- ஆகவே குடியரசுத் தலைவராயுமிருந்த ஃபக்ருதின் அலி அகமதிடம் 25 ம்தேதி பின்னிரவில் கையொப்பம் பெற்று 1975 ஜூன் 26 அதிகாலை முதல் இந்தியாவில் நெருக்கடி நிலையை அறிவித்தார் இந்திரா. சட்டத்திற்குட்பட்டு தான் இனியும் பதவியில் நீடிக்க முடியாது என்பதை அலகாபாத் உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் தெளிவாக அறிவித்துவிட்ட நிலையில் பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பதற்காக இந்திராவும் அவரது செல்லமகன் சஞ்சய் காந்தியும் தேர்ந்தெடுத்த இழிவான- எதேச்சதிகார பாதைதான் எமர்ஜென்சி. ( நன்றி – திரு.ஆதவன் தீட்சண்யா , கீற்று.காம் )


கொள்கைக்காக சிறை செல்லத் தயங்காத ஸ்டாலின்

மிசா, இந்திய பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் நாடு முழுவதும் 1,11,000 பேர் சிறையிலடைக்கப்பட்டார்கள். இவர்களில் 39 எம்.பி.களும் அடக்கம். இந்தியாவின் எந்தவொரு மூலையிலும் எழும்பிய எதிர்ப்புக்குரலை அடக்கிய இந்திராகாந்தி தமிழகத்தில் மட்டும் ஒரு வலுவான குரல் ஒலிப்பதை நசுக்க முடியவில்லை……அது திராவிட முன்னேற்றக் கழகத்தின் குரல். ஆம் கலைஞரின் குரல்…!! திமுகவின் மீது கடுங்கோபம் கொண்ட இந்திராகாந்தி மிசாவை ஏவிவிட்டார். உச்சகட்டமாக, 1976 ஜனவரி 31 அன்று தமிழ்நாட்டில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. கட்சியின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டு சிறையில் தொழுநோயாளிகளோடு சேர்த்து தங்க வைக்கப்பட்டனர். மொத்த தமிழகமுமே கலைஞர் கைது செய்யப்படுவார் என்றே நினைத்தது. ஆனால் கலைஞருக்குப் பதில் இந்திராகாந்தி அம்மையார் கைது செய்தது கலைஞரின் மகன் மு.க.ஸ்டாலினை

24 மணிநேரமும் லாக்அப்பிலேயே வைத்திருப்பது, கடுமையாகத் தாக்குவது, மருத்துவ உதவியை மறுப்பது, குறைந்தளவே உணவளிப்பது, உணவில் வேப்பெண்ணையை கலந்து தருவது, தாகத்திற்கு தண்ணீர் கேட்டால் வாய்க்குள் சிறைக்காவலர்கள் சிறுநீர் கழிப்பது என காலனியாட்சியிலும் காணாத சித்திரவதைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. திமுகவின் தலைவர்களுள் ஒருவரான சிட்டி பாபு கொல்லப்பட்டார்….மு.க.ஸ்டாலினும் இவ்வாறான சொல்லொணாக் கொடுமைகளுக்கு ஆட்பட்டார்.

கொண்ட கொள்கைக்காக சிறை செல்லவும் தயங்காதவர் தான் மு.க.ஸ்டாலின்.


கைதிற்கு அஞ்சாத ஸ்டாலின்

தே ஜெயலலிதா அம்மையார் 2001ல் தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியான கலைஞரை எந்தவொரு மூகாந்திரமுமில்லாமல் கைது செய்து சிறையிலடைத்தது. அதற்கான காரணமாகவும் மு.க.ஸ்டாலின் மேயராக இருக்கும் போது கட்டிய மேம்பாலங்களில் ஊழல் செய்தததாகத் தான். அப்போதும் கூட, காவலர்கள் தன்னைக் கைது செய்யும் வரை காத்திருக்காமல், தன்னைக் கைது செய்யும் படி தானாகவே காவல் நிலையப் படியேறியவர்தான் மு.க.ஸ்டாலின் , தன் மீது வழக்குப்போட்டவுடனே ஆஸ்பத்திரியில் ஹார்ட் அட்டாக் என்று படுத்துக் கொள்ளும் அனேக அரசியல்வாதிகளுக்கு மத்தியில் மு.க.ஸ்டாலின் முற்றிலும் வித்தியாசமானவர்தான்.

தவியை நீட்டித்துக்கொள்வதற்காக சட்டத்தையே மாற்றியமைத்த பர்மாவின் ஜூண்டா கதை நமக்குத் தெரியும், பாகிஸ்தானின் முஷாரப் கதையும் நாமறிந்ததுதான், இந்தோனேசியாவின் சுகார்தோ கதையும் நமக்குத் தெரிந்ததுதான். ஆனால் ஒருவரின் பதவியை பறிப்பதற்காகவே தனிச்சட்டம் போட்டது நமது தமிழ்நாட்டில்தான்…அத்தகைய சட்டம் யாரைக் குறிபார்த்து பாய்ந்தது? மு.க.ஸ்டாலினைக் குறிபார்த்துத்தான். அவர் சென்னை மேயராக இருந்த போது கராத்தே தியாகராஜனை வைத்து நடந்த கூத்துக்கள் உலகறிந்ததே!

ப்படி அடக்குமுறைகளை வென்று எழுந்து நிற்பவர்தான் மு.க.ஸ்டாலின். இப்படி சோதனைகளையே சாதனைகளாக்கி ஒட்டுமொத்த திமுகவினரின் வாழ்த்துக்களையும் பெற்றவர் மு.க.ஸ்டாலின்.


அரசியல் நாகரிகத்தின் அடையாளம் மு.க.ஸ்டாலின்

சென்னை மேயராக இருந்த போதும் சரி, இப்போது உள்ளாட்சித் துறை மந்திரியாக இருக்கும் போது சரி, தனது அளவிலான பணிகளை எந்தவித விமர்சனமும் இல்லாமல், எந்தவிதமான குற்றச்சாட்டுக்களும் இல்லாமல் அமைதியாகச் செய்து வருகிறார். இவரிடம் ஒரு நாலாந்தர அரசியல் வாதிகளைப் போல் வெற்றுச் சவடால்களைக் காணவே முடியாது. ஒண்டிக்கு ஒண்டி வர்றியா போன்ற கேவலமான அரசியல் கூத்துக்களைக் காண முடியாது. தரக்குறைவான அரசியல் விமர்சனங்களை அவர் இன்று வரை யார் மீதும் வைத்ததில்லை. மரியாதையற்ற வார்த்தைகளை உபயோகித்து எந்த ஒரு தலைவரையும் அவர் இன்று வரை விளித்தது கிடையாது. அதைப்பற்றி அவரே சொல்வதைக் கேளுங்களேன்

நிருபர்களின் கேள்வி

சாதாரண சமாச்சாரங்களுக்குக் கூட மேடையில் துண்டை இழுத்துவிட்டுக்கொண்டு சவால் விடுவதும், மாற்றுக்கட்சியினரை வறுத்தெடுப்பதுமாக இருக்கும் தமிழக அரசியலில் நீங்கள் மட்டும் யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசுவதோ, சவால் விடுவதோ இல்லையே?

மு.க.ஸ்டாலின் அவர்களின் பதில்

ங்களிடம் சாதனைப் பட்டியல் இருக்கிறது. மேடையில் அதைச் சொல்கிறேன்.அது இல்லாதவர்கள் வெற்றுச்சவால்களை நம்பித்தான் பேச வேண்டியிருக்கிறது. நான் ஐ.ஐ.டியில் ஆய்வு மாணவன்.

ரு தேர்ந்த தலைவனுக்கு அடக்கத்தை விட வேறென்ன பெரிய குணம் வேண்டிக் கிடக்கிறது? மேற்கண்ட காரணங்கள் மட்டுமின்றி, மேயராகவும், உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இருக்கும் மு.க.ஸ்டாலின் அவர்களை கட்சி வேறுபாடு கடந்து மக்கள் ஒரு நல்ல செயல் வீரராகவே கருதுகிறார்கள். அவர்தான் கட்சியின் அனைத்து மட்டங்களிலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர்.

கவே, திமுகவின் எதிர்காலத்திலும் எந்தவிதக் குழப்பங்களும் இல்லை , திமுகவின் எதிர்கால தலைமையிலும் எந்தவிதக் குழப்பமும் இல்லை. திராவிட முன்னேற்றக் கழகம் தனது திசையில், தனது பயணத்தில் எப்போதும் போன்றே வெற்றி தோல்விகளுடன் பயணிக்கும் என்று சொல்லி இந்த அளவில் முடித்துக்கொள்கிறேன்

ந்த நீண்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட கட்டுரையை வாசித்தவர்களுக்கு நன்றிகள். வாசிக்காதவர்களுக்கு வாழ்த்துக்கள்!

தோழமையுடன்
மதிபாலா



ஒரு முக்கிய குறிப்பு.

யல்பிலேயே திமுகவின் அனுதாபியான நான் முதலில் தெளிவு படுத்த வேண்டியது, இந்தக் கட்டுரையை நடுநிலைப்பார்வையிலிருந்து எழுத முயற்சிக்கிறேன்…சில சமயங்களில் திமுகழகம் பற்றிய பார்வைக்கு சில விடயங்களை சொல்கையில் தவிர்க்க முடியாமல் சார்பு நிலை வந்துவிட வாய்ப்புண்டு. அதை கூடியவரை தவிர்க்க முயற்சித்திருக்கிறேன். ஆனால் அது வெற்றியடைந்ததா இல்லையா என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

Comments

This comment has been removed by the author.
This comment has been removed by the author.

Popular posts from this blog

பூட்டிய இரும்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது!

சீமான்களின் சபையினிலேயே , கடிதம் எழுதி எழுதிக் களைத்துப்போனதோர் கிழட்டுச் சிங்கம்.....முன்னாலுக்கும் முன்னால் அவர் கொண்ட தமிழ்ப்பற்று.....இன்னாளில் அது தமது மக்கட்பற்றாய் மாறிப்போனதொரு சோகம். ஏதோவொரு புண்ணியத்தில், எவரோ செய்த வரலாற்றுத் தவறால் , கொள்கை , தொலைநோக்கு , மக்கட்பற்று இவை பற்றிய சிந்தையேதுமின்றி அரசியலில் விபத்தாய் விளைந்த கொடநாட்டு ஈழத்தாய்....தேர்தலுக்குத் தேர்தல் மட்டுமே தமிழர் பற்றியும் , தமிழர் அரசியல் பற்றியும் எழுதி வைத்துப் பேசும் செல்வி யவர்.........இன்னமும் அவர் சேலை பிடித்துத்திரியும் வீணர் கூட்டம்.! கூட்டணிக்கேற்றப்படி கொள்கையை மாற்றிக்கொள்ளும் மருத்துவப் படையாச்சி.........வீரமிகு வன்னியகுலத்திலே வந்துதித்த சந்தர்ப்பவாதச் சாக்கடை....சமரசமற்ற கொள்கை அரசியலை சந்தர்ப்பவாதச் சாக்கடைக்குள் தள்ளிய பெருமைக்குரிய மருத்துவர் தமிழ்க்குடிதாங்காத தமிழ்க்குடிதாங்கி! யாரை எதற்காக எதிர்த்து அரசியல் செய்யவேண்டுமே அவர்களோடே தம் தேவைக்குதந்த படி கூட்டு வைத்துக்கொண்டு ஈழத்திற்க்காய் எந்நேரமும் பாடுபடும் திரு.வைகோ அவர்கள்....அவரும் சிறை சென்றார்.

நண்பர் 'டோண்டு' ராகவன்...

உயிரோடு இருக்கும்வரை அறிக்கைகளால் அர்சித்து எதிர்ப்பரசியல் நடாத்தி செத்துபோன பிறகு ஆருயிர் நண்பர் என்று அழைத்துக்கொள்ளும் எல்லா அரசியல்வாதிகளையும் போலவே நான். எனக்கும் மறைந்த உயர்திரு 'டோண்டு' ராகவன் அவர்களுக்குமான பரிச்சயம் அவ்வளவொன்றும் அதிகமில்லைதான். பதிவுலகையும் , பர்ஸனல் லைப்பையும் பிரித்து வைத்துக்கொள்ளும் எண்ணமுடைய நான் , டோண்டு மட்டுமல்ல மற்றபல பதிவுலக நண்பர்களுடனும் கூட தனிப்பட்ட தொடர்புகளை வைத்துக்கொண்டதில்லை... இருந்தாலும் , அவ்வப்போது பதிவுலக பின்னூட்டங்களின்பாலே தொடர்ந்துகொண்டிருந்த தொடர்பு , எனது 'போலி டோண்டு' பற்றிய கட்டுரையொன்றிலேயே  தீவிர விவாதமாக மாறியது.. ஆயிரம் விமர்சனங்கள் அவர் மீதோ இல்லை அவர்தம் பிற்போக்கான கருத்துக்கள் மீதோ இருந்திருக்கலாம். கடினமாக ஓரிரு முறை பேசியிருக்கலாம்.. அத்தனையும் தாண்டி அவர் மிக நல்ல மனிதர் , கடும் உழைப்பாளி என்பதை அவரது பதிவுலகம் மூலமாக அறிந்தவனெனினும் உறுதியாக கூறவியலும்.. அத்தகைய நல்ல மனிதரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் , நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்... வருத்தங்கள

எஸ்.எஸ்.பொன்முடி - மனிதருள் மாணிக்கம்.

எஸ்.எஸ்.பொன்முடி , கொங்குச்சீமையிலே குறிப்பாக பல்லடம் , சூலூர் வட்டாரத்தில் தெரியாதவர்கள் சொற்பமே. எஸ்.எஸ். பொன்முடி அவர்கள் மட்டுமல்ல , அவர்களது குடும்பமே சூலூரில் பழம்பெருமை மிக்க குடும்பம். காலங்காலமாக அவர்களது குடும்பத்தினரே சூலூரின் அனைத்து தேர்தல்களிலும் வென்றதும் , வெல்வதும் வரலாறு. பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்தவராயினும் மாற்றுக்கட்சியினராலும் மதிக்கப்படும் சில மனிதர்களில் எஸ்.எஸ் பொன்முடியும் ஒருவர். அவருக்கும் , எனக்குமான பரிச்சயமொன்றும் அவ்வளவு அதிகமில்லைதான். அப்போது எனக்கு ஒரு பத்திலிருந்து , பதினைந்து வயதிருந்திருக்கலாம். கலங்கலில் கவுன்சிலர் தங்கவேலு சர்வ அதிகாரமும் பொருந்தியவராய் வலம் வந்துகொண்டிருந்தார். அவர் எஸ்.எஸ்.பொன்முடியின் வலக்கரம். ஊருக்கு மேற்கே ஜல்லிக்குழி என்ற மனிதர்கள் உபயோகப்படுத்த முடியாத , இயலாத பகுதி ஒன்றிருந்தது.....அப்போது கழகம் ஆட்சியிலிருந்தது + பொன்முடி எம்.எல்.ஏவாக இருந்தார். கட்சிக்காரர்கள் , குறிப்பாக ஒடுக்கப்பட்ட , மிக பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் கேட்டுக்கொண்டதற்காக , மிகுந்த பிரயாசைப்பட்டு தங்கவேல் மற்றும் எஸ்.எஸ்.பொன்முடி அவ